Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று தமிழ்ப்புத்தாண்டா? அது உண்மையா?

Featured Replies

  • தொடங்கியவர்
5 hours ago, மல்லிகை வாசம் said:

கி.பி 1505க்கு முன்னர் ஐரோப்பியர் ஈழத்தில் தமது மதத்தைத் திணிக்கும் முன்னர் அங்கு வாழ்ந்த இந்துத் தமிழர் கொண்டாடிய புத்தாண்டு என்பதால் தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. அக் காலத்தில் இப்போது நாமெல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு பின்பற்றும் ஆங்கில கலண்டரின் சனவரி 1ஆம் திகதியைக் கொண்டா டியது இல்லை தானே? இப்போது அதையும் கொண்டாடுவதால் அன்றைய தமிழர் கொண்டாடிய புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்று வேறுபடுத்திக் காட்டவேண்டியிருக்கிறது.

மல்லிகை வாசம் ஆங்கில கலண்டர் என நாம்  அழைக்கும் கலண்டர் முறை எல்லோரும் பின்பற்றுவதற்கு காரணம் எவரது வற்புறுத்தலும் இல்லை. அதை எல்லோரும்  விரும்பிப்  பின்பற்றுவதற்கு காரணம் அது காலக்கணிப்பை துல்லியமாக காட்டக்கூடியவாறு அறிவுபூர்வமாக உருவாக்கப்பட்டதால் ஆகும். சித்திரைப்புத்தாண்டு போல்  முட்டாள்த்தனமாக 60 ஆண்டு என்ற சுழற்சியில் அறிவு கெட்ட முறையில் உருவாக்கப்படவில்லை.  சித்திரைப் புத்தாண்டுத்  திகதியில் உங்கள் பிறந்த திகதியை எழுத  முடியுமா? அதை வைத்து உங்கள் வயதையோ வாழும் காலப்பகுதியையோ கணிக்க முடியுமா? அறிவில் சிறந்து விளங்கியதாக கூறப்படும் தமிழர்களால் இவ்வாறான பைத்தியக்கார கலண்டர்முறையை உருவாக்கினார்கள் என்பது எமக்கு பெருமையா? நிச்சயமாக இல்லை. 

Edited by tulpen

  • Replies 89
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாசித்தது:

சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்.. தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம் இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள். சித்திரை 1 ஆடி 1 ஐப்பசி 1 தை 1 இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...? "சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும். வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.... ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்... இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்? சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox) அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice) மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox) மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice) இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

#சித்திரை (vernal equinox) - புத்தாண்டு.

#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.

#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.

#தை 1(winter solstice) - பொங்கல். இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்... #நமத#முன்னோர்கள் "#தன்னிகரற்ற"

#மாபெரும் #அறிவாளிகள் . #மிகவும் #மகத்தானவர்கள்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🌍

11 hours ago, Sasi_varnam said:

நான் தமிழர் நாகரீகம் முப்பது நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது, தொன்மையானது, முதல் நாகரிகங்களில் ஒன்று என்பதை உணர்ந்து அந்த தொன்மையை உலகிற்கு சொல்ல முற்படுகின்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்கின்றேன், நீங்கள் தமிழர் நாகரீகம் என்பது ஆரியரது நாகரீகத்திற்கு பிறகானது என்கின்றீர்கள். 

"சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே
"

இது தமிழ் மந்திரம் அல்ல, சசி வர்ணம். நீங்கள் குறிப்பிட்ட ஆரியரின் சமஸ்கிருத மந்திரம். அதற்காக உங்களின் பெயரை மாற்றும்படி யாரும் கேட்க மாட்டோம். இது போல தவிர்க்க முடியாத கலப்புகள் - அவை பெயராகட்டும், மதச்சடங்குகள் ஆகட்டும் - தமிழ் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்து விட்டன. ஐரோப்பிய கலண்டர், ஆட்சி முறை போன்றவை பின்னர் நம்மிடையே கலந்தது போல. ஆகவே, தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது தவறல்ல என்பதே என் வாதம். புரிந்ததா சசி வர்ணம்.

தமிழ் ஆரியத்துக்கும் மிக மிக மூத்தது என நன்கு புரியும். ஆனால் விவாதம் அதுவல்ல. தமிழை முன்னிலைப்படுத்த இது தான் வழி அல்ல. 

  • தொடங்கியவர்
4 hours ago, Nathamuni said:

வாசித்தது:

சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்.. தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம் இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள். சித்திரை 1 ஆடி 1 ஐப்பசி 1 தை 1 இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...? "சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும். வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.... ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்... இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்? சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox) அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice) மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox) மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice) இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

#சித்திரை (vernal equinox) - புத்தாண்டு.

#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.

#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.

#தை 1(winter solstice) - பொங்கல். இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்... #நமத#முன்னோர்கள் "#தன்னிகரற்ற"

#மாபெரும் #அறிவாளிகள் . #மிகவும் #மகத்தானவர்கள்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🌍

நாத முனி  நீங்கள் வாசித்த இத்தகவலை முகநூலில் நானும் பார்த்தேன். இது  60 ஆண்டுகளுக்கு மேல் எந்த கால கணிப்பையும் காட்டமுடியாத பைத்தியக்கார சித்திரை கலண்டரை உருவாகியவர்கள் அறிவாளிகள் என்று நினைக்கும் அளவுக்கு இதை முகநூலிலில Share பண்ணும் பேதைகளாக நம்மவர்கள. உள்ளார்கள். சூரியன் கிழக்கில் உதிப்பதாக இலங்கை இந்தியாவில் தான் கூறுவார்கள். அதற்கு காரணம் மத்திய கோட்டுக்கு அண்மையாக இந்த பிரதேசம் அமைந்திருப்பதால். இங்கு ஐரோப்பியர் யாரும் அப்படி கூறுவதில்லை. அது தெரிந்தும் ஐரோப்பியர் மேல் சகட்டு மேனிக்கு பழிபோட்டுள்ளார் முகநூலில் இதை எழுதியவர். எப்போது பார்தாலும் எங்கள் இந்து மத்ததில் எல்லாம் அறிவு பூர்வமாக எப்போது எழுதி வைத்துள்ளார்கள் என்று புலம்புவது முக நூல்களில் ஒரு வாடிக்கை ஆகிவிட்டது.

Edited by tulpen

  • தொடங்கியவர்

எனது கேள்விக்கு மல்லிகை வாசத்திடம் பதில் இல்லை.  அதனால் அதை தவிர்துததுள்ளார்.  பொதுவாகவே அறிவபூரவமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பத்தாம் பசலித்தனத்தை தூக்கி பிடிப்பவர்களிடம் இருந்து  தகுந்த பதிலை எதிர பார்கக முடியாது. புத்தாண்டு கொண்டாடப்படுவது அல்ல இங்கு பிரச்சனை.  அதை தெளிவாக விளக்கியும் திரும்ப திரும்ப அதை மட்டும் கிளிப்பிள்ளை போல்  கூறுவதன் நோக்கமே அறிவு பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்பதற்காக தான். 

  • கருத்துக்கள உறவுகள்

தை- தமிழர் புத்தாண்டு

 
புத்தாண்டுக்கு சித்திரை முதல் தேதியாக இருந்தால் என்ன? தை மாதமாக இருந்தால் என்ன என்கிற மனநிலைதான். முந்நூற்று அறுபத்தைந்து நாட்களில் ஏதோவொன்று. அதற்கு மேல் என்ன இருக்கிறது? ஆனால் இதில் அரசியல் சாயம் புகுந்து விளையாடுகிறது.  ஒரு தரப்பு தை தான் தமிழர் புத்தாண்டு என்று சொல்ல, பாரம்பரியமாக சித்திரைதானே புத்தாண்டு என்று இன்னொரு தரப்பு மல்லுக்கட்ட என்னதான் இருக்கிறது என்று மண்டை காயாமல் இல்லை. 
 
வானியல் சாஸ்திரம் பற்றிப் பேசக் கூடிய, ஜோதிட நண்பர்கள் உட்பட சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக சில தரவுகளைத் தேடிப் பார்த்தால் மிக நம்பகமான ஒன்றாக Perihelion/Aphelion-ஐ எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
 
அது என்ன Perihelion?
perihelion.jpg
 
 
பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதை நீள்வட்டம் என்றாலும் கூட, நீள்வட்டத்தின் மையத்தில் சூரியன் இருப்பதில்லை. இந்த நீள்வட்டத்தில் சுற்றுகிற புவியானது வருடத்தில் ஒரு நாள் சூரியனுக்கு மிக அருகாமைக்கு வருகிறது. இந்த அருகாமையை Perihelion என்கிறார்கள். சூரிய அண்மைப்புள்ளி. டிசம்பர் மாதத்தில் பூமியின் வடதுருவத்தில் அவ்வருடத்திற்கான மிக நீண்ட இருள் நாள் வரும். அந்த நாளுக்கு சற்றேறக்குறைய இரண்டு வாரங்கள் கழித்து சூரியனுக்கு மிக அருகில் புவி செல்கிறது. Perihelion. கணக்குப் போட்டுப் பார்த்தால் மார்கழி கடைசி வாரம் அல்லது தை முதல் வாரம்.  
 
(ஆறு மாதம் கழித்து புவியானது சூரியனுக்கு வெகு தொலைவில் அமைகிற புள்ளி Aphelion)
 
சரி; புவி சூரியனுக்கு மிக அருகில் சென்றுவிட்டால் அதனை எப்படி புத்தாண்டு என்று எடுத்துக் கொள்ளலாம் என்று கேட்கலாம்.
 
சூரியனானது தினசரி நேர் கிழக்கில் உதித்து நேர் மேற்கு நோக்கிப் பயணிக்கிறதா? ஆறு மாதங்கள் வடகிழக்கில் உதிக்கும் சூரியன் அடுத்த ஆறு மாதங்கள் தென்கிழக்கில் உதிக்கும். எப்படி சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்கிறது?
 
december-solstice-illustration.png

பூமியானது 23.4 டிகிரி சாய்ந்த வாக்கில் சூரியனைச் சுற்றி வருகிறது. இந்த நீள்வட்டத்தின் அரை பாதியில் சுற்றும் போது வடதுருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்திருக்கும். அப்பொழுது பூமத்திய ரேகைக்கு மேற்புறமுள்ள வடக்குப் பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். அடுத்த ஆறுமாதங்கள் நீள்வட்டத்தின் இன்னொரு பாதியில் சுழலும் போது பூமியானது சூரியனை விட்டு வெளியில் சாய்ந்திருக்கும். அந்த ஆறு மாதங்கள் தென்பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த சாய்வு சூரியனை நோக்கியும், சூரியனிடமிருந்து விலகியும் இருப்பதால்தான் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதாகத் தெரிகிறது.  சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் ஆறு மாத காலத்தை உத்தராயணம் என்கிறார்கள். (உத்தரம்: வடக்கு). இந்த ஆறு மாத காலத்தில் வரக்கூடிய மாதங்கள்- தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி. வெப்பம் மிகுந்த காலகட்டம். 
 
சூரியன் தெற்கு நோக்கிப் பயணிக்கும் போது அதனை தட்சிணாயனம் என்கிறார்கள். அந்த ஆறு மாத காலத்தில் வரக்கூடிய மாதங்கள்தான் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,மார்கழி- சூறைக்காற்று, மழை, அடைமழை, குளிர், கடுங்குளிர் என்ற பருவம் மாறி இளவேனில் தொடங்குவதை ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிறார்கள். 
 
இதையெல்லாம் ஓரளவுக்கு புரிந்து வைத்துக் கொள்வதில் தவறேதுமில்லை. வானியல் ரீதியிலாக எடுத்துக் கொண்டாலும் சரி, தமிழர்களின் வேளாண்மை வாழ்வியல் சார்ந்து எடுத்துக் கொண்டாலும் சரி- தை மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது. சங்க இலக்கியங்களில் தைப் பொங்கல் குறித்தான ஏதேனும் குறிப்புகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை ஆனால் தை மாதம் குறித்தான குறிப்புகள் புறநானூற்றில் இருக்கிறது. பொங்கல் குறித்தான குறிப்புகளோ, பிற மாதங்கள் குறித்தான குறிப்புகளோ இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.
 
நானொன்றும் வானியல் வல்லுநர் இல்லை. ஆனால் தை மாதம் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது சரியா தவறா என்று குழப்பம் வரும் போது கருணாநிதி, ஜெயலலிதாவையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு நமக்குத் தெரிந்த வரை சரியான வல்லுநர்கள் வழியாக புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படியான புரிதலின் வழியாக தை ஒன்றாம் தேதியைப் புத்தாண்டு என எடுத்துக் கொள்வது மிகச் சரியானது என்றுதான் தோன்றுகிறது. ஒருவேளை தமிழகம் பூமத்திய ரேகைக்குத் தெற்காக இருந்திருந்தால் இந்த கணக்கு முறையே வேறானதாக இருந்திருக்கக் கூடும். 
 
இத்தகைய விவகாரங்களில் மறைமலையடிகள் உட்பட எந்த அறிஞரைச் சுட்டிக் காட்டினாலும் யாராவது சண்டைக்கு வருவார்கள். அதை முன்வைத்தே உடைக்கவும் செய்வார்கள். யாரையும் சுட்டிக் காட்ட வேண்டியதில்லை. மேற்சொன்ன புரிதலிலிருந்தே பேசலாம். அப்படியும் சம்மதமில்லை என்றாலும் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.
 
மீண்டுமொருமுறை தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
 
35 minutes ago, tulpen said:

எனது கேள்விக்கு மல்லிகை வாசத்திடம் பதில் இல்லை.  அதனால் அதை தவிர்துததுள்ளார்.  பொதுவாகவே அறிவபூரவமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பத்தாம் பசலித்தனத்தை தூக்கி பிடிப்பவர்களிடம் இருந்து  தகுந்த பதிலை எதிர பார்கக முடியாது. புத்தாண்டு கொண்டாடப்படுவது அல்ல இங்கு பிரச்சனை.  அதை தெளிவாக விளக்கியும் திரும்ப திரும்ப அதை மட்டும் கிளிப்பிள்ளை போல்  கூறுவதன் நோக்கமே அறிவு பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்பதற்காக தான். 

கேள்விகளை நீங்கள் மட்டும் கேட்கவில்லை. நிழலியும் கேட்டுள்ளார். நீங்கள் நாத்திகப் பார்வையில் இருந்தும், நிழலி தமிழ் தேசியப் பார்வையில் இருந்தும் கேள்வி கேட்டீர்கள். எனவே திரியை முழுவதுமாக வாசித்து கொடுக்கப்பட்ட பதில்களைப் பாருங்கள். உங்களுக்கான பதில்களும் அங்கே கிடைக்கும்.

கிளிப்பிள்ளைத் தனம் என்பது ஒவ்வொரு வருடமும் நாம் பண்டிகைகளைக் கொண்டாடி மகிழும் போது உங்களைப் போன்றோர் மீண்டும் மீண்டும் இப்படியான வீணான குற்றச்சாட்டுகளை வைப்பது தான். போதிய அளவுக்குப் பதில் சொல்லிவிட்டோம். ஆக வேண்டிய செயல்கள் நிறைய உண்டு. வீண் விவாதத்துக்கு நேரம் இல்லை.

 

  • தொடங்கியவர்
8 minutes ago, மல்லிகை வாசம் said:

கேள்விகளை நீங்கள் மட்டும் கேட்கவில்லை. நிழலியும் கேட்டுள்ளார். நீங்கள் நாத்திகப் பார்வையில் இருந்தும், நிழலி தமிழ் தேசியப் பார்வையில் இருந்தும் கேள்வி கேட்டீர்கள். எனவே திரியை முழுவதுமாக வாசித்து கொடுக்கப்பட்ட பதில்களைப் பாருங்கள். உங்களுக்கான பதில்களும் அங்கே கிடைக்கும்.

கிளிப்பிள்ளைத் தனம் என்பது ஒவ்வொரு வருடமும் நாம் பண்டிகைகளைக் கொண்டாடி மகிழும் போது உங்களைப் போன்றோர் மீண்டும் மீண்டும் இப்படியான வீணான குற்றச்சாட்டுகளை வைப்பது தான். போதிய அளவுக்குப் பதில் சொல்லிவிட்டோம். ஆக வேண்டிய செயல்கள் நிறைய உண்டு. வீண் விவாதத்துக்கு நேரம் இல்லை.

 

இங்கு நாத்திக பார்வையோ தமிழ் தேசிய பார்வையோ இல்லை. அறிவு பூர்வமான கேள்வியே கேட்கப்பட்டது.  சித்திரை கலண்டர் என்பது பைத்தியக்காரத்தனமானது என்து தெளிவானது. ஒருவரது பிறந்த தினத்ததை சித்திரை கலண்டரில் எழுதி அதை வைத்து அவரின் வயதையோ வாழ்ந்த காலத்தையோ கணிக்க முடியுமா என்பது வெரி சிம்பிள்  கேள்வி. 

Edited by tulpen

5 minutes ago, tulpen said:

இங்கு நாத்திக பார்வையோ தமிழ் தேசிய பார்வையோ இல்லை. அறிவு பூர்வமான கேள்வியே கேட்கப்பட்டது.  சித்திரை கலண்டர் என்பது பைத்தியக்காரத்தனமானது என்து தெளிவானது. ஒருவரது பிறந்த தினத்ததை சித்திரை கலண்டரில் எழுதி அதை வைத்து அவரின் வயதையோ வாழ்ந்த காலத்தையோ கணிக்க முடியுமா என்பது வெரி சிம்பிள்  கேள்வி. 

அது இன்னொரு கலண்டர் முறை. இன்னொரு கணிப்பு முறை. எனவே அதை மேலைத்தேய கலண்டருடன் ஒப்பிட்டு அவரின் வயதையோ, வாழ்ந்த காலத்தையோ கணிக்க முடியுமா என்று கேட்பது வேடிக்கையானது. 

16 hours ago, நிழலி said:

மகிந்தவும் அவ்வாறு தான் சொல்கிறார், அவுஸ்திரேலிய பிரதமரும் இதை தமிழ் புதுவருட பிறப்பாக கருதிதான் வாழ்த்துகள் தெரிவிக்கின்றார்.

ஆக, உங்களைப் பொறுத்தவரையில் மகிந்தவும், அவுஸ்திரேலியப் பிரதமரும் தான் தமிழரின் பிரதிநிதிகள். அப்படித் தானே? வேடிக்கையாக இல்லை??? 😁

ஒரு இந்து மதத் தலைவரைக் கேட்டிருக்கலாம். ஏன் சாதாரண இந்து மக்களைக் கேட்டிருக்கலாம். தெளிவாக விளக்கியிருப்பார்கள். அது மதப் பண்டிகை தான்.

16 hours ago, நிழலி said:

மல்லிகை வாசம் இதை இந்து மதம் சார்ந்து கொண்டாடுகின்றார் என்பதற்காக இப் பண்டிகை இந்துப் பண்டிகை ஆக உலகம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. 

இது இலங்கை யிலும் தமிழ் சிங்கள புதுவருடப் பிறப்பாகத் தான் அடையாளபடுத்தப்படுகின்றது.

நானோ, என் போன்ற பலரோ இதை இந்துப் பண்டிகையாகத் தான் கொண்டாடுகிறோம். நமது கொண்டாட்டத்தை உலகம் ஏற்க மறுக்க மற்றவர்களுக்கு உரிமை இல்லை. பிற மதப் பண்டிகைகளை இவ்வாறு தான் கொண்டாட வேண்டும் என நாம் ஆணையிடுகிறோமா??? அவ்வாறு தமிழ் பண்டிகையாக அடையாளப்படுத்தியது இந்துப் பண்டிகையாகக் கொண்டாடுபவர்களின் தவறல்ல.

கோவிலில் மருந்து நீர் வாங்கி நீராடி, கோவிலில் பூசைகள் செய்து, வீட்டில் சுவாமி அறையில் கைவிசேஷம் கொடுத்து / வாங்கி, பொங்கி, இறைவனுக்குப் படைத்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டாடுகிறோம். எனவேே இது இந்துப் பண்டிகை தான்.

16 hours ago, நிழலி said:

கடந்த ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததை திணிப்பு என சொல்லும் நீங்கள் அதற்கும் முன் நிகழ்ந்த ஆரியத் திணிப்பை பற்றி கதைக்கும் போது மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள்.

ஆரியத் திணிப்பு பற்றி எனக்கு நன்கு தெரியும். ஒரு போதும் மறுத்தது இல்லை. வரலாறு என்பது ஆரியத் திணிப்பை மட்டும் கொண்டதல்ல. அதற்கு முன்னும் பின்னுமான - இன்றைய திகதி வரையான சம்பவங்களையும் உள்ளடக்கியது. எனவே, எல்லாத் திணிப்புகளையும் ஆராயப் போனால், எல்லாவற்றையும் கேள்வி கேட்டால் நாம் கொண்டாடுவதற்கு ஏதும் மிஞ்சாது.

ஐரோப்பிய திணிப்பான ஜீன்ஸ், ஷேர்ட், ரை இவற்றை களைந்து விட்டு அலுவலகத்துக்கு கோவணத்துடன் போவதே நியாயம் என்று உங்களுக்கு யாரும் சொன்னால் செய்வீர்களா? இன்னும் நிறைய உதாரணம் சொல்லலாம். ஆகவே புத்தாண்டில் பிழை பிடித்து ஒதுக்கும் நீங்கள் நீங்கள் பயன்படுத்தும் பலவற்றைத் தூக்கி எறிய வேண்டும். பல பழக்க வழக்கங்களை ஆதித் தமிழர் போல் மாற்ற வேண்டும். ஆயத்தமா???

16 hours ago, நிழலி said:

நீங்கள் வாயை பொத்திக் கொண்டு ஆங்கில காலண்டரை ஏற்க வேண்டும் என எவரும் வற்புறுத்தவில்லை. இன்னும் காலம் கடக்கவில்லை, இன்றிலிருந்து தாரளமாக ஆரிய காலண்டரை பின்பற்றி நேற்றில் இருந்துதான் இவ் வருடம் பிறந்தது என பின்பற்றுங்கள்.

நான் ஆங்கிலக் கலண்டரைக் காலத்தின் நிர்ப்பந்தத்தில் பயன்படுத்துகிறேன்.

ஆரியக் கலண்டர் என்று சொல்லி எதிர்க்கும் நீங்கள் தான்,  ஆங்கில கலண்டரையும் எதிர்த்து ஆதி தமிழர் கலண்டரைக் கண்டு பிடித்து அதைப் பின்பற்ற வேண்டும். ஒரு முன்னுதாரணமாக நீங்கள் செய்யத் தயாரா???

16 hours ago, நிழலி said:

நான் தமிழர் நாகரீகம் முப்பது நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது, தொன்மையானது, முதல் நாகரிகங்களில் ஒன்று என்பதை உணர்ந்து அந்த தொன்மையை உலகிற்கு சொல்ல முற்படுகின்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்கின்றேன், நீங்கள் தமிழர் நாகரீகம் என்பது ஆரியரது நாகரீகத்திற்கு பிறகானது என்கின்றீர்கள். 

ஆரியம் தான் பழமையானது என்று நான் ஒரு போதும் குறிப்பிட்டதில்லை. மீண்டும் வாசித்துப் பாருங்கள்.

நமது தமிழ் 3000 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கும் அதிகமான ஆண்டு கால பழமையாக இருக்காதா என ஏங்குபவன் நான்.

லெமூரியாக் கண்டம் சம்பந்தப்பட்ட சரியான ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் முடிவுகளைக் காண ஆவலாயுள்ளேன். இன்னும் பல ஆயிரக்கணக்கான ஆண்டு மூத்த தமிழ் எனப் பெருமை கொள்ளலாம். ஆனால் இது சிக்கலான ஆராய்ச்சி. அதன் பின்னாலுள்ள பல்வேறு அரசியல் தலையீடுகள் இதைச் சாத்தியமாக்குமா என்ற வேதனையும் உண்டு.

On 4/15/2019 at 1:26 AM, நிழலி said:

நாம் இப்படியான வக்கிரமான கதைகளினூடாகவா எம் கலாச்சாரத்தினை பேணுகின்றோம் என அதிர்ச்சிக்குள்ளாகும் போது 'இல்லை' இது இடையில் புகுத்தப்பட்டது என கண்டறியப்படுகின்றது. இடையில் யாரால் / எவரா/ ஏன் / எதற்காக / எப்படி என்று கேள்விகளினூடாக அணுகும் போது நாம் / தமிழர்கள் ஆரியர்களாலும் அடிமைகளாக்கப்பட்டதன் வரலாறு முன்னால் விரிகின்றது.

தமிழர் வரலாறு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சி அண்மையில் கூட விஞ்ஞான பூர்வமாக நிறுவிக் கொண்டு இருக்கும் காலகட்டத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் புகுத்தப்பட்ட ஒன்றை கேள்வி கேட்பது தவறாகாது.

இங்கு தான் நீங்கள் கேட்ட தமிழ் புத்தாண்டு போன்ற  பண்டிகைகள் தவறு என்பதற்கான ஆதாரம் உண்டு. பண்டிகைகளைக் கொண்டாடும் கலாச்சாரம் பற்றிப் பேசும் போது நீங்கள் எழுதியது.

  • தொடங்கியவர்
39 minutes ago, மல்லிகை வாசம் said:

நானோ, என் போன்ற பலரோ இதை இந்துப் பண்டிகையாகத் தான் கொண்டாடுகிறோம். நமது கொண்டாட்டத்தை உலகம் ஏற்க மறுக்க மற்றவர்களுக்கு உரிமை இல்லை. பிற மதப் பண்டிகைகளை இவ்வாறு தான் கொண்டாட வேண்டும் என நாம் ஆணையிடுகிறோமா??? அவ்வாறு தமிழ் பண்டிகையாக அடையாளப்படுத்தியது இந்துப் பண்டிகையாகக் கொண்டாடுபவர்களின் தவறல்ல.

கோவிலில் மருந்து நீர் வாங்கி நீராடி, கோவிலில் பூசைகள் செய்து, வீட்டில் சுவாமி அறையில் கைவிசேஷம் கொடுத்து / வாங்கி, பொங்கி, இறைவனுக்குப் படைத்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டாடுகிறோம். எனவேே இது இந்துப் பண்டிகை தான்.

அது இந்து பண்டிகை என்பது தெரிந்ததே. இப்படிப்பட்ட மூடத்தனமான கலண்டர்முறையை ஆரிய இந்து மதத்தால் மட்டுமே உருவாக்க முடியும் அது ஒன்றே போது அது இந்து பண்டிகை தான் என்பதற்கு. உங்களை கொண்டாட வேண்டாம் என்று யாரும் அங்கு ஆணையிடவில்லை. சும்மா உங்கள் வாதத்திற்கு வலுச்சேர்கக பொய்களை கூற வேண்டாம். 

நீங்கள்  ஆங்கில கலண்டரை எவரது  நிர்பந்தத்தில் பயன்படுத்தவில்லை. உதவாக்கரை இந்து கலண்டரமுறையால் எந்த பிரயோசனமும் இல்லை என்பதால் அறிவு பூர்வமான ஆங்கில கலண்டர் முறையை நாம் எல்லோரும் பயன் படுத்துகிறோம். அறிவு பூர்வமானது உலகில் எங்கு இருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுவோம். ஆரிய திணிளப்புகள் அத்தனையும் காட்டு மிராண்டித்தனமானது. ஆகவே தான்  அதை சுட்டிக்காட்டி கேள்வி கேட்கிறோம். 

ஐரோப்பியர் அறிமுகப் படுத்திய ஜீன்ஸ். கோட் ஆகியவற்றை களைய வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. நாகரீகமானது எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் தான் ஆரிய பத்தாம் பசலித்தத்தை எமது கலாச்சார விழுமியங்கள்  என்று புகழ்ந்தீர்கள் 

 

Edited by tulpen

7 minutes ago, tulpen said:

ஆரிய திணிப்புகள் அத்தனையும் காட்டு மிராண்டித்தனமானது. ஆகவே தான்  அதை சுட்டிக்காட்டி கேள்வி கேட்கிறோம். 

நீங்கள் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு இருங்கோ. வாழ்க்கை முழுவதும் கேள்வி கேட்டலாகவே இருக்கும். வாழ்க்கையை அனுபவிக்க நேரம் கிடைக்காது. வாழ்த்துக்கள்! 😊

  • தொடங்கியவர்
10 minutes ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு இருங்கோ. வாழ்க்கை முழுவதும் கேள்வி கேட்டலாகவே இருக்கும். வாழ்க்கையை அனுபவிக்க நேரம் கிடைக்காது. வாழ்த்துக்கள்! 😊

வாழ்கையை மிக சந்தோசமாக அனுபவித்து கொண்டு தான் இருக்கிறோம். . கோடை காலம் தொடங்கினால் மிக ஜாலியாக ஊர் சுற்றுவோம். ஆரிய இந்து பத்தாம் பசலித்தனத்தை விட்டு வெளியே வந்தாலே ஒரு ஜாலிதான். நெருப்பை நெருப்பு என்று சொல்லுவோம் அக்னிபகவான்  என்று உளற மாட்டோம்.

தாங்கள் இன்று கேட்கும் கேள்ளிபோல் பல மடங்கு கேள்வியை எமது எதிர்கால சந்ததி கேட்கும். அப்போது பத்தம் பசலித்தனம் மறைந்து போகும். 

 

Edited by tulpen

2 minutes ago, tulpen said:

நெருப்பை நெருப்பு என்று சொல்லுவோம் அக்னிபகவான்  என்று உளற மாட்டோம்.  

அப்படியா Tulpen? தமிழில் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று முன்பு சொன்னீர்கள். உங்கள் அழகான தமிழ் பெயரை மற்றவர்கள் முன்னுதாரணமாகப் பின் தொடரட்டும்! நன்றி 😊

  • தொடங்கியவர்
Just now, மல்லிகை வாசம் said:

அப்படியா Tulpen? தமிழில் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று முன்பு சொன்னீர்கள். உங்கள் அழகான தமிழ் பெயரை மற்றவர்கள் முன்னுதாரணமாகப் பின் தொடரட்டும்! நன்றி 😊

உங்களுக்கு புரிதல மிக குறைவு என்பது இந்த பதிலில் இருந்து தெரிகிறது. மீண்டும் நான் என்ன கூறினேன் என்று வாசித்து புரிந்துவிட்டு பதில் எழுதுங்கள். ஒரு வசனத்தை வாசிக்கும் பொது அதன அர்ததத்தை புரிந்து கொள்ளவது உங்களுக்கு கடினமாக உள்ளதா? 

Just now, tulpen said:

உங்களுக்கு புரிதல மிக குறைவு என்பது இந்த பதிலில் இருந்து தெரிகிறது. மீண்டும் நான் என்ன கூறினேன் என்று வாசித்து புரிந்துவிட்டு பதில் எழுதுங்கள். ஒரு வசனத்தை வாசிக்கும் பொது அதன அர்ததத்தை புரிந்து கொள்ளவது உங்களுக்கு கடினமாக உள்ளதா? 

முதலில் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். உலகம் தானாகவே திருந்தும். 

எனக்குப் புரிந்து தான் உங்களுடன் தேவையற்ற விவாதத்தை தவிர்த்தேன். 

அவனுக்கு அக்னிபகவான் என்றால் உங்களுக்கு என்ன? எனது கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். அப்புறம் ஆரியத் திணிப்பு பற்றி பேசலாம். *அதுவும் நேரவிரயம் தான். )

  • தொடங்கியவர்
2 minutes ago, மல்லிகை வாசம் said:

முதலில் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். உலகம் தானாகவே திருந்தும். 

எனக்குப் புரிந்து தான் உங்களுடன் தேவையற்ற விவாதத்தை தவிர்த்தேன். 

அவனுக்கு அக்னிபகவான் என்றால் உங்களுக்கு என்ன? எனது கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். அப்புறம் ஆரியத் திணிப்பு பற்றி பேசலாம். *அதுவும் நேரவிரயம் தான். )

தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று தான் வலியுறுத்தியதாக நீங்கள் கூறிய பொய்யை பற்றி தான் நான் கேட்டேன்.   மற்றப்படி நெருப்பை அக்னி பகவான் என்று ஒரு பைத்தியக்காரன் உளறிக்கொட்டினால் அதனால் எனக்கு ஒன்றும் இல்லை.  

3 minutes ago, tulpen said:

தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று தான் வலியுறுத்தியதாக நீங்கள் கூறிய பொய்யை பற்றி தான் நான் கேட்டேன்.

 

On 4/14/2019 at 8:36 PM, tulpen said:

இந்த 60 ஆண்டுகளில் ஒரு பெயர் கூட தமிழில் இல்லை.  பிளைகளுக்கு தமிழ்பெயர் வையுங்கள். தமிழில் பேசுங்கள்  என்று புலம்பெயர் நாடுகளில் அறிவுரை கூறும் தமிழ் அபிமானிகள் கூட இதைப்பற்றி சிந்திப்பதே இல்லை   

நீங்கள் புலம்பெயர் தமிழ் அபிமானி இல்லையா?

  • தொடங்கியவர்
5 minutes ago, மல்லிகை வாசம் said:

 

நீங்கள் புலம்பெயர் தமிழ் அபிமானி இல்லையா?

இல்லை. நான் அவ்வாறு வலியுறுத்துவது இல்லை. என்றுமே இல்லை. தமிழர்கள் மற்றய சமுதாயத்தால் கெளரவமாக பார்ககபட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனாலேயே தமிழர் மத்தியில் உள்ள ஆரிய மூடப்பழக்கங்களுக்கு எதிராக உள்ளேன். 

Edited by tulpen

6 minutes ago, tulpen said:

இல்லை. நான் அவ்வாறு வலியுறுத்துவது இல்லை. என்றுமே இல்லை. தமிழர்கள் மற்றய சமுதாயத்தால் கெளரவமாக பார்ககபட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனாலேயே தமிழர் மத்தியில் உள்ள ஆரிய மூடப்பழக்கங்களுக்கு எதிராக உள்ளேன். 

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. மூடநம்பிக்கைகள் எல்லா இனங்களிலும், மதங்களிலும் உண்டு. ஆதலால் கவலை வேண்டியதில்லை. அதற்காக நம் முன்னோர் பழக்கங்கள் எல்லாம் மூடநம்பிக்கை இல்லை. சில வெளிப்படையாக தெரியும். இன்னும் பல ஆராய்ச்சிக்குரியவை. இந்தத் திரி போல நீண்டு செல்லும் ஆராய்ச்சி. முடிவே கிடையாது.

  • தொடங்கியவர்
30 minutes ago, மல்லிகை வாசம் said:

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. மூடநம்பிக்கைகள் எல்லா இனங்களிலும், மதங்களிலும் உண்டு. ஆதலால் கவலை வேண்டியதில்லை. அதற்காக நம் முன்னோர் பழக்கங்கள் எல்லாம் மூடநம்பிக்கை இல்லை. சில வெளிப்படையாக தெரியும். இன்னும் பல ஆராய்ச்சிக்குரியவை. இந்தத் திரி போல நீண்டு செல்லும் ஆராய்ச்சி. முடிவே கிடையாது.

நன்றி மல்லிகை வாசம். இது உங்களுக்கும் எனக்குமான  தனிப்பட்ட விவாதம் அல்ல. உங்களை convince செய்வது எனது  நோக்கம் அல்ல. இது ஒரு இணையப்  பதிவு. இதை வாசிக்கும்  பல்லாயிரக்கணக்கான யாழ்கள வாசகர்களிடம் பழமை வாதத்தை களையெடுப்பதற்கான ஊக்கப்படுத்தல் நிகழும். அவர்களிடம் புதிய கேள்விகள் எழும். அறிவிற்கு சிறிதும்  பொருத்தமற்ற பல பழக்கங்களை கொண்டிருக்கும் எமது சமுதாயத்தில் நிச்சயம் மாற்றம் வரும். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
On ‎4‎/‎14‎/‎2019 at 8:56 PM, tulpen said:

 புத்தாண்டின் பெயர்களில் ஒரு தமிழ் பெயர் கூட இல்லை என்பதால் நகைச்சசுவையான அப்படி குறிப்பிட்டேன்.  ஆதி காலத்தில் எமது முன்னோர்கள் சிறந்த நாகரீகத்துடன் வாழ்ந்தார்கள் என்று அகழ்வு ஆராய்ச்சிகளில் எடுக்கபட்ட பொருட்களில் இருந்து கூறபட்டாலும் இடைக்காலத்தில் வாழ்ந்த எமது முன்னோர்கள் வடிகட்டிய முட்டாள்களாக இருந்த‍தால் தமது பெருமை மிக்க கலாச்சார பெருமையை மறந்து அதன் வரலாற்றை கூட பாதுகாக்கமால்  ஆரியரின் கலாச்சசாரத்தை  அப்படியே ஏற்றுகொண்ளுள்ளார்கள் என்று நினைக்கிறேன். 

இதை உங்களிடம் மட்டும் கேட்கவில்லை...உங்களுக்கு ஆதரவாய் கருத்து எழுதும் சுமோ , நிழலி போன்ற எல்லோரிடம் தான் கேட்கிறேன்... வருசத்தில் பெயர்கள் வேண்டுமானால் சமஸ்கிரதமாக இருக்கலாம். ஆனால் இந்த விழாக்கள் எங்களுக்கு உரியது ..உப்ப எதெற்கெடுத்தாலும் ஆங்கில பெயர்களை சூட்டுவது மாதிரி அந்தக் காலத்து தமிழர்கள் சமஸ்கிரத பெயர்கள் ஸ்டைலாய் இருக்குது என்று சூட்டி இருக்கலாம்(அது சரி என்று சொல்ல வரவில்லை). ஆனால் பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டு இது எங்களுடைய வருடப் பிறப்பு இல்லை என்று சொல்வது முட்டாள்தமானது...இங்க பிறக்கின்ற பிள்ளைகளுக்கு ஆங்கில,பிரென்சு பேர்களை வைக்கினம் அதற்காக அவர்கள் எங்கட பிள்ளைகள் இல்லையா? 

சீனர்கள் தொடங்கி அரபிகள் வரை தங்களுக்கு என்று கலண்டர் வருசம் தொடங்கி அதை கடைப் பிடிக்கினம்...ஆனால் தமிழன் செய்யும் போது தான் 1008 முட்டுக்கட்டைகளும்,நொண்டிச் சாட்டுகளும்,குறைகளும் உங்களை போன்ற ஆட்கள் சொல்ல தொடங்குவார்கள் .உங்கள் இன,கலாச்சாரத்தை மதிக்கா விட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து அழிக்காதீர்கள்..மூட நம்பிக்கைகள் பிடிக்கவில்லை அதை தடுக்க வேண்டும் என்று நினைப்பது வேறு. ஆனால் எப்ப பார்த்தாலும் உங்களை மட்டும் புத்திசாலியாய் நினைத்துக் கொண்டு வ.பிறப்பு எங்களுடையது இல்லை. தீபாவளி எங்களுடையது இல்லை. ...சரி அப்ப எது  எங்கள் உடையது?

ஒரு  பக்கத்தால் கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள். இன்னொரு பக்கத்தால் முஸ்லீம்கள் மதம் மாற்றுகிறார்கள்...இன்னொரு பக்கத்தால் சிங்களவர்கள் அடியோடு அழிக்கிறார்கள்  ..நீங்கள் செய்வது   இவர்களையும் விட கேவலமானது.இதுவும் ஒரு வித இன, மத அழிப்பு தான் ....நீங்கள் தெரிந்தோ,தெரியாமலோ உங்களை புத்திசாலியாய் காட்ட இந்த அழிப்பிற்கு துணை போகிறீர்கள்.

உங்களுக்கு இப்படியானவற்றை கொண்டாட விருப்பமில்லா விட்டால் கொண்டாட வேண்டாம்...வெளிநாட்டில் இருக்கிறோம் வெள்ளையன் தான் அறிவாளி என்று அவன்ட காலை  பிடிச்சு கொண்டு இருங்கோ ..அல்லாட்டில் சுமோவை மாதிரி நான் இதெல்லாம் கொண்டாடுவதில்லை 😋என்று சொல்லி கொண்டு கொண்டாடுகிறீர்களோ தெரியாது...ஆனால் தயவு இன, மத சம்மந்தமான கருத்துக்களை எழுதும் போது பொறுப்புணர்ந்து செயற்படுங்கள் 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.