Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான வேலை திட்டம் யாழில் விரைவில்!

Featured Replies

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான வேலை திட்டம் யாழில் விரைவில்!

 

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான வேலை திட்டம் யாழில் விரைவில்!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம், வாழ்க்கை தரம், சுய தொழில் வாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்ற பாரிய வேலை திட்டம் ஒன்றை யாழ்ப்பாண மாவட்டத்தை மையமாக கொண்டு விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை மக்கள் நலன்புரி ஸ்தாபனத்தின் தலைவி வதனி மோகனசங்கர் அம்மையார் தெரிவித்தார்.

வதனி மோகனசங்கர் தனது 24 ஆவது திருமண ஆண்டு நிறைவை ஒட்டி வறிய, போரால் பாதிக்கப்பட்ட, பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு சுய தொழில் மேம்பாடுக்காக நேற்றையதினம் (28-03-2018) தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார்.

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான வேலை திட்டம் யாழில் விரைவில்!

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தாா்.

நான் முன்னாள் போராளிகளின் குறைகளை செவிமடுத்து அவற்றை நிறைவு செய்து கொடுக்கின்ற பாரிய வேலை திட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி வெகுவிரைவில் ஆரம்பிக்க உள்ளேன்.

இதன் மூலமாக முன்னாள் போராளிகளின் வாழ்க்கை பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை பெற்று கொடுக்க முடியும் என்பதோடு அவர்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், வாழ்க்கை தரம், தொழில் துறை ஆகியவற்றை மேம்படுத்த முடியும் என்றும் நம்புகின்றேன்.

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மூலமாக பயனாளிகளின் தெரிவு மேற்கொள்ளப்பட்டு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்ற சம்பிரதாயபூர்வ வைபவத்தில் வைத்து இவை கையளிக்கப்பட்டன.

இவ்வைபவத்தில் இவரின் கணவர் தொழிலதிபர் மோகனசங்கர், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அடங்கலான இராணுவ உயரதிகாரிகள், சிங்கள திரையுலகின் மூத்த நடிகை சுனிதா வீரசிங்க, அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான வேலை திட்டம் யாழில் விரைவில்!

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான வேலை திட்டம் யாழில் விரைவில்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Head-of-SriLanka-Peoples-Welfare-Organization

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/29/2018 at 5:00 AM, நவீனன் said:

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மூலமாக பயனாளிகளின் தெரிவு மேற்கொள்ளப்பட்டு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்ற சம்பிரதாயபூர்வ வைபவத்தில் வைத்து இவை கையளிக்கப்பட்டன.

சொறீலங்கா.. இராணுவம் தான் இப்ப தமிழ் மக்களுக்கு எது கிடைக்கனும் கிடைக்கக் கூடாது என்பதை தீர்மானிக்குது போல.

முதலில.. உந்த வெங்காயங்களுக்கு விளம்பரம் தேவைன்னா.. போய் சிங்கள சொறீலங்கா ஆமிக்காங்களின் தேவைகளை கவனிக்கட்டும்.

அநாவசியமாக.. சொறீலங்கா இராணுவத்தை.. அதுவும் போர்குற்ற இனப்படுகொலை இராணுவத்துக்கு வெள்ளையடிக்கிற வேலையை 10.. 15 தையல் மிசினை வைச்சு படம் காட்டிச் செய்ய வேண்டாம்.  

இவை இன்னும் எந்தக் காலத்தில இருக்கினம்.. சிங்கர் மிசினை வைச்சு.. மில்லியனார் ஆகிடலாமோ..??! :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் அதிபர் என்றால் வடக்கில்  தனது தொழிளின் கிளை ஒன்றை ஆரம்பித்து முன்னாள் போராளிகளை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு பொறுப்பான வேலையை கொடுக்கிறதுக்கு பதிலா இவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் தையல் மெசினும் பூச்செடி ஆடு மாடு கோழி வளர்க்கிறதும்தானா. இதைவிட்டா வேறு தொழில் இல்லையா. உலகம் எங்வளவு முன்னேறியிருக்கு.

வேறு ஒரு தமிழ் தொழில் அதிபர் வடக்கில் தொழில்பேட்டை தொடங்கி இளைஞருக்கு வேலை கொடுத்தாராம் டின்று யூடியூபில் போட்டிருந்தது போய் பார்த்தால் அங்கயும் மரக்குச்சிகளையும் சிரட்டை இரும்புத்துண்டை வைச்சி வீட்டை அழகுபடுத்தும் சிறிய பொருட்களை செய்துகொண்டிருந்தார்கள். அங்கு சிறிய (இல்லை பெரிய) நெருடல் என்னவென்றால் ஆபத்தான இயந்தரங்களை பயன்படுத்தும்போது எவருமே பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவில்லை.

அங்கு வேலை செய்பவர்கள் தமது கைவிரல்களை அல்லது கண்பார்வையை இழக்க எவ்வளவோ சந்தர்ப்பம் இருந்தும் அவர்கள் அதைக் கண்டுகொண்டு உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. குறிப்பாக வெட்டும் இயந்திரங்கள் சாணைபிடிக்கும் இயந்திரம் வாள் என்பனவற்றின் சுழலும் சக்கரத்தில் சிரட்டை மரத்துண்டு என்பவற்றை வைத்து கையால் அழுத்திப்பிடித்தபடி பெண்கள் அங்கு வேலை செய்வதைக் காணக்கூடியதாக இருந்தது.

இன்னும் ஒரு முக்கிய விடயம் இயந்திம் ஒரு அறையிலும் அதன் மின்சுவிச்சை இன்னும் ஒரு அறையிலும் வைத்திருந்தார்கள். அத்துடன் இரு கையிக்க சாணைபிடிக்கும் இயந்திரத்தை மேசையில் ஒரு இடுக்கியை பயன்படுத்தி பொருத்தியுமிருந்தார்கள். இயந்திரங்களில் இருந்து வந்த பெரிய இரைச்சல் சத்தமும் காலப்போக்கில் தொழிலாளர்களின் காதை செவிடாக்கும் என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/03/2018 at 6:00 AM, நவீனன் said:

வதனி மோகனசங்கர் தனது 24 ஆவது திருமண ஆண்டு நிறைவை ஒட்டி வறிய, போரால் பாதிக்கப்பட்ட, பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு சுய தொழில் மேம்பாடுக்காக நேற்றையதினம் (28-03-2018) தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார்.

இதே போன்ற  திட்டமொன்றை  ஆரம்பித்து

15 பயனாளிகளுக்கு  மேற்பட்டோருக்கு

ஒரு நிலையான  இடத்தில்

தொடர்ச்சியான  உத்தரவாதத்துடன்

தொடர்ந்து வலுப்படுத்தி  ஒரு தொழிற்சாலையாக வளர்த்தெடுக்கும் நோக்குடன்

நாங்கள்  தொடங்கியபோது....

போரால்  பாதிக்கப்பட்டது என்பதும்

பெண்கள் தலைமை  தாங்கும் குடும்பம்  என்பதும்

விடுதலைப்புலிகளைத்தான்  குறிக்கிறது

எனவே  நீங்கள்  விடுதலைப்புலிகளை மீண்டும்  பலப்படுத்துகிறீர்கள்  என

அதன்  பொறுப்பாளரை  கேள்வி நீதியற்று 6 மாதம் உள்ளே  போட்டார்கள்

இப்ப  அதே ராணுவத்துடன் சேர்ந்து...??

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.