Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியில் கூரிய ஆயுதத்துடன் இலங்கை தமிழ் இளைஞன் கைது

Featured Replies

ஜேர்மனியில் கூரிய ஆயுதத்துடன் இலங்கை தமிழ் இளைஞன் கைது

 

 

ஜேர்மன் மியுனிச் நகரின் பிரதான ரயில் நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கூரிய கத்தியுடன் திரிந்த இலங்கை தமிழ் இளைஞன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூர்மையான கத்தியுடன் நபர் ஒருவர் சுற்றிதிரிவதனை அவதானித்த பயணி ஒருவர், உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

3 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்த 12 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட குழுவினர் குறித்த நபரை சுற்றிவளைத்துள்ளனர்.

குறித்த நபரிடம் கத்தியை கீழே போடுமாறு ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழியில் பல முறை கூறிய போதிலும் சந்தேகநபர் அதனை செவிமடுக்கவில்லை. முன்நோக்கி வந்த நபரை பின்னால் இருந்த பொலிஸ் அதிகாரி பாய்ந்து பிடித்துள்ளதுடன், மிளகு தூள் கொண்ட புகை ஒன்றை அவரது முகத்தில் தூவுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த நபர் கத்தியை அங்கும் இங்கும் அசைத்து குத்த முயற்சித்துள்ளார். எனினும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 32 வயதுடைய நபர் போலந்தில் கல்வி கற்றும் இலங்கை தமிழ் மாணவன் என தெரியவந்துள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் சென்று அங்கிருந்து கனடா செல்ல முயற்சித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த இலங்கை மாணவனுக்கு எதிராக, சட்டத்தை மீறி பொலிஸ் அதிகாரிக்கு எதிராக செயற்பட்டமை மற்றும் ஆயத சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் அவரது மனரீதியான நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெற்றுகொள்வதற்காக வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/germany/01/186210?ref=home-top-trending

Zugriff um 8.30 Uhr: Bundes- und Landespolizisten überwältigen den Messer-Mann

Beamte reden auf den Messer-Mann ein

… packt den Messer-Mann, hebt ihn in die Luft …

… und schleudert ihn in bester Wrestling-Manier zu Boden

Dann wird der Verdächtige von den Polizisten fixiert

https://www.bild.de/regional/muenchen/messer/messer-mann-am-hauptbahnhof-ueberwaeltigt-56051724.bild.html

  • கருத்துக்கள உறவுகள்

புத்தி உள்ள தமிழன் இப்படி செய்ய மாட்டான்.  மனநிலை பாதிக்கப் பட்டவராக இருக்கலாம்.
32 வயதில், அப்பிடி என்ன படிப்பு... படிக்கிறார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி,காதல் தோல்வி காரணமாய் இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரதி said:

வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி, காதல் தோல்வி காரணமாய் இருக்கும் 

அவர்..  தாடி, வளர்த்திருப்பதை பார்க்க, அப்படித்தான் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொந்தங்களில் யார் செய்த புண்ணியமோ இன்னும் உயிருடன் இருக்கிறார்.

ஜேர்மனியிலும்,பிரான்சிலும் தொடராக ஆயுதங்களால் அந்த நாட்டவர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் வரும் நிலையில், இவ்வளவு பொறுமையாக நின்று காவல்துறை அவரை கைது செய்தது வியப்பாக இருக்கிறது.

 அமெரிக்கா கனடா உட்பட்ட பிறநாடுகளில் என்றால் ஒரே ஒரு எச்சரிக்கைதான்,கேட்காவிட்டால் போட்டு தள்ளிட்டு

வெள்ளைதுணியால் மூடியிருப்பார்கள்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

அவர்..  தாடி, வளர்த்திருப்பதை பார்க்க, அப்படித்தான் தெரிகின்றது.

தாடியும் மீசையும் இப்பத்தையான் பாஷன் எல்லோ..:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நவீனன் said:

ஜேர்மனியில் கூரிய ஆயுதத்துடன் இலங்கை தமிழ் இளைஞன் கைது

Dann wird der Verdächtige von den Polizisten fixiert

ஜேர்மனியில்  அகதிகள் சம்பந்தமாக  அரசியல்/ஊடகங்கள் இறுகிய நிலையில் இருக்கும் போது  இப்படியொரு சம்பவம் தமிழர் மீதான நல்லெண்ணத்தை சிதைக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.