Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லை – செம்மலை நீராவியடி பிள்ளையாரின், பொங்கலைக் குழப்ப முயற்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை – செம்மலை நீராவியடி பிள்ளையாரின், பொங்கலைக் குழப்ப முயற்சி!

January 14, 2019

Mullai-semmalai.jpg?resize=800%2C600

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு மேற்கொள்ள சென்ற கிராம மக்களுக்கு தென்பகுதி பெரும்பான்மையினரால் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிலமையை கட்டுப்படுத்த இராணுவம், காவற்துறை தலையீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்றைய தினம் பொங்கல் விழா இடம்பெறும் என்று ஆலய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை இந்த கோவிலின் வளாகத்தைபலவந்தமாக கைப்பற்றி விகாரை அமைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த ஆலயத்தின் பெயரை “கணதேவி தேவாலய“ என்று புதிய பெயர்ப்பலகை இட்டு. புதிதாக பாரிய புத்தர்சிலையொன்றை திறக்கமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் ஆலயவளாகத்தில் விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேசசபை, பொதுமக்கள், பிரதிநிதிகள்மற்றும் ஆலய நிர்வாகம் என்பன கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்து பௌத்தர்களே, இல்லாத இடத்தில் பௌத்த விகாரையின் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

எனினும் கடந்த ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மஹிந்தராஜபக்ஸவை நாட்டின் பிரதமராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமித்ததை அடுத்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் ஆலயவளாகத்தில் விகாரை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிரந்தன.

இதற்கமைய விகாரை அமைக்கும் கட்டுமானப்பணிகள்முன்னெடுக்கப்பட்டு நீராவியடிப் பிள்ளையார் பழைய செம்மலை எனக் குறிப்பிடப்பட்டிருந்த பழமையான பெயர் நீக்கப்பட்டு தற்போது கணதெவிதேவாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு புதிதாக புத்தர் சிலைஒன்றை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளும்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே இன்றைய தினம் பொங்கல் விழாவை நடாத்த முயற்பட்ட போது தென்பகுதி மக்களால் இடையூறு விளைவிக்கப்பட்டள்ளது.

image-1-1.png?resize=800%2C420image-2-1.png?zoom=3&resize=335%2C209image-3-1.png?resize=800%2C450image-10.png?resize=756%2C501

 

 

http://globaltamilnews.net/2019/109908/

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.jpg

முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நாயாற்றுப் பகுதியியிலுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில்
(14.01.19) இன்று செம்மலை கிராம மக்களால்  ஏற்பாடு செய்த ஆண்டு பொங்கல் நிகழ்வும் அன்னதான நிகழ்வும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பிரதேச தமிழ் மக்கள் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டவேளை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தினை ஆக்கிரமித்து பௌத்த விகாரையினை அமைத்துள்ள பௌத்த மதகுரு ஒருவர் தலைமையில் தென்பகுதியிலிருந்து வருகை தந்த 40 ற்கு மேற்பட்ட பெரும்பான்மையினத்தவர்களும் பௌத்த மதகுருமாரும் தமிழ்மக்கள் மீது பிரச்சனையினை ஏற்படுத்தும் வகையில் பொங்கல் பூசை வழிபாடுகளில் ஈடுபட்ட மக்கள் மீது தர்க்கம் எற்படுத்தியுள்ளார்கள்.
இதனால் அப்பகுதியில் பதற்றநிலை உருவாகியது.

மக்களை பொங்கல் வைக்கவிடாமல் குறித்த பகுதியில் விகாரை அமைத்துள்ள விகாராதிபதி தடுக்க முற்பட்டுள்ள நிலையில் இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து விகாரைக்கு அருகில் உள்ள படையினர் மற்றும் படை அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வந்து பௌத்த மதகுருமாரையும் சிங்கள மக்களையும்  சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டவேளையில் முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விகாராதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுவிட்டு ஒலிபெருக்கி மூலம் தமிழ் மக்கள் வழிபாடுகளை செய்தவேளை ஒலிபெருக்கி பாவிக்கத் தடை நீங்கள் ஆலயத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்தவேண்டாம் எனவும் கூறியதோடு பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்ட பெண்கள் சிறுவர்கள் அனைவரையும் புகைப்படங்களை எடுத்து   தமிழ் மக்களின்  வழிபாடுகளை மேற்கொள்ளவிடாது இடையூறுகள் ஏற்படுத்தியிருந்தனர்.


இன்று காலை இடம்பெற்ற இந்த முறுகல் நிலையின் போது செய்திசேகரிக்கும்  பணியில் ஈடுபட்டடிருந்த ஊடகவியலாளர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக புகைப்படங்களை எடுத்து பொலிஸார் செயற்பட்டிருந்ததுடன் ஊடகவியலாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.


ஆலயம் பௌத்த ஆலயம் என்றும் அது பௌத்த மதத்திற்குரிய இடம் என்றும் அதில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளமுடியாது என்றும் தெற்கில் இருந்து வருகைதந்த பௌத்த துறவிகளும் பெரும்பான்மை சமூகம் சார்ந்தவர்களும் கருத்து முரண்பாடுகளை மேற்கொண்டு பிரச்சினையினை தேற்றுவிக்க முற்பட்ட வேளை பொலிசாரின் தலையீட்டினை தொடர்ந்து  பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு செம்மலை கிராம மக்கள் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டனர் .

இந்நிலையில் குறித்த பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் நிகழ்விற்காக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராசா, சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை விவசாய அமைச்சர் க.சிவனேசன்,கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் ஆலய பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


பொங்கல் நிகழ்வும் அன்னதான நிகழ்வும் நடைபெற்று தொடர்ந்து  குறித்த பிள்ளையார் ஆலயத்தினை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும்  நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வினை குறித்த விகாரையின் விகாராதிபதி தடுத்து நிறுத்த முற்பட்டிருந்த நிலையில் மக்கள் தொடர்ந்தும் அடிக்கல் நாட்டும் நிகழ்வை தடையின்றி செய்தனர் .

தெற்கில் இருந்து வந்த ''இலங்கையினை பாதுகாப்போம்'' என்ற பௌத்த அமைப்பினை சேர்ந்த 40 ற்கும் மேற்பட்டவர்களே குறித்த நீராவியடிப்பிள்ளையார் ஆலயப்பகுதிக்கு சென்று குழப்பநிலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. - கேசரி -
 
 
  • கருத்துக்கள உறவுகள்

முல்லை – செம்மலை நீராவியடி பிள்ளையாரின், பொங்கலைக் குழப்ப முயற்சி!

 
January 14, 2019

Mullai-semmalai.jpg?zoom=1.2100000262260

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு மேற்கொள்ள சென்ற கிராம மக்களுக்கு தென்பகுதி பெரும்பான்மையினரால் இடையூறு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் நிலமையை கட்டுப்படுத்த இராணுவம், காவற்துறை தலையீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்றைய தினம் பொங்கல் விழா இடம்பெறும் என்று ஆலய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை இந்த கோவிலின் வளாகத்தைபலவந்தமாக கைப்பற்றி விகாரை அமைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த ஆலயத்தின் பெயரை “கணதேவி தேவாலய“ என்று புதிய பெயர்ப்பலகை இட்டு. புதிதாக பாரிய புத்தர்சிலையொன்றை திறக்கமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் ஆலயவளாகத்தில் விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேசசபை, பொதுமக்கள், பிரதிநிதிகள்மற்றும் ஆலய நிர்வாகம் என்பன கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்து பௌத்தர்களே, இல்லாத இடத்தில் பௌத்த விகாரையின் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

எனினும் கடந்த ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மஹிந்தராஜபக்ஸவை நாட்டின் பிரதமராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமித்ததை அடுத்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் ஆலயவளாகத்தில் விகாரை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிரந்தன.

இதற்கமைய விகாரை அமைக்கும் கட்டுமானப்பணிகள்முன்னெடுக்கப்பட்டு நீராவியடிப் பிள்ளையார் பழைய செம்மலை எனக் குறிப்பிடப்பட்டிருந்த பழமையான பெயர் நீக்கப்பட்டு தற்போது கணதெவிதேவாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு புதிதாக புத்தர் சிலைஒன்றை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளும்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே இன்றைய தினம் பொங்கல் விழாவை நடாத்த முயற்பட்ட போது தென்பகுதி மக்களால் இடையூறு விளைவிக்கப்பட்டள்ளது.

image-1-1.png?zoom=1.2100000262260437&reimage-2-1.png?zoom=1.2100000262260437&reimage-3-1.png?zoom=1.2100000262260437&re

 

http://globaltamilnews.net/2019/109908/

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.