Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில்- இறைச்சி மேடைக்கு அனுப்பும் முன் காட்சி மேடையில் வைக்கப்பட்ட மாடு

Featured Replies

யாழில்- இறைச்சி மேடைக்கு அனுப்பும் முன் காட்சி மேடையில் வைக்கப்பட்ட மாடு

 
 

யாழில் மாடொன்றை காட்சிப்படுத்தி அதனை இறைச்சிக்காக வெட்டுப்படவுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களஏற்படுத்தியுள்ளது.

 

02.jpg

 

 

யாழ்.ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு முன்பாகவுள்ள காணி ஒன்றில் குறித்த மாடு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. 

அதனை இறைச்சிக்காக வெட்டப்படவுள்ளதாகவும் , அதன் ஒரு பங்கு இறைச்சி ஆயிரம் ரூபாய் எனவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

03.jpg

 

 

குறித்த மாடு யாழ்.குப்பிளான் பகுதியில் உள்ள ஒருவர் வளர்த்துள்ளார், குடும்பத்தின் பொருளாதார நிலைமை காரணமாக அதனை தமிழர் ஒருவருக்கு விற்றோம். அவர் அதனை வளர்க்க எனவே வாங்கி சென்றார். இறைச்சிக்காக அதனை விற்பார் என தெரிந்திருந்தால் அதனை அவரிடம் விற்று இருக்க மாட்டோம். 

இரண்டரை வயதுடைய மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த மாட்டை தன்னார்வலர்கள் முன் வந்து அதனை காப்பற்றுங்கள் என மாட்டின் ஆரம்ப உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை குறித்த மாட்டினை விலைக்கு வாங்கி அதனை காப்பாற்ற சில தன்னார்வலர்கள் முன் வந்து , மாட்டின் தற்போதைய உரிமையாளரை தொடர்பு கொண்ட போது , அதனை விற்கும் எண்ணம் தனக்கு இல்லை என காட்டமாக பதில் அளித்து வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது.

01.jpg

 

இதே போன்று கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மாட்டினை காட்சிப்படுத்தி இறைச்சிக்காக வெட்டப்பட இருந்த போது யாழில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது பின்னர் அந்த மாடு சிலரின் நிதியுதவியுடன் மாட்டினை  கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார் என ஆரம்ப உரிமையாளர் தெரிவிக்கின்றார்..

அதேவேளை நல்லூர் பிரதேச சபையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் , சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதியளிக்க கூடாது எனவும். மாடு வெட்டவும் அனுமதிக்க கூடாது என தீர்மானம் முன் மொழியப்பட்டு , அது சபையில் ஏக மனதாகவும் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40480

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலே கொடூரமான முறையில் கொல்லப்படும் விலங்குகள் என்றால் என்னைபொறுத்தவரை இந்த ஓதி போட்டு கழுத்தில் ஓட்டை போட்டு ரத்தம் முழுவதும் வெளியேறும் வரை அந்த வாயில்லா ஜீவன் துடித்து துடித்து இறப்பை காணுமட்டும் சித்திரவதை பட்டு சாவது இதை எந்த  விலங்கு நல அமைப்பும் தட்டி கேட்பதில்லை என்பது பெரும் ஆச்சரியமான விடயம் .............

  • தொடங்கியவர்

இன, மத, மொழிகளுக்கு அப்பால் நான் ஒரு மாட்டு வியாபாரி புரிந்து கொள்ளுங்கள்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

How.jpg?resize=600%2C800

http://globaltamilnews.net/2018/95720/

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டை வெட்டி இறச்சியைக் கடையில்போட்டு விற்கும்போது முழுவதும் விலைப்படுமா இல்லையா என்ற கவலையும் சிரமமும் இல்லாது பணம் சம்பாதிக்க முனையும் ஒரு புதிய முறையிலான வியாபாரத் தந்திரமே இது. இந்தத் தந்திரம் 100 வீதமும் முகமதியர்கள் வாழும் ஊர்களில் செல்லுபடியாகாது. ?  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, பெருமாள் said:

உலகிலே கொடூரமான முறையில் கொல்லப்படும் விலங்குகள் என்றால் என்னைபொறுத்தவரை இந்த ஓதி போட்டு கழுத்தில் ஓட்டை போட்டு ரத்தம் முழுவதும் வெளியேறும் வரை அந்த வாயில்லா ஜீவன் துடித்து துடித்து இறப்பை காணுமட்டும் சித்திரவதை பட்டு சாவது இதை எந்த  விலங்கு நல அமைப்பும் தட்டி கேட்பதில்லை என்பது பெரும் ஆச்சரியமான விடயம் .............

நானும் பல இடங்களில் பார்த்துள்ளேன்... மிக மிக கொடூரமாக இருக்கும்....மிருகவதை எதிர்ப்பு பன்னாடைகளுக்கெல்லாம் இதை தண்டிக்க நேரமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நானும் பல இடங்களில் பார்த்துள்ளேன்... மிக மிக கொடூரமாக இருக்கும்....மிருகவதை எதிர்ப்பு பன்னாடைகளுக்கெல்லாம் இதை தண்டிக்க நேரமில்லை.

ம் இப்ப ஆட்டிறைச்சியை விட மாட்டிறைச்சிதான் வியாபாரம் அதிகம்  கொலை ஒன்றுதான் ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுவதை ரசிக்க மனம் வருவதில்லை  ருசிக்க மனம் வருகிறது சமைத்த பின் 

அந்த  நாட்டு கோழிய உரிச்சு தாங்க............ நான் மாட்டன் பாவம் அப்ப கறியாக்கி தந்தா தின்னுவியா .... ஓ தின்னுவனே:) 

  • தொடங்கியவர்

யாழில்.காட்சிப்படுத்தப்பட்டு மாடு இறைச்சிக்காக இன்னும் வெட்டப்படவில்லை..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

IMG_8390.jpeg?resize=800%2C600

 

யாழில்.காட்சிப்படுத்தப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த மாடு இன்று வெட்டப்படவில்லை. குறித்த மாட்டினை காட்சிப்படுத்திய வேளை நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் அறவிப்பட்டிருந்தது. அந்நிலையில் நுழைவு சீட்டினை வழங்குவதற்கு மாநகர சபையிடம் அனுமதி பெறவில்லை எனவும், அதற்காக வரிகள் தமக்கு செலுத்தப்பட்டவில்லை எனவும் யாழ் காவல் நிலையத்தில் மாநகர சபையினரால் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனை அடுத்து மாட்டினை காட்சிப்படுத்திய நபரை காவல்துறையினர் அழைத்து வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டனர்.

அத்துடன் இன்று காலை திடீரென சுகாதார பிரிவினரும் இறைச்சிக்கு குறித்த மாட்டை வெட்ட அனுமதிக்கவில்லை எனவும், பின்னர் மாட்டினை மீண்டும் ஒரு தடவை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் காலை 9 மணிக்கு பின்னர் வெட்ட அனுமதி தரப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறாக ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இன்று காலை மாடு இறைச்சிக்காக வெட்டப்பட்டவில்லை. அதேவேளை மாடு இன்றைய தினம் இறைச்சிக்காக வெட்டும் நோக்குடன், யாழ்.பண்ணை பகுதியில் உள்ள கொள்கலனில் கட்டப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2018/95888/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.