Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ வாகனம் மோதி கிளிநொச்சியில் மூவர் உயிரிழப்பு

Featured Replies

road-accident-1527968091397-720x450.jpg

கிளிநொச்சி பளை இயக்கச்சிப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பேரின் சடலங்கள் பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மற்றுமொரு சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு உயிரிழந்தவர்கள் பளை புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

http://athavannews.com/பளை-இயக்கச்சிப்-பகுதியில/

  • கருத்துக்கள உறவுகள்

 

கிளிநொச்சி பளை இயக்கச்சி வீதி விபத்தில், ஸ்தலத்திலேயே மூவர் பலி….

 

கிளிநொச்சி பளை இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஸ்தலத்திலேயே மூவர் பலியாகி உள்ளனர். பளை இயக்கச்சி பகுதியில் இன்று 08-01-2019 மாலை இராணுவத்தின் கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியத்தில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

பளையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் கட்டைக்காடு இராணுவ முகாமிலிருந்து இயக்கச்சி 552 படைப்பிரிவு முகாமுக்கு டீசல் அடிப்பதற்காக பயணித்த இராணுவத்தின் ட்ரக் வண்டியுடன் நேருக்கு நேர் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பளையைச் சேர்ந்த 36 வயதுடைய பி.ஜெயக்குமார், பளை மாசார் பகுதியைச் சேர்ந்த, 32 வயதுடைய கே. குகதாஸ், சுழிபுரம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய எஸ். ரதீஸ்வரன் ஆகிய மூவரும் பலியாகியுள்ளனனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பளை காவற்துறையினரும் கிளிநொச்சி தடயவியல் காவற்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

Palai-acce1.jpg?zoom=1.1024999499320984&Palai-acce2.jpg?zoom=1.1024999499320984&Palai-acce3.jpg?zoom=1.1024999499320984&

http://globaltamilnews.net/2019/109366/

மேலோட்டமாக பார்க்கும் போது முச்சக்கர வண்டி சாரதியின் பொறுப்பற்ற செலுத்துதலால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தமிழர் பகுதியில் அதிவேக ஓட்டத்தால் ஏற்படும் உந்துருளி விபத்துக்கள், நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களில் மோதி விபத்துக்கள், தெருவில் உள்ள கால்நடைகளை இடித்து தள்ளும் விபத்துக்கள், தொடரூந்து கடவைகளில் பொறுப்பற்று கடந்து ஏற்படும் விபத்துக்கள், ....  இது போன்ற அநியாய மரணங்கள் அடிக்கடி/தினமும் நிகழ்வதற்கு தமிழ் மக்களின் பொறுப்பற்ற தன்மை / போக்கிரித்தனம் தான் காரணம். 

ஒருதடவை ஒரு இளைஞருடன் உந்துருளியில் செல்லும் சந்தர்ப்பத்தில் அவர் 135 kmph கதியில் வண்டியை செலுத்தினார். தம்பி, இப்படி அவசரம் கூடாது என்று சொன்னது அவருக்கு கசப்பாவே இருந்தது. தான் ஏற்கனவே 2 விபத்துக்களை சந்தித்து விட்டதாகவும் தழும்புகளை பெருமையுடன் காட்டினார். என்ன சொல்வது?   

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தவறு எவருடையது என்பது எனக்கு உறுதியாகத் தெரியாது விட்டாலும் கூட, சில கேள்விகள் எழுகின்றன.

முதலாவது, தமிழர் பகுதிகளில், குறிப்பாக வட மாகாணத்தில் மட்டும் இவ்வாறான ராணுவ வாகனங்களுடனான விபத்துக்களில் மக்கள் மரிப்பது ஏன்?

இரண்டாவது, முச்சக்கர வண்டியையோ அல்லது உந்துருளியையோ செலுத்தும் சாரதியின் கவனயீனத்தால் இவை நடக்கின்றதென்றால், மற்றைய மாகாணங்களில் இவை ஏன் இவ்வளவு அதிகமாக நடைபெறுவதில்லை?

மூன்றாவது, இவ்வாறான விபத்துக்களில் பொதுவான இன்னொரு விடயம் இருக்கிறது. அதுதான் ராணுவ வாகனம். இதில் எனக்கிருக்கும் கேள்வியென்னவென்றால், தமிழரின் உயிர்மேல் சிங்கள் ராணுவத்திற்கு இருக்கும் அக்கறை என்பதும், வடக்கு மாகாணத்தில் செறிவான ஆக்கிரமிப்பில் நிலைத்து நிற்கும் ராணுவப் பிரசன்னமும் என்பதும். 

என்னைப்பொறுத்தவரை கனரக வாகனங்களில் பவனி வரும் ஆக்கிரமிப்பு ராணுவத்தின் சிப்பாய்களுக்கு தமிழர் பகுதிகளில் வேகக் கட்டுப்பாடென்பதோ அல்லது வீதி நடைமுறைகளுக்கு ஏற்ப வாகனத்தைச் செலுத்தவேண்டும் என்கிற கட்டுப்பாடோ கிடையாது. வீதி விதிமுறைகளிக் கண்கானிக்கும் பொலீஸ் என்பது சிங்களா ஆக்கிரமிப்பின் இன்னொரு வடிவம். ஆகவே, அது தனது சகோதர ராணுவத்திற்கெதிராகச் செயற்படப் போவதில்லை. இதனால், ராணுவ வாகனத்தில் பவனி வரும் சிப்பாய்கள் தமது தவறுகளிலிருந்து  இலகுவாகத் தப்பித்துக்கொள்ள முடிகிறது. இதுமட்டுமல்லாமல், தமிழர் என்றாலே எதிரிகள். அவர்களைத் தொடர்ச்சியாக ஒரு அடக்குமுறையின்கீழ் வைத்திருக்கும் நோக்கத்தில் அங்கு நிலைகொண்டிருக்கும் லட்சக்கணக்கான சிங்களச் சிப்பாய்களுக்கு தமிழரின் உயிரென்பது ஒரு பொருட்டாக இதுவரையிலும் இருக்கவில்லை, இனிமேலும் அப்படித்தான். 

ஆகவே இவ்விபத்துக்களில் சாரதிகளின் கவனயீனத்துடன் ராணுவப் பிரசன்னமும் சேர்த்துப் பார்க்கப்படுதல் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரதேசவாதிகளின் தகவல்ப்படி, ராணுவ வாகனத்தினை ஓட்டிவந்த சாரதி மதுபோதையில் இருந்ததாகவும், சம்பவம் நடந்தவுடன் அவ்விடத்திற்கு விரைந்துவந்த இன்னொரு ராணுவ வாகனம் மதுபோதையிலிருந்த சாரதியை உடனடியாக அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியதாகவும், அவரின் இடத்திற்கு வேறு ஒரு ராணுவ வீரரை பொலீஸின் முன்பாக நிறுத்தியதாகவும் சொல்கிறார்கள். பொலிசார் அப்பகுதிக்கு வருமுன்னரே சம்பவம் நடந்த இடத்தின் தடயங்களையும், சாட்சிகளையும் ராணுவம் மாற்றிவிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

ராணுவம் மதுபோதையில் அதிவேகமாக வாகனத்தை ஒட்டிவந்ததினாலேயே விபத்து நடந்ததாகக் கூறும் கிராம வாசிகள், இந்த முகாமில் இருக்கும் ராணுவ வீரர்களே அப்பகுதியில் போதைவஸ்த்து விற்பனைக்காக இளைஞர்களைப் பாவிப்பதாகவும் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்கள்.

 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39308

  • கருத்துக்கள உறவுகள்
  • சிங்கள பகுதியில் நடக்கும் விபத்துக்கள் தமிழ் இணையங்களில் பெரிசாய் வராது 
    தமிழர் பகுதியில் மோ.வாகனங்கள் அதிகரித்து விட்ட்து கண்ட பாட்டுக்கு வாகனங்களை ஓட்டுகிறார்கள் ...தெரியாதா?
    இந்த விபத்திற்கு வேண்டுமானால் ஆமி காரணமாய் இருக்கலாம்... மோ.சைக்கிளை கண்ட பாட்டுக்கு ஒட்டிப் போய் மின் கம்பங்களில் அடிபட்டு சாபவர்கள் எத்தனை பேர்?...முதலில் இந்த விபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு அங்குள்ள மக்களுக்கு வர வேண்டும் 
     

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.