Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மைத்திரி, மகிந்த, சிராந்தியைக் கொல்ல சதி – கைது செய்யப்பட்ட இந்தியர் தகவல்

Featured Replies

மைத்திரி, மகிந்த, சிராந்தியைக் கொல்ல சதி – கைது செய்யப்பட்ட இந்தியர் தகவல்

 

mahinda-maithri-300x200.jpgசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என்பது தனக்குத் தெரியும் என, கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஊழல் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவின்  மாவனல்ல இல்லத்துக்கு அடிக்கடி வந்து சென்றார் என்ற சந்தேகத்தில் இந்தியர் ஒருவர் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த சதித்திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுபற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர்,  நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

“நாமல் குமாரவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தொந்தரவு கொடுத்தார் என்று செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, மசூரி தோமஸ் என்ற இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பாதுகாப்புச் செயலரின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பயங்கரவாத தடைச்சட்ட விதிகளின் கீழ், குறித்த இந்தியர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

சந்தேகநபர்  கடந்த பெப்ரவரி மாதம் கொழும்புக்கு வந்துள்ளார். தற்போது அவர் செல்லுபடியான எந்த நுழைவிசைவும் இன்றி ராகமவில் 2500 ரூபா வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து தங்கியிருக்கிறார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி சிராந்தி ராஜபக்ச ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எந்த அமைப்பு அல்லது நபர்களால் அச்சுறுத்தல் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் அவரது வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை மற்றும் அவரது வருகையின் நோக்கம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/09/26/news/33089

  • தொடங்கியவர்

மைத்­திரி,கோத்தா கொலைச் சதி – கைதா­ன­வர் வாக்குமூலம்!!

 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோ­ரைக் கொல்­வ­தற்­குத் திட்­ட­மி­டும் வகை­யில் பிர­திப் பொலிஸ் மா அதி­பர் நாலக சில்வா தொலை­பே­சி­யில் உரை­யா­டி­னார் என்று கூறப்­ப­டும் விட­யம் தொடர்­பில் முன்­னெ­டுக்­கும் விசா­ர­ணை­க­ளில் சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் கைது செய்­யப்­பட்­டுள்ள இந்­தி­ய­ரின் வாக்கு மூலத்­தில் பல அதிர்ச்சி தரும் விட­யங்­கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச அவ­ரது மனைவி ஷிரந்தி ராஜ­பக்ச தற்­போ­தைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்­டோ­ரைக் கொலை செய்­யச் சதித் திட்­டம் தீட்­டப்­பட்­டுள்­ளது என்று அந்த இந்­தி­யர் சி.ஐ.டி.க்குத் தெரி­வித்­துள்­ளார்.

அவர் அது தொடர்­பில் மேல­திக விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தாத நிலை­யில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின் கீழ் தடுத்து வைத்து விசா­ரணை செய்­யப்­ப­டு­கின்­றார் என்­றும் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­சர் இந்­திக லொக்கு ஹெட்டி மற்­றும் பிர­தான பொலிஸ் பரி­சோ­த­கர் ரஞ்­ஜித் முன­சிங்க ஆகி­யோர் கோட்டை நீதி­வான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு நேற்று அறி­வித்­த­னர்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பய ராஜ­பக்ச ஆகி­யோ­ரைக் கொலை செய்­யச் சதி செய்­யும் வித­மாக பிர­திப் பொலிஸ் மா அதி­பர் நாலக சில்­வா­வின் கலந்­து­ரை­யா­டல் பதிவு செய்­யப்­பட்ட தொலை­பேசி அரச இர­சா­ய­னப் பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது. அதில் உள்ள குரல்­களை உறுதி செய்­வ­தற்­காக முறைப்­பாட்­டா­ளர் நாமல் குமா­ரவை குரல் சோத­னைக்கு உட்­ப­டுத்­த­வும் சி.ஐ.டி. நீதி­மன்ற அனு­ம­தியை நேற்­றுப் பெற்­றுக்­கொண்­டது.

இன்று காலை 10 மணிக்கு குரல் சோத­னைக்­காக அரச இர­சா­ய­னப் பகுப்­பாய்­வா­ளர் முன்­னி­லை­யில் முன்­னி­லை­யா­கு­மாறு முறைப்­பாட்­டா­ளர் நாமல் குமா­ர­வுக்கு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

கோட்டை நீதி­வான் லங்கா ஜய­ரத்ன, இந்த விவ­கா­ரத்­தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­கள் தொடர்­பில் சி.ஐ.டியி­டம் கேள்வி எழுப்­பி­னார். அதற்கு சி.ஐ.டி. உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர் இந்­தி­க­வும் பிர­தான பொலிஸ் பரி­சோ­த­கர் ரஞ்­ஜித் முன­சிங்­க­வும் பதி­ல­ளித்­த­னர்.

“இந்த விவ­கா­ரத்­தில் சந்­தே­கத்­தின் பேரில் இந்­தி­யர் ஒரு­வரை நாம் கைது செய்­துள்­ளோம். முறைப்­பாட்­டா­ள­ரின் வீட்­டுக்கு அவ­ரைத் தேடிச் சென்று சந்­தே­கத்­துக்கு உரிய முறை­யில் நடந்­து­கொண்­ட­மை­யால் அவ­ரைக் கடந்த வாரம் கைது செய்­தோம். இந்த இந்­தி­யர் கடந்த பெப்­ர­வரி மாதமே இலங்­கைக்கு வந்­துள்­ளார். அவர் தற்­போது இங்கு தங்­கி­யி­ருக்க சட்ட ரீதி­யி­லான அனு­மதி பெற்ற நுழை­வி­சைவு அவ­ரி­டம் இல்லை. அவர் இங்கு வந்து ராகம பகு­தி­யில் 2 ஆயி­ரத்து 500 ரூபா மாத வாட­கைக்கு அறை­யெ­டுத்து தங்­கி­யி­ருந்­துள்­ளார்.

அவ­ரால் சிங்­கள மொழி ஓர­ளவு பேச முடி­கின்­றது. ஆங்­கி­லத்­தில் சர­ள­மா­கப் பேசு­கி­றார். அவ­ரி­டம் நாம் வாக்­கு­மூ­லம் பெற்­றோம். அதில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச அவ­ரது மனைவி மற்­றும் தற்­போ­தைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால ஆகி­யோ­ரைக் கொலை செய்­யத் திட்­டம் தீட்­டப்­பட்­டுள்­ளது என்று கூறு­கின்­றார். அது தொடர்­பான மேல­திக தக­வல்­களை அவர் வெளிப்­ப­டுத்­த­வில்லை. மேல­திக விசா­ர­ணை­களை நாம் பயங்­க­ர­வா­தத் தடை சட்ட விதி விதா­னங்­க­ளின்­படி முன்­னெ­டுத்து வரு­கின்­றோம்” என்று அவர்­கள் தெரி­வித்­த­னர்.

விசா­ர­ணை­களை தொடர்ந்­தும் முன்­னெ­டுத்து அறிக்கை சமர்ப்­பிக்க உத்­த­ர­விட்ட நீதி­வான் லங்கா ஜய­ரத்ன, அது­வரை அது குறித்த வழக்கை ஒத்தி வைத்­தார்.

https://newuthayan.com/story/08/மைத்­திரிகோத்தா-கொலைச்-சதி-கைதா­ன­வர்-வாக்குமூலம்.html

 

 

 

மைத்­திரி கொலை முயற்சி- சி.ஐ.டி விசா­ர­ணை­க­ளில் திடுக்­கி­டும் தக­வல்­கள்!!

 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோ­ரைக் கொலை செய்­யத் திட்­ட­மி­டப்­பட்­டது என்று கூறப்­ப­டும் விவ­கா­ரத்­தில் சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் கைது செய்­யப்­பட்­டுள்ள இந்­திய நாட்­ட­வ­ரான மேச­ரிஸ் தோமஸ்,  நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்­ச­வைச் சந்­தித்­துள்­ளார். குற்­றப் புல­னாய்­வுத் துறை­யி­னர் மேற்­கொண்ட விசா­ர­ணை­யில் இந்த விட­யம் வெளி­வந்­தது என்று கூறப்­ப­டு­கின்­றது.

தோமஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வ­ன்ச­வை­யும் சந்­திக்­கச் சென்­றுள்ள போதும் அவ­ரைச் சந்­திக்க முடி­ய­வில்லை என­வும் அவ­ரது அலு­வ­ல­கத்­தைச் சேர்ந்த ஒரு­வ­ரையே சந்­திக்க முடிந்­துள்­ளது என்­றும் விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது.

இது தொடர்­பில் விசா­ர­ணைக்­குப் பொறுப்­பான உயர் அதி­காரி தெரி­வித்­தா­வது-,

தோமஸ் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வைச் சந்­திக்க அவ­ரது விஜே­ய­ராம இல்­லத்­துக்­கும் சென்­றுள்­ளார். ஆனால் மகிந்த ராஜ­பக்­ச­வைச் சந்­திக்க முடி­ய­வில்லை.

சந்­தேக நப­ரி­டம் சி.ஐ.டி. மிக ஆழ­மாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. பயங்­க­ர­வா­தத் தடைச் சட்ட விதி­க­ளுக்கு அமை­வாக விசா­ர­ணை­கள் தொடர்­கின்­றன.- என்­றார்.

இது­வரை இந்த கொலைச் சதி விவ­கா­ரம் தொடர்­பாக 20க்கும் அதி­க­மா­னோ­ரி­டம் வாக்­கு­மூ­லங்­களை சி.ஐ.டி. பதிவு செய்­துள்­ளது.

குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் பணிப்­பா­ளர் மூத்த பொலிஸ் அத்­தி­யட்­சர் ஷானி அபே­சே­க­ர­வின் ஆலோ­ச­னைக்கு அமைய மனி­தப் படு­கொலை தொடர்­பான விசா­ர­ணைப் பிரி­வின் உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­சர் இந்­திக லொக்­கு­ஹெட்டி தலை­மை­யில் முதன்­மைப் பொலிஸ் பரி­சோ­த­கர் ரஞ்­ஜித் முன­சிங்க மற்­றும் உப பொலிஸ் பரி­சோ­த­கர் கே.எம்.எம்.குமா­ர­சிங்க உள்­ளிட்­டோர் இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கின்­ற­னர்.

பயங்­க­ர­வா­தப் புல­னாய்­வுப் பிரி­வி­லி­ருந்து காணா­மல் போனது என்று கூறப்­ப­டும் ஸ்னைப்­பர் ரகத் துப்­பாக்கி குறித்­தும் சி.ஐ.டி. சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

சில மாதங்­க­ளுக்கு முன்­னர் ஒட்­டு­சுட்­டான் காட்­டுப் பகு­தி­யில் கிளே­மோர் குண்­டு­டன் முன்­னாள் புலி­கள் இயக்­கத்­தின் உறுப்­பி­னர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்ட நிலை­யில் அது தொடர்­பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­க­ளின் போது, இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வின் உறுப்­பி­னர் எனக் கூறப்­ப­டும் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து இந்த ஸ்னைப்­பர் துப்­பாக்­கியை பயங்­க­ர­வா­தப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் கைப்­பற்­றி­யி­ருந்­த­னர்.

அந்த ஸ்னைப்­பர் துப்­பாக்­கியே காணா­மல் போயி­ருந்­தது என்று கூறப்­ப­டும் நிலை­யில் தற்­போது அது தொடர்­பா­கச் சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் ரஞ்­சித் மத்­து­ம­பண்­டா­ர­வின் உத்­த­ர­வுக்கு அமைய மேல­திக விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

https://newuthayan.com/story/08/மைத்­திரி-கொலை-முயற்சி-சி-ஐ-டி-விசா­ர­ணை­க­ளில்-திடுக்­கி­டும்-தக­வல்­கள்.html

  • தொடங்கியவர்

ஜனாதிபதி கொலைச் சதி;- கைதுசெய்யப்பட்ட இந்தியர் குறித்து தூதரகம் தகவல்

 

 
 

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியர் 2000 ஆண்டு முதல் மனோநிலை பாதிக்கப்பட்டவர் என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முக்கிய தலைவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என்ற சந்கேத்தின் பேரில் இந்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஊடகங்களில் வெளியான தகவல்களை பார்த்துள்ளதாக இந்திய தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து முக்கிய கவனம் செலுத்திய நாங்கள் இலங்கை அதிகாரிகள் வழங்கிய சிறிய தகவல்களை வைத்துக்கொண்டு  குறிப்பிட்ட நபரின் பின்னணி குறித்து  ஆராயுமாறு இந்திய அதிகாரிகளை கேட்டோம் எனவும் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்ட தகவல்கள் குறிப்பிட்ட நபர் 2000 ஆண்டு முதல் மனோநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார் என்பதை உறுதி செய்துள்ளன எனவும் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்த தகவல்களை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ள தூதரக அதிகாரி முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் என தெரிவித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

high_cooo_ind.jpg

http://www.virakesari.lk/article/41222

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டால் பழியை யார் மேல் போடுவார்கள் ?
 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

கொண்டால் பழியை யார் மேல் போடுவார்கள் ?
 

முன்பு விடுதலைப் புலிகளின்  மீது  பழிபோட்டு  விடுவார்கள். இனி முன்னால் விடுதலைப்புலிகள் என்று அப்பாவிகளின் மீது பழிபோடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

கொண்டால் பழியை யார் மேல் போடுவார்கள் ?
 

 

14 minutes ago, கந்தப்பு said:

முன்பு விடுதலைப் புலிகளின்  மீது  பழிபோட்டு  விடுவார்கள். இனி முன்னால் விடுதலைப்புலிகள் என்று அப்பாவிகளின் மீது பழிபோடுவார்கள். 

முன்னாள் இந்நாள் விடுதலைப்புலிகளிடம் இப்போது ஆயுதங்கள் இல்லை என்பது வெளிப்படை. தற்போது ஆயுதங்களை வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் புல்லா, உல்லாக்களை விட்டுவிட்டீர்களே...☹️

  • கருத்துக்கள உறவுகள்
On 9/26/2018 at 11:23 AM, ரதி said:

கொண்டால் பழியை யார் மேல் போடுவார்கள் ?
 

மீண்டும் விடுதலை புலிகள் போன்ற அமைப்பு ஒன்றை இருப்பதாக காட்டி மகிந்த இராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவர ரோ செய்த சதியாகவே இது எனக்கு தெரிகிறது. கோத்தபாய இல்லாமல் இருப்பதே றோவுக்கு பயனுள்ளது. கோத்தா சீனாவின் ஆள். கோத்தா இல்லாத மகிந்தா இந்தியாவின் காலடியில் கிடப்பார். அண்மையில் இந்தியா மஹிந்தவை அழைத்து பேசியதை இங்கே நாங்கள் கவனிக்க வேண்டும். சுப்ரமணிசுவாமி இந்த விடயங்களில் பின்னணியில் இருப்பவர்.  றோவுக்கு கிடைக்கும்  மைத்திரியின் பயன் அவரை இவ்வாறான ஒரு சதிக்கு பலியாக்குவதுடன் முடிந்துவிடும்.

அபிவிருத்தி மூலமே சீனா மற்ற நாடுகளுக்குள் ஊடுருவுகிறது. படுகொலைகள் மற்றும் போர் நடக்கும் இடங்களில் இருந்து சீனா விலகிவிடும். அங்கே ஆயுதம் விற்பது தவிர வேறு பயன் சீனாவுக்கு இல்லை.  ஆகவே இது சீனாவை இலங்கையில் இருந்து வெளியேற்ற ரோ செய்த சதியாகவே தெரிகிறது. கோத்தா முடிந்தால் போர்க்குற்ற விசாரணை பற்றிய தேவைகளும் இருக்காது. அமெரிக்க - மேற்குலகு ஈடுபாடும் குறைந்து விடும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் கவனத்தை வேறுபக்கம் திருப்ப  மீண்டும் சிங்களம் இந்தியருடன் சேர்ந்து கூட்டு சதிசெய்ய முயல்கிறது. கொலைத் திட்டம் என்று ஒன்று இருந்தால் அது சிங்களத்தலைவர்களுக்கு அல்ல. குறிப்பிட்ட அத்தனை தலைவர்களையும் ஒரேமுறையில் போட்டுதள்ளுவதும் சுலபம் அல்ல. இந்த செய்தியின். பின்னணியில் வேறு ஏதோ அரசுக்கு இசைவான ஒரு திட்டம் உண்டு என நம்பலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.