Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிறிலங்கா அரசு எதனையோ மறைக்க முயல்கின்றது': அனைத்துலக மன்னிப்புச் சபை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'சிறிலங்கா அரசு எதனையோ மறைக்க முயல்கின்றது': அனைத்துலக மன்னிப்புச் சபை

"எமது பிரதிநிதிகளை சிறிலங்காவிற்கு செல்லவிடாமல் சிறிலங்கா அரசாங்கம் தடுப்பதன் மூலம் அது எதளையோ மறைக்க முயல்கின்றது" என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு என அங்கு சென்றிருந்த அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இருவருக்கு பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய இணைப்பாளர் றொப் கோடன் தெரிவித்துள்ளதாவது:

"சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அது எதனையோ மறைக்க முயல்வதனை காட்டுகின்றது. எமது பிரதிநிதிகளின் பயணத்தை தடுக்க இதனை விட வேறு காரணங்கள் இருக்க முடியாது.

எமது போராட்டம் சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியை நோக்கியது அல்ல, அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பாளர்களை எல்லாத் தரப்பும் அனுமதிக்க வேண்டும் என்பதே" என்றார் அவர்.

இதனிடையே "நாம் எல்லாத் தரப்பினராலும் மீறப்படும் மனித உரிமைகள் தொடர்பாகவே கவனம் செலுத்தி வருகின்றோம். அங்கு பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர், கடத்தப்படுகின்றனர், காணாமல் போக செய்யப்படுகின்றனர்.

இது தினமும் சிறிலங்கா அரசாங்கப் படையினர், கருணா குழுவினர், ஏனைய ஆயுதக் குழுக்கள், விடுதலைப் புலிகள் போன்றவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பாக எந்தத் தரப்பினரும் கவனம் செலுத்தவில்லை என்பது எமக்கு வெளிப்படையாக தெரிகின்றது.

அதாவது எல்லா தரப்பினரும் பொதுமக்களை பாதுகாக்கும் அனைத்துலகத்தின் விதிகளை மீறியுள்ளனர்" என்று மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பூர்னா சென் தெரிவித்துள்ளார்.

-புதினம்

வேற என்னத்தை கொலைகளையும் மனிதவுரிமையையும் மறைக முயலுது தற்போது மகிந்த அரசுக்கு கண்னைகட்டி நடு காட்டில் விட்ட உணர்வு கொஞ்சம் கொஞ்சம் வரும்

எதையோ அல்ல எல்லாவற்றையுமே மறைக்க முயல்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எதையுமல்ல. உண்மையை மறைக்க முயலுகின்றது.

மன்னிப்புச்சபை பிரதிநிதிகள்

இலங்கை வர அரசு கதவடைப்பு

லண்டனில் உள்ள தூதரகம் விஸா வழங்குவதற்கு மறுப்பு

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெற்று வருகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ள நிலையில், மனித உரிமைகளைக் கண்காணிக்கும் மிகமுக்கிய சர்வதேச அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபைக்கு கதவடைப்புச் செய்திருக்கின்றது இலங்கை அரசு.

லண்டனைத் தளமாகக்கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கை நிலைவரத்தை நேரில் மதிப்பீடு செய்யும்நோக்கில் இங்கு வர முயன்ற சமயமே அவர்களின் விஸா விண்ணப்பத்தை நிராகரித்திருக்கின்றது லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம்.

இலங்கை அரசின் பணிப்புரைக்கு அமையவே மேற்படி விஸா விண்ணப்பங்களை தூதரகம் நிராகரித்தது என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றன. இலங்கை அரசு மீதும் இதற்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இந்தப் பின்னணியில் இலங்கையின் மனித உரிமை நிலைவரத்தை சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச்சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் தரப்புகளைக் கட்டுப்படுத்தும் இலக்கிலும் புதிய பிரசார நடவடிக்கை ஒன்றை மன்னிப்புச்சபை அண்மையில் ஆரம்பித்தது.

"ஒழுங்கு விதிப்படி விளையாடுங்கள்' என்ற வாசகம் பதித்த கிரிக்கெட் பந்துகளில் ஒப்பமிடுவதன் மூலம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்ற திட்டம் ஒன்றை மன்னிப்புச்சபை ஆரம்பித்தது.

உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றும் இலங்கைக்கிரிக்கெட் அணியின் மனோதிடத்தைக் குழப்பும் நிலையில் இந்தப் பிரசாரத்தை மன்னிப்புச்சபை இச்சமயத்தில் ஆரம்பித்திருப்பதாகக் குற்றம் சுமத்தி அந்த அமைப்பு மீது சீற்றமடைந்திருக்கின்றது இலங்கை.

இச்சூழலியே மன்னிப்புச்சபைப் பிரதிநிதிகள் இலங்கை வருவதற்கு அனுமதி மறுத்திருக்கின்றது அரசு.

""உலகக்கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியைப் பாதிக்கின்ற விதத்தில் மன்னிப்புச்சபை தனது நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்

ஏதோ இப்படி சொல்வதோடு நிறுத்தாவிடில் நன்றாக இருக்கும்

மறைப்பதற்கு என்ன இருக்கு கோமணம் கூட இல்லை ராஜபக்ஷகிட்ட எல்லாம் உலகுக்கு தெரிந்து விட்டது

மகிந்த கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கின்றார். ம் குடிக்கட்டும். கண் திறக்கும்போது எல்லாமே கவிழ்ந்து போய் இருக்கும் அதை நினைவில் வைத்திருக்கட்டும். மகிந்த ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளட்டும். திருகோணமலை துறைமுகம் மகிந்த கைவசம் இருக்கும்வரைதான் உலக நாடெல்லாம் மகிந்த பக்கம். அது எப்பொமுது எம் வசம் வருகின்றதோ அன்றே உலகநாடெல்லாம் எம்பக்கம் சாயத்தொடங்கிவிடும் என்ற உண்மை விரைவில் மகிந்த உணர்ந்துகொள்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கதைவிடுகினம்

30 வருடப்போர்

ஒரு லட்சம் மக்கள் பலி

20 லட்சம் அகதிகள் இடம்பெயர்வு

இப்பத்தான் தெரிந்திருக்கு ஏதோ மறைக்கனமென்று

இனி கமிசன்

வசாரணை

அறிக்கை

தமிழனின் தலையில மிளகாய்..............................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.