Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘ ஏக்கிய ராஜ்ய’ என்பது ஒற்றையாட்சியா? சுமந்திரன், ரணில் - யார் கூறுவது சரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

Untitled.jpg

-வை எல் எஸ் ஹமீட்-
அண்மையில் பிரதமர் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது ‘நாடு “ ஒற்றையாட்சித் தன்மையில்” 
இருந்து மாறுபடாது; என்று தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் திரு சுமந்திரன் அவர்கள் “ ஏக்கிய ராஜ்ய” என்பது ‘ஒற்றையாட்சி’ அல்ல; என்று நூறு தடவைகள் விளங்கப்படுத்திவிட்டதாகவும் ஆனால் தமிழ் ஊடகங்கள் அது ‘ ஒற்றையாட்சி’ என்றே இன்னும் எழுதுவதாகவும் குறைபட்டிருக்கின்றார்.

பிரதமர் தமிழில் ‘ ஒற்றையாட்சி ‘ என்றா மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்திருப்பார்? சிங்களத்தில் “ ஏக்கிய ராஜ்ய” என்றுதான் கூறியிருப்பார். ஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சியில்லை; என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

தற்போதைய யாப்பு ஒற்றையாட்சியாகும்; என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை சிங்களத்தில் ஏக்கிய ராஜ்ய என்றுதான் எழுதிவைத்திருக்கிறார்கள். அப்படியானால் ‘ ஏக்கிய ராஜ்ய’ என்பது ‘ ஒற்றையாட்சி’ தானே! அந்த அர்த்தத்தில்தானே பிரதமர் மகாநாயக்கர்களிடம் கூறியிருப்பார். எனவே, தமிழ் ஊடகங்கள் தெரிவிப்பது சரிதானே! அவ்வாறாயின் சுமந்திரன் ஏன் மாற்றிக் கூறுகின்றார்?

ஆம், சுமந்திரன் சந்தேகமில்லாமல் மாற்றித்தான் கூறுகின்றார். ஆனாலும் சுமந்திரன் சரியாகவே கூறுகின்றார். தற்போதைய புதிய யாப்பு வரைவதில் முக்கிய பங்காற்றுகின்ற கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்னவும் பிரதமர் கூறுவதுபோல்தான் கூறுகின்றார். எனவே, இதில் உள்ள குழப்பம் என்ன? இதில் நமது எதிர்காலமும் தங்கியிருக்கின்றது. எனவே, இது என்னவென்று நாமும் தெளிவாக அறியவேண்டும்.

சட்டத்தில் ஒரு சொல்லை வியாக்கியானப்படுத்தல்
—————————————————————
சிலநேரம் ஒரு சொல்லுக்குரிய வியாக்கியானத்தை அந்த சட்டத்திலேயே குறிப்பிட்டிருப்பார்கள். அவ்வாறு குறிப்பிடப்பட்டால் அதுதான் அதன் பொருள், அகராதியில் எவ்வாறு இருந்தபோதிலும்.

மேலே உள்ள குழப்பநிலைக்கு பொருத்தமான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். சிங்கள மொழியில் ‘ கார்’ என்பதற்கு “X” என்றும் ‘ பஸ்’ என்பதற்கு “Y” என்றும் சாதாரணமாக அழைக்கப்படும் என வைத்துக்கொள்வோம்.

சட்டத்தில் குறிப்பிட்ட ஒருவிடயத்தைச் செய்வதற்கு ‘ கார்’ தான் பாவிக்கப்படவேண்டும்; என்றுதான் இதுவரை இருக்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் ‘கார்’ பாவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ‘பஸ்’தான் பாவிக்கப்படவேண்டும்; என்று கோருகிறார்கள்.

அரசாங்கமும் அதற்கு உடன்பட்டுவிட்டது. ஆனால் சிங்கள மக்கள் ‘பஸ்’ பாவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்பொழுது அரசாங்கம் ஒரு உத்தியைப் பாவிக்கிறது. அதாவது சிங்கள மொழியிலும் ஆங்கில மொழியிலும் ‘கார்’ என்பதற்கு சிங்களத்தில் பாவிக்கப்படுகின்ற “X” என்ற சொல்லையே பாவிக்கின்றது. ஆனால் “X” என்பது “சுமார் 60 பேர் செல்லக்கூடிய பெரிய வாகனம்” என்று அதற்குரிய வியாக்கியானத்தையும் அருகே எழுதிவைக்கின்றது.

தற்போதும் சட்டத்தில் ‘காரை’க் குறிக்கின்ற “X” என்ற சொல்லே இருப்பதால் சிங்கள மக்கள் சந்தேகப்பட மாட்டார்கள். நம்பவைக்கலாம்; என அரசு எண்ணுகிறது.

சிங்களத்தில் ‘ காரி’ ற்கு “X” என்ற சொல் பாவிக்கபடலாம். ஆனால் ஆங்கிலத்தில் அது ‘car’ தானே. தற்போதைய சட்டத்திலும் car என்ற சொல்தான் இருக்கின்றது. ஆனால் ஆங்கிலத்தில் car என்று எழுதாமல் அங்கும் “X” என்ற சிங்களச் சொல்லையே எழுதி அருகில் “X” என்பது சுமார் 60 பேர் செல்லக்கூடிய பெரிய வாகனம்; என்ற வியாக்கியானத்தையும் எழுதிவைக்கிறார்கள். அதன்பின் சிங்கள மக்களிடம் சென்று இது கார்தான் என்கிறார்கள்.

சுமந்திரன் கேட்கின்றார்; ‘ பிரதமர் கார் என்றா சொன்னார்?’ ‘“X” என்றுதான் சிங்களத்தில் சொல்லியிருப்பார். “ X” என்பது கார் இல்லை; என்று நூறு தடவைகள் சொல்லிவிட்டேன். தமிழ் ஊடகங்கள் இன்னும் கார் என்றே எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். சிங்களத்தில் “X” என்பது கார் அல்லது அது பஸ்’ என்கின்றார்.

தமிழ் ஊடகங்களோ, சிங்களத்தில் “X” என்பது கார்தான். அப்படித்தான் தற்போதைய சட்டத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதே அர்த்தத்தில்தான் பிரதமரும் கூறுகின்றார். எனவே, சுமந்திரனின் கதையை எவ்வாறு நம்புவது? என்ற நிலையில் இருக்கின்றன.

இது எதனைக் காட்டுகின்றதென்றால், தமிழ் ஊடகங்களும் அரசியலமைப்பு சபையின் இடைக்கால அறிக்கையை வாசிக்கவில்லை. அவர்களும் வெளியில் பிரதமர் போன்றவர்கள் பேசுவதையே கேட்டு எழுதுகின்றார்கள். அதேநேரம் சிங்கள மக்களும் வாசிக்கமாட்டார்கள். வாசித்தாலும் காரைக் குறிக்கின்ற “X” என்ற சொல்லே குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர்கள் சந்தேகப்படமாட்டார்கள்; கார் என்றே நம்புவார்கள்;  என்று ஆட்சித்தரப்பு நம்புகின்றது.

மறுபுறம் ஆங்கிலத்தில் car என்ற சொல்லைப் பாவித்தால் அதற்கு அருகில் 60 பேர் செல்லக்கூடிய வாகனம் என்று வியாக்கியானம் எழுதினால் சர்வதேச சமூகம் சிரிக்கும். எனவே, சர்வதேச சமூகத்திற்குத் தெரியாத சிங்கள சொல்லான “X” ஐ ஆங்கிலத்தில் எழுதுகின்றார்கள்.

அதேநேரம் நம்மவர்களில் ஒருவர் பிரதமர் கூறுவதுபோல் இது கார்தான் என்கிறார். இன்னொருவர் ‘ காரை’ நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; என்கின்றார். ஆனால் எழுதி இருப்பது காரா? பஸ்ஸா? என்று தெரியாமல் அவரும் கையொப்பம் வைத்துவிட்டார். இதுதான் நிலைமை.


இப்பொழுது நேரடி விடயத்திற்கு வருவோம்.
தற்போதைய அரசியலமைப்பில்,

தமிழில், “ இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சியுடைய அரசாகும்” என்றும்

சிங்களத்தில், “ ஶ்ரீலங்கா ஜனரஜய ஏக்கிய ரஜயகி” என்றும்

ஆங்கிலத்தில், “ The Republic of Sr Lanka is a Unitary State” என்றும் எழுதப்பட்டிருக்கின்றது.

இடைக்கால அறிக்கையில் பின்வருமாறு பிரேரிக்கப்பட்டிருக்கின்றது.
“ Sri Lanka is a......Republic which is an aekiya rajyaya/ Orumitha nadu, consisting of institutions of the Centre and of the Provinces....”

இதன் பொருள் ‘ இலங்கைக் குடியரசு என்பது மத்தியினதும் மாகாணத்தினதும் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு ஏக்கிய ராஜயாய/ ஒருமித்த நாடாகும்.

இங்கு ‘ நிறுவனம்’ என்பது சாதாரண நிறுவனமல்ல. அரசதுறைகளாகும். ஒற்றையாட்சி என்பதன் பொருள் ஒரு அரசாங்கம் என்பதாகும். அதாவது மத்தியில் இருப்பது மாத்திரம்தான் அரசாங்கம். எனவே, ஒற்றையாட்சி என்பது மத்திக்கு உரிய நிறுவனங்களை ( சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நீதித்துறை) மாத்திரம்தான் உள்ளடக்கும். மாகாணத்தில் இருப்பவை ‘ உப’ அந்தஸ்த்தில் இருப்பவை. அவை மத்திய நிறுவனங்களுடன் இணையாக , சமாந்தரமாக கொண்டுவரமுடியாது.

இங்கு இலங்கைக்குடியரசு மத்திய, மாகாண நிறுவனங்களை உள்ளடக்கியது; என்று கூறுவதன்மூலம் மத்திய அரசும் மாகாண அரசும் சமாந்தர நிலைக்கு கொண்டுவரப்படுகின்றது. இதுதான் ‘சமஷ்டி’யின் வெளிப்படையான அடையாளமாகும். ஆனால் சமஷ்டி என்ற சொல்லை வெளிப்படையாகப் பாவிக்காமல் ‘ ஏக்கிய ராஜ்ய’ என்ற ஒற்றையாட்சியைக் குறிக்கும் சொல்லைப் பாவித்து அதற்கு சமஷ்டிக்குரிய மத்தியும் மாகாணமும் ஒரே அந்தஸ்து என்ற தன்மை எவ்வளவு நாசூக்காக கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

சமஷ்டிக்குரிய சட்டவிளக்கம் தெரியாவிட்டாலும் ஆங்கில பிரதியில் ஏன் ஆங்கிலச் சொல்லான ‘ Unitary State’ என்று குறிப்பிடாமல் சிங்களச் சொல்லான ஏக்கிய ராஜ்ய குறிப்பிடப்பட்டிருக்கின்றது; என்று சாதாரண சிங்கள, முஸ்லிம் மக்கள் சிந்திக்கமாட்டார்களா?

அதேநேரம் தமிழர்களைத் திருப்திப்படுத்த ‘ ஒருமித்த நாடு’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒன்று என்றால் ‘ஒருமித்தல்’ என்ற ஒரு விடயம் எழாது. ஒன்றுக்குமேற்பட்டவை இருக்கும்போதுதான் அவைகள் ‘ஒருமித்த’ என்றொரு விடயத்தைக் குறிப்பிடலாம்.

இதன்பொருள், ‘ ஆண்ட சமூகம் ஆள நினைப்பது தவறா?’ என்ற அவர்களின் கோசத்தின்பின்னால் உள்ள ஒரு காலத்தில் ஈழம் தனி ராஜ்யமாக இருந்தது. எனவே, அவ்வாறு ஒன்றிற்கு மேற்பட்ட நாடுகளாக இருந்தவை இன்று ஒன்றுபட்டு ஒருமித்த நாடாக இருக்கின்றது’ என்ற அர்த்தத்தில் அந்தசொல் பாவிக்கப்பட்டிருக்கின்றது.

அவர்கள் கோருகின்ற சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்படுமானால் எதிர்காலத்தில் தனிநாடு பிரகடனப்படுத்தப்படுமானால் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதில் ‘இந்த ஒருமித்த நாடு’ என்பதை இலங்கை அரசு யாப்பிலேயே கொண்டுவர இணங்கியது ஒரு முக்கிய அம்சமாக மாறும்.

அதேநேரம் முஸ்லிம் தலைவர்களும் இந்த இடைக்கால அறிக்கைக்கு கையொப்பம் வைத்ததன்மூலம் தமிழர்களின் இந்த நிலைப்பாட்டை அங்கீகரித்தவர்களாக மாறியிருக்கின்றார்கள். இந்நிலையில் சர்வதேச உதவியுடன் தனிநாடு அமையுமானால் நாங்கள் ஒரு தனித்துவ சமூகமாக வேறாக உரிமை கோருவது சர்வதேச கவனத்தை ஈர்க்காது.


இன்ஷாஅல்லாஹ், ‘ சுயநிர்ணய உரிமை தொடர்பான ஒரு விரிவான கட்டுரை எழுதும்போது இந்தவிடயங்களை மீண்டும் நுணுக்கமாகப் பார்ப்போம்.

எது எவ்வாறு இருந்தபோதிலும் புதிய அரசியல் யாப்பு அமுலுக்கு வருமோ, இல்லையோ, ஆகக்குறைந்தது ஒரு முழுமையான சமஷ்டி அலகை இடைக்கால அறிக்கையில் அரசின் சம்மதத்துடன் பிரேரிக்க வைத்தது, இந்த அரசில் த தே கூ இன் சாதனைதான். ஆனால் அந்த இடைக்கால அறிக்கையில் முஸ்லிம்களைப் பாதுகாக்க எதுவுமில்லை; இழப்பதற்கு நிறையவே இருக்கின்றது? என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நம் சமுகத்தை நினைத்தால்தான் கவலை.
 
 
 
 

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, colomban said:

அதேநேரம் முஸ்லிம் தலைவர்களும் இந்த இடைக்கால அறிக்கைக்கு கையொப்பம் வைத்ததன்மூலம் தமிழர்களின் இந்த நிலைப்பாட்டை அங்கீகரித்தவர்களாக மாறியிருக்கின்றார்கள். இந்நிலையில் சர்வதேச உதவியுடன் தனிநாடு அமையுமானால் நாங்கள் ஒரு தனித்துவ சமூகமாக வேறாக உரிமை கோருவது சர்வதேச கவனத்தை ஈர்க்காது.

இன்ஷாஅல்லாஹ், ‘ சுயநிர்ணய உரிமை தொடர்பான ஒரு விரிவான கட்டுரை எழுதும்போது இந்தவிடயங்களை மீண்டும் நுணுக்கமாகப் பார்ப்போம்.

எது எவ்வாறு இருந்தபோதிலும் புதிய அரசியல் யாப்பு அமுலுக்கு வருமோ, இல்லையோ, ஆகக்குறைந்தது ஒரு முழுமையான சமஷ்டி அலகை இடைக்கால அறிக்கையில் அரசின் சம்மதத்துடன் பிரேரிக்க வைத்தது, இந்த அரசில் த தே கூ இன் சாதனைதான். ஆனால் அந்த இடைக்கால அறிக்கையில் முஸ்லிம்களைப் பாதுகாக்க எதுவுமில்லை; இழப்பதற்கு நிறையவே இருக்கின்றது? என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நம் சமுகத்தை நினைத்தால்தான் கவலை. 

அவையள் கொடுத்தாலும் இவையள் விடாது போல் கிடக்கே ..? 🤔 எந்த ஊருக்கு போனாலும் அவயளின்ர தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பெரும்பான்மை ஆகி போட்டு ஏதோ அங்கேயே உலகம் தோன்றியது போன்றும் இவர்களே மூத்த குடி போன்றும்  இவயல் கொடுக்கும் அலப்பறை இருக்கே ..!

1 hour ago, colomban said:

ஏக்கிய ராஜ்

ஆப்பை ஆப்பு என்றும் ஆப்ஸ் என்றும் அழைக்கலாம் ..😊

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் ஒருமித்த நாடெனும் பீலாவுக்கு லக்ஷ்மன் கிரியெல்ல ஆப்பு வைத்திருக்கிறார் இன்று.

ஏக்கிய ராஜ்ஜிய எனும் முழுச் சிங்களச் சொல்லிற்குப் பதிலாக, தமிழில் ஒருமித்த நாடு எனும் பதத்தைப் பாவிக்கும்படி தமிழ்க் கட்சிகள் கேட்டிருந்தன. ஆனால், ஏக்கிய ராஜ்ஜிய எனும் சிங்களச் சொல்லே மூன்று மொழிகளிலும் இருக்கும், வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாதென்று இன்று லக்ஷ்மன் கிரியெல்ல கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், சுமந்திரன் அவர்கள் ஏக்கிய ராஜ்ஜிய எனும் சொல்லின் அர்த்தம் ஒருமித்த நாடு என்று தமிழர்கள் மத்தியில் விளக்கம் கொடுத்து வருகிறாரே என்று நிருபர்கள் லக்ஷ்மனிடம் கேட்டபோது, ஏக்கிய ராஜ்ஜிய என்று நாம் குறிப்பிடுவது ஒருமித்த நாடெனும் பொருளில் அல்ல, ஒற்றையாட்சியையே என்று கறாராகக் கூறியிருக்கிறார்.

ஆக, ஒரு முழுச் சுற்றுச் சுற்றி மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பல பயங்கரவாத செயல்கள் மூலம் புலிகள்தான் 
கிந்திய - சிங்கள அரசுகள் தமிழர்களுக்கு தாம்பாள தட்டில் 
கொண்டுவரும் தீர்வுகளை கிடைக்க விடமால் செய்து வந்தார்கள். 

இப்போ ஏங்கிய ராஜ்ஜியத்தை தலதா மாளிகையில் பூஜை முடிய 
சுமந்திரனிடம் தாம்பாளத்தில் வைத்து கொடுத்து அனுப்புவார்கள் 
அதை திருவாளர் சுமந்திரன் அவர்கள் ஏக்கிய பாதையால் கொண்டுவருவார் 
நாங்கள் எல்லோரும் நோக்கியாவால் செல்ஃபீ எடுத்து பேஸ்புக்கில் போடலாம். 
 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ragunathan said:

சுமந்திரனின் ஒருமித்த நாடெனும் பீலாவுக்கு லக்ஷ்மன் கிரியெல்ல ஆப்பு வைத்திருக்கிறார் இன்று.

ஏக்கிய ராஜ்ஜிய எனும் முழுச் சிங்களச் சொல்லிற்குப் பதிலாக, தமிழில் ஒருமித்த நாடு எனும் பதத்தைப் பாவிக்கும்படி தமிழ்க் கட்சிகள் கேட்டிருந்தன. ஆனால், ஏக்கிய ராஜ்ஜிய எனும் சிங்களச் சொல்லே மூன்று மொழிகளிலும் இருக்கும், வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாதென்று இன்று லக்ஷ்மன் கிரியெல்ல கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், சுமந்திரன் அவர்கள் ஏக்கிய ராஜ்ஜிய எனும் சொல்லின் அர்த்தம் ஒருமித்த நாடு என்று தமிழர்கள் மத்தியில் விளக்கம் கொடுத்து வருகிறாரே என்று நிருபர்கள் லக்ஷ்மனிடம் கேட்டபோது, ஏக்கிய ராஜ்ஜிய என்று நாம் குறிப்பிடுவது ஒருமித்த நாடெனும் பொருளில் அல்ல, ஒற்றையாட்சியையே என்று கறாராகக் கூறியிருக்கிறார்.

ஆக, ஒரு முழுச் சுற்றுச் சுற்றி மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறோம்.

இங்கே முக்கியமானது பெயர் அல்ல,  பின்வரும் சட்ட விளக்கமே முக்கியமானது:

"இங்கு இலங்கைக்குடியரசு மத்திய, மாகாண நிறுவனங்களை உள்ளடக்கியது; என்று கூறுவதன்மூலம் மத்திய அரசும் மாகாண அரசும் சமாந்தர நிலைக்கு கொண்டுவரப்படுகின்றது. இதுதான் ‘சமஷ்டி’யின் வெளிப்படையான அடையாளமாகும். ஆனால் சமஷ்டி என்ற சொல்லை வெளிப்படையாகப் பாவிக்காமல் ‘ ஏக்கிய ராஜ்ய’ என்ற ஒற்றையாட்சியைக் குறிக்கும் சொல்லைப் பாவித்து அதற்கு சமஷ்டிக்குரிய மத்தியும் மாகாணமும் ஒரே அந்தஸ்து என்ற தன்மை எவ்வளவு நாசூக்காக கொண்டுவரப்பட்டிருக்கின்றது." - எழுதியவர் சமஷ்டிக்கு எதிரான முஸ்லிம் ஹமிட்.

ரணில் விக்ரேமசிங்கவும் அவருக்கு பின்னால் இருக்கும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கொண்டுவரும் இந்த சமஷ்டியை  லக்ஷ்மன் கிரியெல்ல தடுக்க பலமற்றவர். சுமேந்திரன் இதில் சம்பந்தனுடன் இணைந்து தமிழர் பகுதியை பிரதிநிதித்துவ படுத்துகிறார்கள். இதில் மிக முக்கியமானது, இந்த சமஷ்டி தமிழரின் நன்மை கருதி கொண்டு வரப்படவில்லை. அமெரிக்க இந்திய நலன்கள் கருதியே கொண்டு வரப்படுகிறது.

  1. சீனாவின் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த தமிழ் மாகாண அரசு தேவை.
  2. சீனா மீண்டும் உள்நாட்டு போரை ஆரம்பிக்காமல் இருக்க சமாதனம் தேவை.
  3. சீனாவின் கடனில் மூழ்கி நாட்டை விற்காமல் இருக்க அபிவிருத்தி தேவை.
  4. அமேரிக்கா காலூன்ற மாகாண ஆட்சியில் அமரிக்க முதலீடு தேவை.

இவை அமெரிக்க தேவைகள். தமிழரது அல்ல.

 

14 minutes ago, Maruthankerny said:

பல பயங்கரவாத செயல்கள் மூலம் புலிகள்தான் 
கிந்திய - சிங்கள அரசுகள் தமிழர்களுக்கு தாம்பாள தட்டில் 
கொண்டுவரும் தீர்வுகளை கிடைக்க விடமால் செய்து வந்தார்கள். 

இப்போ ஏங்கிய ராஜ்ஜியத்தை தலதா மாளிகையில் பூஜை முடிய 
சுமந்திரனிடம் தாம்பாளத்தில் வைத்து கொடுத்து அனுப்புவார்கள் 
அதை திருவாளர் சுமந்திரன் அவர்கள் ஏக்கிய பாதையால் கொண்டுவருவார் 
நாங்கள் எல்லோரும் நோக்கியாவால் செல்ஃபீ எடுத்து பேஸ்புக்கில் போடலாம். 
 

முள்ளிவாய்க்காலில் எடுக்காத செல்பியா? இங்கேயும் எடுங்களேன், குறைந்தா போய் விடுவீர்கள்.

இங்கே உயிர்ப்பலி இல்லை. தாராளமாக செல்பி எடுங்கள்.

வைக்கோல் பட்டடை நாய் போல நீங்களும் செய்ய மாட்டீர்கள், செய்பவரையும் விட மாட்டீர்கள். வெறும் குறை சொல்வது தானா உங்களால் செய்ய முடிந்தது?  உங்களை போன்றவர்களை தான் சோற்றுக்கு கேடு, பூமிக்கு பாரம் என்று அன்று தமிழிலே சொல்லி வைத்தார்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Jude said:

இங்கே முக்கியமானது பெயர் அல்ல,  பின்வரும் சட்ட விளக்கமே முக்கியமானது:

"இங்கு இலங்கைக்குடியரசு மத்திய, மாகாண நிறுவனங்களை உள்ளடக்கியது; என்று கூறுவதன்மூலம் மத்திய அரசும் மாகாண அரசும் சமாந்தர நிலைக்கு கொண்டுவரப்படுகின்றது. இதுதான் ‘சமஷ்டி’யின் வெளிப்படையான அடையாளமாகும். ஆனால் சமஷ்டி என்ற சொல்லை வெளிப்படையாகப் பாவிக்காமல் ‘ ஏக்கிய ராஜ்ய’ என்ற ஒற்றையாட்சியைக் குறிக்கும் சொல்லைப் பாவித்து அதற்கு சமஷ்டிக்குரிய மத்தியும் மாகாணமும் ஒரே அந்தஸ்து என்ற தன்மை எவ்வளவு நாசூக்காக கொண்டுவரப்பட்டிருக்கின்றது."

ரணில் விக்ரேமசிங்கவும் அவருக்கு பின்னால் இருக்கும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கொண்டுவரும் இந்த சமஷ்டியை  லக்ஷ்மன் கிரியெல்ல தடுக்க பலமற்றவர். சுமேந்திரன் இதில் சம்பந்தனுடன் இணைந்து தமிழர் பகுதியை பிரதிநிதித்துவ படுத்துகிறார்கள்.

 

முள்ளிவாய்க்காலில் எடுக்காத செல்பியா? இங்கேயும் எடுங்களேன், குறைந்தா போய் விடுவீர்கள்.

இங்கே உயிர்ப்பலி இல்லை. தாராளமாக செல்பி எடுங்கள்.

வைக்கோல் பட்டடை நாய் போல நீங்களும் செய்ய மாட்டீர்கள், செய்பவரையும் விட மாட்டீர்கள். வெறும் குறை சொல்வது தானா உங்களால் செய்ய முடிந்தது?  உங்களை போன்றவர்களை தான் சோற்றுக்கு கேடு, பூமிக்கு பாரம் என்று அன்று தமிழிலே சொல்லி வைத்தார்கள்.

 

ஓ திருவாளர் சுமந்திரனின் முக்கிய ராஜ்ஜியங்களுக்கு 
நான் யாழில் எழுதும் கருத்த்துக்கள்தான் பெரும் தடையாக இருந்து இருக்கிறதா?
அதுதானே ........ என்னடா 9 வருஷமா முக்கிறாரே என்று அடிக்கடி யோசிப்பேன் 

என்ன அண்ணே நீங்க வேற இவளவு நாளும் பார்த்துட்டு இருந்தீர்களே 
ஒரு வார்த்தை சொல்லியிருக்க கூடாதா?
உடனேயே பேதி ஆகியிருப்பேனே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

ஓ திருவாளர் சுமந்திரனின் முக்கிய ராஜ்ஜியங்களுக்கு 
நான் யாழில் எழுதும் கருத்த்துக்கள்தான் பெரும் தடையாக இருந்து இருக்கிறதா?

அப்படியும் ஒரு கனவா? நீங்கள் வெறும் வைக்கோல் பட்டடை ..., அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த முள்ளிவாய்க்காலில் .... 
அப்போ நோக்கியா ஸ்மார்ட் போன் இருக்கவில்லை 
இப்போ புது கமெரா டெக்னாலிஜியோட வந்திருக்கு 
அப்படியே எடுத்து ஏத்தினா ...... அந்த மாதிரி இருக்கும். 

Just now, Jude said:

அப்படியும் ஒரு கனவா? நீங்கள் வெறும் வைக்கோல் பட்டடை ..., அவ்வளவுதான்.

அண்ணே ஏதும் மருந்து சாப்பிடறனீங்களோ?
இப்போ காலை வேற ஆகிவிட்ட்து 

மாத்தி மாத்தி பேசுறீங்கோ ....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

இங்கே முக்கியமானது பெயர் அல்ல,  பின்வரும் சட்ட விளக்கமே முக்கியமானது:

"இங்கு இலங்கைக்குடியரசு மத்திய, மாகாண நிறுவனங்களை உள்ளடக்கியது; என்று கூறுவதன்மூலம் மத்திய அரசும் மாகாண அரசும் சமாந்தர நிலைக்கு கொண்டுவரப்படுகின்றது. இதுதான் ‘சமஷ்டி’யின் வெளிப்படையான அடையாளமாகும். ஆனால் சமஷ்டி என்ற சொல்லை வெளிப்படையாகப் பாவிக்காமல் ‘ ஏக்கிய ராஜ்ய’ என்ற ஒற்றையாட்சியைக் குறிக்கும் சொல்லைப் பாவித்து அதற்கு சமஷ்டிக்குரிய மத்தியும் மாகாணமும் ஒரே அந்தஸ்து என்ற தன்மை எவ்வளவு நாசூக்காக கொண்டுவரப்பட்டிருக்கின்றது." - எழுதியவர் சமஷ்டிக்கு எதிரான முஸ்லிம் ஹமிட்.

ரணில் விக்ரேமசிங்கவும் அவருக்கு பின்னால் இருக்கும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கொண்டுவரும் இந்த சமஷ்டியை  லக்ஷ்மன் கிரியெல்ல தடுக்க பலமற்றவர். சுமேந்திரன் இதில் சம்பந்தனுடன் இணைந்து தமிழர் பகுதியை பிரதிநிதித்துவ படுத்துகிறார்கள். இதில் மிக முக்கியமானது, இந்த சமஷ்டி தமிழரின் நன்மை கருதி கொண்டு வரப்படவில்லை. அமெரிக்க இந்திய நலன்கள் கருதியே கொண்டு வரப்படுகிறது.

  1. சீனாவின் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த தமிழ் மாகாண அரசு தேவை.
  2. சீனா மீண்டும் உள்நாட்டு போரை ஆரம்பிக்காமல் இருக்க சமாதனம் தேவை.
  3. சீனாவின் கடனில் மூழ்கி நாட்டை விற்காமல் இருக்க அபிவிருத்தி தேவை.
  4. அமேரிக்கா காலூன்ற மாகாண ஆட்சியில் அமரிக்க முதலீடு தேவை.

இவை அமெரிக்க தேவைகள். தமிழரது அல்ல.

 

முள்ளிவாய்க்காலில் எடுக்காத செல்பியா? இங்கேயும் எடுங்களேன், குறைந்தா போய் விடுவீர்கள்.

இங்கே உயிர்ப்பலி இல்லை. தாராளமாக செல்பி எடுங்கள்.

வைக்கோல் பட்டடை நாய் போல நீங்களும் செய்ய மாட்டீர்கள், செய்பவரையும் விட மாட்டீர்கள். வெறும் குறை சொல்வது தானா உங்களால் செய்ய முடிந்தது?  உங்களை போன்றவர்களை தான் சோற்றுக்கு கேடு, பூமிக்கு பாரம் என்று அன்று தமிழிலே சொல்லி வைத்தார்கள்.

இந்த முதலாவது வரைபு தொடர்பான தகவல்களை இங்கு இணைத்தால் என்ன? புரிந்துகொள்ள பயனுள்ளதாக அமையும். அதில் எமக்கு ஏதும் இருக்கிறதோ இல்லையோ, அறிந்துகொள்வது நல்லதுதானே?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ragunathan said:

இந்த முதலாவது வரைபு தொடர்பான தகவல்களை இங்கு இணைத்தால் என்ன? புரிந்துகொள்ள பயனுள்ளதாக அமையும். அதில் எமக்கு ஏதும் இருக்கிறதோ இல்லையோ, அறிந்துகொள்வது நல்லதுதானே?

அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்

  • இம்முறை கலந்துரையாடல்கள் மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பளிக்கப்பட்டமை வரலாற்றில் முதன்முறையாக இருந்தது. 1972 ஆம் ஆண்டில் புதிய குடியரசு அரசியலமைப்பை உருவாக்கியபோது பொதுமக்கள் பரிந்துரைகள் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள், ஆனால் அந்த செயல்முறை ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பொது பிரதிநிதிக் குழு (PRC) நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று 2500 க்கும் மேற்பட்ட தனிநபர்களையும் அமைப்புகளையும் சந்தித்தது. புதிய அரசியலமைப்பிற்கு PRCயிற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள் எண்ணிக்கை 4000 ஐ தாண்டியது.
  • இந்த செயன்முறையில், முதன்முறையாக, சிறுபான்மைக் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றையாட்சி நாட்டிற்குள்ளான அதிகாரப் பகிர்வுக்கு கொள்கை அடிப்படையில் உடன்பட்டன. வழிப்படுத்தும் குழு அறிக்கையில் அவர்கள் ஒற்றையாட்சி அரசு என்ற சொற்பதத்திற்கு பதிலாக சிங்கள பதமான “ஏகியராஜ்யய” என்பதன் மூலம் பிரிக்க முடியாத நாட்டை சிறப்பாக விவரிக்கும் வகையில் முன்மொழியப்பட்டது. இதற்கு சமமான தமிழ்ப் பதம் “ஓருமித்த நாடு” ஆகும்.
  • அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறையின் குறிப்பிடத்தக்க அம்சம், பௌத்தம் “முன்னணி” மதமாக மற்ற மதங்களைவிட மேலாக அங்கீகரிக்கபட சம்மதிக்கப்பட்டது.
  • நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி, நீக்கம் செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்படுவதுடன் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஒரு காலவரைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும், இது இரண்டு தடவைகளுக்கு மட்டுப்படுத்தப்படுவதுடன் ஒரு காலவரை 5 வருட காலத்திற்கு மேற்பட்டதாக அமையாது.
  • பிரதமர் பதவிக்கு மூன்று விருப்பத்தேர்வுகள் வழங்கப்பட்டன. பிரதமர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அல்லது பிரதமர் பரிந்துரை செய்யப்பட வேண்டும் அல்லது பிரதமர் அரசாங்கத்தின் தலைவராக இருப்பதுடன் மாநிலத் தலைவரினால் நியமிக்கப்படுகிற வெஸ்ட்மின்ஸ்டெர் செயன்முறையை பின்பற்ற வேண்டும். எனவே, ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு முன்னதாக தங்கள் பிரதமர்  வேட்பாளர்களை அறிமுகப்படுத்தக்கூடும்.
  • இந்த அறிக்கை பரவலாக சம்பந்தப்பட்ட மூன்று அடுக்கு முறைமையை அதிகாரப் பரவலாக்கத்திற்காக குறிக்கிறது. மாகாண சபைகளை மிகக் குறைந்த மட்டத்திலும், அதிகாரப் பரவலாக்கலின் பிரதான பிரிவாகவும் வைத்திருத்தல், உள்ளூர் அரசாங்க நிறுவனங்கள் துணை நிறுவனங்களின் கொள்கையால் நிர்வகிக்கப்படும், அங்கு ஒரு மத்திய நிறுவனத்தில் துணை நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற யோசனை, திறம்பட செயல்பட முடியாது. இது உள்ளூர் நிர்வாகங்களை சுய ஆட்சிக்கு உட்படுத்துகிறது மற்றும் அவர்களின் விருப்பப்படி தங்கள் கடமைகளை நிறைவேற்ற உதவுகிறது. இருப்பினும் மத்திய மற்றும் மாகாண சபைகள் இன்னும் உள்ளூர் அதிகாரசபையின் அதிகாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தலாம். அரசாங்க அமைப்புகளின் பல்வேறு மட்டங்களில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக சமுதாய சபைகளை உருவாக்குவதற்கான ஒரு ஏற்பாடு உள்ளது.
  • மாநில மற்றும் மாகாணங்களுக்கு இடையில் அதிகாரங்களை பிரித்தல் தெளிவாகவும் குறிப்பிட்டதாகவும் இருக்க வேண்டும். இதன் விளைவாக, ‘ஒரே நேரப் பட்டியல்’ என்பது நீக்கப்பட்டு ‘ஒதுக்கப்பட்ட பட்டியல்’ மற்றும் ‘மாகாண பட்டியல்’ மட்டுமே அரசியலமைப்பில் ஒரே மாதிரியானவையாக காணப்படும்.
  • தேசிய கொள்கைகள் மற்றும் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை உள்ளடக்கிய கட்டமைப்புச் சட்டம் ஆகியவற்றிற்கு அரசு பொறுப்பாகும்.
  • அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே ஒரு மாகாண சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு அதிகாரம் உள்ளது.
  • தேர்தல் சீர்திருத்தங்கள் மைல்கற்கள் ஆகும். பாராளுமன்றத்தில் முதலாவது அரங்கு மற்றும் இரண்டாவது அரங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, கலப்பு உறுப்பினர் விகிதாசார அமைப்பிலான தேர்தலின் மூலம் முதலாவது அரங்கிற்கு தேர்வு செய்யப்படும் பரிந்துரையுடனான கலப்பு தேர்தல் முறையை மீண்டும் கொண்டு வருகின்றது.
  • உள்ளூர் அரசாங்க தேர்தலில் பெண்களுக்கு 25% கட்டாய ஒதுக்கீடு என்பது பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பாலின சமநிலையை உறுதி செய்வதற்கான சீர்திருத்தங்கள் மூலம் அடையப்படும் ஒரு மைல்கல்லாகும்.
  • தேர்தலின் பிறகு பாராளுமன்றத்தின் கால வரையறை நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்படும். இருப்பினும், இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் நம்பிக்கையில்லா பிரேரணை மேற்கொள்ளப்படலாம்.
  • அரசியலமைப்பு பேரவை தொடர்பான 19 வது திருத்தத்தின் ஏற்பாடுகளும் ஒரேமாதிரியாக காணப்படும்.

 

செயற்படுத்துவதில் எதிர்கொள்ளும் சவால்கள்

  • அரசியல் அமைப்பில் புதிய மாற்றங்கள் உள்ளடங்கிய நிலையற்ற சூழ்நிலையில் இந்த அரசியலமைப்பு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது மிகவும் சவாலானதாக அமையும்.
  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சிறிசேன பிரிவினர் இலங்கையின் ஜனாதிபதி முறையை சிறு மாற்றங்களுடன் தக்க வைத்துக் கொள்ள விரும்புகின்ற அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஒரு வெஸ்னட்மினிஸ்டர் பாணியிலான நாடாளுமன்ற அரசியலை விரும்புகிறது.
  • ஐ.தே.க. தற்போதுள்ளதற்கு வேறுபட்ட முற்றிலும் புதியதொரு அரசியலமைப்பிற்காக தயார்படுத்துகின்றது. எனினும் ஸ்ரீ.சு.க. (சிறிசேன மற்றும் மஹிந்த பிரிவினர்) ஏற்கனவே உள்ள அரசியலமைப்பிற்கு சில திருத்தங்களை மட்டுமே விரும்புகின்றனர். ஐ.தே.க. மக்கள் வாக்கெடுப்பு தேவைப்படும் என உணர்கின்ற அதே வேளையில், ஸ்ரீ.சு.க. மாற்றங்கள் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட தேவை ஏற்படும் அளவிற்கு மிகவும் அடிப்படையானதாக இருக்கக்கூடாது என்று உணர்கிறது.
  • நீண்ட மற்றும் பல விவாதங்களின் போது, இந்த அரசியலமைப்பின் மிக முக்கியமான மற்றும் அடிப்படை கூறுபாட்டின் மீது ஒரு அர்த்தமுள்ள நிலைப்பாட்டிற்கு வருவதற்கு வழிப்படுத்தும் குழுவினால் முடியவில்லை: அதிகாரப் பகிர்வு. வழிப்படுத்தும் குழுவின் கருத்தாய்வு சமயத்தில் அதிகாரப் பகிர்வு என்பது சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்தது.
  • சிவில் சமூகங்கள் மற்றும் அவர்களது தெடர்புவலைப்பின்னல்கள் ESCR -இன் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் கொண்டுவர கடினமாக உழைத்தாலும், அது நன்றாக வேலை செய்யவில்லை. எனவே சாதாரண குடிமக்களின் பிரச்சினைகள், அடிப்படைகள் மற்றும் தேவைகள் ஆகியவை பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை மற்றும் திசைமாற்றி வழிப்படுத்தும் குழு அறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
  • இந்த சீர்திருத்தங்கள் மற்றும் சீர்திருத்த நிகழ்வுகள் பற்றிய பொது தகவல்களின் தொடர்பாடல் மற்றும் கலந்துரையாடல் பற்றாக்குறை உள்ளது. மாறாக, நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், நாட்டை பிளவுபடுத்தும் ஒரு கருவியாகவும், அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்வது மிகவும் வலுவாக காணப்படுகின்றது. இந்த பொய்யானது சிங்கள மொழி பேசும் சமூகங்களிடையே பயமும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏற்கனவே நிறுவப்பட்ட பயத்திற்கு எதிராக வேலை செய்வது மிகவும் சவாலானது ஆனால் ஒரு முழுமையான தேவையாகும். இந்த சூழ்நிலையினை தெளிவாக்குவதற்கு, சரியான கருத்தை வெளிப்படுத்தி மக்களின் முழுமையான ஒத்துழைப்பை அடைய வேண்டும்.
  • அரசியலமைப்பு சீர்திருத்தக் கொள்கைகள், பல சாதாரண குடிமக்களால் வரையறுக்கப்பட்ட நடைமுறை பயன்பாட்டிற்கு எதுவித சம்பந்தமுமற்ற கோட்பாடுகள் மட்டுமே, அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இணையாத உயர்ந்த ஆவணங்களாக கருதுகின்றனர். கொள்கைகள், கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் ஒரு சாதாரண குடிமகனின் நாளாந்த வாழ்க்கை ஆகியவற்றுக்கு இடையே தெளிவான தொடர்பை உருவாக்குவது அவசியம். இந்த இணைப்பை நிறுவுவதில் தோல்வியே சமீபத்தில் முடிந்த உள்ளூராட்சி தேர்தல்களில் பிரதிபலித்தது.
  • இந்த அரசியலமைப்பு சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கு போதிய ஆதார ஒதுக்கீடு இல்லை.

 

பகுப்பாய்வு

  • டிசம்பர் 2017 ன் ஆரம்பத்தில் இருந்து உள்ளூர் அரசாங்கத் தேர்தல்களுக்கான தயாரிப்புகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து முழு அரசியலமைப்பு சீர்திருத்த நடைமுறையும் நிறுத்தப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டது. அரசியலமைப்பு பேரவை கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி சந்தித்தது, ஆனால் தேவையான குறைந்தபட்ச பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையினை அடைய முடியவில்லை. அதற்குப் பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. ஒவ்வொரு வாரமும் தலைவரின் இருப்பிற்கமைய சந்தித்து வந்த வெளிப்படுத்தும் குழு 2017 நவம்பர் 7 முதல் சந்திக்கவில்லை.
  • இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஆதரவு குழுக்கள் அரசியலமைப்பு சீர்திருத்தம் நாட்டை பிளவுபடுத்தும் ஒரு கருவியாகும் என்ற கருத்தை வெளிப்படுத்தின. இது CSO க்களினால் போதியளவு எதிர்கொள்ளப்படவில்லை மற்றும் பிற சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு போதுமான ஆதாரங்கள் காணப்படவில்லை. உள்ளூர் அரசாங்கத் தேர்தல்களை வென்ற SLPP உறுப்பினர்கள், அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் ஒரு வலுவான பாதகமான புராணத்தை நிறுவியுள்ளனர் மற்றும் அவர்களின் தேர்தல் வெற்றி அரசியலமைப்பு சீர்திருத்தங்களை ஆதரித்தவர்களுக்கு எதிரான, மேலாக மக்களின் பிரதிபலிப்பாகும். இந்த கருத்துக்கள் அரசு அல்லது அரசியலமைப்பு சீர்திருத்தவாதிகளினால் போதுமானதாக எதிர்கொள்ளப்படவில்லை.
  • இந்த காரணங்களினால், அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் அதன் வேகத்தை இழந்துவிட்டது மற்றும் அதன் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது.
  • அரசியலமைப்பு சீர்திருத்த செயற்பாடுகள் முன்னெடுத்தாலும் கூட, புத்தமதத்திற்கு கொடுக்கப்பட்ட ‘முதன்மையான இடம்’ மாற்றமடையாது என்றே கருதப்படுகிறது, ஆனால் மற்ற மதங்களை பலப்படுத்துவதற்கு மரியாதையுடனும் பாதுகாப்பிற்கும் உட்படுத்துவதற்கு உகந்த சட்ட விதிக்கூறுகள் உள்ளடக்கப்படும்.

https://policytracker.lk/ta/அரசியலமைப்புச்-சீர்திரு/

 

23 hours ago, colomban said:

பிரதமர் தமிழில் ‘ ஒற்றையாட்சி ‘ என்றா மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்திருப்பார்? சிங்களத்தில் “ ஏக்கிய ராஜ்ய” என்றுதான் கூறியிருப்பார். ஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சியில்லை; என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

தமிழ் மக்களை எப்படியாவது ஏமாற்றியே தீருவன் என்டு சுமந்திரன் ஒற்றைக் காலில் நிக்கிறார்!

On 12/31/2018 at 3:23 PM, ragunathan said:

சுமந்திரனின் ஒருமித்த நாடெனும் பீலாவுக்கு லக்ஷ்மன் கிரியெல்ல ஆப்பு வைத்திருக்கிறார் இன்று. 

காலங்காலமாக சுமந்திரனின் தொழில் பீலா விடுவது தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.