Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மையடைகிறேன்" - நிஷாந்த டி சில்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மையடைகிறேன்" - நிஷாந்த டி சில்வா

எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன் என குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தெரி­வித்­துள்ளார்.

nishantha.jpg

இவ­ரது பூர்­வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் மஹிந்த ராஜ­பக்ஷவின் பொது­ஜன பெர­முன கட்­சியின் உறுப்­பி­னரான ஓய்வு பெற்ற மேஜருமான அஜித் பிர­சன்ன கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே நிஷாந்த டி சில்வா இதனைக் குறிப்­பிட்­டுள்ளார்.

“எனது தந்தை, எனது தாத்தா என எனது பரம்­ப­ரையே இந்த நாட்டில் வாழ்ந்து இந்த நாட்­டிற்­காக சேவை செய்­த­வர்­க­ளாவர். அவர்கள் அனைவர் குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன்.

அத்­துடன் நான் மனிதத் தன்­மையை மதிக்­கி­றேனே தவிர நபர் ஒரு­வரின் இனத்­துக்கு அல்ல. எனது கட­மையின் போது கட்சி, நிற, இன, மத பேதங்கள் இல்லை. அனை­வரும் மனி­தர்கள் என்ற அடிப்­ப­டை­யி­லேயே நான் சேவை செய்­கின்றேன்.

எனது பிறப்பு சான்­றி­தழில் எனக்கு சிங்­க­ளவர் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் நான் மனித இனத்­திற்கே உரி­மை­யா­கின்றேன். சிங்­களம், தமிழ், முஸ்­லி­மாக இருப்­ப­தற்கு முன்னர் அனை­வரும் மனி­த­னாக இருப்போம். அத்­துடன் நான் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மன­ச்சாட்­சிக்கு உண்­மை­யா­கவும், நாட்டின் சட்­டத்­திற்­க­மை­யவும் செயற்­ப­டு­கிறேன். இனி­மேலும் அப்­படித் தான் செயற்­ப­டுவேன்.

எனது கடமை தொடர்பில் பலர் கோப­ம­டை­கின்­றார்கள். அது குறித்து நான் அதிர்ச்சியடைவதில்லை” எனவும் நிஷாந்த டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.virakesari.lk/article/45616

 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

"எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மையடைகிறேன்" - நிஷாந்த டி சில்வா

எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன் என குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தெரி­வித்­துள்ளார்.

இவரது தந்தை வழியினர், சிங்கள அரசாலும் அதனது காடையர்களாலும் படும் துன்ப துயரங்களைக் களைவதற்கு, தனது பதவியையும், அதிகாரத்தையும் என்றாவது பயன்படுத்தியுள்ளாரா. ????????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

இவரது தந்தை வழியினர், சிங்கள அரசாலும் அதனது காடையர்களாலும் படும் துன்ப துயரங்களைக் களைவதற்கு, தனது பதவியையும், அதிகாரத்தையும் என்றாவது பயன்படுத்தியுள்ளாரா. ????????

இவரது தொழிலால் சிங்கள அரசுடன் மோதமுடியும் என்று நினைக்கிறீர்களா? அந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஏதாவது செய்யலாமா ?? அவர் புலனாய்வு அதிகாரி மட்டுமே

நாட்டின் எதிர்கட்சி தலைவரால்கூட ஒன்றும் செய்ய முடியல இதுக்குள்ள இவரு என்ன செய்திட முடியும் ??:35_thinking:

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே பார்த்தேன்.... இவ்வளவு திறமையான ஒரு அதிகாரி, 20 வருசமா, பதவி உயர்வே இல்லாமல் ஓர் இன்ஸ்பெக்டராகவே இருக்கிறாரே என்ன விசயம்..... என்று பார்த்தால்.... இப்ப தானே புரிகிறது....

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நாட்டின் எதிர்கட்சி தலைவரால்கூட ஒன்றும் செய்ய முடியல இதுக்குள்ள இவரு என்ன செய்திட முடியும் ??:35_thinking:

இங்கே தான் பிழை விடுகிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ன தான் முயன்று தோற்றுப் போனார் என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இங்கே தான் பிழை விடுகிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ன தான் முயன்று தோற்றுப் போனார் என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா?

ஏதோ மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றார் தீபாவளியில

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஏதோ மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றார் தீபாவளியில

அதுக்காகவே தான் அரசியல் சாணக்கியன் எந்த தீபாவளி என்று சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நாட்டின் எதிர்கட்சி தலைவரால்கூட ஒன்றும் செய்ய முடியல :35_thinking:

2 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கே தான் பிழை விடுகிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ன தான் முயன்று தோற்றுப் போனார் என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா?

என்ன முனிவர்... இவளவு அப்பாவியா இருக்கிறீயளே.

பிரதமர் பதவிக்கு அடிபாடு....இரண்டு பேர் தாமே எண்டுகினம். ஒருத்தர் இண்டைக்கு அவுட். இவ்வளவு கலபுலாவுக்குளயும் சிங்கன் வெட்டி ஆடி... எதிர்க்கட்சி தலைவர் பதவியை விடேல்லையே...  

இண்டைக்கும் அவர்தான் எதிர்க்கட்சி தலைவர்... பண்ணியில், பண்ணிப்பாருங்கோவன் ?
 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

இண்டைக்கும் அவர்தான் எதிர்க்கட்சி தலைவர்... பண்ணியில், பண்ணிப்பாருங்கோவன்

?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.