Jump to content

பள்ளிவாசல்களைச் சுற்றி வளரும் புற்களை வெட்டுவதற்காகவே வாட்களைச் சேமித்து வைத்திருந்தோம் - முஸ்லீம் சமய கலாசார அமைச்சர் ஹலீம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிவாசல்களைச் சுற்றி வளரும் புற்களை வெட்டுவதற்காகவே வாட்களைச் சேமித்து வைத்திருந்தோம் - முஸ்லீம் சமய கலாசார அமைச்சர் ஹலீம் !

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலும் அமைந்திருக்கும் முஸ்லீம் பள்ளிவாசல்களில் ராணுவமும் பொலீஸும் இணைந்து தேடுதல் நடாத்தி வருகின்றன. இத்தேடுதல்களின்பொழுது பல்வேறு வகையான வாட்கள், கோடரிகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் நாளாந்தம் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து முஸ்லீம் விவகார அமைச்சரான ஹலீமிடம் பத்திரிக்கையாளர்கள் வினவியபோது, தமது பள்ளிவாசல்கள், முஸ்லீம் அடக்கஸ்த்தலங்களுக்கு அருகில் அமைந்திருப்பதால், அவற்றைச் சுற்றி வளரும் புற்கள் பற்றைகளை அழிப்பதற்கு பல்வேறு உத்திகளை தாம் பாவித்துவருவதாகவும், அவற்றில் ஒரு உத்தியே வாட்களைக் கொண்டு புற்களை வெட்டுவதும் என்று பதிலளித்துள்ளார். அப்படியானால், இவ்வாட்கள் எதற்காக வெளிநாடுகளிருந்து தருவிக்கப்பட்டன என்று கேட்டதாற்கு, இல்லை, இவை அனைத்துமே உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், தனது அமைச்சினால் கண்டியில் தேசிய தெளவீத் ஜமாத் அமைப்பிற்கான கட்டிடம் ஒன்றை அமைக்க அனுமதிகொடுத்தது பற்றிக் கேட்டபொழுது, தான் அப்படிக் கொடுக்கவில்லை என்று மறுதலித்துள்ளார். அத்துடன், அவரின் கீழான காலத்தில் கண்டிமாவட்டத்தில் எத்தனை புதிய மசூதிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது என்று கேட்டதற்கு, 2015 இலிருந்து இற்றைவரை வெறும் 96 மசூதிகள் கட்டுவதற்கு மட்டுமே தாம் அனுமதியளித்ததாக சாதாரணமாகப் பதிலளித்துள்ளார் இந்த முஸ்லீம் விவகார அமைச்சர். 

மூலம் - கொழும்பு டெயிலி மிரர்

நான் நம்பீட்டன் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் பள்ளிக்கு தொழுவ வருபவர்களுக்கு  பாண் வெட்டி கொடுக்க என்று பதில் அளிக்கவில்லை  சாயம் வெழுத்து கிழமைக்கு மேல் ஆகிறது பாய் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

நல்ல காலம் பள்ளிக்கு தொழுவ வருபவர்களுக்கு  பாண் வெட்டி கொடுக்க என்று பதில் அளிக்கவில்லை  சாயம் வெழுத்து கிழமைக்கு மேல் ஆகிறது பாய் 

அவர்கள் பாண் வெட்டுறது கோடரி கடப்பாரை ஏ கே T-56   யால் 
அதுதான் 1990இல் காத்தான்குடி பள்ளிவாசலில் பசியில் வருபவர்களுக்கு 
கொடுத்து பசியாற வைத்திருந்தவர்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதுசரி சாமியார்.. நீங்கள் குளிருக்குப் போத்துப் படுக்க பெட்சீட் பாவிக்கறது இல்லையாம், பரிமளாக்காவின் சாறியைத்தான் பாவிக்கிறதா கேள்விப்பட்டன், உண்மையா??? அதுதான் சாறிஞாபகம் வந்ததோ????😁😂 
    • Published By: VISHNU   04 JUN, 2024 | 03:03 AM   யாழ்ப்பாணத்தை சேர்ந்த போலி மருத்துவர் ஒருவர் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர், சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய் பெறுமதியான அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணித்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட வேளை, காரினுள் இருந்து 15 பவுண் தங்க நகைகள், 05 இலட்ச ரூபாய் பணம் மற்றும் இலட்ச ரூபாய்க்கள் பெறுமதியான அதிநவீன கையடக்க தொலைபேசிகள் 05 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், போலியான வைத்தியர்களுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து  தன்னை வைத்தியராக அறிமுகப்படுத்தி, ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாக கூறி புலம்பெயர் நாடுகளில் வசித்து வரும் தமிழர்களை ஏமாற்றி, பெரும் தொகையான பணத்தினை பெற்று யாழ்ப்பாணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.  இந்நிலையில் யாழ்.நகர் பகுதியில் உள்ள தனது காணியொன்றினை ஒரு கோடியே 42 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வுள்ளதாக கூறி போலியான உறுதி உள்ளிட்ட போலி ஆவணங்களை அனுப்பி, கனடா வாசியிடம் இருந்து ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணத்தினை சட்டவிரோதமான முறையில் (உண்டியல் மூலம்) பெற்றுள்ளார்.  சில தினங்களின் பின்னரே தமக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என கனடாவை சேர்ந்தவருக்கு தெரியவந்துள்ளது.  அதனை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, மோசடியில் ஈடுபட்ட நபர், போலியாக தன்னை ஒரு மருத்துவர் என கூறி புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நபர்கள் பலரிடம் பல ஆண்டு காலமாக இலவச மருத்துவ முகாம்களுக்கு என பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வருகின்றார் என தெரியவந்துள்ளது.  இந்நிலையில் குறித்த நபர் அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காருடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  https://www.virakesari.lk/article/185253
    • முன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 301 இண்டியா கூட்டணி:210 ஏனையவை:32 தமிழகம் தி.மு.க. கூட்டணி:36 அ.தி.மு.க; 3 பா.ஜ.க. கூட்டணி: 0 நா.த.க. 0 https://www.hindutamil.in/
    • 3 சுற்றுகளில் பின்னடைவு... 4-ம் சுற்றில் லீட் அடிக்கும் மோடி! உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மோடி கடந்த 3 சுற்றுகளாக பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், 4-வது சுற்றில் தற்போது மோடி முன்னிலை வகித்து வருகிறார். https://www.vikatan.com/government-and-politics/election/parliament-election-2024-vote-count-live-updates?pfrom=home-main-row  
    • வாராணசியில் மோடிக்கு பின்னடைவு; வயநாட்டில் ராகுல் முன்னிலை | தேர்தல் முடிவுகள் 2024 லக்னோ: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் சூழலில் உ.பி.யின் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயைவிட 5000 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.   நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம்தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் கண்டனர் இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்களைப் பொறுத்த வரையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் முறையே வாரணாசி, வயநாடு தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். வயநாட்டில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா போட்டியிட்டார்.   ADVERTISEMENT HinduTamil4thJune1     உ.பி.யில் கடும் போட்டி: உத்தர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் பாஜக 25 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. இவற்றில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. https://www.hindutamil.in/news/india/1259578-pm-modi-trailing-in-varanasi-by-5-000-votes-rahul-leading-in-wayanad-by-over-13-000-votes.html
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.