Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியா, புதூரில் தப்பி ஓடிய ஆயுதாரியை தேடி சுற்றி வளைப்பு…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா, புதூரில் தப்பி ஓடிய ஆயுதாரியை தேடி சுற்றி வளைப்பு…

January 2, 2019

army.jpg?resize=800%2C450

வவுனியா, புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை சோதனையிட முற்பட்ட போது, அவர் தப்பியோடியமையால் குறித்த பகுதியினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சந்தேகநபர் விட்டுச்சென்ற பையிலிருந்து கைத்துப்பாக்கி, நான்கு கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிக்கான ரவைகள் உட்பட மேலும் சில பொருட்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவரின் நடமாட்டம் காணப்படுவதாக புளியங்குளம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் பதுங்கியிருந்த காவல்துறையினர் நேற்று இரவு அவ்விடத்திற்கு வந்த குறித்த சந்தேகநபரை, மறித்து சோதனையிட முற்பட்டபோது, தான் கொண்டு வந்த பையை அவ்விடத்தில் எறிந்துவிட்டு காட்டுக்குள் தப்பிச் சென்றுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு சந்தேகநபரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DSC00994.JPG?zoom=3&resize=335%2C189

DSC00989.JPG?zoom=3&resize=335%2C189

DSC00975.JPG?zoom=3&resize=335%2C189

 

http://globaltamilnews.net/2019/108673/

 

  • கருத்துக்கள உறவுகள்

கணக்க மினக்கெட வேண்டாம். உங்கண்ட ஆள்தான், ஆமி காம்பிலிருந்து களவுக்கு கெளம்பி இருப்பார். இப்ப யூனிபோமோட தேடுற கூட்டத்தில நிக்கும் ஆள். 😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியால் பொலிஸார்,இராணுவம் அதிர்ச்சியில்:விடுதலைபுலிகளா என சந்தேகம்

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று இரவு சென்ற பொலிசாரை கண்ட சந்தேக நபர் தனது கையிலிருந்து பொதியை தூக்கி எறிந்துவிட்டு ஓடித்தப்பியுள்ளார்.இதையடுத்து பொதியை பார்வையிட்ட பொலிசாருக்கு பேரதிச்சியளித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

SAT_1053.JPG

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்று இரவு 7.30மணியளவில் புதூர் நாகதம்பிரான் ஆலய வீதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இடம்பெறுவதாக புளியங்குளம் பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. 

1546416170904_4.jpg

இதையடுத்து பொலிசார் அப்பகுதிக்கு சிவில் உடையில் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதையடுத்து அவ்வீதியில் சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த மர்மப் பொதியை தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார்.

பொலிசார் அவரைத்துரத்திச் சென்றபோதும் அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் குறித்த பொதியை பொலிசார் பார்வையிட்டபோது அதனுள் கைத்துப்பாக்கி அதற்குரிய ரவைகள், கைக்குண்டுகள் நான்கு, ஸ்மாட் கைத்தொலைபேசிகள் 2 அதற்குரிய மின்கலத்துடனான மின் வழங்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SAT_1032.JPG

இதையடுத்து பொலிசார் புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ்மா அதிபருக்கு தகவல் வழங்கியதுடன் இராணுவத்தினர், விஷேட அதிரடிப்படையினர் , மோப்ப நாய்களுடன் வரவழைக்கப்பட்டு இரவு எட்டு மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்றதுடன் அப்பகுதி பொலிசாரின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் தேடுதல் நடவடிக்கையும் முடக்கிவிடப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபர் ஒருவரைத் தேடி வலைவிரித்துள்ளனர். 

எனினும் இன்று மதியம் 12மணியரையும் பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் நடவடிக்கை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபர் எவரும் இன்று மாலை வரையில் கைது செய்யப்படவில்லை. 

ஸ்மாட் கைத்தொலைபேசியின் விபரத்தினை வைத்துக்கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது தொலைபேசி சிம் அட்டைக்குரிய நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாகவும் எனினும் குறித்த சந்தேக நபர் 35வயது தொடக்கம் 40வயதிற்குட்பட்டவர் என்றும் அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன் குறித்த நபர் கைத்துப்பாக்கியை இயக்கி தாக்குதல் மேற்கொள்வதற்கு தயார் நிலையில் காணப்பட்டுள்ளதாகவும் பொலிசாரை அல்லது இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் குறித்த நபர் வந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

இந்நடவடிக்கைக்கு வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையில் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.எம்.தென்னக்கோன், புளியங்குளம் பிரிவு உதவி பொலிஸ் அதிகாரி பொன்சேகா ஆகியோரின் கண்காணிப்பில் புளியங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கீழ் பொலிஸ் உத்தியோகத்தர்களான பண்டார, ரத்நாயக்க, ஜெயலத், ரமேஷ், அத்தநாயக்க, ஹேரத்,  சேனாரத்ன ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுபுன் விதானகே தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/47395

மார்ச் மாதம் வருகுது.
ஜெனீவா தொடங்கப் போகுது.
இனி அங்கங்க ஆயுதங்கள் கண்டெடுக்கப்படும் என்டு எங்களுக்கு வடிவா தெரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் : சந்தேகத்தில் ஒருவர் கைது

வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்ரல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் சந்தேகத்தில் நபரொருவரை  புளியங்குளம் பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்புகாவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

arest.jpg

கடந்த 2 ஆம் திகதி புளியங்குளம், புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் காணப்படுவதாக புளியங்குளம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு சிவில் உடையில் நான்கு பொலிஸார் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது அவ்வீதியில் சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த மர்மப் பொதியை தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார். தாம் அவரைத் துரத்திச் சென்றபோதும் அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அன்று இரவிலிருந்து அடுத்த நாள் மதியம் வரை இராணுவம் பொலிஸார் இணைந்து அப்பகுதியில் சுற்றி வளைப்பை மேற்கொண்டு தேடுதல் நடத்திய போதும் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் குறித்த பொதியை பொலிஸார் பார்வையிட்டபோது அதனுள் கைத்துப்பாக்கி அதற்குரிய ரவைகள், கைக்குண்டுகள் நான்கு, ஸ்மாட் கைத்தொலைபேசிகள் 2 அதற்குரிய மின்கலத்துடனான மின் வழங்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வவுனியா சாளம்பைக்குளத்தினை சேர்ந்த நெய்முத்துராசா சுதாகரன் (குணா) என்பவரை கடந்த வெள்ளிக்கிழமை (04.01) சந்தேகத்தின் பெயரில்  கைது செய்து நேற்றையதினம் (05.01) வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்திய சமயத்தில் நாளை திங்கட்கிழமை (07.01) வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/47610

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா ஆள் பிடிபடவில்லை ? நம்ப முடியலை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/3/2019 at 12:30 PM, Rajesh said:

மார்ச் மாதம் வருகுது.
ஜெனீவா தொடங்கப் போகுது.
இனி அங்கங்க ஆயுதங்கள் கண்டெடுக்கப்படும் என்டு எங்களுக்கு வடிவா தெரியும்.

பண்டி சுடுற கட்டுத்துவக்கையும் இனி பிளைட்டை சுட்டு விழுத்துற அளவுக்கு பிரமாண்டப்படுத்துவினம்....   சும்மா கிடந்த கருங்காலி கொட்டனையும் பயங்கரவாத ஆயுதம் ஆக்கினமாதிரி....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.