Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அபிவிருத்தியே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்தும்" - ரெஜினோல்ட் குரே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"அபிவிருத்தியே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்தும்" - ரெஜினோல்ட் குரே

கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் அடையாளம் வேண்டும் அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே பேசி வந்தார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தியை கொண்டு வருவதில்  அக்கறை கொள்ளவில்லை எனத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தி கொண்டுவர முயலவேண்டும் அப்போது மக்களின் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் எனவும் குறிப்பிட்டார்.

rejinold.jpg

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா வித்தியாலயத்தில் இன்று  காலை நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இப் பிரதேசத்திலேயே மலையகத் தமிழர்கள் அதிகளவில்  வாழ்கின்றார்கள். நானும் எனது தாய் தந்தையரும் மலையகத்தில் தேயிலைத் தோட்டத்திலே பணிபுரிந்தவர்கள் அம்மக்களின் வேதனை துக்கம் அனைத்தையும் சிறுவயது முதலே நான் நன்கறிந்தவன் அந்த வகையில் இங்கு வாழ்கின்ற மலையக தமிழ் மக்களின் மனநிலைகளை அறிந்து கொண்டுள்ளேன் இங்கே வாழ்ந்த இந்த மாணவர்களின் மக்களின் வளர்ச்சிக்காக என்னாலான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க எண்ணியுள்ளேன்.

வடக்கு மக்களும் தென்னிலங்கை மக்களும் தமிழ் சிங்கள மக்களும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ்வதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே எனது ஒரே ஒரே நோக்கம் என்றும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/43552

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல.. இவர் மூட்டை முடிச்ச கட்டிற அலுவலைப் பார்க்கட்டும். ?

அங்க ஒருவர் மக்களிற்கு சலுகைகளும் அபிவிருத்தியும் வேண்டாம் உரிமைகள்தான் வேணுமென்றுவிட்டு, நிறுத்தாமல் தனக்கு விமானத்தில் பர்ஸ்ட் கிளாசில் டிக்கெட் வேணும் + சொகுசுவாகனம் வேணுமெண்டு அடம்பிடித்து - இப்ப மூட்டை முடிச்சை கட்டுறார் 

சொன்னா சிரிப்புவரும் 

எதுக்கு வம்பு நமக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

ரெஜினோல்ட்  குரே  மிதிவண்டியில் திரிந்தோ மக்களுக்கு சேவை செய்கிறார்.  அரசின் சொகுசுகளை அனுபவிக்காதவர்கள் யார் யார் என்ற பட்டியலை தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்  யார்?

இவரது  கடமை  என்ன?

இவர்  எதற்கு  கூட்டங்கள்  போடுகிறார்?

எதற்கு கூட்டத்துக்கு  ஆட்களை  சேர்க்கிறார்?

ஏன் செய்யப்படும்   அபிவிருத்தி  ஒவ்வொன்றிலும்  தனது பெயரை  பதிகிறார்???

என்பனவற்றிற்கு  விடை  தெரிந்தவர்கள் இது பற்றி  அலட்டிக்கொள்ளமாட்டார்கள்

 

32 minutes ago, nunavilan said:

ரெஜினோல்ட்  குரே  மிதிவண்டியில் திரிந்தோ மக்களுக்கு சேவை செய்கிறார்.  அரசின் சொகுசுகளை அனுபவிக்காதவர்கள் யார் யார் என்ற பட்டியலை தரவும்.

நியாமான கேள்வி மட்டு நிறுத்தினர் அவர்களே.

ஆனால் மக்களுக்கு சலுகை வேண்டாம் உரிமை வேணும் என்பவர், மக்களுக்கு சலுகையில் ஒரு மிதி வண்டியாவது வாங்கி கொடுத்திருக்கலாம். அதை விடுத்து தனது சலுகையில் கவனம் செலுத்தினால் 

இதுதான் என் கேள்வி 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டில் சலுகையில் மக்களுக்கு மிதிவண்டி வாங்கி கொடுத்தார்கள் என்று சொன்னால் அதனை விக்கி அவர்களிடம்  சொல்லலாம்.
சிங்களவர்களை பற்றி கரைத்து குடித்தவர் விக்கி என்பதால் அவர் சொல்வதில் நியாயம் இல்லாமல் இல்லை. சிங்களவர்கள் சலுகைகளை தந்து உரிமைகளை கேட்காமல் மழுங்கடித்து விடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும். நேற்றிரவும் அவரது செவ்வியில் இதனை நினைவு படுத்தி இருந்தார்.
 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/31/2018 at 9:28 AM, nunavilan said:

ரெஜினோல்ட்  குரே  மிதிவண்டியில் திரிந்தோ மக்களுக்கு சேவை செய்கிறார்.  அரசின் சொகுசுகளை அனுபவிக்காதவர்கள் யார் யார் என்ற பட்டியலை தரவும்.

ம் ... அனுபவி. ராஜா அனுபவி.  விக்னெசுவரனும் அனுபவிக்விக்கட்டும். எந்த அரசியல்வாதி ஊழல் செய்யவில்லை? விக்னெசுவரனும் செயயலாமே?
எந்த அரசியல்வாதி மக்களை ஏமாற்றவில்லை? விக்னெசுவரனும் ஏமாற்றட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதல்ல பொருள். அரச அதிகாரிகள் அனைவருக்கும் வாகன வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.விக்கியரும் அதனை எடுத்துக்கொள்ளட்டும் என்பது தானே தவிர மகிந்த கொள்ளை அடிக்கிறான் ஆகவே விக்கியர் கொள்ளை அடிக்கலாம் என்பதல்ல. ஏதோ பொழுது போக்காய் கேள்வி கேட்பது மாதிரி உள்ளது.

21 hours ago, nunavilan said:

எந்த நாட்டில் சலுகையில் மக்களுக்கு மிதிவண்டி வாங்கி கொடுத்தார்கள் என்று சொன்னால் அதனை விக்கி அவர்களிடம்  சொல்லலாம்.
சிங்களவர்களை பற்றி கரைத்து குடித்தவர் விக்கி என்பதால் அவர் சொல்வதில் நியாயம் இல்லாமல் இல்லை. சிங்களவர்கள் சலுகைகளை தந்து உரிமைகளை கேட்காமல் மழுங்கடித்து விடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும். நேற்றிரவும் அவரது செவ்வியில் இதனை நினைவு படுத்தி இருந்தார்.
 

இந்தாள் வேற காத்துப் போன மிதிவண்டியிலையே நிற்கிறார் // அது உதாரணத்துக்கு சொல்லப்பட்ட விடயமே தவிர கருத்தின் பொருள் அதில்லை என்பது உங்களுக்கே தெரியும்.

அடுத்தது சிங்களவர்களை பற்றி எமக்கு இன்னமும் விக்கியர்தான் வகுப்பு எடுக்கணும் - நாங்கள் இப்பவும் அம்மாவிடம் பால் குடித்துக் கொண்டு + விரல் சூப்பும் தமிழர்கள் என நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்ய.

உங்கள் கருத்தினைப் பார்க்கும்போது தாயகத்தில் உள்ள மக்களை பற்றிய உங்கள் கணிப்பு நன்கு புரியுது. ஆனால் அவர்கள்  உங்களை விட புத்திசாலிகள் என்று புரியும் போது உங்கள் கருத்து மாறும், மாறியே தீரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.