Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன் - பசளை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன்

 Sinnathamby Kumarathas அவர்களின் மேற்பார்வையில்

எமது ஊரிலுள்ள மூலவளங்களை 
பாவனைக்குட்படுத்துவதனூடாகவும்

அங்கு வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வளங்குவதனூடகவும்

எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு

பசளை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சியின்

பரிட்சார்த்த ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில படங்கள்.

L’image contient peut-être : une personne ou plus, plein air et nature
L’image contient peut-être : une personne ou plus, plein air et nature
L’image contient peut-être : plein air
L’image contient peut-être : 1 personne, debout et plein air
 
J’aimeAfficher plus de réactions
Commenter
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்லது, நன்றாக நடக்கட்டும்......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 6/13/2018 at 10:43 PM, suvy said:

நல்லது, நன்றாக நடக்கட்டும்......!  tw_blush:

உங்களுக்கு காணிகள் இருந்தால் சொல்லுங்கள் புங்குடுதீவில் :)

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களுக்கு காணிகள் இருந்தால் சொல்லுங்கள் புங்குடுதீவில் :)

 அங்கு நிறைய காணிகள் இருக்கு, ஆனால் நான் இன்னும் வாங்கவில்லை.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய சூழ்நிலையில்... இயற்கை உரம் அத்தியாவசியமானது.
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்.. முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களுக்கு காணிகள் இருந்தால் சொல்லுங்கள் புங்குடுதீவில் :)

உங்களுக்கு  கிழக்கில  கன  வேலை  இருக்கு  ராசா

  • கருத்துக்கள உறவுகள்

இறுபிட்டி வீரகத்திப் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் எனக்கு ஒரு காணி இருக்கு  ஆனால் அது கடற்கரையை அண்மித்தபகுதி ஒருகாலத்தில் அங்கு வரகு தானியம் விளைவித்தாக அம்மா கூறியது நினைவிலிருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல முன்மாதிரியான முயற்சி!

முன்னெடுப்பவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!

இதே போன்ற முயற்சியை..நெடுந்தீவு போன்ற இடங்களிலும் முன்னெடுக்கலாமே!

வல்லை வெளியெங்கும் ....எருக்குவியலும்...குதிரைச் சாணமுமாக நிறைந்து கிடைப்பதைப் பல தடவைகள் கண்டுள்ளேன்! 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/13/2018 at 7:13 PM, suvy said:

நல்லது, நன்றாக நடக்கட்டும்......!  tw_blush:

செய்த  மனமும்

 கால்  கைகளும்  சும்மா  இராது  அண்ணா

முதலில்  ஒரு  பரீட்சார்த்த  முயற்சி  தான்.

10  அல்லது பதினைஞ்சு  லட்சம்வரை.

வெற்றியென்றால் தொழிற்சாலை.

நல்லது தொடர்ந்து நடக்கும்  அண்ணா

நன்றி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

தற்போதைய சூழ்நிலையில்... இயற்கை உரம் அத்தியாவசியமானது.
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்.. முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

நான்  எழுத  மறந்த இயற்கை உரம்  என்ற  பதத்தை  பதிந்துள்ளீர்கள்

அதே...

உள்ளுரில் உள்ளவர்களுக்கு வருவாயை உண்டு பண்ணும்

எரு 

குப்பை குழைகளை  சேகரித்தல்

அதனை  பணம் கொடுத்து  வாங்குவதற்கு  வழி  இருக்கு  எனும் நிலையை மக்கள் மனதில் விதைத்தல்

மரம்  நடுகை

பூந்தோட்டம்

மற்றும் 

விவசாயம்  செய்யும் ஆவலை தூண்டுதல்

வேலை  வாய்ப்பளித்தல் என  பல நல்ல  விடயங்கள்  நிறைவேறும் என எதிர்பார்த்தே தொடங்கப்படுகிறது

பரீட்சார்த்த முயற்சி  வெற்றி  பெறட்டும்

நன்றி  சிறி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Elugnajiru said:

இறுபிட்டி வீரகத்திப் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் எனக்கு ஒரு காணி இருக்கு  ஆனால் அது கடற்கரையை அண்மித்தபகுதி ஒருகாலத்தில் அங்கு வரகு தானியம் விளைவித்தாக அம்மா கூறியது நினைவிலிருக்கு 

கடற்கரை  காணிகளோ

அல்லது கடற்கரையிலிருந்து பெறப்படும் எருவோ 

மற்ற  மாவட்டங்களுக்கு  அனுப்பும் போது சரி  வராது என 

இது சார்ந்த நிபுணர்களால் எச்சரிக்கைப்படுத்தப்பட்டுள்ளது சகோ.

ஒன்றை  செய்யத்தொடங்கும் போது  தானே 

சரி  பிழை  அல்லது ஏற்புடையது அற்றது  தெரியவரும்

நன்றி சகோ 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புங்கையூரன் said:

மிகவும் நல்ல முன்மாதிரியான முயற்சி!

முன்னெடுப்பவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!

இதே போன்ற முயற்சியை..நெடுந்தீவு போன்ற இடங்களிலும் முன்னெடுக்கலாமே!

வல்லை வெளியெங்கும் ....எருக்குவியலும்...குதிரைச் சாணமுமாக நிறைந்து கிடைப்பதைப் பல தடவைகள் கண்டுள்ளேன்! 

 

நேசண்ணையை   உங்களுக்கு  தெரிந்திருக்குமண்ணா

பிரான்சிலிருந்து சென்று பெரும் பண்ணை மற்றும் இறால்  வளர்ப்பு  என்று  பல  திட்டங்களை  செயற்படுத்துகிறார்

அவரது துணையோடு தான் இதுவும்  தொடங்கப்பட்டுள்ளது

மற்றவர்களுக்கும் முன்  மாதிரியாக

அவர்களையும்  உந்தித்தள்ளுதலும்   குறியே.

நன்றியண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சில படங்கள்.

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன்

Sinnathamby Kumarathas அவர்களின் மேற்பார்வையில்

எமது ஊரிலுள்ள மூலவளங்களை 
பாவனைக்குட்படுத்துவதனூடாகவும்

அங்கு வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வளங்குவதனூடகவும்

எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு

இயற்கை உரத்தை தயாரிக்கும் உற்பத்தித்தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சியின்

பரிட்சார்த்த ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் சில படங்கள்.

 

L’image contient peut-être : nuage, ciel, plein air et nature
L’image contient peut-être : une personne ou plus, personnes debout, chaussures, arbre, ciel, enfant et plein air
L’image contient peut-être : une personne ou plus, personnes assises et plein air
L’image contient peut-être : plein air
 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
On 6/14/2018 at 11:03 PM, suvy said:

 அங்கு நிறைய காணிகள் இருக்கு, ஆனால் நான் இன்னும் வாங்கவில்லை.....!  tw_blush:

எல்லோரும் விற்கிறார்கள் நீங்கள் வாங்கினால் நம்மளுக்குள்ளேயே இருக்கும் அந்த நிலங்கள் 

 

On 6/14/2018 at 11:13 PM, விசுகு said:

உங்களுக்கு  கிழக்கில  கன  வேலை  இருக்கு  ராசா

கிழக்கை பொறுத்தவரைக்கும் இழந்துவிட்ட ஒன்றை பெற முடியாது  எங்களுக்கு வேலை இல்லை நாங்கள் தெரிவு  செய்தவர்களும் வேலையில்லாதவர்கள் 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மேலும் சில படங்கள்.
 
France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன் Sinnathamby Kumarathas அவர்களின் மேற்பார்வையில் எமது ஊரிலுள்ள மூலவளங்களை
பாவனைக்குட்படுத்துவதனூடாகவும் அங்கு வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வளங்குவதனூடகவும் எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு இயற்கை உரத்தை தயாரிக்கும் உற்பத்தித்தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சியின் பரிட்சார்த்த ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் சில படங்கள்.

Edited by விசுகு

  • 2 weeks later...

தொடர்ந்து பதிவிடுங்கள் விசுகு அண்ணா ,அங்கிருந்து பெறப்படும் அனுபவங்களும் செய்முறைகளும் எம் கிராமத்திற்கும் மற்றும் வன்னியிலுள்ள அயற்கிராமங்களிற்கும் பயன்படுத்த கூடியதாக இருக்கும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அபராஜிதன் said:

தொடர்ந்து பதிவிடுங்கள் விசுகு அண்ணா ,அங்கிருந்து பெறப்படும் அனுபவங்களும் செய்முறைகளும் எம் கிராமத்திற்கும் மற்றும் வன்னியிலுள்ள அயற்கிராமங்களிற்கும் பயன்படுத்த கூடியதாக இருக்கும் 

நிச்சயமாக  சகோ

இது ஒரு  பரீட்சார்த்த  முயற்சி  தான்

எமது ஊரிலுள்ள மூலவளங்களை  பாவிப்பதும்

அந்த  மக்களை அவற்றை  சேகரிப்பதற்கு ஊக்கவிப்பதும்

அதனூடு வேலை  வாய்ப்புக்களை  ஏற்படுத்துவதுமே  நோக்கம்

இதுவரை 10  லம்சம் செலவிடப்பட்டிருக்கிறது

அந்தப்பணம் இலவசமாக  அந்த மக்களுக்கு  கொடுக்கப்படாமல்

ஒன்றை  அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு  வழங்கப்பட்டிருக்கிறது

இதுவரை 15 லோட் எருவும்  3 லோட் தும்பும் பறிக்கப்பட்டிருக்கிறது

காணியை அடைத்து கொட்டப்பட்டிருப்பவைகளை அறிக்கை  செய்யும்  பணிகள்  நடக்கின்றன

அடுத்து சில  இயந்திங்களை  கொள்வனவு செய்தல்

நீர் பாய்ச்சுதல் 

குழைத்தல் தொடங்க  இருக்கிறது

தொடர்ந்து முன்னேற்றம் பற்றி  பதிவிடுகின்றேன்

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

நிச்சயமாக  சகோ

இது ஒரு  பரீட்சார்த்த  முயற்சி  தான்

எமது ஊரிலுள்ள மூலவளங்களை  பாவிப்பதும்

அந்த  மக்களை அவற்றை  சேகரிப்பதற்கு ஊக்கவிப்பதும்

அதனூடு வேலை  வாய்ப்புக்களை  ஏற்படுத்துவதுமே  நோக்கம்

இதுவரை 10  லம்சம் செலவிடப்பட்டிருக்கிறது

அந்தப்பணம் இலவசமாக  அந்த மக்களுக்கு  கொடுக்கப்படாமல்

ஒன்றை  அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு  வழங்கப்பட்டிருக்கிறது

இதுவரை 15 லோட் எருவும்  3 லோட் தும்பும் பறிக்கப்பட்டிருக்கிறது

காணியை அடைத்து கொட்டப்பட்டிருப்பவைகளை அறிக்கை  செய்யும்  பணிகள்  நடக்கின்றன

அடுத்து சில  இயந்திங்களை  கொள்வனவு செய்தல்

நீர் பாய்ச்சுதல் 

குழைத்தல் தொடங்க  இருக்கிறது

தொடர்ந்து முன்னேற்றம் பற்றி  பதிவிடுகின்றேன்

 

தங்கள் தளராத முயற்சி தொடரட்டும், விசுகர்!

நேசன் அண்ணனை எனக்குத் தெரியும்! எனது தந்தையாரின் மாணவர் என்பது மட்டுமன்றி....அவரை..சில தடவைகள் பிரான்சிலும் சந்தித்திருக்கிறேன்!

இதே போல இன்னும் பல முயற்சிகள் செய்யலாம்!

 

கண்ணகை அம்மன் கோவிலடி தொடக்கம்.....கோரியா வெளிச்சவீடு வரையிலான பகுதிகள்...மட்டி விளையும் ஒரு விளை நிலமாகும்!

அத்துடன் கடலட்டை போன்றவையும் அங்கு நிறைய உண்டு!

கண்ணாத் தீவுக்கு ...ஒரு முறை போனபோது...அங்கு மட்டி பொறுக்கி மினக்கடத் தேவையில்லை! மண் வெட்டியாலேயே வெட்டி அள்ளலாம்! அவ்வளவு விளைச்சல்!

இந்த மட்டிகளுக்கு...வெளி நாடுகளில் அளவில்லாத 'சந்தை' உண்டு!

நானே....நாக்கு ..செத்துப் போற மாதிரி...இருக்கும் வேளைகளில்....ஒரு சின்னப் பேணிக்குள் வரும் மட்டி வாங்கி வறை வறுத்துச் சாப்பிடுவதுண்டு!

ஒரு சின்னப் பேணி....இரண்டு டொலர் வரை வரும்!

பிரான்சில் வாழும் உங்களுக்குக் கடலட்டை சந்தை பற்றி...நான் சொல்லத் தேவையில்லை!

அத்துடன்...மட்டிச் சதையை அகற்றியபின்னர் ...வரும்...சிப்பிகளைக் கோழித் தீனுக்கு....மூலப்பொருளாகவும்...உபயோகிக்கலாம்!

,இது சார்ந்த தொழில்நுட்ப அறிவுகளை எங்கிருந்து பெற்றுகொண்டா/டீர்களென எழுதுங்கள் 

சிப்பிகள் சுண்ணாம்பு கைத்தொழிலிலும் பயன்படுத்தலாம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

தங்கள் தளராத முயற்சி தொடரட்டும், விசுகர்!

நேசன் அண்ணனை எனக்குத் தெரியும்! எனது தந்தையாரின் மாணவர் என்பது மட்டுமன்றி....அவரை..சில தடவைகள் பிரான்சிலும் சந்தித்திருக்கிறேன்!

இதே போல இன்னும் பல முயற்சிகள் செய்யலாம்!

 

கண்ணகை அம்மன் கோவிலடி தொடக்கம்.....கோரியா வெளிச்சவீடு வரையிலான பகுதிகள்...மட்டி விளையும் ஒரு விளை நிலமாகும்!

அத்துடன் கடலட்டை போன்றவையும் அங்கு நிறைய உண்டு!

கண்ணாத் தீவுக்கு ...ஒரு முறை போனபோது...அங்கு மட்டி பொறுக்கி மினக்கடத் தேவையில்லை! மண் வெட்டியாலேயே வெட்டி அள்ளலாம்! அவ்வளவு விளைச்சல்!

இந்த மட்டிகளுக்கு...வெளி நாடுகளில் அளவில்லாத 'சந்தை' உண்டு!

நானே....நாக்கு ..செத்துப் போற மாதிரி...இருக்கும் வேளைகளில்....ஒரு சின்னப் பேணிக்குள் வரும் மட்டி வாங்கி வறை வறுத்துச் சாப்பிடுவதுண்டு!

ஒரு சின்னப் பேணி....இரண்டு டொலர் வரை வரும்!

பிரான்சில் வாழும் உங்களுக்குக் கடலட்டை சந்தை பற்றி...நான் சொல்லத் தேவையில்லை!

அத்துடன்...மட்டிச் சதையை அகற்றியபின்னர் ...வரும்...சிப்பிகளைக் கோழித் தீனுக்கு....மூலப்பொருளாகவும்...உபயோகிக்கலாம்!

எவர்கிறீன்நண்டுபண்ணை

36959394_2101229129915780_33610879123083

எவர்கிறீன்நண்டுபண்ணையில்  வளர்ந்த  நண்டுகள்

37017669_2101236816581678_20338360130291

இதன்  அடுத்த  கட்டத்துக்கு லைக்கா  பிரேம் உதவுவார் போலுள்ளது

பார்க்கலாம்  அண்ணா

https://www.facebook.com/sinnathamby.kumarathas?hc_ref=ARTDn-op1s854tjRh7FxB4_Wiw5bItCUTBekiyrqRElC5lWcj2L4d5w6NIR18WUXanU&fref=nf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அபராஜிதன் said:

,இது சார்ந்த தொழில்நுட்ப அறிவுகளை எங்கிருந்து பெற்றுகொண்டா/டீர்களென எழுதுங்கள் 

சிப்பிகள் சுண்ணாம்பு கைத்தொழிலிலும் பயன்படுத்தலாம் 

முதலில் இது  சம்பந்தமாக  பல்கலைக்கழக படிப்பை  முடித்து

ஆய்வுகளை  நடாத்திவரும் ஒருவருடன் பேசி

ஒரு கேள்விக்கொத்தை (மாதிரி கணிப்பு) கேட்டிருந்தோம்

அவர் 325 தொன் இயற்கைப்பசளை செய்வதற்கு 65 லட்சம் (6.5 மில்லியன்)ரூபாய்கள்  என  தெரிவித்திருந்தார்

அந்தளவுக்கு செய்து

அதற்கான  சந்தை வசதி  மற்றும் பாதுகாப்பு  சம்பந்தமான சங்கடங்கள் இருந்தமையால்

ஆனால் எமது ஊரில்  வீணாகிப்போகும்  மூலவளங்களை  பாவிக்கும்  திட்டம்  என்பதால்

பரீட்சார்த்தமாக சில தொன்களை  தயாரிக்க  உடன்பட்டிருக்கின்றோம்

அதேநேரம்  பரீட்சார்த்த திட்டத்துக்காகவும்

இருவர்  தென் பகுதி  சென்று  சில மாதங்கள் இது பற்றி  படித்து  அறிய  அனுப்பப்பட  உள்ளனர்

அவர்களே  பொறுப்பாக  இருந்து  இதை  செய்வர்

இது சரி  வந்தால் அவர் சமர்ப்பித்த  தொகைக்கு  நகர  தயாராக  உள்ளோம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தப்பா நினைக்கவேண்டாம்

 முதலில் புங்குடுதீவின் மேட்டிப்பாங்கான பகுதிகளை இனம்கண்டு அங்கிருந்து கடலை நோக்கிச்செல்லும் மழைநீரை மறிப்பதற்கான தடை அரண்களை நிறுவவும் தவிர நெல்வயல்களில் நீங்கள் நெற்பயிர் பயிரிடுகிறீர்களோ இல்லையோ அதனது வரப்புகளைப் பராமரிக்கவும் அங்கு காணப்படும் குளங்களின் மேலதிகமாகச் சேர்ந்த மண்ணை அகற்றி அக்குளங்களில் அதிகூடிய விரைவில் தண்ணீர் நிலத்துக்கு அடியில் சேர்ந்துவிடாது தடுப்பதற்காய் களிமண் படுகையை ஏற்படுத்தவும் உங்கள் வயல்கள் தோட்டக்காணிகளுக்கு இடையில் உள்ள எல்லைகளில் சுமார் ஆறு அடிகள் அகலமுள்ள உயிவேலியை ஏற்படுத்தவும் உயிர்வேலி எனப்படுவது மரங்கள் பயந்தரு மரங்கள் கற்றாழைச்செடிகள் முள்மரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வேலி அமைப்புமுறை இதில் பயந்தரு மரங்கள் நடும்போது வரட்சியைத்தாங்கும் சோற்றுக்கற்றாழை ஆகியவற்றை அம்மரங்களுக்கு மிக அருகிலேயே நடவும். குறிப்பாக தீவகத்தில் இப்போது தனது கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும் கால்நடைகளை அழியவிடாது பாதுகாருங்கள் அவைகளுக்கான நீர்த்தொட்டிகளை அமையுங்கள் கண்ணகை அம்மஙோவிலடியைச்சேர்ந்த கடற்கரைப்பிரதாசத்தை அண்டியுள்ள கிணறுகள்தான் நன்னீர்க்கிணறுகளாகக் காணப்பட்டவை ஆகவே அந்தப்பகுதிக்கடலை மழைநீர் செல்லாதபடி தடுப்பரண்களைக்கட்டுங்கள் புங்குடுதீவின் நிலப்பரப்பில் பள்ளமாக இருக்கும் பகுதியை அடையாளம்கண்டு அந்தப்பகுதிக்கு நீர்வரத்தை அதிகமாக்கும் வாய்கால்களை அமையுங்கள் காலப்போக்கில் அந்நீர் விரைவாக நிலத்தடி சென்று கடலில் கலக்காது களிமண்கொண்டு அடிப்பகுதியுல் தடை அமையுங்கள் இவை எல்லாம் புங்குடுதீவு எனும் ஒரு சொல்லின் பின்னால் நீங்கள் ஒன்றுசேரும் ஒற்றுமையை மையமாக வைத்து ஈழபகுதியில் நிறையப்பிரதேசங்கள் இருந்த்தாலும் உங்களால் மட்டுமே நிறைவேற்றக்கூடிய ஒன்றுபடும் தன்மை இருப்பதால் பெருமையுடன் ஈடுபடுங்கள் அனைத்தும் வசப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கைப் பசளை தயாரிப்பது ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை கும்பலாகப் பசளை தயாரிக்காமல் எங்கு நீங்கள் பயன்படுத்த முயலுகிறீர்களோ அங்கேயே குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய குழிகளை வெட்டி அருகில் காணப்படும் குப்பை எரு அதுதவிர்ந்த உணவுக்கழிவுகள் பனம்ப்பழம் இவைகளை சேகரித்தால் இயற்கைப்பசளைக்கான ஆரம்பகட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம் அவை மக்குவதற்கு நிறையவே ஈரப்பதம் தேவை புங்குடுதீவையொட்டி வீசும் காற்றில் உப்புத்தன்மை ஓரளவு ஏனையபகுதிகளைவிட அதிகமாக இருப்பதால் அக்காற்றில் ஈரப்பதம் இருந்தாலும் உக்குவதற்கு ஏனைய இடங்களைவிடக்காலதாமதமாகலாம் ஆகவே அக்குழிகளில் பயந்தரு அல்லது நிழல்தரு மரங்களை நடவுசெய்து தேவைக்கேற்ற தண்ணீர் விட்டால்  குப்பை மக்குவதோடு மரமும் வளர்ந்துவிடும் கால்நடைகளிலிருந்து அவற்றைக்காப்பாற்ற யாழ் நகரை அண்டிய பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகளது பொருண்மீய மேம்பாட்டு நிறுவனம் பனை மட்டைகளைக்கொண்டு அழகான தடுப்பரணை அமைத்ததுபோல் அமைத்தால் எளிதில் கால்நடைகள் சேதமாக்காது காலப்போக்கில் பனங்கொட்டைகளை அகற்றி அவற்றை வேறோர் இடத்தில் நடவுசெய்யலாம் 

தாக்குதலுக்குள்ளான அமெரிக்க இரட்டைக்கோபுரம் அமைந்த பகுதி ஒருகாலத்தில் விசஜந்துகள் வாழும் யாருமே ஏறிட்டுப்பார்க்காத கலட்டித்தறையாகவே இருந்த்தது சுதந்திரசிலை அமைத்தபின்னதான காலத்திலேயே அபகுதி அபிவிருத்திசெய்யப்பட்டு இப்போது உலகில் மிகவும் விலமதிப்பான பகுதியாகக்காணப்படுகிறது அது கிட்டத்தட்ட புங்குடுதீவின் பரப்பளவே உள்ள பிரதேசம். பணமுள்ளவர்கள் அப்பிரதேசத்தில் சூரியசக்தி மின்பிறப்பாக்கிகளை பெருமளவில் உருவாக்கி மின்சாரம் தயாரித்தால் மேலதிகமானதை குடாநாட்டின் ஏனைய தீவுப்பகுதிக்கும் நாமே வினியோகம் செய்யலாம் தவிர எமது தண்ணீர்த்தேவைக்காக எதிர்காலத்திட்டங்களுக்கான மின்சாரத்தை இதிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். அதைவிடுத்து இரணைமடுவிலிருந்து தண்ணிதா எனக்கெட்பது அப்பிரதேச மக்களுக்கு நாம் செய்யும் நல்லசெயல் இல்லை. 

 

அதிகப்பிரசங்கித்தனமாகக் கருத்திடுகிறேன் என யாரும் நினைக்கவேண்டாம்

தாயகத்தின் ஏனைய பகுதிகளைவிட புங்குடுதீவிலிருந்தே இடம்பெயர்ந்த மக்கள் அத்கம் அதிலும் மேலைத்தேயநாடுகளில் குடியேறியோர் அல்லது அவர்களுடன் தொடர்புடையோர் என ஏராளமானோர் நிறையவே உள்ளனர் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் நாம் தாயகத்தின் ஏனைய பகுதிகளை அபிவிருத்தி செய்கிறோம் பேர்வளி எனக்கிளம்பினால் அங்குள்ளவர்கள் வந்திட்டாங்கள் கோப்பை கழுவியள் கக்கூஸ் கழுவியள் எங்கட அலுவல் எங்களுக்குத் தெரியும் நீங்கள் உங்கட அலுவலைப்பாருங்கோ ஆனால் காசைமட்டும் தாருங்கோ என எம்மை எட்டடி தள்ளியே வைத்திருப்பினம் ஆனால் புங்குடுதீவு அப்படியில்லை அனேகமாக படுத்த யாழ் தமிழர்களால் ஏளனப்படுத்தப்பட்ட பிரதேசம் அங்கு நாம் எதைச்செய்தாலும் நாமே முன்னிண்று செய்யலாம் எமக்கு என்ன நல்ல விடையங்கள் தோன்றுகின்றதோ அவற்றையெல்லாம் அங்கு நாம் செய்யலாம் அப்பிரதேசம் முன்னேறினால் நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் மதிப்பிருக்கும் அந்த ஆதங்கத்தால்தான் இவற்றை உங்களுடன் பகிர்கின்றேன்

Edited by Elugnajiru

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Elugnajiru said:

இயற்கைப் பசளை தயாரிப்பது ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை கும்பலாகப் பசளை தயாரிக்காமல் எங்கு நீங்கள் பயன்படுத்த முயலுகிறீர்களோ அங்கேயே குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய குழிகளை வெட்டி அருகில் காணப்படும் குப்பை எரு அதுதவிர்ந்த உணவுக்கழிவுகள் பனம்ப்பழம் இவைகளை சேகரித்தால் இயற்கைப்பசளைக்கான ஆரம்பகட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம் அவை மக்குவதற்கு நிறையவே ஈரப்பதம் தேவை புங்குடுதீவையொட்டி வீசும் காற்றில் உப்புத்தன்மை ஓரளவு ஏனையபகுதிகளைவிட அதிகமாக இருப்பதால் அக்காற்றில் ஈரப்பதம் இருந்தாலும் உக்குவதற்கு ஏனைய இடங்களைவிடக்காலதாமதமாகலாம் ஆகவே அக்குழிகளில் பயந்தரு அல்லது நிழல்தரு மரங்களை நடவுசெய்து தேவைக்கேற்ற தண்ணீர் விட்டால்  குப்பை மக்குவதோடு மரமும் வளர்ந்துவிடும் கால்நடைகளிலிருந்து அவற்றைக்காப்பாற்ற யாழ் நகரை அண்டிய பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகளது பொருண்மீய மேம்பாட்டு நிறுவனம் பனை மட்டைகளைக்கொண்டு அழகான தடுப்பரணை அமைத்ததுபோல் அமைத்தால் எளிதில் கால்நடைகள் சேதமாக்காது காலப்போக்கில் பனங்கொட்டைகளை அகற்றி அவற்றை வேறோர் இடத்தில் நடவுசெய்யலாம் 

தாக்குதலுக்குள்ளான அமெரிக்க இரட்டைக்கோபுரம் அமைந்த பகுதி ஒருகாலத்தில் விசஜந்துகள் வாழும் யாருமே ஏறிட்டுப்பார்க்காத கலட்டித்தறையாகவே இருந்த்தது சுதந்திரசிலை அமைத்தபின்னதான காலத்திலேயே அபகுதி அபிவிருத்திசெய்யப்பட்டு இப்போது உலகில் மிகவும் விலமதிப்பான பகுதியாகக்காணப்படுகிறது அது கிட்டத்தட்ட புங்குடுதீவின் பரப்பளவே உள்ள பிரதேசம். பணமுள்ளவர்கள் அப்பிரதேசத்தில் சூரியசக்தி மின்பிறப்பாக்கிகளை பெருமளவில் உருவாக்கி மின்சாரம் தயாரித்தால் மேலதிகமானதை குடாநாட்டின் ஏனைய தீவுப்பகுதிக்கும் நாமே வினியோகம் செய்யலாம் தவிர எமது தண்ணீர்த்தேவைக்காக எதிர்காலத்திட்டங்களுக்கான மின்சாரத்தை இதிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். அதைவிடுத்து இரணைமடுவிலிருந்து தண்ணிதா எனக்கெட்பது அப்பிரதேச மக்களுக்கு நாம் செய்யும் நல்லசெயல் இல்லை. 

 

அதிகப்பிரசங்கித்தனமாகக் கருத்திடுகிறேன் என யாரும் நினைக்கவேண்டாம்

தாயகத்தின் ஏனைய பகுதிகளைவிட புங்குடுதீவிலிருந்தே இடம்பெயர்ந்த மக்கள் அத்கம் அதிலும் மேலைத்தேயநாடுகளில் குடியேறியோர் அல்லது அவர்களுடன் தொடர்புடையோர் என ஏராளமானோர் நிறையவே உள்ளனர் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் நாம் தாயகத்தின் ஏனைய பகுதிகளை அபிவிருத்தி செய்கிறோம் பேர்வளி எனக்கிளம்பினால் அங்குள்ளவர்கள் வந்திட்டாங்கள் கோப்பை கழுவியள் கக்கூஸ் கழுவியள் எங்கட அலுவல் எங்களுக்குத் தெரியும் நீங்கள் உங்கட அலுவலைப்பாருங்கோ ஆனால் காசைமட்டும் தாருங்கோ என எம்மை எட்டடி தள்ளியே வைத்திருப்பினம் ஆனால் புங்குடுதீவு அப்படியில்லை அனேகமாக படுத்த யாழ் தமிழர்களால் ஏளனப்படுத்தப்பட்ட பிரதேசம் அங்கு நாம் எதைச்செய்தாலும் நாமே முன்னிண்று செய்யலாம் எமக்கு என்ன நல்ல விடையங்கள் தோன்றுகின்றதோ அவற்றையெல்லாம் அங்கு நாம் செய்யலாம் அப்பிரதேசம் முன்னேறினால் நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் மதிப்பிருக்கும் அந்த ஆதங்கத்தால்தான் இவற்றை உங்களுடன் பகிர்கின்றேன்

மிகவும்  தேவையான

எமது அடுத்த அடுத்த செயல்களுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய   கருத்துக்கள் சகோ

தொடர்ந்து எழுதுங்கள்

 

இயற்கை  பசளை என்பது பெரிய விடயமன்று

ஆனால் இலங்கையில் பெரிதாக  இல்லை

அதனால் எமது மூலவளங்களையும்

புலம் பெயர் ஆலோசனை மற்றும் விளம்பர மார்க்கங்களை சரியாக பாவித்தால்

வளரலாம் என  நினைக்கின்றோம்  பார்க்கலாம்

தண்ணீர்  சிக்கல்

அது அரசு  தான் செய்யணும்  செய்கிறது

பார்க்கலாம்

மற்றும் மரங்கள்  மற்றும் மழை  நீர் சேகரித்தல்  சம்பந்தமாக 

சில செயற்திட்டங்கள்  நடைபெறுகின்றன  வேறு  அமைப்புக்களால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.