Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 கோடி விடயம் தொடர்பாக இலங்கை அரசின் ஆர்.டி.ஐ உறுதிப்படுத்திய செய்தி

Featured Replies

2 கோடி விடயம் தொடர்பாக இலங்கை அரசின் ஆர்.டி.ஐ உறுதிப்படுத்திய செய்தி

 

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபா நிதி அபிவிருத்திக்காகவே வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசியத் திட்டமும் கொள்கையும் என்ற அபிவிருத்தித் திட்டம் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இலங்கை அரசின் ஆர்.டி.ஐ ஊடாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு கோடி ரூபா பணம் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதியே அன்றி இலஞ்சம் அல்ல என உறுதியாகியுள்ளது.

பொய்த்தது சிவசக்தி ஆனந்தனின் 2 கோடி இலஞ்சம்! தகவல் அறியும் சட்டம் மூலம் அம்பலம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாடளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து இரண்டு கோடி ரூபா இலஞ்சமாகப் பெற்று கொண்டார்கள் என்ற சிவசக்தி ஆனந்தன் எம்.பியின் கூற்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பொய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தன்னைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திடமிருந்து இரண்டு கோடி ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் வவுனியாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்திருந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்குத் தில் இருந்தால் தான் அரசாங்கத்திடமிருந்து இலஞ்சம் வாங்கியதாகக் கூறுவதை நிரூபிக்குமாறும் ஊடகவியலாளர்கள் மத்தியில் சிவசக்தி ஆனந்தனுக்குப் பகிரங்கமாகச் சவால் விட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்கள் பலவற்றிலும் இவ்விடயம் பெரும் பூதாகரமாகப் பேசப்பட்டது. தற்போது இலங்கையில் என்ன நடந்தாலும் அதனை அறிந்துகொள்ளக் கூடிய தகவல் அறியும் சட்டம் நடைமுறையிலுள்ளமையால் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனது பதிலுக்கமைவாக ஊடகவியலாளர்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு கோடி இலஞ்சம் பெற்றுள்ளார்கள் என்ற சிவசக்தி ஆனந்தனின் கூற்றை அறிவதற்காக தகவல் அறியும் சட்ட மூல படிவத்தின் மூலம் குறித்த துறைசார் திணைக்களத்துக்கு விண்ணப்பித்து தகவல்களைப் பெற்றிருந்தனர்.

அதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே அரசாங்கத்திடமிருந்து இலஞ்சம் எதனையும் பெறவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டின் மூலம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான அபிவிருத்தி நிதியே குறித்த திணைக்களங்களூடாக ஒதுக்கப்பட்டுள்ளன என்னும் விடயம் அதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தால் நிதி ஒதுக்கப்படுவது வழமையான ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி நேரடியாகப் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ அல்லது அவர்கள் குறிப்பிடுகின்றவர்களிடமோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களது வங்கிக்கணக்குக்களுக்கோ வழங்கப்படுவதில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின், பிரதேசங்களின் அபிவிருத்தித் தேவை கருதி அரசாங்கத்திடம் கோரிக்கைகளை திட்டங்களாக முன்வைக்கப்படும் போது அதனை ஆராய்ந்து குறித்த துறைசார் திணைக்களங்களூடாக அரசாங்கமே நிதியை ஒதுக்கி அத்திணைக்களங்களின் துறைசார் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்களின் துணையுடன் அவ்வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இப்படியாக பிரதேச அபிவிருத்தி கருதி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் வழங்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கமைவாக ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்ற விடயங்களைத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இரண்டு கோடி இலஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்தும் கிளிநொச்சி மாவட்டத்தின் பெருமளவான மக்கள் பயன்பாட்டிலுள்ள வீதிகள் மிகமோசமாகப் பழுதடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி புனரமைக்கப்பட வேண்டியுள்ளதனைச் வலியுறுத்தி அண்மையில் துறைசார் அரசாங்க அமைச்சுக்குக் கடித மூலம் வலியுறுத்தியிருந்தார்.

இத்திட்டங்களும் எதிர்காலத்தில் மக்களின் தேவைகருத்தி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதனையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அரசாங்கத்திடம் இலஞ்சம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார் எனக்கூற முடியும்.

தமிழ் மக்களின் அரசியல் பலம் பொருந்திய சக்தியாகக் காணப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இணைந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்று தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனந்தசங்கரி தலைமையிலான கூட்டணியாகச் சேர்ந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இப்படியான பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வசைபாடி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

http://www.tamilwin.com/politics/01/173054?ref=ls_d_tamilwin

 

பொய்த்தது சிவசக்தி ஆனந்தனின் 2 கோடி இலஞ்சம்! தகவல் அறியும் சட்டம் மூலம் அம்பலம்!

 
ashroff-040-600x399.jpg

 

 
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து இரண்டு கோடி ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டார்கள் என்ற சிவசக்தி ஆனந்தன் எம்.பி யின் கூற்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பொய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தன்னைத் தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திடமிருந்து இரண்டு கோடி ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எவ். பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் வவுனியாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இதனைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுத்திருந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்குத் தில் இருந்தால் தான் அரசாங்கத்திடமிருந்து இலஞ்சம் வாங்கியதாகக் கூறுவதை நிரூபிக்குமாறும் ஊடகவியலாளர்கள் மத்தியில் சிவசக்தி ஆனந்தனுக்குப் பகிரங்கமாகச் சவால் விட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்கள் பலவற்றிலும் இவ்விடயம் பெரும் பூதாகரமாகப் பேசப்பட்டது. தற்போது இலங்கையில் என்ன நடந்தாலும் அதனை அறிந்துகொள்ளக் கூடிய தகவல் அறியும் சட்டம் நடைமுறையிலுள்ளமையால் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனது பதிலுக்கமைவாக ஊடகவியலாளர்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு கோடி இலஞ்சம் பெற்றுள்ளார்கள் என்ற சிவசக்தி ஆனந்தனின் கூற்றை அறிவதற்காக தகவல் அறியும் சட்ட மூல படிவத்தின் மூலம் குறித்த துறைசார் திணைக்களத்துக்கு விண்ணப்பித்து தகவல்களைப் பெற்றிருந்தனர். அதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே அரசாங்கத்திடமிருந்து இலஞ்சம் எதனையும் பெறவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டின் மூலம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான அபிவிருத்தி நிதியே குறித்த திணைக்களங்களூடாக ஒதுக்கப்பட்டுள்ளன என்னும் விடயம் அதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இதனைச் சில ஊடகங்கள் திரிபுபடுத்தி இரண்டு கோடி பெற்றார் சிறீதரன் என பொய்யான தகவல்களைப் பரப்பும் நோக்குடன் செய்திகளை வெளியிட அதனை தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் தமது முகநூல் சமூகவலைத்தளங்களூடாகப் பரப்பி வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.
மேலும் இலங்கையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தால் நிதி ஒதுக்கப்படுவது வழமையான ஒன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமோ அல்லது அவர்கள் குறிப்பிடுகின்றவர்களிடமோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களது வங்கிக்கணக்குக்களுக்கோ வழங்கப்படுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின், பிரதேசங்களின் அபிவிருத்தித் தேவை கருதி அரசாங்கத்திடம் கோரிக்கைகளை திட்டங்களாக முன்வைக்கப்படும் போது அதனை ஆராய்ந்து குறித்த துறைசார் திணைக்களங்களூடாக அரசாங்கமே நிதியை ஒதுக்கி அத்திணைக்களங்களின் துறைசார் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்களின் துணையுடன் அவ்வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இப்படியாக பிரதேச அபிவிருத்தி கருதி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் வழங்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கமைவாக ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்ற விடயங்களைத்தான் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இரண்டு கோடி இலஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கிளிநொச்சி மாவட்டத்தின் பெருமளவான மக்கள் பயன்பாட்டிலுள்ள வீதிகள் மிகமோசமாகப் பழுதடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி புனரமைக்கப்பட வேண்டியுள்ளதனைச் வலியுறுத்தி அண்மையில் துறைசார் அரசாங்க அமைச்சுக்குக் கடித மூலம் வலியுறுத்தியிருந்தார். இத்திட்டங்களும் எதிர்காலத்தில் மக்களின் தேவைகருத்தி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதனையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அரசாங்கத்திடம் இலஞ்சம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார் எனக்கூற முடியும்.
 
தமிழ் மக்களின் அரசியல் பலம் பொருந்திய சக்தியாகக் காணப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இணைந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்று தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனந்தசங்கரி தலைமையிலான கூட்டணியாகச் சேர்ந்ததன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது இப்படியான பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வசைபாடி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.ujirppu.com/?p=25087

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு கணக்கு காட்டாத  வரை அது லஞ்சம் தான். மாவையை தவிர யாரும் கணக்கு காட்டவில்லை. அப்படி வாங்கவில்லை என்று கூட சொல்லி உள்ளார்கள். 

ஜீ எல் பீரிஸ் கூட கணக்கு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

மக்களுக்கு கணக்கு காட்டாத  வரை அது லஞ்சம் தான். மாவையை தவிர யாரும் கணக்கு காட்டவில்லை. அப்படி வாங்கவில்லை என்று கூட சொல்லி உள்ளார்கள். 

ஜீ எல் பீரிஸ் கூட கணக்கு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

ஒதுக்கப்பட்ட நிதிக்கு சிவசக்தி ஆனந்தன் கணக்கு கேட்கவில்லை. மக்களும் கேட்கவில்லை. லஞ்சம் என்றே அவர் சொன்னார். லஞ்சத்த்துக்கு கணக்கு காட்ட முடியாது தானே?

ஜீ எல் பீரிஸ் வாக்கு போட்டிருந்தால் கணக்கு கேட்பது நியாயமானது. வாக்கு போட்ட மக்களே கணக்கு  கேட்காத நிலையில் அவருக்கு ஏன் இவர்கள் கணக்கு காட்ட போகிறார்கள்?

கேட்கவேண்டியதை மக்கள் கேட்கவும் இல்லை. சிவசக்தி ஆனந்தன் மக்களை திசை திருப்பி கணக்கு கேட்க வழி நடத்தவும் இல்லை.
இந்த தமிழ் மக்கள் பேரவை சட்டத்துறை தலைவர் குருபரன் ஏன் மக்களை கணக்கு கேட்க வழி காட்டவில்லை?
எல்லாரும் அரசியலிலேயே கண்ணாக இருக்கிறார்கள்.

 

 

9 hours ago, நவீனன் said:

இந்த நிலையில் வடக்கு, கிழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு கோடி ரூபா பணம் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதியே அன்றி இலஞ்சம் அல்ல என உறுதியாகியுள்ளது.

பொய்த்தது சிவசக்தி ஆனந்தனின் 2 கோடி இலஞ்சம்! தகவல் அறியும் சட்டம் மூலம் அம்பலம்

இலங்கையில் இலஞ்சம் வழங்கப்படும் முறைகளில் இதுவும் ஒன்று!

தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொண்டால் இலஞ்சம் வாங்கவில்லை என்று கடைந்தெடுத்த மூடர்கள் தான் கூறுவார்.

தகவல் அறியும் சட்டம் மூலம் பணம் கொடுக்கப்பட்டது என்பது மட்டும் தான் உறுதி!

இதுவரை காலமும் அபிவிருத்திக்கு கொடுக்கப்படாத நிதி வரவுசெலவு திட்ட காலத்தில் மட்டும், அதுவும் ஒருசில பாராளுமற்ற உறுப்பினர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது ஏன்?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2018 at 10:52 PM, போல் said:

இதுவரை காலமும் அபிவிருத்திக்கு கொடுக்கப்படாத நிதி வரவுசெலவு திட்ட காலத்தில் மட்டும், அதுவும் ஒருசில பாராளுமற்ற உறுப்பினர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது ஏன்?

நிதி வரவுசெலவு திட்ட காலத்தில் தானே திட்டதின் பிரகாரம் வழங்கப்பட முடியும்?

இது வரை காலமும் அபிவிருத்திக்கு நிதி கொடுக்கப்படவில்லை என்று யார் சொன்னது? நீங்கள் தானே சொல்கிறீர்கள்? இப்படி ஒதுக்கப்படும் நிதியில் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்தி செய்கிறார்கள். அப்படி செய்யாவிட்டால் மக்கள் அவர்களுக்கு அடுத்த தேர்தலில் வாக்களிக்க மாட்டார்களே?

பதினைத்து கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டு இருக்கிறது. இருசிலருக்கு இல்லையே?
சிவசக்தி ஆனந்தன் இந்த நிதி ஒதுக்கீடு பற்றி அறியாத விபரம் தெரியாத பாராளுமன்ற உறுப்பினராக தெரிகிறார். நிதிக்கு விண்ணப்பித்து இருக்க மாட்டார். ஆகவே அவருக்கு வழங்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஒதுக்கப்பட்ட நிதிக்கு சிவசக்தி ஆனந்தன் கணக்கு கேட்கவில்லை. மக்களும் கேட்கவில்லை. லஞ்சம் என்றே அவர் சொன்னார். லஞ்சத்த்துக்கு கணக்கு காட்ட முடியாது தானே?

என்றால் அதனை லஞ்சம் என்பதை நாசூக்காக சொல்கிறீர்கள் என எடுக்கலாமா?

33 minutes ago, Jude said:

நி

பதினைத்து கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டு இருக்கிறது. இருசிலருக்கு இல்லையே?
சிவசக்தி ஆனந்தன் இந்த நிதி ஒதுக்கீடு பற்றி அறியாத விபரம் தெரியாத பாராளுமன்ற உறுப்பினராக தெரிகிறார். நிதிக்கு விண்ணப்பித்து இருக்க மாட்டார். ஆகவே அவருக்கு வழங்கப்படவில்லை.

பல ஆண்டு காலம் உறுப்பினராக இருக்கும் சிவசக்தி ஆனந்தனுக்கு தெரியாது என்பது நகைச்சுவையானதே. அதை விட நகைச்சுவையானவர் நீங்கள் என்பது புரியக்கூடியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

பல ஆண்டு காலம் உறுப்பினராக இருக்கும் சிவசக்தி ஆனந்தனுக்கு தெரியாது என்பது நகைச்சுவையானதே. 

சிவசக்தி ஆனந்தன் லஞ்சம் அல்ல என்று காட்டப்பட்ட ஆதாரங்கள் பற்றி எதுவுமே சொல்லவிலையே? விடயம் தெரிந்த பாராளுமன்ற  உறுப்பினர் என்றால் தனது பக்க ஆதாரங்களை எடுத்து காட்டி இருப்பாரே?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

சிவசக்தி ஆனந்தன் லஞ்சம் அல்ல என்று காட்டப்பட்ட ஆதாரங்கள் பற்றி எதுவுமே சொல்லவிலையே? விடயம் தெரிந்த பாராளுமன்ற  உறுப்பினர் என்றால் தனது பக்க ஆதாரங்களை எடுத்து காட்டி இருப்பாரே?

காசு (2 கோடி) கொடுத்த விடயமே சிவசக்தி ஆனந்தன் சொல்லி தானெ மக்களூக்கு தெரிய வந்தது!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

காசு (2 கோடி) கொடுத்த விடயமே சிவசக்தி ஆனந்தன் சொல்லி தானெ மக்களூக்கு தெரிய வந்தது!!!!!

அதை தான் பிழையான செய்தி என்றும், அபிவிரித்திக்கு பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப் பட்ட நிதி என்றும் விளக்கம் கொடுக்கப்பட்ட பிறகு சிவசக்தி ஆனந்தன் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறாரே? இதை லஞ்சம் இவர் சொன்னதால் இவரிடம்  நூறு கோடி கேட்டு வழக்கும் போட்டு இருக்கிறார்கள். ஆள் எங்கே? எந்த தகவலும் இல்லையே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.