Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு….

April 8, 2019

lasantha-gotta-sarath-mahi.jpg?resize=80முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கெதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  படுகொலைச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகளே இவ்வாறு கோத்தாபய ராஜபக்ஸவுக்கெதிராக சிவில் வழக்கொன்றை அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டு அமெரிக்காவுக்குச் சென்றுள்ள கோத்தாபய எதிர்வரும் 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என்னும் நிலையில் மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://globaltamilnews.net/2019/117836/

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய வாழ்வு இலங்கைச் சிறையில் முடியுமென இறுமாப்பாக சொன்ன தலைவரே நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக என வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, poet said:

என்னுடைய வாழ்வு இலங்கைச் சிறையில் முடியுமென இறுமாப்பாக சொன்ன தலைவரே நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக என வாழ்த்துகிறேன்.

உங்களுக்கு வெள்ளை வானை அனுப்பவில்லை என்ற பெரும் நன்றியோட இருக்க வேண்டும் கவிஞரே. ஒரு காண்டாமிருகத்தின் வாயில் சிக்கி, தப்பி வந்து இருக்கிறீர்கள்.

இவரது ஜனாதிபதி கனவு, கனவாகவே போக ஆப்பு இறுக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமை நீக்க மனு, இந்த வழக்கு தீரும் வரை, நகராது.  

அதற்கு முன்னதாக, இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஒரு காண்டாமிருகத்தின் வாயில்

காண்டாமிருகம் அப்பிராணி. அது தாவரங்களை உண்ணும்.

இந்த மாதிரி நரமாமிசம் திண்ணும் சிங்களப் பேரின இனப்படுகொலை.. போர்க்குற்ற.. அரச பயங்கரவாதிகளை காண்டாமிருகத்துடன் ஒப்பிடுவது தவறு.

இந்தக் கொடூரனின் அழிவில் மனித குலம்.. ஒரு நிம்மதிப் பெருமூச்சுவிடும்.. அந்தளவுக்கு இந்தப் பிசாசு.. மனித இனத்தை கொன்று வேட்டையாடியுள்ளது. இந்த பிசாசின் உச்சத்தாண்டவத்தின்.. 10 வருடங்கள் கழிந்தும்.. அந்த வடு ஆறவில்லை. 🙄

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள்

கோத்தபய ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையின் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவிக்கின்றது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஷ்மின் சூகா இந்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த தகவலை கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா - கலிஃபோர்னியா நீதிமன்றமொன்றில் சிவில் வழக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் இளைஞர் ஒருவரும், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவிக்கின்றது.

கனடா பிரஜையான ரோயி சமாதானம் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சித்தி ரவத்தைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றஞ்சுமத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவுக்கு கடந்த ஞாயிற்றுகிழமை இரவு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷஅமெரிக்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலிஃபோனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கோத்தபய ராஜபக்ஷவை தனியார் விசாரணை குழுவொன்றின் மூலம் கண்டறிந்து, இந்த அறிவித்தலை கையளித்ததாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும் என்றால், தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஷ்மின் சூகா, அவரை விசாரணையில் சிக்க வைக்கும் இறுதித் தருணம் இதுவெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-47859882

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

உங்களுக்கு வெள்ளை வானை அனுப்பவில்லை என்ற பெரும் நன்றியோட இருக்க வேண்டும் கவிஞரே. ஒரு காண்டாமிருகத்தின் வாயில் சிக்கி, தப்பி வந்து இருக்கிறீர்கள்.

இவரது ஜனாதிபதி கனவு, கனவாகவே போக ஆப்பு இறுக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமை நீக்க மனு, இந்த வழக்கு தீரும் வரை, நகராது.  

அதற்கு முன்னதாக, இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிடும்.

கேட்க... எவ்வளவு, சந்தோசமாக இருக்கின்றது.
அது நடந்தால்... நாதமுனியரின் வாயில் சர்க்கரை போட வேணும். :)

மகிந்தவின் பாரியாரும்... இவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த சம்மதம் இல்லையாம்.
அப்படி இவர் ஜனாதிபதியாக வந்தால், மகிந்த ஓரம் கட்டப்  படுவார் என்று பயப்படுகின்றார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடும்ப உறவுகள் நாதமுனி, நெடுக்காலபோவான், தமிழ்சிறி அனைவருக்கும் நன்றியும் அன்பும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவிற்கு எதிராக ஏன் வழக்கு - பீரிஸ் கருத்து

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுவதை தடுப்பதற்காகவே அவரிற்கு எதிராக  அமெரிக்காவில் இரு வழக்குகள் தாக்கப்பட்டுள்ள என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக  அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடும் கோத்தபாய ராஜபக்சவின் முயற்சிகளை குழப்புவதற்காக சில சக்திகள் இதனை செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அவர் உறுதி செய்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவிற்கு ஒவ்வொரு வருடமும் விஜயம் மேற்கொள்கின்ற போதிலும்  லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு  பத்து வருடங்களிற்கு பின்னரே  இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

gotabayaaaaaaaa.jpg

உள்நோக்கம் கொண்டவர்கள் நீதித்துறையை பயன்படுத்துகின்றனரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.virakesari.lk/article/53649

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா பயங்கரமான சித்திரவதைகளை கண்முன்னே நிகழ்த்தினார் – பரபரப்புத் தகவல்

 

 

கடத்தப்பட்டு கொண்டுவரப்படும் தமிழ் இளைஞர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரமான சித்திரவதைகளை தனது கண்முன்னே கோட்டா நிகழ்த்தினார் என றோய் சமாதானம் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் வெள்ளை வானில் கடத்தப்படுபவர்களில் சிலர் எரியூட்டப்பட்டனர் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது தமிழரான றோய் சமாதானம் அமெரிக்காவில் வழக்கினைத் தொடர்ந்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்

 

http://athavannews.com/கோட்டா-பயங்கரமான-சித்திர/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.