Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளிடம் இருந்த ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் தலைவர்களிடம்...! சிங்களவருக்கும் பாதிப்பு...?

Featured Replies

புலிகளிடம் இருந்த ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் தலைவர்களிடம்...! சிங்களவருக்கும் பாதிப்பு...?

 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரிடம் இருந்த ஆயுதங்கள் தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இன்பராஜா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது,

2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அவர்களிடம் இருந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதங்கள் தற்பொழுது எங்குள்ளது என இன்பராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்தனை ஆயுதங்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே உள்ளன. இந்த ஆயுத பலத்தை வைத்துக் கொண்டுதான் ஹிஸ்புல்லா, றிசாட் பதியுதீன் போன்றோர் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனக் அச்சுறுத்துகின்றனர்.

அத்துடன், கோவிலை உடைத்து பள்ளிவாசல் கட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தில் ஏன் அரசாங்கம் மௌனம் காக்கின்றது. காத்தான்குடி, கிண்ணியா, மூதூர் பிரதேசங்களிலும் இந்த ஆயுதங்கள் இருப்பதாக தகவல்கள் உள்ளன. இது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, சிங்கள மக்களுக்கும் பிரச்சினைக்குரியது.

எந்தவொரு அமைச்சருக்கும் புலிகள் வர வேண்டும் எனக் கூறமுடியும். இருப்பினும், புலிகளின் உறுப்பினர்களாக இருந்த எமக்குத் தான் தெரியும், அவ்வாறு ஒன்று நடைபெறாது என்பது. நாம் விரும்பியோ, விரும்பாமலோ புலிகள் அமைப்பில் இணைந்தோம்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பாட்டால், நாம் 12 ஆயிரம் பேரும் இந்நாட்டைப் பாதுகாக்க படையில் இணைவோம். எமக்கு வேறு ஒரு நாடு தேவையில்லை. இருப்பினும், தமிழ் அரசியல் தலைவர்கள் இதற்கு உடன்பட மாட்டார்கள் என இன்பராஜா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு திரும்பவும் ஓர் ஆயுதக் கலாச்சாரத்தைக் கொண்டுவரவே தேவையாகவுள்ளது எனவும் குறித்த செய்தியின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/politics/01/191115?ref=imp-news

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, நவீனன் said:

தமிழ் அரசியல்வாதிகளுக்கு திரும்பவும் ஓர் ஆயுதக் கலாச்சாரத்தைக் கொண்டுவரவே தேவையாகவுள்ளது எனவும் குறித்த செய்தியின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவையள் குளிர்காயோணுமெண்டால் பொடியள் ஆயுதம் தூக்கவேணும்.

விà®à¯à®¤à®²à¯à®ªà¯à®ªà¯à®²à®¿à®à®³à®¿à®©à¯ à®à®¯à¯à®¤à®à¯à®à®³à¯ à®®à¯à®¸à¯à®²à®¿à®®à¯ à®à®°à®à®¿à®¯à®²à¯à®µà®¾à®¤à®¿à®à®³à®¿à®à®®à¯;à®à®°à¯à®à¯à®à¯à®¯à¯ à®à®¿à®³à®ªà¯à®ªà®¿à®¯ à®à®©à¯à®ªà®°à®¾à®à®¾

விடுதலைப்புலி அமைப்பினரிடம் இருந்த ஆயுதங்கள் தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு தெரிவித்தது.

இவ்வமைப்பின் உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைப்பின் தலைவர் இன்பராஜா இதனை அறிவித்தார்.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அவர்களிடம் இருந்த 5 ஆயிரத்துக்கும் அதிமான ஆயுதங்கள் தற்பொழுது எங்குள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இத்தனை ஆயுதங்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே உள்ளன. இந்த ஆயுத பலத்தை வைத்துக் கொண்டு தான் ஹிஸ்புல்லா, பத்தியுத்தீன் போன்றோர் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனக் அச்சுறுத்துகின்றனர்.

அத்துடன், கோவிலை உடைத்து பள்ளிவாயல் கட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தில் ஏன்? அரசாங்கம் மௌனம் காக்கின்றது. காத்தான்குடி, கிண்ணியா, மூதூர் பிரதேசங்களிலும் இந்த ஆயுதங்கள் இருப்பதாக தகவல்கள் உள்ளன.

இது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, சிங்கள மக்களுக்கும் பிரச்சினைக்குரியது.

எந்தவொரு அமைச்சருக்கும் எல்.ரி.ரி.ஈ. வர வேண்டும் எனக் கூறமுடியும். இருப்பினும், எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களாக இருந்த எமக்குத் தான் தெரியும், அவ்வாறு ஒன்று நடைபெறாது என்பது. நாம் விரும்பியோ, விரும்பாமலோ புலிகள் அமைப்பில் இணைந்தோம்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பாட்டால், நாம் 12 ஆயிரம் பேரும் இந்நாட்டைப் பாதுகாக்க படையில் இணைவோம். எமக்கு வேறு ஒரு நாடு தேவையில்லை. இருப்பினும், தமிழ் அரசியல் தலைவர்கள் இதற்கு உடன்பட மாட்டார்கள். தமிழ் அரசியல்வாதிகளுக்கு திரும்பவும் ஒர் ஆயுதக் கலாச்சாரத்தைக் கொண்டுவரவே தேவையாகவுள்ளது எனவும் இன்பராஜா மேலும் கூறினார்.

http://thinakkural.lk/article/16887

  • தொடங்கியவர்

தமிழ் மக்களிடம் ஆயுதம் இல்லை - முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் உள்ளது

தமிழ் மக்களிடம் ஆயுதம் இல்லை - முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் உள்ளது

 

 
 
எந்தவொரு தமிழ் மக்களிடமும் தற்போது ஆயுதம் இல்லை என்றும் முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் இருப்பதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் அனைவரும் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு சென்று விட்டனர். தற்போது முஸ்லிம்களிடமே ஆயுதம் இருக்கின்றது.

ஒரு இனத்திடம் ஆயுதம் இருப்பது ஆபத்தானது. இதனால் ஏனைய இரு இனத்தவர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறினார்.

ஆகவே சவூதி, பாகிஸ்தான் நாடுகளின் உதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்று பயப்படாது அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டது தமிழ் மற்றும் சிங்கள மக்களே. ஆனால் அதன்போது முஸ்லிம் மக்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து விட்டார்கள்.

இது எங்களுக்கு பெரும் கவலையாக இருக்கின்றது. இப்போது எமக்கு நாட்டுப்பற்று இருக்கின்றது. நாம் இலங்கையர் என்ற வகையிலேயே இப்போது செயற்படுகின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் அரசாங்கமே புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி வளர்த்துவிட்டது என்றும், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அவர் கூறினார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=105490

  • தொடங்கியவர்

ஆயுதக் கொள்வனவு – முஸ்லிம் அமைச்சர்களுக்கு அவசியம் ஏற்பட்டதா?

 

 

விளக்கம் கேட்கின்றது அமைச்சர் ரிஷாட்டின் ஊடகப்பிரிவு!

Rishad-Bathiudeen.jpg?resize=800%2C450

 

புலிகளிடமிருந்த அனைத்து ஆயுதங்களும் முஸ்லிம்கள் வசமே இருப்பதாகவும், இதனை வைத்துக்கொண்டே அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் அரசாங்கத்தை அச்சுறுத்தவும், அடிபணியவைக்கவும் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரின் கருத்துக்கள் தொடர்பில், அரசாங்கம் ஆழமான பார்வையுடன் அக்கறை செலுத்தி, உரிய விசாரணை நடாத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டுமென அமைச்சர் ரிஷாட்பதியுதீனின் ஊடகப் பிரிவு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

அமைச்சர் றிஸாட் பதியுதீனின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

நல்லாட்சி அரசாங்கத்தில் வழங்கப்பட்டுள்ள அதிக பட்ச கருத்துச் சுதந்திரம்,  ஊடகச்சுதந்திரங்களைப் பயன்படுத்தி எவரும் கருத்துக்களை வெளியிட முடியும். எனினும்,இவ்வாறான நாட்டின் ஆள்புல எல்லை,பாதுகாப்புகளுக்கு அச்சுறுத்தலாகவுள்ள கருத்துக்களின் பின்னணிகள் பற்றி அரசாங்கம் மட்டுமன்றி பொதுமக்களும் அறிவதற்கு உரித்துடையோராக உள்ளனர். அரச படைகள் அன்றி வேறு எவரும் ஆயுதங்கள் வைத்திருப்பது பயங்கரவாதச் செயற்பாடுகளாகவே ஜனநாயக நாடுகளில் நோக்கப்படுகின்றன.

இந்த வகையில், புலிகளின் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான நோக்கம், குறித்த அமைச்சர்கள் அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்கான அவசியம் பற்றியும் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் குறிப்பிட்ட முக்கியஸ்தரிடமிருந்து அறிந்துகொள்ள முஸ்லிம்கள் மட்டுமன்றி, நாட்டின் பாதுகாப்பில் அக்கறையுள்ள அனைவரும் எதிர்பார்ப்பதாகவும் ஊடகப்பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரலாற்றுக் காலந்தொட்டு நாட்டின் அமைதி, பாதுகாப்புக்கு ஒத்துழைத்து வரும் முஸ்லிம்கள் மீது ஆங்காங்கே கட்டவிழ்த்து விடப்பட்ட இவ்வாறான கற்பனைக் கதைகள், புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின்னர் பொய்ப்பித்துப் போனதே வரலாறு.  அரசாங்கத்திடமிருந்து முஸ்லிம்களைப்பிரித்து பயங்கரவாதமாகக் காட்டமுனையும் இவ்வாறான சில தீய சக்திகளை வெளிநாடுகள் இயக்குகின்றதா? அல்லது உள்ளூர் கடும்போக்காளர்களின் பிரித்தாளும் தந்திரங்களுக்கு சிலர் பலிக்கடாக்களாகியுள்ளனரா? என்று சந்தேகிக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட்டின் ஊடகப்பிரிவு ஐயம் வெளியிட்டுள்ளது.

வடக்கில் முஸ்லிம்களின் ஆதரவை மட்டுமல்ல, தமிழர்களின் கணிசமான ஆதரவையும் பெற்றுவரும் அமைச்சர் ரிஷாட்டின் அரசியல் எழுச்சிப் பயணத்தில் தடைகள் போட முனையும் சில சமூக சீர்கேடர்களின் முயற்சிகளுக்கு, இவ்வாறானவர்கள் இரையாவது மீண்டும் இனவாத சிந்தனைகளையே மக்கள் மத்தியில் வளர்க்கும் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்வதே, நல்லாட்சி அரசில் சிறுபான்மைச்சமூகங்கள் வைத்துள்ள நம்பிக்கையை தொடர்ந்து பாதுகாக்க உதவும்.

எனவே, குறித்த நபரின் குற்றச்சாட்டுகள் பற்றி ஆராய்ந்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.

இறுதி யுத்தத்தில்கடுமையாகப் பலமிழந்த புலிகள், கனரக ஆயுதங்களை கைவிட்டுத் தப்பிப்பிழைத்து ஓடுகையில் ஆயுதவியாபாரத்தில் ஈடுபட நேரம் கிடைத்திருக்குமா? என்பதை யோசித்தால் குறித்த நபர் அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்லது இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இயைந்து செயற்பட்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுவதாகவும் அமைச்சரின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

http://globaltamilnews.net/2018/91999/

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதா ? அரச புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் முன்னாள் புலி உறுப்பினர்.

39441790_1865101480242842_680463866412400640_n.jpg

-முகம்மத் இக்பால்  சாய்ந்தமருது -
முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதா ? அரச புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் முன்னாள் புலி உறுப்பினர்.

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களும்இ கருணா அணியினர்களும் தப்பி ஓடியபோது அவர்களது ஆயுதங்களை முஸ்லிம்களிடம் விற்பனை செய்ததாகவும்இ அவ்வாறான ஆயுதங்கள் இன்றும் முஸ்லிம்களிடம் உள்ளதாகவும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் பகிரங்கமாக கூறியுள்ளார்.


இவரது கூற்று இன்று அரசியல் மட்டத்தில் பாரிய விமர்சனங்களை தோற்றுவித்துள்ளதுடன் இதனை சாதாரணமான ஒரு பேச்சாக எடுத்துக்கொள்ள முடியாது.


சிங்கள இனவாதிகள் தொடக்கம் மதத் தலைவர்கள் வரைக்கும் அரசியலில் தங்களை பிரபலப்படுத்துவதற்காக பாவிக்கின்ற ஒரு துரும்புதான் முஸ்லிம் மக்களாகும்.


அதுபோலவே அரசியலில் தமிழ் மக்கள் மத்தியில் தடம்பதிக்க முற்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதாக புரளியை கிளப்பிவிட்டு அதன்மூலம் பிரபலம் அடையவும்இ அரசியல் இலாபம் பெறுவதற்குமான முயற்சியா ? அல்லது இதற்குப்பின்னால் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்று சிந்திக்க தோன்றுகின்றது.


இலங்கையின் அரச புலனாய்வு துறையினர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. விடுதலை புலிகள் பலமாக இருந்த காலங்களில் யாராலும் பிரவேசிக்க முடியாத அவர்களது கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவும் அணியினர்களை அனுப்பி புலிகளின் விமானப்படை தளபதி சங்கர் உட்பட பல முன்னணி தளபதிகளை கொலை செய்தார்கள்.


அத்தோடு துல்லியமான புலனாய்வு தகவலின் அடிப்படையிலேயே புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை விமானத்தாக்குதல் மூலம் அழித்தார்கள். 


சர்வதேச பொலிசாரின் கண்களில் மண்ணை தூவிக்கொண்டு புனைப்பெயர்களில் நடமாடிய புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி அவர்களை மலேசியாவில் அதிரடியாக கைது செய்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவந்தவர்கள்.


இவ்வாறு எத்தனையோ சாதனைகளை இலங்கை புலனாய்வு துறையினர்கள் செய்ததுடன்இ இறுதி யுத்த காலத்தில் கொழும்பில் புலிகளின் தற்கொலை தாக்குதல் நடைபெறாதவாறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள். 
இலங்கை அரசாங்கத்திடம் இப்படியான திறமையான புலனாய்வு துறையினர்கள் இருக்கும்போது முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் இருப்பது மட்டும் அவர்களுக்கு தெரியாமல் போனது எவ்வாறு ?


2004 இன் இறுதியில் கருணா அணியினர்கள் ஆயுதங்களை களைந்துவிட்டு தப்பி சென்றார்கள். அதுபோல் 2009 இல் இறுதி யுத்தம் நடைபெற்று புலிகள் இயக்கத்தின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இன்றைய நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களிடம் உள்ள ஆயுதங்களை களயவில்லை என்றும்இ நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் கூறுவது நியாயமென்றால்இ கடந்த 2005 தொடக்கம் 2014 இறுதி வரைக்கும் மகிந்த ராஜபக்ஸவே இந்த நாட்டை ஆட்சி செய்தார். ஏன் மகிந்தவினால் முஸ்லிம்களின் ஆயுதங்களை கண்டுபிடிக்கவில்லை ? அல்லது களைய முடியவில்லை ?    


புலனாய்வு துறையினர்கள் உட்பட அரச படையினர்களை மிகவும் திறமையாக வழி நடாத்திய அன்றைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவுக்கு இது தெரியாமல் போனது எவ்வாறு ?
குறித்த காலப்பகுதிக்குள் முஸ்லிம் மக்களை சிங்களவர்கள் தாக்கி அவர்களது பொருளாதாரத்தை அழித்தபோது இந்த ஆயுதங்களை அவர்கள் ஏன் பாவிக்கவில்லை ?


எனவே புனர்வாழ்வு பெற்ற இமுன்னாள் புலி உறுப்பினர்களின் இந்த அறிவிப்பானது பின்னணி அரசியல் நோக்கம் கொண்டதே தவிர எந்தவித உண்மையுமில்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுப்புக்களில் சிறந்த காட்டிக்கொடுப்பு இதுதான்.

 

யுத்தம் முடிவடைந்ததன் பின் எல்லா தமிழ் மக்களும் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு
சென்றுவிட்டார்கள் என விடுதலைப் புலிகளின் புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர் கூறியிருப்பதானது யுத்த காலத்தில் எல்லா தமிழ் மக்களிடத்திலும் ஆயுதங்கள் இருந்து என்பதை வெளிப்படுத்தும் கருத்தாகும். அப்படியானால் இலங்கையில் எப்படி யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றிருக்க முடியும்? எப்படி மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்க முடியும்?


லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை இறுதி யுத்தத்தில் முள்ளி வாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவம் கொன்றதாக எப்படி கூற முடியும்? அவரின் கருத்துப்படி ஆயுதங்கள் வைத்திருந்த அனைவரும் புலிகள் தானே?

ஆயுதங்கள் விற்ற பணத்தை என்ன செய்தீர்கள்? பழையதை விற்று நவீன ரக ஆயுதங்களை வாங்கினீர்களா? எந்த ஒரு முஸ்லிமும் அரசாங்கத்தோடு ஆயுதமேந்தி சண்டை பிடிக்கவில்லையே? அலுத்கம முதல் தெல்தெனிய வரை அடிவாங்கிக் கொண்டு உயிர் உடமைகளை இழந்து அனாதைகள் போலத் தானே நின்றோம்.


 நீங்கள் சொல்வது போல ஆயுதங்கள் இருந்தால் அதனை அப்போது சரி பயன்படுத்தி இருப்போமே? ஒன்று நீங்கள் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்றிருக்காமல் ரகசியமாக பதுக்கியிருக்க வேண்டும் அல்லது நீங்கள் சொல்வது போல பாவனைக்கு உதவாத ஆயுதங்களை ஏமாற்றி விற்று அந்த பணத்தில் நவீன ரக ஆயுதங்களை வாங்கி மீண்டும் யுத்தம் நடத்த தயாராக வேண்டும். நீங்கள் எல்லா தமிழ் மக்களிடமும் ஆயுதங்கள் இருந்தது என்கிறீர்கள். அவர்கள் ஆயுதங்களை விற்றார்கள் என்கிறீர்கள்.


அப்படியானால் ஆவா குழு போன்ற ஆயுதக் குழுக்கள், போதைக்கடத்தல் குழுக்கள் , கொள்ளைக்குழுக்கள் கிழக்கில் அல்லவா உருவாகியிருக்க வேண்டும். ஏன் வடக்கில் உருவானது? அதில் தமிழ் இளைஞர்கள் மட்டும் இருப்பது ஏன்? தமிழ் மக்களையே அவர்கள் வதைப்பது ஏன்?

 யுத்தத்தாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்டு நாதியற்ற நிலையில் வறுமைக்கோட்டில் வாழும் அப்பவாவி தமிழ் மக்களை உங்கள் பேராசை பிடித்த பண மோகத்துக்காக ,யாரோ போடும் எலும்புத்துண்டுக்காக இப்படி காட்டிக்கொடுக்கிறீர்களே? நீங்கள் முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் இருக்கிறது என்று கூறியது நான் மேலே கேட்க கேள்விகளை நேரடியாகவே ஆமோதிப்பதற்கு சமன்.

அஸாம் ஏ கரீம்
https://www.madawalaenews.com/2018/08/pnr.html

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான புலிகளின் மறைவிற்குப் பின்னர் எவரெல்லாம் "புலிகள்" என்னும் சொல்லை தமது கட்சிப் பேர்களில் சேர்த்துக்கொள்கிறார்களோ, அவர்கள் எல்லாம் ஒன்றில் அரசினால் ஏவப்படுபவர்கள் அல்லது மக்களின் வாக்குகளுக்காக அவ்வாறு கூறக் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள். 

இவர்களுக்கான சிறந்த உதாரணங்கள், பிள்ளையான் கட்சி, கருணாவின் கட்சி, தற்போது புணர்வாழ்வழிக்கப்பட்ட முன்னால் புலிகள் கட்சி.

ஆகவே இவர்கள் சொல்வதை எவரும் கேட்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

 

இப்போது, இவர்கள் இயங்குவது பொதுபலசேனாவின் சொற்படி இருந்தால்க்கூட ஆச்சரியப்படுதற்கில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் ஒட்டுக்குழு.. பிள்ளையான் ஒட்டுக்குழு ஆட்கள் நிறைய ஆயுதங்களை காசுக்கு விற்ற சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. மேலும் இராணுவத்தை விட்டு தப்பியோடியோரும் ஆயுதங்களை விற்றுள்ளனர்.

இது போக.. முஸ்லீம்களிடம் சிங்கள அரசுகள் வழங்கிய ஆயுதங்களும் உள்ளன. அவை மீளப் பெறப்பட்டமைக்கான எந்த சாட்சியங்களும் கிடையா.

அந்த வகையில்.. முஸ்லீம்களிடம் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடத்தக்க வகையில்.. ஆயுதங்களும்.. சவுதி... பாகிஸ்தான் பணமும் உள்ளது உண்மையாகவே இருக்க வேண்டும். 

இந்த வகையில்.. முஸ்லீம்கள் தொடர்பில் மிக விழிப்புணர்வு தமிழ் மக்களுக்கு அவசியம்.

போதைப்பொருள் வியாபாரமும் இவர்களால்.. பெருமளவில் முன்னெடுக்கப்படுகிறது. ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.