Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானத்தில் மது அருந்திய பெண் குழந்தையுடன் சிறையிலடைப்பு

Featured Replies

விமானத்தில் மது அருந்திய பெண் குழந்தையுடன் சிறையிலடைப்பு

 

 
 

விமானப் பயணத்தின் போது மது அருந்தியதற்காக பெண் வைத்தியர் எல்லி ஹோல்மேன் துபாயில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். 

tujyrjgn_bgcfuj5mr_d.JPG

சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் எல்லி ஹோல்மேன். பல் வைத்தியரான இவர், லண்டனிலிருந்து துபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் விமானத்தில் கடந்த ஜூலை 13ஆம் திகதி தன் 4 வயது குழந்தையுடன் பயணித்துள்ளார். அப்போது, அவருக்கு உணவுடன் மது வழங்கப்பட்டுள்ளது. எல்லி அதை அருந்தியிருக்கிறார். 

இதையடுத்து, துபாய் விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், எல்லி ஹோல் மேனின் விசா காலாவதியாகிவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், உடனடியாக லண்டனுக்குத் திரும்பிச் செல்லும்படி வலியுறுத்தியுள்ளனர். 

இந்தப் பிரச்சினையைச் சரிசெய்வதற்குள், பயணத்தில் மது அருந்தியது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனையின்போது, எல்லி ஹோல் மேனின் மொபைல் போனையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதனிடையில், மது அருந்தியதை உறுதி செய்ய அவருக்குப் பரிசோதனையும் நடத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, எல்லி ஹோல் மேனை கைது செய்த அதிகாரிகள், அவரின் 4 வயது குழந்தையுடன் சிறையில் அடைத்துள்ளனர். இதன் பின்னரே விவரம் அறிந்த எல்லியின் கணவர் துபாய்க்குப் புறப்­பட்டுச் சென்றுள்ளார். 

தன் மனைவி மற்றும் குழந்தையை பிணையில் எடுத்துள்ளார். `சிறையில் உரிய உணவு வழங்கவில்லை. மாற்று உடை தரவில்லை எனவும் கழிவறை மிகவும் அசுத்தமாக இருந்ததாகவும் மூன்று நாள் சிறையில் அனுபவித்த கொடுமைகளைக் கூறியுள்ளார் எல்லி. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தற்போது, இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

http://www.virakesari.lk/article/38339

https://www.theguardian.com/world/2018/aug/10/woman-held-in-dubai-with-daughter-for-drinking-glass-of-wine-on-flight

  • கருத்துக்கள உறவுகள்

அநéதப் பெண் விமானியா இருப்பாவோ

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிகவும் துவேசம் பிடித்தவர்களாக இந்த பணக்கார அரபிகள் உள்ளனர் என்று பிரித்தானிய பத்திரிகை ஒன்று முன்னர் எழுதியது.

நம்மவர்கள் ஒன்று தடாலடியாக விழுவார்கள் அல்லது நிலைமை புரியாது அலம்பறை பண்ணி சிக்கலில் மாட்டுவார்கள். முன்னையவர்கள் இலங்கை, இந்தியாவில் இருந்து வேலைக்கு செல்பவர்கள். பின்னையவர்கள், இங்கு குடியுரிமை பெற்று, தம்மை பெரிதாக பீத்திக் கொண்டு பயணிப்பவர்கள். கேட்ட கேள்விக்கு 'பணிவாக' பதிலை சொல்லாததால் அப்படி ஒருவரை துபாய் விமான நிலையத்தில், பாஸ்ப்போர்ட்டினை வாங்கி வைத்துக் கொண்டு அப்படி இரு என்று சொல்லி அந்த இமிகிரேஷன் அதிகாரி வீடு போய் விட்டார்.

மறுநாள் வரும்வரை அவர்கள் குடும்பமாக விமான நிலையத்தில்... அவரின் மனைவி அழுது... மன்னிப்பு கோரி, பாஸ்போர்ட்டனை வாங்கி... வேறு விமானத்தில் போய் சேர்ந்தனர்.

இதே போல ஒரு நண்பருக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடந்தது. அப்படி இரு என்று சொல்லி விட்டார் அதிகாரி. நல்ல வேலையாக ஒரு நண்பருக்கு போன் பண்ண, அவர் உடனடியாக, 'காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு நடையைக் கட்டு'. இல்லாவிடில் சிக்கல் தருவார்கள் என்று சொல்ல, இவர் அவரிடம் போய்.... ''ஐயா மன்னித்துக் கொள்ளுங்கள்.... நீங்கள் இமிகிரேசின் அதிகாரி என்று தெரியாமல் உங்கள் கேள்விக்கு இடக்கு மிடக்காக பதில் அளித்து விட்டேன்....''  என்று சொல்லி தப்பிக் கொண்டார்.

ஒன்று இந்த விமான நிலையங்களை தவிர்க்க வேண்டும்.... நேரடி விமான சேவைகளை பயன்படுத்தலாம். அல்லது பணிவாக கேட்கப் படும் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தில் மது அருந்தியவருக்கு சிறை என்றால் 
கொடுத்தவருக்கு தூக்கு தண்டனையா ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Nathamuni said:

ஒன்று இந்த விமான நிலையங்களை தவிர்க்க வேண்டும்.... நேரடி விமான சேவைகளை பயன்படுத்தலாம். அல்லது பணிவாக கேட்கப் படும் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்

நீங்கள் தந்த முதல் தரவுதான் சரியானது...... அவையின்ரை எண்ணைத்திமிருக்கு அளவேயில்லை. ஆனால் சந்தர்ப்பம் வர அவர்களின் கொட்டத்தை அடக்குவார்கள் இவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகளாவிய ரீதியில் எழுந்த துபாய் குறித்த தப்பெண்ணத்தினை கருத்தில் எடுத்த துபாய் ஆட்சியாளர் முஹம்மது இந்த பெண்ணையும். அவரது குழந்தையையும் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டு, அவர்கள் இன்று இங்கிலாந்து வந்து சேர்ந்தார்கள்.

https://www.theguardian.com/uk-news/2018/aug/11/woman-arrested-with-daughter-in-dubai-over-drinking-wine-is-released

  • கருத்துக்கள உறவுகள்

காரணமின்றி உள்ளுக்கு போட்டதற்கு 
உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண்ணிலும் தவறு இருக்கிறது 
இவரின் பாஸ்போர்ட் முடிவடைந்து விட்டது 
முடிவடைந்த பாஸ்போட்டிலேயே பயணித்து இருக்கிறார் 
அங்கு இருப்பதற்கான விசாவும் முடிவடைந்து இருக்கிறது 

அதிகாரிகளின் கேள்விகளுக்கு இவர் சரியாக பதில் கூறவில்லை 
மாற்றி மாற்றி பேசியிருக்கிறார் ...
ஆதலால்தான் இவர் போதையில் இருக்கலாம் எனும் சந்தேகம் வந்து 
விமான பணிபெண்களுடன் அதிகாரிகள் பேசி ....இவர் ஒரு கிளாஸ் 
வைன் அருந்தியதாக கூறியிருக்கிறார்கள்.

ஆதலால்தான் இந்த வைன் பிரச்சனை வந்தது 
உள்ளே இருக்க முக்கிய காரணம் அதிகாரிகளுடன் 
ஒத்துழைக்காது முடிவடைந்த பாஸ்போர்ட்டில் பயணம் செய்தமை. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண் ஒர் வெள்ளை இனத்தவள் எனவே இவள் வெளியே விடப்பட்டாள். இதே ஒரு ஆசிய /ஆபிரிக்கா நாட்டவர்களாக இருந்தால், உடனடியாக உள்ளே வைத்திருப்பார்கள். அவ்வளவு கேவலமான சட்டங்கள் உள்ளன‌.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.