Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, thulasie said:

மறப்போம் மன்னிப்போம் என்பது  தமிழினத்திற்கு ஐ.நா போட்ட பிச்சை.

வேறு வழியில்லை, ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

ஐ நா  பிச்சை  போடுவது  இருக்கட்டும்

தீர்வு  எங்கே...???

  • Replies 65
  • Views 5.2k
  • Created
  • Last Reply
3 hours ago, thulasie said:

தான் ஒன்றை நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது, நாம் அறிந்தது.

இதுதான் நடக்கும், இப்படித்தான் நடக்கும், இப்படித்தான் நடக்கவும்  வேண்டும் என்று மனிதன் ஒருபோதும், தீர்மானிக்க முடியாது.

அப்படிக் கற்பனை செய்தாலும், நடைமுறைச் சாத்தியம் அற்றது.

நமது கற்பனையிலும் வராததுதான், நம் வாழ்வில் எல்லாரும் சந்திக்கிறோம். 

எமது விதி - கடவுளின் விதி என்று பின்னாளில் உணர்ந்து, நாம் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புகிறோம்.

'மன்னிப்போம், மறப்போம்' என்பதை கடவுளின் விதியாக ஏற்று,  தமிழினம் இயல்பான வாழ்க்கைக்கு பயணிப்பதுதான் சிறந்தது.

கடவுளின் விதி? யாரவன் ? அப்படி எவனும் இருக்கிறானா? 

1 hour ago, tulpen said:

கடவுளின் விதி? யாரவன் ? அப்படி எவனும் இருக்கிறானா? 

தமிழினம் விரும்பும் விதியை அடைய முடியாமல் இருப்பதும்,  கடவுளின் விதிதான்.

21 minutes ago, thulasie said:

தமிழினம் விரும்பும் விதியை அடைய முடியாமல் இருப்பதும்,  கடவுளின் விதிதான்.

ஓகோ அப்படியானால் இவ்வளவு அழிவுக்கும் அந்த பயல் தான் காரணமா?  அந்த விதியை எழுதிய கடவுளைத் திட்டாமல்  ஆளாளுக்கு அவன் எழுதிய விதிப்படி செயற்பட்ட மனிதர்களை இங்கு எல்லோரும்  திட்டித்தீர்கிறீர்களே!! ஏன்? 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

 

இதைத் தான் கேட்டேன்!

இந்த fair game மிரட்டல் எல்லாம் நான் மட்டுமல்ல, சுமந்திரனை, ரணிலை, டக்கியைப் பற்றிப் பேசுவோர் யாவரும் கேட்டாயிற்று! புதிதாக நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை!

(இந்தக் களத்திலேயே ஒரு இயக்கத்தில் இருந்த தந்தையை இன்னொரு இயக்கம் கொன்றதால் இழந்த மகனும் இருக்கிறார், களவிதிகளை மீறாமலிருக்க இதற்கு மேல் சொல்லாமல் விடுகிறேன். ஆனால் "களையெடுக்க வேணும்" என்போரும், சகோதரப் படுகொலையை நக்கலோடு விளிப்போரும் இருக்கிறார்கள். அந்த நேரம் அவர்கள் உணர்ச்சியை அடக்க வேணும், உங்கள் உணர்ச்சியை மட்டும் நீங்கள் மற்றவரை அடக்க அவர் முகத்தில் வீச வேண்டும்! இது "எனக்கு வந்தால் இரத்தம், மற்றவனுக்கு வந்தால் தக்காளி சோஸ்" கதை தான்! )

Fair game மிரட்டலை முதலில் செய்தது யார் ஜஸ்டின்? 

உணர்வை வைத்து மிரட்டவில்லை. ரணிலினதும், சுமந்திரனதும் கருத்துக்களை இங்கே அப்படியே ஆதரித்து எழுதியதாலேயே கேட்கத் தோன்றியது.

ஆனாலும், உங்களின் முன்னைய நாள் கருத்துக்களுக்கும் இப்போதைய கருத்துக்களுக்குமிடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. ஏனென்றுதான் தெரியவில்லை. அதை ஆராய வேண்டிய தேவை எனக்கு வேண்டாம்.தக்காளி சோஸும் ரத்தமும் நிறையவே கேட்டாயிற்று. நீங்கள் சொல்லத்தேவையில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2019 at 5:09 AM, thulasie said:

மறப்போம் மன்னிப்போம் என்பது  தமிழினத்திற்கு ஐ.நா போட்ட பிச்சை.

வேறு வழியில்லை, ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

ரணிலும் சுமந்திரனும் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும், நீங்கள் எதற்காக போர்க்குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும் மறக்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைக்கவிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

போர்க்குற்றங்கள் மறக்கப்படுவதால் நண்மையடையப்போவது யார்? அப்படி நண்மையடையப்போவது தமிழர்கள் இல்லையென்றால் நாம் ஏன் அதை ஆதரிக்க வேண்டும்?

ருவாண்டா, பொஸ்னியா, தென் சூடான் என்று ஐ நாவே முன்னின்று போர்க்குற்ற விசாரணை பற்றிப் பேசும்பொழுது, ஏன் நாமும் அதுபற்றிய அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாது?

சரி, நீங்கள் எதிர்பார்ப்பது போலவே போர்க்குற்றங்களுக்கான விசாரணைக் கோரல்களை தமிழ் மக்கள் கைவிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அதன்பிறகு சிங்களம் தமிழருக்குத் தரும் தீர்வு என்னவாக இருக்கும்? 

இப்போதைக்கு போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளையே சிங்களம் மீதான தீர்வுக்கான அழுத்தமாக தமிழர்கள் பாவிக்க எத்தனிக்கும்போது, இப்படி மன்னிப்போம் மறப்போம் என்பது தமிழர்களின் நிலையினை பலவீனப்படுத்துவதோடு, இனி எந்தக் காலத்திலும் சிங்களைத்தை இதுதொடர்பாக  விசாரிக்கமுடியாத நிலையினை ஏற்படுத்திவிடும் என்பதையும் எப்படி மறந்தீர்கள்?

2 hours ago, tulpen said:

ஓகோ அப்படியானால் இவ்வளவு அழிவுக்கும் அந்த பயல் தான் காரணமா?  அந்த விதியை எழுதிய கடவுளைத் திட்டாமல்  ஆளாளுக்கு அவன் எழுதிய விதிப்படி செயற்பட்ட மனிதர்களை இங்கு எல்லோரும்  திட்டித்தீர்கிறீர்களே!! ஏன்? 

தமிழினத்தின் அழிவு அவர்களால் தேடிக்கொண்டது.  அது அவர்களின் தலைவிதி.

சமாதானத்தின் மூலம் அடையும் கடவுளின் விதி என்ற வாசல்  திறந்திருக்க, அழிவுக்கான விதியை அடைய முயற்சித்தமையின் பிரதிகூலங்களை நாம் அனுபவிக்கிறோம்.

அழிவைத் தானாகவே தேடிக்கொண்ட தமிழினம், கடவுளை நொந்து என்ன பயன்?

25 minutes ago, thulasie said:

தமிழினத்தின் அழிவு அவர்களால் தேடிக்கொண்டது.  அது அவர்களின் தலைவிதி.

சமாதானத்தின் மூலம் அடையும் கடவுளின் விதி என்ற வாசல்  திறந்திருக்க, அழிவுக்கான விதியை அடைய முயற்சித்தமையின் பிரதிகூலங்களை நாம் அனுபவிக்கிறோம்.

அழிவைத் தானாகவே தேடிக்கொண்ட தமிழினம், கடவுளை நொந்து என்ன பயன்?

என்னப்பா குழப்புறீங்க. கடவுள் தான் விதியை எழுதிவார் என்றீங்க. இப்ப மாத்திச்  சொல்லுறீங்க. மக்களை தனது விருப்பப்படி மாற்றி சரியான வழிக்கு கொண்டுவர சக்தியற்றவனா உங்கள் கடவுள். எல்லாம் வல்ல இறைவன் என்பார்களே. அது உண்மையானால் கடவுளைத்தான் திட்ட வேண்டும்.மனிதர்களை அல்ல. மனிதர்களை உங்களுக்களுக்கு  பிடிக்காது அதனால் உங்கள் வசதிக்கு மனிதர்களை திட்டுகிறீர்கள். கடவுள் டம்பிபீஸ் என்றாலும் அவனை திட்ட மாட்டீர்கள் 

5 minutes ago, thulasie said:

விதி என்பது குழப்பமானதுதான்.

அதை விளங்கிக்கொள்ளும் அறிவு உங்களிடம் இல்லை.

உங்களிடம் இருந்தால் அதை விளக்கலம் தானே. எனது கேள்வி தெளிவானது. உங்கள்ள் பதில் தான குழப்பமானது. 

Edited by tulpen

திட்டுவதை நிறுத்திவிட்டு, மறப்போம், மன்னிப்போம் என்ற தாரக மந்திரத்தை உச்சாடனம் செய்யலாமே!

மனிதர்களைத் திட்டித் தீர்க்கும் விதியிலிருந்து, ‘இணக்க அரசியல்’ என்ற விதியில் சங்கமமாகலாம்.

7 minutes ago, thulasie said:

திட்டுவதை நிறுத்திவிட்டு, மறப்போம், மன்னிப்போம் என்ற தாரக மந்திரத்தை உச்சாடனம் செய்யலாமே!

மனிதர்களைத் திட்டித் தீர்க்கும் விதியிலிருந்து, ‘இணக்க அரசியல்’ என்ற விதியில் சங்கமமாகலாம்.

உண்மை. மனிதன் தான் சக்தி மிக்கவன். கடவுள் அல்ல. இப்போதாவது ஒத்துக்கொண்டதற்கு நன்றி. நீங்கள் விரும்புவது போல்  வெகு விரைவில் ரணிலை தலைமையாக கொண்ட சக்தி மிக்க மனிதர்கள் தமிழ்மக்களது தன்னாட்சி உரிமையை அங்கீகரித்து( உரிமையை கொடுப்பது அல்ல அங்கீகரிப்பது) சமஸ்டி அரசியலமைப்பை கொண்டுவர அதன் பின்னர்  தமிழ்மக்களும் மறப்போம் மன்னிப்போம் அரசியலை செய்வர்கள். முதலில் அதை தொடங்க வேண்டியவர்கள் ஶ்ரீலங்கா ஆட்சியாளரே. அந்த இணக்க அரசியலை பார்ரக ஆவலாக உள்ளேன். ஆகவே உடனடியாக சிங்கள ஆட்சியாளருக்கு  உங்கள் புத்திமதிகளைக் கூறத் தொடங்கி அதைஆரம்பித்து வையுங்கள். 

1 hour ago, ragunathan said:

ரணிலும் சுமந்திரனும் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும், நீங்கள் எதற்காக போர்க்குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும் மறக்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைக்கவிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

போர்க்குற்றங்கள் மறக்கப்படுவதால் நண்மையடையப்போவது யார்? அப்படி நண்மையடையப்போவது தமிழர்கள் இல்லையென்றால் நாம் ஏன் அதை ஆதரிக்க வேண்டும்?

 

புலிகளால் பாதிக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்கு - மறப்போம் மன்னிப்போம் என்ற தாரக மந்திரம், இலங்கையில் சமாதானமாக வழி செய்யும்.

இராணுவத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கும் - மறப்போம் மன்னிப்போம் என்ற கருப்பொருளின் பின்னால் உள்ள அமைதியான வாழ்வியல்,  எல்லா மக்களுக்கும் விடிவு தரும்.

மனிதன் அமைதியை விரும்புபவன்.  அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

16 minutes ago, tulpen said:

உண்மை. மனிதன் தான் சக்தி மிக்கவன். கடவுள் அல்ல. இப்போதாவது ஒத்துக்கொண்டதற்கு நன்றி. 

மனிதனின் சக்தி ஒரு வரையறைக்கு உட்பட்டது.

அந்த வரையறைக்குள் இருப்பதால்தான், தமிழினப் போராட்டமும்  தோற்றது.

கடவுளின் சக்தி பாரியது.

1 minute ago, thulasie said:

மனிதனின் சக்தி ஒரு வரையறைக்கு உட்பட்டது.

அந்த வரையறைக்குள் இருப்பதால்தான், தமிழினப் போராட்டமும்  தோற்றது.

கடவுளின் சக்தி பாரியது.

அப்படியானால் கடவுளின் விதிப்படி தமிழர்கள் தோற்றார்கள் என்று முன்பு நீங்கள் ஏன் எழுதினீர்கள்?  அந்த பாரிய சக்தியைக் கொண்டு தமிழரின் நியாயமான கோரிக்கைகளை அந்த கடவுள. நிறைவேற்றி இருக்கலாமே.ஏன் செய்யவில்லை? 

18 minutes ago, tulpen said:

அப்படியானால் கடவுளின் விதிப்படி தமிழர்கள் தோற்றார்கள் என்று முன்பு நீங்கள் ஏன் எழுதினீர்கள்?  அந்த பாரிய சக்தியைக் கொண்டு தமிழரின் நியாயமான கோரிக்கைகளை அந்த கடவுள. நிறைவேற்றி இருக்கலாமே.ஏன் செய்யவில்லை? 

தமிழரின் நியாயமான கோரிக்கைகள், பெரும்பாலான இலங்கை வாழ் மக்களுக்கு நியாயமானதாக இல்லை.

தற்போது, தமிழ் அரசியல்வாதிகளுக்குக்கூட நியாயமானதாக இல்லை.

கடவுள் என்பவர், நியாயமானவருக்கு மட்டும் பிரியமாக இருப்பதில்லை.

நியாயமில்லாமல் செயல்படும் மனிதர்களுக்கும் பிரியமாக இருப்பவர்.


ஒருவரை வெற்றியின் பக்கம் செல்லவைப்பதும், தோல்வி அடையச் செய்வதும் கடவுளின் செயல்.

கடவுள் எமக்கு வெற்றியைத் தரவில்லையென்றால், அவன் தந்த தோல்வி எமக்கு அனுகூலமாக  இருக்கிறது என்று அர்த்தம்.

இது மனிதனுக்கு விளங்குவதில்லை.

20 minutes ago, thulasie said:

தமிழரின் நியாயமான கோரிக்கைகள், பெரும்பாலான இலங்கை வாழ் மக்களுக்கு நியாயமானதாக இல்லை.

தற்போது, தமிழ் அரசியல்வாதிகளுக்குக்கூட நியாயமானதாக இல்லை.

கடவுள் என்பவர், நியாயமானவருக்கு மட்டும் பிரியமாக இருப்பதில்லை.

நியாயமில்லாமல் செயல்படும் மனிதர்களுக்கும் பிரியமாக இருப்பவர்.


ஒருவரை வெற்றியின் பக்கம் செல்லவைப்பதும், தோல்வி அடையச் செய்வதும் கடவுளின் செயல்.

கடவுள் எமக்கு வெற்றியைத் தரவில்லையென்றால், அவன் தந்த தோல்வி எமக்கு அனுகூலமாக  இருக்கிறது என்று அர்த்தம்.

இது மனிதனுக்கு விளங்குவதில்லை.

  நீங்கள் உண்மையில் மிகச்சிறந்த ஆன்மீக வாதி தான். 😂😂 உங்களது மறப்போம் மன்னிப்போம் என்ற பஜனையை  கேட்டு மனமுருகிய கடவுள் இன்று தனது அர்ச்சனைத்தட்டில் விழுந்த சில்லறையை தமிழ் மக்களின் மீள் கட்டுமானத்திற்கு கொடுக்க தீர்மானித்துள்ளார். 

Edited by tulpen

28 minutes ago, tulpen said:

  நீங்கள் உண்மையில் மிகச்சிறந்த ஆன்மீக வாதி தான். 😂😂 உங்களது மறப்போம் மன்னிப்போம் என்ற பஜனையை  கேட்டு மனமுருகிய கடவுள் இன்று தனது அர்ச்சனைத்தட்டில் விழுந்த சில்லறையை தமிழ் மக்களின் மீள் கட்டுமானத்திற்கு கொடுக்க தீர்மானித்துள்ளார். 

மறப்போம் மன்னிப்போம் என்ற பஜனை, சிங்கள, தமிழ் தலைவர்களுக்கு சர்வதேசத்தால் வழங்கிய அட்சய பாத்திரம்.

11 minutes ago, thulasie said:

மறப்போம் மன்னிப்போம் என்ற பஜனை, சிங்கள, தமிழ் தலைவர்களுக்கு சர்வதேசத்தால் வழங்கிய அட்சய பாத்திரம்.

அட்சய பாத்திரம்  என்றால் தெருவில் நின்று நீட்டினால் அள்ள அள்ள வருகிற மாதிரி சில்லறை விழுமே அது தானே? ஶ்ரீலங்கா என்ற நாடு தன் வாழ்நாள் முழுவதும் அந்த பாத்திரத்தை தானே நீட்டி வாழ்ந்து வருகிறது.ஶ்ரீலங்கா என்ற நாடு அந்த பாத்திரத்துடன் இன்னும் பல வருடங்கள்  வாழ கடவுள் இல்லை இல்லை சர்வதேசம் அருள் புரிந்துள்ளது. 

2 minutes ago, tulpen said:

அட்சய பாத்திரம்  என்றால் தெருவில் நின்று நீட்டினால் அள்ள அள்ள வருகிற மாதிரி சில்லறை விழுமே அது தானே? ஶ்ரீலங்கா என்ற நாடு தன் வாழ்நாள் முழுவதும் அந்த பாத்திரத்தை தானே நீட்டி வாழ்ந்து வருகிறது.ஶ்ரீலங்கா என்ற நாடு அந்த பாத்திரத்துடன் இன்னும் பல வருடங்கள்  வாழ கடவுள் இல்லை இல்லை சர்வதேசம் அருள் புரிந்துள்ளது. 

சர்வதேசம், இலங்கைக்கு உதவி செய்வதும், கடவுளின் விதி.

13 minutes ago, thulasie said:

சர்வதேசம், இலங்கைக்கு உதவி செய்வதும், கடவுளின் விதி.

நீங்கள் என்னோட செலவழிக்கிற நேரத்துக்கு  ரணிலிட்ட போய் உங்கட அட்வைஸை பண்ணி உங்க ஃபிரண்ட் கடவுளை ரணிலுக்கு கெல்ப் பண்ண சொல்லி லிங்க் கொடுத்திருந்தா இப்ப சமஸ்டி சட்டமூலம் ரெடியாகி இருக்கும். நாளை காலை அதைப் பார்தத தமிழ் மக்கள் நீங்க விரும்பின இணக்க அரசியலைத் தொடங்கி விடுவினம். ரைமை வேஸ்ட் ஆக்காம ஓடுங்கோ ரணிலிட்ட. இனி எனக்கு நேரம்இ இல்லை இப்ப நான் பெட் ரூம் போய்  இணக்க அரசியல என்ர.  Wife வோட செய்யப் போறன். கோஞ்ச நேரமாவது ஜாலியா இருக்கலாம் இந்த இணக்க அரசியல் செய்தால். 😂😂😂

Edited by tulpen

4 minutes ago, tulpen said:

நீங்கள் என்னோட செலவழிக்கிற நேரத்துக்கு  ரணிலிட்ட போய் உங்கட அட்வைஸை பண்ணி உங்க ஃபிரண்ட் கடவுளை ரணிலுக்கு கெல்ப் பண்ண சொல்லி லிங்க் கொடுத்திருந்தா இப்ப சமஸ்டி சட்டமூலம் ரெடியாகி இருக்கும். நாளை காலை அதைப் பார்தத தமிழ் மக்கள் நீங்க விரும்பின இணக்க அரசியலைத் தொடங்கி விடுவினம். ரையை வேஸ்ட் ஆக்காம ஓடுங்கோ ரணிலிட்ட. இப்ப நான் பெட் ரூம் போய்  இணக்க அரசியல என்ர.  Wife வோட செய்யப் போறன். 😂

சமஷ்டி இல்லாத இணைக்க அரசியலைத்தான், தமிழ் கூட்டமைப்பு விரும்புது.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

புலிகளால் பாதிக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்கு - மறப்போம் மன்னிப்போம் என்ற தாரக மந்திரம், இலங்கையில் சமாதானமாக வழி செய்யும்.

இராணுவத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கும் - மறப்போம் மன்னிப்போம் என்ற கருப்பொருளின் பின்னால் உள்ள அமைதியான வாழ்வியல்,  எல்லா மக்களுக்கும் விடிவு தரும்.

மனிதன் அமைதியை விரும்புபவன்.  அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

மறப்போம் மன்னிப்போம் என்று நீங்கள் இங்கே மேற்கோள் காட்டியது அண்மையில் இரு அரசியல்வாதிகள் தமிழர்க்கு நடந்த அநீதிகள் பற்றி இனிப் பேசக்கூடாது என்கிற தொனியில் பேசிய வார்த்தைகள். அது ஒரு அரசியல்  நிலைப்பாடு.

இவர்களின் கருத்துக்களை புறம்தள்ளிவிட்டு, இதுதொடர்பான உங்கள் கருத்து என்னவென்று கேட்டதற்கு ஆண்மீகரீதியில் பதிலளிக்க முற்படுகிறீர்கள். 

மன்னிக்கவேண்டும், எனக்கு ஆண்மீகத்தில் சிறிதளவேனும் நம்பிக்கையில்லை.

14 minutes ago, thulasie said:

சமஷ்டி இல்லாத இணைக்க அரசியலைத்தான், தமிழ் கூட்டமைப்பு விரும்புது.

 

சரி அப்ப நீங்க சொன்ன அந்த  பாத்திரத்தை அவற்ற கொடுத்து நீங்க சொன்ன பஜனையை பாடி கொண்டு தெருத்தெருவா போக சொல்லுங்க. வரேக்க தட்டில விழுகித தமிழ் மக்களுக்கு பிரிச்சு குடுக்க சொல்லுங்க. சொல்லீற்று நீங்களும் போய் என்ஜோய் பண்ணுங்கோ. கடைசி அதாவது மிச்சம்.  

 

8 minutes ago, ragunathan said:

மறப்போம் மன்னிப்போம் என்று நீங்கள் இங்கே மேற்கோள் காட்டியது அண்மையில் இரு அரசியல்வாதிகள் தமிழர்க்கு நடந்த அநீதிகள் பற்றி இனிப் பேசக்கூடாது என்கிற தொனியில் பேசிய வார்த்தைகள். அது ஒரு அரசியல்  நிலைப்பாடு.

இவர்களின் கருத்துக்களை புறம்தள்ளிவிட்டு, இதுதொடர்பான உங்கள் கருத்து என்னவென்று கேட்டதற்கு ஆண்மீகரீதியில் பதிலளிக்க முற்படுகிறீர்கள். 

மன்னிக்கவேண்டும், எனக்கு ஆண்மீகத்தில் சிறிதளவேனும் நம்பிக்கையில்லை.

ரகுநாதன் நீங்க இந்த அப்பாவி துளசி சொல்லுத சீரியசா எடுக்கின்றீங்களா? 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragunathan said:

Fair game மிரட்டலை முதலில் செய்தது யார் ஜஸ்டின்? 

உணர்வை வைத்து மிரட்டவில்லை. ரணிலினதும், சுமந்திரனதும் கருத்துக்களை இங்கே அப்படியே ஆதரித்து எழுதியதாலேயே கேட்கத் தோன்றியது.

ஆனாலும், உங்களின் முன்னைய நாள் கருத்துக்களுக்கும் இப்போதைய கருத்துக்களுக்குமிடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. ஏனென்றுதான் தெரியவில்லை. அதை ஆராய வேண்டிய தேவை எனக்கு வேண்டாம்.தக்காளி சோஸும் ரத்தமும் நிறையவே கேட்டாயிற்று. நீங்கள் சொல்லத்தேவையில்லை.

 

என் நிலைப்பாடு, வன்னியில் இருந்து வந்த என் உறவுகளின் சாட்சியங்களால் மாறியது. இது ஒன்றும் இரகசியமல்ல! மிரட்டலாக அல்ல அது சொல்லப் பட்டது! உணர்ச்சிகளை வைத்து நீங்கள் மற்றவர் யாரை ஆதரிக்க வேணுமெண்டு கோடு போட்டால், அதே மாதிரியான எதிர்பார்ப்பை மற்றவரும் எதிர் பார்க்க முடியும் என்பதே fair game என்ற கருத்து! இதில் மிரட்டல் எங்கே வந்தது? 

இதுவே என் கடைசிப் பதிவு இங்கே! 

14 hours ago, thulasie said:

தான் ஒன்றை நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது, நாம் அறிந்தது.

இதுதான் நடக்கும், இப்படித்தான் நடக்கும், இப்படித்தான் நடக்கவும்  வேண்டும் என்று மனிதன் ஒருபோதும், தீர்மானிக்க முடியாது.

அப்படிக் கற்பனை செய்தாலும், நடைமுறைச் சாத்தியம் அற்றது.

நமது கற்பனையிலும் வராததுதான், நம் வாழ்வில் எல்லாரும் சந்திக்கிறோம். 

எமது விதி - கடவுளின் விதி என்று பின்னாளில் உணர்ந்து, நாம் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புகிறோம்.

'மன்னிப்போம், மறப்போம்' என்பதை கடவுளின் விதியாக ஏற்று,  தமிழினம் இயல்பான வாழ்க்கைக்கு பயணிப்பதுதான் சிறந்தது.

அதனை நீங்கள் மட்டும் ஒத்து கொள்ளலாம் ...இழந்தவன் எல்லாரும் இதனை ஏற்று கொள்வார்களா ? தனிப்பட்ட உங்கள் போர்வர்களின் கருத்தினை எப்படி இழந்த எல்லா மக்களையும் மறக்க சொல்ல முடியும் ? யார் இந்த அதிகாரத்தினை தந்தது ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.