Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா கறிவேப்பிலைக்கு ஐரோப்பிய நாடுகளில் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா கறிவேப்பிலைக்கு ஐரோப்பிய நாடுகளில் தடை

 

curry-leaves-300x200.jpgஇத்தாலி, சைப்ரஸ், கிறீஸ், மால்டா போன்ற நாடுகளுக்கு, சிறிலங்காவில் இருந்து கறிவேப்பிலைகளைக் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இத்தாலியின் கட்டானியா, சிசிலியில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

EUROPHYT அறிவித்தலின் மூலம், சிறிலங்காவில் இருந்து, கறிவேப்பிலைகளைக் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, இந்த நாடுகளுக்கு வரும் பயணிகள் சிறிலங்காவில் இருந்து கறிவேப்பிலைகளை எடுத்து வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இருந்து இத்தாலிய விமான நிலையங்களுக்கு வந்தவர்களின் பைகளில் இருந்து கறிவேப்பிலைகளை, இத்தாலிய சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்து வந்தனர்.

சிறிலங்கா கறிவேப்பிலைகளில் ஆபத்தான உயிரிகள் இருக்கின்ற என்ற அடிப்படையில், ஐரோப்பிய நாடுகளுக்கு அவற்றை எடுத்து வருவதற்கு, கடந்த 24ஆம் நாள்  தொடக்கம், தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2018/12/27/news/35649

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி, சைப்ரஸ், கிறீஸ், மால்டா போன்ற நாடுகளில் வசிக்கும் வெள்ளைக்காரனும்...
கறி வேப்பிலைக்கு... அடிமையாகி விட்டான் போலுள்ளது.
இனி... வெள்ளைக்காரனே, தரமான கறி வேப்பிலையை... இறக்குமதி செய்து,  
எல்லா கடைகளிலும் விற்பனை செய்ய வேண்டும்.

25 வருடத்துக்கு முன்பு... இஞ்சி, கத்தரிக்காய், பச்சை மிளகாய், மரவள்ளிக் கிழங்கு போன்ற பொருட்களை...
தமிழ் கடைகளில் மட்டுமே வாங்க முடியும்.
இப்போ... வெள்ளைகளின்  கடைகளிலும், தாராளமாக வாங்கலாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

சிறிலங்கா கறிவேப்பிலைகளில் ஆபத்தான உயிரிகள் இருக்கின்ற என்ற அடிப்படையில், ஐரோப்பிய நாடுகளுக்கு அவற்றை எடுத்து வருவதற்கு, கடந்த 24ஆம் நாள்  தொடக்கம், தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கனே ஆபத்தான உயிரிதான் ...இது தெரியாமல் வெள்ளைகள் சிறிலங்கன்  கறி வேப்பிலைக்கு தடை விதிக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மக்கள் இதை சாப்பிட்டு நன்றாகத்தானே இருக்கின்ரார்கள். இது சரியான முறையில் சந்தைப்படுத்தபடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கறிவேம்பு இலை என்பதையே கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை என நாம் குறிப்பிடுகிறோம். கறிவேப்பிலை சமையலில் மணமூட்டும் முக்கியமான இலையாகும்.

சாம்பார், குழம்பு, இரசம் என நாம் சாப்பிடும் அனைத்து உணவிலும் கறிவேப்பிலை சேர்க்கப்படுகின்றது. இதனால், உணவு மணமாக சுவையாக இருக்கும்.

கறிவேப்பிலை இலைகளே அதிக மருத்துவப் பயன் கொண்டவை. இலேசான காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. மருந்தாகச் சாப்பிட்டுவர, பசியை அதிகமாக்கும்; உடலை வலுவாக்கும்.

கறிவேப்பிலை குடல் வாயுவை வெளியேற்றும்.சாப்பிடும் போது நமக்குக் கிடைக்கும் கறிவேப்பிலையை ஒதுக்கி விடாமல் சாப்பிடுவதன் மூலமாக அதன் முழுப்பயனும் நமக்கு கிடைக்கும்.

தேவையான அளவு கறிவேப்பிலையை, நெய்யில் இளவறுப்பாக வறுத்து, தூள் செய்து கொள்ள வேண்டும். 1 தேக்கரண்டி அளவு தூளை, சூடான சாதத்துடன் கலந்து, சிறிதளவு உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவடையும்.

கறிவேப்பிலை இலைகளுடன், சிறிதளவு இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, வெயிலில் காயவைக்க வேண்டும். பிறகு, இடித்து, தூள் செய்து பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். ½ தேக்கரண்டி அளவு தூளை, இரவு சாப்பிடும் போது, சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

2 கொத்து கறிவேப்பிலை இலைகளை எடுத்துக்கொண்டு, காம்பு நீக்கி, 2 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். 1 டம்ளர் ஆக சுண்டக் காய்ச்சிய பின்னர் இறக்கி, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ¼ டம்ளர் வீதம், ஒரு நாளைக்கு 4 வேளைகள் குடிக்க சளி இருமல் குணமாகும்.

குமட்டல், வாந்தி, சீதபேதி போன்றவைகளுக்கு கறிவேப்பிலை, சிறிதளவு மிளகாய் ஆகியவற்றை நெய்யில் வதக்கி, சிறிதளவு புளி, உப்பு சேர்த்து, அரைத்து, துவையல் செய்ய வேண்டும். இதனை சாதத்துடன் சேர்த்துக் பிசைந்து சாப்பிடலாம்.

 

இத்தனை மருத்துவக் குணங்களைக் கொண்ட கறிவேப்பிலையைத் தடைசெய்ய ஏதோ வலுவான காரணம் இருக்கவேண்டும்.! அது என்ன...??

2 hours ago, Paanch said:

இத்தனை மருத்துவக் குணங்களைக் கொண்ட கறிவேப்பிலையைத் தடைசெய்ய ஏதோ வலுவான காரணம் இருக்கவேண்டும்.! அது என்ன...??

பதில் வெரி சிம்பிள் அண்ணை!

மருந்துக் கடைகளில் வியாபாரம் கடுமையா சரிஞ்சிருக்கும். அதுக்கு கறிவேப்பிலையும் ஒரு காரணம் என்டு கண்டு பிடிச்சிருப்பாங்கள்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.