Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

L’image contient peut-être : 2 personnes, personnes souriantes
நாம் தமிழர் - கோபிச்செட்டிபாளையம்J’aime la Page
6 h · 

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள்.
நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.

■ மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்.

■ அனைவருக்கும் கட்டணமில்லா செய்வழி (practical) தனித்திறன் கல்வி (ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்). சாதரண குடிமகனின் பிள்ளைகள் முதல் முதலமைச்சரின் பிள்ளைகள் வரைக்கும் அனைவருக்கும் அரசுப் பள்ளியில் சரியான தரமான இலவசக் கல்வி!

■ ஆட்சியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும்.

■ 6 மணி நேர செய்வழி தனித்திறன் கல்வி. 1 மணி நேரம் தமிழரின் வீர விளையாட்டு பயிற்சி.

■ மெக்காலே கல்வி முறை ஒழிப்பு.

■ இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி.

■ A2பால் தரும் நாட்டு மாடு மற்றும் இறைச்சி ஆடு வளர்ப்பு செய்ய ஊதியம் குறைந்த பட்சம் 20000 மற்றும் அரசு பணி.
தமிழ்நாட்டின் பால் மற்றும் இறைச்சி தேவை தமிழ்நாட்டிலேயே பூர்த்தி செய்யப்படும்.

■ மரபு வழி சார்ந்த விவசாயம்.

■ தமிழில் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் அரசு பணி.

■ நீர் வளம் மேலாண்மை. நீர் வளம் பெருக்கம். 10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும்.

■ சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுகாக்கும் மரங்கள் நட்டப்படும்.

■ புதியதாக காடுகள் வளர்க்கப்படும்.

■ 1 கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும்.

■ விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும்.

■ தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடிநீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்.

■ தண்ணீர் விற்கத்தடை.

■ கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை.

■ இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும்.

■ நகரத்தில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கச் செய்யப்படும். இதன் மூலம் கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும்.

■ மீனவர் நலம் மற்றும் பாதுகாப்பில் முக்கியத்துவம். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிகளை முறைப்படுத்தி மீனவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையில் திட்டங்கள் கொண்டுவரப்படும்.

■ அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது.

■ பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும்.

■ வரதட்சணைக்கு தடை.

■ அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீட்டெடுத்து வளர்க்கப்படும்.

■ ஏறுதழுவுதல் / தொழூப்புகுத்தல் (ஜல்லிக்கட்டு) தேசிய திருவிழாவாக அறிவித்து, 7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும்.

■ காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக, மாதம் 40000 ருபாய் வழங்கப்படும்.

■ கைய்யூட்டு (லஞ்சம்) வாங்கினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

■ கைய்யூட்டு( லஞ்சம் ) வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும்.

■ தற்சார்பு பொருளாதார கொள்கை. சுற்றுச்சூழலைப் பாதிக்காதபடி உற்பத்தித் துறைகளில் கவனம், தொழில்முனைவு ஊக்கம், அனைத்து துறைகளில் வேலைவாய்ப்பு பெருக்கம், வளர்ச்சி.

நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று

வாக்களிப்பீர் #விவசாயி சின்னம்

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கொள்கைத் திட்டம் ஆனால் பணக்காரருக்கு பிடிக்குமோ?

7 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்ல கொள்கைத் திட்டம் ஆனால் பணக்காரருக்கு பிடிக்குமோ?

+ நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள்

உதாரணமாக, இயற்கை விவசாயத்துக்கு மட்டுமே அனுமதி, கைய்யூட்டு( லஞ்சம் ) வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும், ஆட்சியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்பன நல்ல திட்டங்களாக தெரிந்தாலும் நடை முறையில் சாத்தியமில்லை. இது சாத்தியமாக வேண்டும் எனில் சர்வாதிகார அல்லது இராணுவ  ஆட்சியில் மட்டுமே முடியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நிழலி said:

நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள்

மற்றவர்களின் கொள்கைகள் எப்பவுமே சாத்தியப்படாதெனும் போது நாம் தமிழர் கடசியின் ஓரிரு கொள்கைகளில் பிழை பிடிக்க தேவையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நிழலி said:

+ நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள்

உதாரணமாக, இயற்கை விவசாயத்துக்கு மட்டுமே அனுமதி, கைய்யூட்டு( லஞ்சம் ) வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும், ஆட்சியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்பன நல்ல திட்டங்களாக தெரிந்தாலும் நடை முறையில் சாத்தியமில்லை. இது சாத்தியமாக வேண்டும் எனில் சர்வாதிகார அல்லது இராணுவ  ஆட்சியில் மட்டுமே முடியும்.

 

இயற்கை விவசாயத்தை  ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்றது. ஜேர்மனியில் கிருமிநாசினிகளின் பயன்பாடு வருடத்திற்கு வருடம் குறைத்துக்கொண்டு வருகின்றார்கள்.தாவர வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வரும்   கெமிக்கல் பசளைகளை ஒரு கால எல்லைக்கு பின் பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளார்கள். இதெற்கெல்லாம் முக்கிய காரணி புற்றுநோய்தான்.

சட்டங்கள் வலுவாகவும் அரசியல்வாதிகள் ஒழுங்காகவும் இருந்தால் சர்வாதிகார ஆட்சியோ இராணுவ ஆட்சியோ வர சந்தர்ப்பமில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

+ நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள்

உதாரணமாக, இயற்கை விவசாயத்துக்கு மட்டுமே அனுமதி, கைய்யூட்டு( லஞ்சம் ) வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும், ஆட்சியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்பன நல்ல திட்டங்களாக தெரிந்தாலும் நடை முறையில் சாத்தியமில்லை. இது சாத்தியமாக வேண்டும் எனில் சர்வாதிகார அல்லது இராணுவ  ஆட்சியில் மட்டுமே முடியும்.

 

சிங்கப்பூரில் எப்படி சாத்தியமாகியது?

அன்பான சர்வாதிகார அரசு.

அதேயே தான் சீமான் வலியுறுத்துகிறார். 

அதே வேளை சீமானின் திட்டங்கள், தமிழ் நாட்டில் சிலர் எள்ளி நகையாடும் போதே,  ஓவென்றும் வெவேறு மாநிலங்களில் அமுலாகின்றன.
 

1 hour ago, குமாரசாமி said:

இயற்கை விவசாயத்தை  ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்றது. ஜேர்மனியில் கிருமிநாசினிகளின் பயன்பாடு வருடத்திற்கு வருடம் குறைத்துக்கொண்டு வருகின்றார்கள்.தாவர வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வரும்   கெமிக்கல் பசளைகளை ஒரு கால எல்லைக்கு பின் பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளார்கள். இதெற்கெல்லாம் முக்கிய காரணி புற்றுநோய்தான்.

சட்டங்கள் வலுவாகவும் அரசியல்வாதிகள் ஒழுங்காகவும் இருந்தால் சர்வாதிகார ஆட்சியோ இராணுவ ஆட்சியோ வர சந்தர்ப்பமில்லை.
 

ஒன்றை ஊக்குவிப்பது வேறு. அதை மட்டுமே அனுமதிப்போம் என்பது வேறு. ஐரோப்பாவில், வட அமெரிக்காவில் இயற்கை விவசாயம் பற்றி சிறந்த முறையில் அறிவூட்டுகின்றார்கள். அதன் பலனாக இயற்கை விவசாயம் தொடர்பான ஆர்வமும் முயற்சியும் அதிகரிக்கின்றது. இப்படியான செயல்முறை தான் சரியாக வரும். அதை விட்டுட்டு இயற்கை விவசாயத்தை மட்டுமே அனுமதிப்போம் என்பது ஒரு போதுமே மக்களால் விவசாயிகளால் ஏற்றுக் கொள்ள முடியாதது. அத்துடன் தமிழக மக்களின் சனத்தொகை அளவுக்கு இது சாத்தியமும் இல்லை.
 

53 minutes ago, Nathamuni said:

சிங்கப்பூரில் எப்படி சாத்தியமாகியது?

அன்பான சர்வாதிகார அரசு.

அதேயே தான் சீமான் வலியுறுத்துகிறார். 

அதே வேளை சீமானின் திட்டங்கள், தமிழ் நாட்டில் சிலர் எள்ளி நகையாடும் போதே,  ஓவென்றும் வெவேறு மாநிலங்களில் அமுலாகின்றன.
 

சிங்கபூர் ஒரு சுண்டைங்காயளவு உள்ள நாடு. மிகச் சிறிய சனத்தொகை கொண்ட நாட்டில் அது சாத்தியம். அத்துடன் சிங்கபூர் ஒரு நாடு, தமிழகம் மாதிரி மத்திய அரசில் தங்கி நிற்கும் மானிலம் அல்ல.
 

இதே மாதிரித்தான் வரதட்சணைக்கு தடை (புலிகளால் கூட தம் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் செய்ய முடியாமல் போன விடயம்),  தமிழில் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் அரசு பணி (தமிழும் படித்து இருந்தால் தான் அரசுப் பணி என்று இருந்தால் நன்று என்பது மாற்று இதுக்கு), ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும் என்பதெல்லாம்.

சீமான் இன்னும் உணர்ச்சிவசப்பட்ட அரசியலில் இருந்து வெளிவரவில்லை என்பதுதான் இவற்றின் அர்த்தம். மிக இலகுவாக மக்களால் இவரது இத் திட்டங்கள் நிராகரிக்கப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதை சொல்லும் சினிமா எடுத்தாலே தோல்வியை தழுவும் இந்தியாவில்   லஞ்சமும் கசமுசாக்களும் பாலியல் வல்லுறவுகளுமே வளரும்.
வாழ்க வளர்க.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

இதே மாதிரித்தான் வரதட்சணைக்கு தடை (புலிகளால் கூட தம் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் செய்ய முடியாமல் போன விடயம்),  தமிழில் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் அரசு பணி (தமிழும் படித்து இருந்தால் தான் அரசுப் பணி என்று இருந்தால் நன்று என்பது மாற்று இதுக்கு), ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும் என்பதெல்லாம்.

சீமான் இன்னும் உணர்ச்சிவசப்பட்ட அரசியலில் இருந்து வெளிவரவில்லை என்பதுதான் இவற்றின் அர்த்தம். மிக இலகுவாக மக்களால் இவரது இத் திட்டங்கள் நிராகரிக்கப்படும்.

அரசியல்ல இதெல்லாம் சகயம் நிழலி, நீஙகள் தான் ஓவரா கவலைப்படுறீங்க போல....

ஆசியாவிலேயே படித்தவர்கள் அதிகம் கொண்ட இலங்கையில், ஜே ஆர் ஜெயவர்த்தன தனக்கு வாக்களித்தால், சந்திரனிலிருந்தாவது அரிசி கொண்டு வருவேன் என்றார், வென்றார்.

அட, அப்படி கேட்டமா, ரசிச்சமா, நாலு வசனம் போட்டமா, ஜாலியா போயிட்டே இருப்பம். ஓகே...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

+ நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள்

உதாரணமாக, இயற்கை விவசாயத்துக்கு மட்டுமே அனுமதி, கைய்யூட்டு( லஞ்சம் ) வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும், ஆட்சியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்பன நல்ல திட்டங்களாக தெரிந்தாலும் நடை முறையில் சாத்தியமில்லை. இது சாத்தியமாக வேண்டும் எனில் சர்வாதிகார அல்லது இராணுவ  ஆட்சியில் மட்டுமே முடியும்.

 

உண்மைதான் பல சீனர்களுடனும் ரஷியர்களுடனும் கம்யூனிசியம் பற்றி பேசி 
இருக்கிறேன் நேரில் அனுபவித்த அவர்களின் அனுபவம் தூரத்தில் இருந்து 
பொதுவுடைமை என்பதனால் ஆதரித்த எமக்கு இனித்ததுபோல் அவர்களுக்கு அமையவில்லை.

மனித மனம் சுயநலம் மிக்கது எப்பபோதும் எதையாவது சுரண்டி 
சுகவாழ்க்கை வாழ எத்தனிக்கும் என்பதுதான் நிஜம்.
கோவில் செல்லும் ஒவ்வருவரும் கடவுள் ஒரு மூடன் நாம் கையூட்டு கொடுத்து 
அவனிடம் அருளை  பெறுகிறோம் எனும் மனநிலையில் தெரிந்தோ தெரியாமலோ 
வாழ்கிறார்கள் ... அவர்கள்தான் மறைமுகமாக கடவுளை மறுப்பவர்கள்.

நல்லவைகள் எடுத்த எடுப்பில் ஏற்றுக்கொள்ளாது புறக்கணிக்க பட்டாலும் 
கெட்டவைகள் தறிகெட்டு ஆட தொடங்கும்போது கைவிட வேண்டிய நிலைமை எல்லோருக்கும் உண்டு.
இயற்கை விவசாயத்தை இங்கு ஏற்றுக்கொண்டதன்  காரணம் ... செயற்கையால் கண்ட அவஸ்தைதான்.
இந்த அனுபவங்களை பரப்புரை செய்வதன் மூலம் ஒரு விழிப்புணர்வை கொண்டுவர முடியும்.
இப்போ நிறைய இயற்கை வேளாண்மை தமிழ்நாட்டில் நடக்கிறது. 

அதுக்காக தேர்தல் பரப்புரையில் நல்லவைகளை சொல்வதில் தவறில்லை 
தமிழ்நாடு திருந்த 25 வருடம் குறைந்தது தேவை 
சீமான் முதலமைச்சர் ஆனாலும் அது முடியாத ஒன்று ...
அதுக்காக முயற்சிக்காதே என்பது ... அதைவிட  கீழானது.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2019 at 1:40 PM, நிழலி said:

+ நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள்

உதாரணமாக, இயற்கை விவசாயத்துக்கு மட்டுமே அனுமதி, கைய்யூட்டு( லஞ்சம் ) வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும், ஆட்சியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்பன நல்ல திட்டங்களாக தெரிந்தாலும் நடை முறையில் சாத்தியமில்லை. இது சாத்தியமாக வேண்டும் எனில் சர்வாதிகார அல்லது இராணுவ  ஆட்சியில் மட்டுமே முடியும்.

 

Monsanto loses millions of dollars after Indian farmers switch to indigenous seeds

Monsanto claims that the genetically modified cotton seeds they sell are superior. So why are so many people trying to switch?

Ruth Milka / NationofChange / News Report - March 9, 2017
2012721101822590734_20.jpg

Get news the mainstream media doesn’t want you to see.

Sign Up
 

Monsanto is losing millions of dollars now that farmers in India are switching to indigenous cotton seeds rather than Bt cotton.

The agrochemical company is known for pushing a form of Bt cotton in India for the last decade. They have been accused of manipulating laws in order to enter the Indian market.

Monsanto’s manipulation and greed in India has caused hundreds of thousands of Indian farmers to commit suicide. Between the years of 1995 and 2013, more than 300,000 farmer suicides occurred, many of which were linked to Monsanto. Farmers are forced to pay for Monsanto’s costly seeds, which then force them to pay for the expensive pesticides to effectively grow them, as Bt cotton’s pest resistant quality fades over time.

These farmers are losing their lands, and their livelihoods, due to the debt they incur trying to afford Monsanto’s products. Many of the farmers drink the chemical insecticides in order to commit suicide.

But recently the Indian government has been promoting the use of indigenous seeds as an alternative. In the past year Monsanto has lost $75 million in royalties from the switch. As Keshav Raj Kranthi of India’s Central Institute for Cotton Research stated, “Just wait for the crucial three to four years to see a complete, natural turnaround. By then most farmers will give up Bt cotton and go for the indigenous variety.”

Monsanto claims that the genetically modified cotton seeds they sell are superior, but places in West Africa, where Monsanto is similarly pushing their Bt seeds, rejected the gm seeds after finding it produced poor quality cotton.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் போன்றவர்கள் ஆட்சியை பிடிக்க விடமாட்டார்களே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.