Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் யாப்பை மதித்து செயற்படுங்கள் – பிரித்தானியா

Featured Replies

அரசியல் யாப்பை மதித்து செயற்படுங்கள் – பிரித்தானியா

britishhed.jpg

 

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

எனவே இலங்கை அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து, சகல அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆகவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கடமை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

http://athavannews.com/அரசியல்-யாப்பை-மதித்து-ச/

  • கருத்துக்கள உறவுகள்

யாருடா... இவன், ஒன்றும் தெரியாத.. பால் குடி பாப்பா. 
நாங்கள்... நீங்கள், இன்னும்.... உயிருடன் இருக்கின்றீர்கள்  என்று நம்பி, விட்டோம். (பொத்திக்  கொண்டு போங்கோ...) 

  • தொடங்கியவர்

உலக நாடுகளின் தீவிர கண்காணிப்பில் இலங்கை!!!

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பாக மிக நுன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளன.

இலங்கை அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து அரசியல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முன்நகர்வுகள் அமைய வேண்டும் எனவும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தங்களது அரசியல் கடமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும் என இரு நாடுகளும் அறிவித்துள்ளன.

http://www.virakesari.lk/article/43310

  • தொடங்கியவர்

இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்

eu1.jpg
 

இலங்கையில் இடம்பெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரும் பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி நெதர்லாந்து ருமேனியா பிரிட்டன் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் இலங்கையில் இடம்பெற்றும் வரும் விடயங்களை  உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்  என ஐரோப்பிய ஓன்றியம் தெரிவித்துள்ளது.

அனைத்து தரப்பினரையும் அரசமைப்பிற்கு ஏற்ப நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஓன்றியம் வன்முறைகளை தவிர்க்குமாறும் உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது

ஊடக சுதந்திரம் மற்றும் ஸ்தாபனங்களின் சுதந்திரத்தை பின்பற்றுமாறும் ஐரோப்பிய  ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

http://www.virakesari.lk/article/43335

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, போல் said:

அரசியல் யாப்பை மதித்து செயற்படுங்கள் – பிரித்தானியா

இவர்கள் என்றைக்கு மதில்மேல் பூனை யாகினரோ அன்றைக்கு சனியன் தமிழர் மேல் . ஆனால் இனி உறங்கி போன gsb வரிசலுகை ,மனித உரிமை மீறல் எல்லாம் வரிசையில்  சொறிலங்கா மீது படையெடுத்த பாம்பாய் வரும் பாப்பம் எது மட்டும் பாயினம் என்று .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, போல் said:

இலங்கை அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து, சகல அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

உங்கள் கரிசனைக்கு நன்றி

  • தொடங்கியவர்

சிறிலங்கா நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா – வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

 

சிறிலங்காவின் அரசியல் நிலவரங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம், சிறிலங்காவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், இந்தியா முதல் முறையாக இன்று கருத்து வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் அண்மைய அரசியல் நிலவரங்களை இந்தியா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

ஜனநாயக மற்றும் நெருக்கமான நட்பு அயல் நாடு என்ற வகையில்,  ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் அரசியலமைப்பு செயல்முறைகள் மதிக்கப்படும் என்று நம்புகிறோம்.

சிறிலங்கா மக்களுக்கான அபிவிருத்தி உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/10/28/news/33816

  • தொடங்கியவர்

இலங்கை நிலைமைகள் தொடர்பில் .நா. கரிசனை

Antonio-Guterres.jpg

இலங்கையில் ஏற்பட்டுவருகின்ற மாற்றங்கள் தொடர்பில் பெரும் கரிசனையோடு அவதானித்து வருவதாக  ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்து அரசியல் யாப்புக்கு அமைவாக சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் அனைத்து இலங்கையரதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் அனைத்துத் தரப்பினரும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமையை சமாதானமாக தீர்த்துக்கொள்வதற்கு முன்வரவேண்டும் என்றும் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://athavannews.com/இலங்கை-நிலைமைகள்-தொடர்பி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.