Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசரமாக இந்தியா பறந்துள்ள மஹிந்த

Featured Replies

அவசரமாக இந்தியா பறந்துள்ள மஹிந்த
 

image_6a4084cd1c.jpgமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27)  அதிகாலை கட்டுநாயக்க விமானம் நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணமாகியுள்ளார்.

மஹிந்தவுடன், லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்கு பண்டார உள்ளிட்ட 6 பேர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இன்று இரவு 10.30 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரமாக-இந்தியா-பறந்துள்ள-மஹிந்த/175-212081

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நவீனன் said:
அவசரமாக இந்தியா பறந்துள்ள மஹிந்த
 

image_6a4084cd1c.jpgமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27)  அதிகாலை கட்டுநாயக்க விமானம் நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணமாகியுள்ளார்.

மஹிந்தவுடன், லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்கு பண்டார உள்ளிட்ட 6 பேர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இன்று இரவு 10.30 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரமாக-இந்தியா-பறந்துள்ள-மஹிந்த/175-212081

சாத்திரிமாரை சந்திக்க போய்யிருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பதி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி.

  • தொடங்கியவர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு திருப்பதியில் வரவேற்பு (காணொளி இணைப்பு )

 

 

திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கெஸ்ட் ஹவுசில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

mahinda.jpg

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், பெங்களூரில் இருந்து சிறப்பு விமானத்தில் ரேனிகுண்டா விமான நிலையம் சென்றடைந்தார்.

விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்க இருந்த நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டதால் ரேனிகுண்டா விமான நிலையத்தில் இருந்து காரில் திருப்பதி மலைக்கு சென்றார்.

இந்நிலையில், திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கெஸ்ட் ஹவுசில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/31077

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

சாத்திரிமாரை சந்திக்க போய்யிருப்பார்

ஜனாதிபதி தேர்தலுடன் சாத்திரத்தை கைவிட்டுட்டார்.

  • தொடங்கியவர்

இந்தியா சென்ற மஹிந்த ஆந்திர முதல்வருடன் பேச்சு

 

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.

mahinda-rajapaksa-chandrababu-naidu.jpg

ஆந்திராவில் திருப்பதி தரிசனத்தில் ஈடுப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் சபாநாயகரை சந்தித்து கரந்துரையாடியுள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியீட்டியதன பின்னர் திருப்பதிக்கு சென்று மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

 

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் இலங்கை இந்திய உறவுகள் உள்ளிட்ட பல்துறைசார் விடயங்கள் தொடர்பில் நட்புரீதியாக ஆந்திர முதல்வருடன் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளதாக  அவரது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

மேலும் சபாநாயகருடனும் கலந்துரையாடியதாகவும் அவர்குறிப்பிட்டார். இந்திய விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாளை நாடு திரும்பவுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த விஜயத்தின் பின்னர் பல சாதகமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 173 வானூர்தியில் இன்று அதிகாலை 4.30மணியளவில் இந்தியாவின் பெங்களுர் நகரை நோக்கி ஆறு பேர் உள்ளடங்கிய குழுவினருடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

http://www.virakesari.lk/article/31080

20 தமிழர்களைச் சுட்டுக்கொன்ற ஆந்திரத் தெலுங்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மகிந்த ராஜபக்சதான் சிறந்த நண்பனாக இருக்க முடியும். சிங்களம் தெரிந்த ஒருவரால் தெலுங்கு மொழியை இலகுவாக வாசிக்க இயலும். ஒலிப்பின் வடிவங்களிலும் பெருமளவு ஒற்றுமைகள் இருக்கும்.

சேனநாயக்க, பண்டாரநாயக்க, விக்கிரமநாயக்க...........பெயர்களிலும் அதே தான். ஆந்திராவிலுள்ள பல ஊர்களின் பெயர்களும் சிங்களத்தோடு ஒத்து இருக்கும்.

தமிழர்களுக்கும் வடுகர்களுக்குமிருக்கும் வரலாற்றுப் பகைமை குறித்து நிறையைத் தகவல்கள் திரட்டி ஒப்பீடு செய்து பார்த்தால் பல வியத்தகு விடயங்கள் தெரிய வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியீட்டியதன பின்னர் திருப்பதிக்கு சென்று மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

திருப்பதியில் இருப்பத்து புத்தர் சிலை என‌   திருமாவளவன் சொன்னதை நம்பிட்டார் போல‌ 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.