Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

EUவில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த, பிரித்தானிய மக்கள் விருப்பம்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

EUவில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த, பிரித்தானிய மக்கள் விருப்பம்…

February 11, 2019

brexit.png?resize=775%2C453

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவில்  மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை தாமதப்படுத்துவதற்கு பிரித்தானிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என பிரித்தானியா முடிவெடுத்தநிலையில் அப்போது இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மையான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்தனர்.

அதற்கேற்ப ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறைப்படி விலகுவதற்கான நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வரும் நிலையில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை பிரித்தானிய பாராளுமன்றம் நிராகரித்து இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஒரு தீர்மானம் வர உள்ள நிலையில், பிரெக்சிற் தொடர்பில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பிலேயே இவ்வாறு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 53 சதவீதமானோர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை பிரித்தானியா தாமதப்படுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இரண்டாது பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் அல்லது பிரசெல்சில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை 49 சதவீதமானோர் ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  பிரக்ஸிற் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக, கடந்தாண்டு வரை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை பிரித்தானிாவில் இருந்து நெதர்லாந்துக்கு மாற்றியுள்ளன அல்லது மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளன என, நெதர்லாந்து தெரிவிக்கிறது.

இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட நெதர்லாந்தின் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான முகவராண்மை, 42 நிறுவனங்கள் இவ்வாறு தமது நாட்டுக்கு வருகின்றமை காரணமாகச் சுமார் 2,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுமென்றும் பாரிய தொகையிலான அமெரிக்க டொலர் முதலீடுகள் கிடைக்கப்பெறுமெனவும் தெரிவித்தது.

இவ்வாறு இடமாறுவதாக அறிவித்துள்ள நிறுவனங்களில் அநேகமானவை ஐ.இராச்சியத்தைச் சேர்ந்தவையெனவும், இன்னும் சில, ஆசியாவையோ, ஐ.அமெரிக்காவையோ சேர்ந்தவையெனவும் நெதர்லாந்து தெரிவிக்கிறது.

நெதர்லாந்து தவிர, ஜேர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து போன்ற நாடுகளுக்குச் செல்வதற்கும் பல நிறுவனங்கள் முயல்கின்றன எனவும், நெதர்லாந்துத் தரப்புத் தெரிவிக்கிறது.

 

http://globaltamilnews.net/2019/112847/

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய பிரித்தானியா படுற கஷ்டம் சொல்லி வேலையில்லை.தெரேசா மே பதவியை விட்டு போனால் பல பிரச்சனைகள் சுமுகமாக முடியுமென இங்கு பரவலாக கதைக்கின்றார்கள். 🚶‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி மீண்டும்... பொருளாதாரச் சரிவை நோக்கிப் போகுது. கிறீஸ் இன்னும் திடமான பொருளாதார நிலையை அடையவில்லை. பிரான்சில் பொருண்மிய வளர்ச்சி குன்றி இருக்கிறது. இப்படி... ஐரோப்பிய ஒன்றியம் முழுக்க.. ஒரு பொருண்மிய ஸ்திரத்தன்மை அற்ற நிலை நிலவும் நிலையில்.. பிரித்தானியா.. வெளியேறுவது சரியான பிரிவுக்குப் பின்னான கொள்கை வகுக்கப்படின்..  பிரித்தானியாவுக்கு பெரிய பாதிப்பை பொருண்மிய ரீதியாக நீண்ட கால ஒழுங்கில் ஏற்படுத்தாது.

ஆனால்.. பிரித்தானிய அரசியல் - வியாபாரிகளை பொறுத்த வரை.. ஐரோப்பிய வர்த்தகம் தான் பாதிக்கப்படும். அதுதான் குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தெரிந்த பல பிரித்தானியர்கள் 

பிரெஞ்சுக்குடியுரிமையை  பெற விண்ணப்பித்து  பெற்றும் வருகிறார்கள்

நீண்ட தூர நோக்கில்  தமக்கு இதுவே  சாதகமானது  என்கிறார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பெரிய பிரித்தானியா படுற கஷ்டம் சொல்லி வேலையில்லை.தெரேசா மே பதவியை விட்டு போனால் பல பிரச்சனைகள் சுமுகமாக முடியுமென இங்கு பரவலாக கதைக்கின்றார்கள். 🚶‍♂️

உண்மைதான் என்ன செய்வதென்று முழிக்கிறார்கள்.இப்போதைய நிலையில் எவரும் பிரதமராக வர விரும்ப மாட்டார்கள். பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற கதை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Ahasthiyan said:

உண்மைதான் என்ன செய்வதென்று முழிக்கிறார்கள்.இப்போதைய நிலையில் எவரும் பிரதமராக வர விரும்ப மாட்டார்கள். பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற கதை.

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் வைத்தால் சிங்கன் வருவார் தானே..:grin:

Corbyn à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் வைத்தால் சிங்கன் வருவார் தானே..:grin:

Corbyn à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

ஒரு தொங்கு பாராளு மன்றம் வரலாம். இப்ப தேர்தல் வருவதை ஒருவரும் விரும்பவில்லை. எதிர் கட்சி என்றால் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்று இல்லை. ஓரளவு ஆளும் கட்சியுடன் சமரசம் பேசி, ஐரோப்பாவில் இருந்து வெளியேறலாம். சிறந்த பொருளாதார கொள்கைகளை வகுத்தால், 5-10 வருடங்களில் பவுண் மீட்சி பெறலாம். இப்பவுள்ள அரசியலில் பெரும் பிரச்னை அரசியல் சார்ந்த தனிப்பட்ட வர்த்தகம். நாடா ? வீடா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.