Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்ளையடிக்க வந்த இடத்தில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த திருடன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளையடிக்க வந்த இடத்தில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த திருடன்!

February 05, 2019
  கொள்ளையடிக்க வந்த இடத்தில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த திருடன்!

வேலூர் மாவட்டம், கேவிகுப்பம் அருகே வீட்டில் கொள்ளையடிக்க வந்த திருடன், கிராம மக்களிடம் இருந்து தப்பியோட முயன்று, கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், கேவிகுப்பம் அருகே கொசவன்புதூர் கிராமத்தில் வசிப்பவர் கமலநாதன். இவரும் இவரது மனைவியும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு 12 மணியளவில், 4 பேர் கொண்ட கும்பல் கமலநாதன் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். கையில் இரும்பு ராடு, கத்தி போன்றவற்றுடன் அவர்கள் வந்திருப்பதை ஜன்னல் வழியாக பார்த்த கமலநாதன், ஊரில் உள்ளவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தார்.

இதனை தொடர்ந்து ஊர் மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வந்து துரத்தியதில் 3 பேர் தப்பியோடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். தன்னை சரமாரியாக தாக்கியவர்களிடம் இருந்து அந்த திருடன், தப்பியோட முயன்றபோது, அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 Tamil-image-2.jpg?resize=300%2C180

தகவலறிந்து கேவிகுப்பம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் விழுந்த நபரை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் குல்கர்னி என்பது தெரியவந்தது. மேலும் அவனுடன் வந்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை அதிகரித்து உள்ளதால், காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

http://akkinikkunchu.com/?p=73205

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் குல்கர்னி என்பது தெரியவந்தது. மேலும் அவனுடன் வந்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

அசாம் மாநிலத்தில் இருந்து வந்து.. 
தமிழ் நாட்டு கிணத்துக்குள் விழுந்து சாக வேணும் என்று விதி இருந்தால்... அதை மாற்ற முடியாது.
(ரதி எங்கே....) 🤪

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த செல் போன் கள்ளனுக்கு வில்லனாய் மாறி ஷெல்லுக்கு அனுப்பி விட்டதே.........!  😁 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, தமிழ் சிறி said:

அசாம் மாநிலத்தில் இருந்து வந்து.. 
தமிழ் நாட்டு கிணத்துக்குள் விழுந்து சாக வேணும் என்று விதி இருந்தால்... அதை மாற்ற முடியாது.
(ரதி எங்கே....) 🤪

ஜாபர் குல்கர்னி கொஞ்சம்  மதியை பாவிச்சிருந்தால் கிணத்துக்கை தடக்குப்பட்டு விழாமல் தப்பியிருக்கலாம்.lol2.gif

  • 2 weeks later...

இதைப்போல் ஒரு சுவாரசியமான சம்பவம் அமெரிக்காவில் 2012 அல்லது 2013 ல்  நடந்ததாக பத்திரிகையில்  வாசித்தேன். வீட்டில் ஆட்கள் இல்லாத வேளை திருட வந்த திருடன் வீட்டில் இருந்த கண்ணியில் தனது முக நூலை பார்ததுவிட்டு அவசரத்தில்  logout செய்ய மறந்து போனதால் வகையாக மாட்டிக்கொண்டார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.