Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சபரிமலை செல்ல முயன்ற தமிழக பெண்கள் கோயிக்குள் செல்லாமல் திரும்புகின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சபரிமலைக்குச் சென்ற பெண் பக்தர்கள்படத்தின் காப்புரிமை A.S.Satheesh

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு செய்ய சென்ற 50 வயதுக்கும் குறைவான பெண் பக்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தமிழகத்துக்கு திரும்ப அழைத்து வரப்படுகின்றனர்.

டிசம்பர் 23 அன்று 10 முதல் 50 வயதுள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் சபரிமலை செல்லும் நோக்கில் பம்பையில் கூடவுள்ளதாக 'மனிதி' எனும் பெண்கள் அமைப்பு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள இடுக்கி - கம்பமேடு வழியை காலை 3.30 மணிக்கு வந்தடைந்த பெண்கள், சபரிமலைக்கு செல்லும் வழியில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

30-40 போராட்டக்காரர்கள் அய்யப்பன் குறித்து கோஷங்களை எழுப்ப தொடங்கியவுடன், கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள் பம்பையில் உள்ள போலிஸ் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சபரிமலைக்குச் சென்ற பெண் பக்தர்கள்படத்தின் காப்புரிமை A.S.Satheesh

"நாங்கள் தமிழ்நாட்டிற்கு திரும்ப அழைத்துச் செல்லப்படுகிறோம். மூன்று ஜீப் மற்றும் ஒரு போலிஸ் பேட்ரோல் வண்டி எங்களின் பாதுகாப்பிற்கு எங்களுடன் வரவுள்ளது. போலிஸ் எங்களுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை. மேலும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் நாங்கள் திரும்பிதான் செல்ல வேண்டும்" என்று மனிதி அமைப்பை சேர்ந்த செல்வி தெரிவித்தார்.

கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்களில் ஆறுபேர் பக்தர்கள், பிறர் செயற்பாட்டாளர்கள். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சபரிமலை கோயிலுக்கு செல்ல முற்பட்ட பெரிய பெண்கள் கூட்டம் இதுவே.

இந்த பெண்களுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது இருப்பினும், போராட்டக்காரர்கள் அவர்களை துரத்தியதால் பம்பையில் உள்ள போலிஸ் முகாமிற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

"கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை சபரிமலை கர்மா சமிதியை சேர்ந்தவர்கள் மட்டும் எதிர்க்கவில்லை. பிற பக்தர்களும் அவர்களை எதிர்க்கிறார்கள்" என சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பான, சபரிமலை கர்மா சமிதியை சேர்ந்த குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் "தமிழகத்தை சேர்ந்த அந்த பெண்கள் மாவோயிஸ்டுகள் என்றும், கேரளாவின் சட்டம் மற்றும் அமைதியை குலைக்கவே அவர்கள் விரும்புகின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

சபரிமலைக்குச் சென்ற பெண் பக்தர்கள்படத்தின் காப்புரிமை A.S.Satheesh

அக்டோபரில் நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் ரெஹானா ஃபாத்திமா மற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவர், சபரிமலையின் பிரதான சன்னிதானத்தை அடைந்தனர். ஆனால், பக்தர்களின் எதிர்ப்பால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 28ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது.

முன்னதாக கடந்த நவம்பர் 16-ம் தேதி மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் த்ருப்தி தேசாய் சுமார் 14 மணிநேர காத்திருப்புக்கு பிறகு, போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லும் முயற்சியை கைவிட்டு மீண்டும் புனே திரும்பினார்.

முன்னதாக சபரிமலைக்கு செல்ல முயற்சித்து தோல்வியடைந்த ரெஹானா ஃபாத்திமா, அங்கு செல்லும்போது, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடை தெரியுமாறு புகைப்படம் வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு பிரிவில் பணியாற்றிய 32 வயதான ரெஹானா ஃபாத்திமா ஒரு செயற்பாட்டாளர் மற்றும் மாடல் ஆவார். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, அங்கு செல்ல முயன்ற அவர், போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அக்டோபர் மாதத்தில் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்த வழியில், ரெஹானா ஃபாத்திமா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார். அதில் அவர் கருப்பு உடை அணிந்து, நெற்றியில் சந்தனம் மற்றும் அவரது தொடை தெரியுமாறு அந்த புகைப்படம் இருந்தது.

ரெஹானா ஃபாத்திமா,ரெஹானா ஃபாத்திமா,படத்தின் காப்புரிமை AFP

அந்தப் புகைப்படம் உடல் பாகங்களை வெளிப்படுத்துமாறு இருந்ததாகவும், ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துமாறு இருப்பதாகவும் பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர் பணிபுரியும் பி.எஸ்.என்.எல் நிறுவனம், இந்த விசாரணை முடியும் வரை ஃபாத்திமாவை இடைநீக்கம் செய்துள்ளது.

தான் ஐய்யப்ப பக்தை என்று ரெஹானா கூறினாலும், அவர் ஒரு முஸ்லிம் என்பதினால், இந்த விஷயம் பழமைவாத இந்துக்குழுக்களை கோபப்படுத்தி உள்ளது.

சபரிமலையில் அனுமதிக்கப்பட்ட திருநங்கைகள்

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக தொடர்ந்து கசப்பான சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் நான்கு திருநங்கைகள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கபட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை) காவல்துறை பாதுகாப்புடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட திருநங்கைகள் அனைவரும் கருப்பு நிற சேலை அணிந்திருந்தனர்.

திருநங்கைகள் கோயிலுக்குள் செல்லலாம் என கமிட்டி ஒப்புக்கொண்டது. மேலும் கோயில் நிர்வாகிகளும் திருநங்கைகள் மாதவிடாய்க்கு உள்ளாகமாட்டார்கள் என்பதால் அவர்களை அனுமதிக்க ஆட்சேபனையில்லை என்றனர்.

20 போலீசார் பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்த திருநங்கைகள்படத்தின் காப்புரிமை A S Satheesh Image caption 20 போலீசார் பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்த திருநங்கைகள்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்த நிலையில் சில போலீசார் திருநங்கைகளை ஆண்கள் போல வேடமிட்டு கோயிலுக்குள் வருமாறு அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் திருநங்கைகள் காவல்துறையின் யோசனைகளை ஏற்கவில்லை. கேரள உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கமிட்டி முன்பு இவ்விவகாரத்தை எடுத்துச் சென்றனர்.

கோயிலுக்குச் சென்ற நான்கு திருநங்கைகளில் ஒருவரான 33 வயதான திருப்தி பிபிசி இந்தி சேவையிடம் பேசியபோது ''அய்யப்பனை தரிசித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நாங்கள் எல்லோரும் பக்தர்கள். சபரிமலைக்குள் செல்வதற்கு என்னென்ன சடங்கு விதிகள் இருக்கிறதோ அத்தனையையும் நாங்கள் கடைபிடித்துள்ளோம்'' என்றார்

https://www.bbc.com/tamil/india-46664589

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பேசாப் பொருள் பகுதியில் கேட்க வேண்டுமோ தெரியாது, இருந்தாலும் கேட்கிறேன்: நினைத்த நேரம் விந்து வெளியிடும் வகையில் ஆண்களின் உடலமைப்பு இருக்கிறது, அப்படியானால் அவர்கள் அல்லவா முதலில் இந்தக் கோயிலில் தடை செய்யப் பட வேண்டும்? 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Justin said:

இதைப் பேசாப் பொருள் பகுதியில் கேட்க வேண்டுமோ தெரியாது, இருந்தாலும் கேட்கிறேன்: நினைத்த நேரம் விந்து வெளியிடும் வகையில் ஆண்களின் உடலமைப்பு இருக்கிறது, அப்படியானால் அவர்கள் அல்லவா முதலில் இந்தக் கோயிலில் தடை செய்யப் பட வேண்டும்? 

மிகவும் பலவீனமான ஆண்கள் போலிருக்கே!

உதிரம் தீட்டு, அசுத்தம் என்பதால் ஆலயத்தின் புனிதம் மாசுபட்டுவிடும் என்று பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும் ஆண்கள் சொல்வார்கள். ஆனால் தங்கள் விந்து ஜீவனை உருவாக்கும் சக்தி என்பதால் புனிதமாகக் கருதுவார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Justin said:

இதைப் பேசாப் பொருள் பகுதியில் கேட்க வேண்டுமோ தெரியாது, இருந்தாலும் கேட்கிறேன்: நினைத்த நேரம் விந்து வெளியிடும் வகையில் ஆண்களின் உடலமைப்பு இருக்கிறது, அப்படியானால் அவர்கள் அல்லவா முதலில் இந்தக் கோயிலில் தடை செய்யப் பட வேண்டும்? 

8 hours ago, கிருபன் said:

மிகவும் பலவீனமான ஆண்கள் போலிருக்கே!

உதிரம் தீட்டு, அசுத்தம் என்பதால் ஆலயத்தின் புனிதம் மாசுபட்டுவிடும் என்று பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும் ஆண்கள் சொல்வார்கள். ஆனால் தங்கள் விந்து ஜீவனை உருவாக்கும் சக்தி என்பதால் புனிதமாகக் கருதுவார்கள்!

இப்படியான தினாவெட்டு பகிர்வு படங்கள் தான் சகல பிரச்சனைகளுக்கும் காரணம்.

à®°à¯à®¹à®¾à®©à®¾ à®à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®®à®¾,à®°à¯à®¹à®¾à®©à®¾ à®à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®®à®¾,

 

பாதிரிகளின் சிறுவர் பாலியல் தொல்லைகள் 50 வருடங்களுக்கு பின்னர் வெளி வருவதையிட்டுன் பேரின்பம் அடைகின்றேன்.:cool:

 

On 12/23/2018 at 4:25 PM, Justin said:

இதைப் பேசாப் பொருள் பகுதியில் கேட்க வேண்டுமோ தெரியாது, இருந்தாலும் கேட்கிறேன்: நினைத்த நேரம் விந்து வெளியிடும் வகையில் ஆண்களின் உடலமைப்பு இருக்கிறது, அப்படியானால் அவர்கள் அல்லவா முதலில் இந்தக் கோயிலில் தடை செய்யப் பட வேண்டும்? 

இப்படியான முட்டாள்த்தனத்தை பற்றி கேட்கப்படும்  கேள்விகளுக்கு யாழ்களத்தில் மட்டுமல்ல எமது தமிழ் சமுதாயத்திடம் இருந்து கூட  அறிவு ரீதியான பதிலை எதிர் பார்க்க முடியாது. உலகத்தில் எவ்வளவு அறிவு வளர்ச்சி ஏற்பட்டாலும் தமது முட்டாள்த்தனத்தை கடைப்நிபிடிப்பவர்கள் அதை நியாயப்படுத்துபவர்கள் நாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/23/2018 at 7:38 PM, குமாரசாமி said:

இப்படியான தினாவெட்டு பகிர்வு படங்கள் தான் சகல பிரச்சனைகளுக்கும் காரணம்.

à®°à¯à®¹à®¾à®©à®¾ à®à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®®à®¾,à®°à¯à®¹à®¾à®©à®¾ à®à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®®à®¾,

 

பாதிரிகளின் சிறுவர் பாலியல் தொல்லைகள் 50 வருடங்களுக்கு பின்னர் வெளி வருவதையிட்டுன் பேரின்பம் அடைகின்றேன்.:cool:

 

இதில் பேரின்பம் அடைய ஒன்றும் இல்லை! துஷ்பிரயோகம் யாருக்கு நடந்தாலும் யார் செய்தாலும் சோகம் தான் சாதாரண மனிதனுக்கு வரும்! ஆனால், உங்களைப் போன்ற ஐயப்பன் பக்தர்கள் பெண்கள் காட்டும் உடல் பகுதிகளைப் பார்த்து சிற்றின்பம் இரகசியமாக அடைந்து விட்டு அந்தப் பெண்களே கோயிலுக்குள் போகக் கூடாது என்பது தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது! 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Justin said:

இதில் பேரின்பம் அடைய ஒன்றும் இல்லை! துஷ்பிரயோகம் யாருக்கு நடந்தாலும் யார் செய்தாலும் சோகம் தான் சாதாரண மனிதனுக்கு வரும்! ஆனால், உங்களைப் போன்ற ஐயப்பன் பக்தர்கள் பெண்கள் காட்டும் உடல் பகுதிகளைப் பார்த்து சிற்றின்பம் இரகசியமாக அடைந்து விட்டு அந்தப் பெண்களே கோயிலுக்குள் போகக் கூடாது என்பது தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது! 😎

சிற்றின்பம் ஓரளவிற்கு ஏற்கக்கூடியது. அது இயற்கையாகவும் நிகழ்வடையக்கூடியது.
ஆனால் ஆண்டவரே தஞ்சம் என்று வந்த சிறுவர் சிறுமிகளையே ஓரமாக வைத்து காட் பாதர்மார்  சரிக்கட்டினது  மனிதத்தன்மையில்லை. இல்லை நீங்களே  குப்புறபடுத்திருந்து ஒருக்கால் யோசிச்சு பாருங்கோ.. குப்புற படுத்து எண்டு சொன்னதுக்கு காரணம்.......நிமிர்ந்து படுத்திருந்தால் துப்பின துப்பல்  முகத்துக்கே வந்து விழும் எண்டதுக்காக....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சிற்றின்பம் ஓரளவிற்கு ஏற்கக்கூடியது. அது இயற்கையாகவும் நிகழ்வடையக்கூடியது.
ஆனால் ஆண்டவரே தஞ்சம் என்று வந்த சிறுவர் சிறுமிகளையே ஓரமாக வைத்து காட் பாதர்மார்  சரிக்கட்டினது  மனிதத்தன்மையில்லை. இல்லை நீங்களே  குப்புறபடுத்திருந்து ஒருக்கால் யோசிச்சு பாருங்கோ.. குப்புற படுத்து எண்டு சொன்னதுக்கு காரணம்.......நிமிர்ந்து படுத்திருந்தால் துப்பின துப்பல்  முகத்துக்கே வந்து விழும் எண்டதுக்காக....

சைவ மதத்தில் கூட முழுவதுமாக அல்ல, இந்தச் சைவக் கோயிலில் மூட நம்பிக்கையை அடிப்படையாக வைத்து பெண்களுக்கு மறுக்கப் படும் மரியாதையை ஒரு கிறிஸ்தவன் சுட்டிக் காட்டுவது தான் உங்கள் பிரச்சினை என உணர்கிறேன். பாதிரிமார் செய்தது சரி என்று மறைத்தோ வெளிப்படையாகவோ எங்கும் நான் பேசியதாக உங்களால் காட்ட முடியாமலே உங்கள் கதை நகர்கிறது. 

திரும்பி வரும் போது சேற்றில் கல்லெறியாமல் விலகி இருக்க நினைத்தாலும் உங்களுக்குப் பதில் எழுத வெளிக்கிட்டு அதை செய்து விட்டேன்! இனி அறிவு பூர்வமான உரையாடல்களில் மட்டுமே பதில் எழுதத் தீர்மானித்திருப்பதால் உங்களுடன் உரையாட வேண்டி வராது என நம்புகிறேன்! நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Justin said:

சைவ மதத்தில் கூட முழுவதுமாக அல்ல, இந்தச் சைவக் கோயிலில் மூட நம்பிக்கையை அடிப்படையாக வைத்து பெண்களுக்கு மறுக்கப் படும் மரியாதையை ஒரு கிறிஸ்தவன் சுட்டிக் காட்டுவது தான் உங்கள் பிரச்சினை என உணர்கிறேன். பாதிரிமார் செய்தது சரி என்று மறைத்தோ வெளிப்படையாகவோ எங்கும் நான் பேசியதாக உங்களால் காட்ட முடியாமலே உங்கள் கதை நகர்கிறது. 

திரும்பி வரும் போது சேற்றில் கல்லெறியாமல் விலகி இருக்க நினைத்தாலும் உங்களுக்குப் பதில் எழுத வெளிக்கிட்டு அதை செய்து விட்டேன்! இனி அறிவு பூர்வமான உரையாடல்களில் மட்டுமே பதில் எழுதத் தீர்மானித்திருப்பதால் உங்களுடன் உரையாட வேண்டி வராது என நம்புகிறேன்! நன்றி!

அறிவுபூர்வமாக சிந்திக்கும்/உரையாடல் செய்யும் உங்களுக்கு எனது சைவசமயத்தை விமர்ச்சிக்கும் உரிமையை யார் தந்தது?

முதலில் உங்கள் கிறிஸ்தவ மதத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கிவிட்டு அப்புறம் சமூக நலனுக்கு வருவது பற்றி சிந்தியுங்கள்.
நினைத்த நேரத்தில் விந்து வருவதைப்பற்றி உங்கள் பாதிரியாரிடம் விவாதியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அறிவுபூர்வமாக சிந்திக்கும்/உரையாடல் செய்யும் உங்களுக்கு எனது சைவசமயத்தை விமர்ச்சிக்கும் உரிமையை யார் தந்தது?

😀😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.