Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
November 14, 2018

mahinda1.jpg?zoom=1.1024999499320984&res

ஜனநாயகம் தொடர்பில் துளி அளவேனும் மரியாதை மற்றும் வெட்கம் இருக்குமானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றின்போது அவர் இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

 

அத்துடன், 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 122 பேர் பெரும்பான்மையை சிறப்பான, பண்பான மற்றும் முறையான விதத்தில் வெளிப்படுத்தி உள்ளதாக குறிப்பிட்ட அவர், மஹிந்த ராஜபக்ஸ தொடர்ச்சியாக தேசபக்தி, தேசியம் மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் எங்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டு அதனை மதிக்கவில்லை என்று தெரிவித்தார்.

தேசபக்தி, தேசியம், நாடு என்பன எல்லாம் அடிப்படை சட்டமான அரசியலமைப்பை கொண்டே இருப்பதாகவும் முதலில் அரசியலமைப்பை மதிக்க தெரியவேண்டும் என்றும் அரசியலமைப்பை மதிக்காது தேச பக்கி பற்றி வகுப்பெடுக்க முயற்சிக்க கூடாது என்றும் கூறினார்.

மீண்டும் தமது ஆட்சி சட்டபூர்வமாக உருவாக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட மனோ, இதற்கு ஜனநாயக ரீதியாக ஒத்துழைப்பு வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

மக்களுடைய வார்த்தைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி செயற்பட வேண்டும் – ரிஷாட் பதியுதீன்:-

இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மக்களுடைய வார்த்தைக்கு மதிப்பளித்தும், 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் ஜனநாயகத்தை விரும்பக்கூடிய மக்கள் எதிர்ப்பார்த்த தீர்வை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளதன் மூலம் நாட்டில் இன்று ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சுதந்திரத்துக்குப் பின்னர், இந்த நாட்டில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவ்வாறான நாட்டில் அதிகப்படியான சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற்று ஜனாதிபதியானவர் கடந்த 26 ஆம் செய்த மாபெரும் மோசமான செயலிற்கு உயர் நீதிமன்றத்தினால் நேற்று தீர்ப்பு ஒன்றினை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

http://globaltamilnews.net/2018/103292/

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

123 வேண்டுமே பெரும்பான்மையை நிரூபிக்க??

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Eppothum Thamizhan said:

123 வேண்டுமே பெரும்பான்மையை நிரூபிக்க??

113 போதுமே!

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Eppothum Thamizhan said:

123 வேண்டுமே பெரும்பான்மையை நிரூபிக்க??

 

2 minutes ago, MEERA said:

113 போதுமே!

தம்பி கொஞ்சம் கணக்கில வீக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

123 வேண்டுமே பெரும்பான்மையை நிரூபிக்க??

 

19 minutes ago, MEERA said:

113 போதுமே!

 

15 minutes ago, ஈழப்பிரியன் said:

 

தம்பி கொஞ்சம் கணக்கில வீக்கு.

சிவசக்தி ஆனந்தன் வாக்களிக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

 

 

சிவசக்தி ஆனந்தன் வாக்களிக்கவில்லை. 

நடுநிலைமை வகித்தாலும் துட்டு வந்து சேருமில்ல.

என்னவோ கூட்டணியைப் பெறுத்தவரை தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நடுநிலைமை வகித்தாலும் துட்டு வந்து சேருமில்ல.

என்னவோ கூட்டணியைப் பெறுத்தவரை தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போட்டுது.

இதில கீழே இருக்கும் அவமானம் கட்டுரையில் அல்லாட காவலில் தப்பி இருக்கினம், அலை பாய்ந்தவர்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.