Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்கவில்லை – மனோ கணேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்கவில்லை – மனோ கணேசன்

Untitled-2-copy-1.jpg

அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்காமையே புவக்பிட்டிய அமைதியின்மைக்கு காரணம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன் தம்மை பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை.

இந்த விடயம் இது தொடர்பான பொலிஸ் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கும் எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரம் இருக்கின்றதாகவும், எனினும் பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பாததால், ஆளுனர் ஆசாத் சாலியை சந்திக்க செல்ல அவர்களுக்கு தாம் இடம் கொடுத்ததாகவும் அவிசாவளை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி விகும் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எனவே, ‘உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிசாருக்கு இடம் கொடுக்கப்படவில்லை’ என்ற உண்மையை மறைத்து, புனைகதைகளை பரப்பி, அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் பாடசாலை விடயத்தை திரிக்க வேண்டாம் எனவும், சமூக ஊடகங்களை பயன்படுத்தி இனவாதத்தை கிளப்ப வேண்டாம் எனவும் அனைவரையும் கோருகிறேன்.

இத்தகைய ஒரு தேசிய பாதுகாப்பு நெருக்கடி மிக்க சூழலில், அனைவரும் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். அவிசாவளை எனது கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்க நான் அனுமதிக்க மாட்டேன்.

ஆகவே இது தொடர்பாக நாம் பொறுப்புடனும், நிதானமாகவும் நடந்துக்கொண்டு தீர்வை தேட வேண்டுமென, மேல்மாகாண ஆளுநர் ஆசாத் சாலியிடம் நான் இன்றும், நேற்றும் கூறியுள்ளேன்.

திங்கட்கிழமை நான் இப்பாடசாலைக்கு நேரடியாக சென்று, பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் சந்தித்து, நிலைமைகளை அவதானித்து பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளேன்.

நாடாளுமன்ற நுழைவாயிலில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் என்ற பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒவ்வொரு முறை உள்நுழையும் போதும் முழுமையான உடற்பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றோம்.

எமது வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு தரம் உள்நுழையும் போதும் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன. இதுபற்றி அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும்.

இதை அறியாதவர்களுக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் விளயாட முடியாது.

இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையின் அபாயா அணிந்த ஆசிரியர்கள், கடந்த வருடம் பின்தங்கிய தோட்டப்புற தமிழ் பாடசாலைகளுக்கு என விசேடமாக வழங்கப்பட்ட நியமனங்களை பெற்று பணிக்கு வந்தவர்கள் ஆவர்.

இவர்களின் நியமனம் குறிப்பிட்ட பாடசாலையின் பெயர் குறிப்பிட்டு வழங்கப்பட்டவை ஆகும். ஆகவே இவர்களுக்கு இடமாற்றம் ஒருபோதும் வழங்கப்பட முடியாது. இதை இந்த ஆசிரியர்களும், பாடசாலை பெற்றோர்களும் மனதில் கொள்ள வேண்டும்.

ஆசிரிய வேலை செய்து இவர்கள் அரசாங்க சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், வேதனம் பெருகின்ற ஆசிரியர்களின் தொழிலை விட பிள்ளைகளின் கல்வியே முக்கியமானது. அதற்காகவே பாடசாலைகள் இருக்கின்றன.

இந்த விதி இந்நாட்டின் எல்லா இடங்களுக்கும் பொதுவானதாகும். ஆகவே எக்காரணம் கொண்டும் ஏற்கனவே பின்தங்கி உள்ள தோட்டப்புற தமிழ் பாடசாலைகளின் கல்வி தரம் மேலும் மோசமடைய முடியாது. இதற்கு நான் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன்.

இவர்களால் இனி இங்கே பணியாற்ற முடியாவிட்டால், அவர்களுக்கு பதில் வேறு ஆசியர்கள் எமக்கு தேவை. இதுபற்றி எனக்கு விபர அறிக்கை சமர்பிக்கும்படி மாகாண உதவி கல்வி பணிப்பாளர் உதயகுமாருக்கும், பாதுகாப்பு நியதிகளை இந்த பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் கடைபிடிக்கும் முகமாக இப்பாடசாலை கல்வி நடவடிகைகளை முன்னெடுக்கும்படி, இப்பாடசாலை உள்வரும் ஹோமகம வலய கல்வி பணிப்பாளர் வீரசூரியவுக்கும் நான் அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

முகத்தை மூடக்கூடாது என்பது மட்டுமே சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே உடை தொடர்பாக சட்டப்படி எவரையும் கட்டாயப்படுத்த முடியாது என்பதையும் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஆசிரியைகளின் உடை தொடர்பாக பாடசாலைகளில் பாரம்பரியம் மாத்திரமே இருக்கின்றது. இத்தகைய உடை தொடர்பான பிரச்சினைகளுக்கு ஏப்ரல் 21ம் திகதிக்கு முன்னரே இந்நாட்டில் ஆங்காங்கு பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் முகம் கொடுத்துள்ளனர்.
பாடசாலை பாரம்பரிய உடைகளுக்கு சட்ட அடிப்படை கிடையாது. எனினும் எந்த ஒரு சமூகத்திலும் சட்டம், சம்பிரதாயம் ஆகிய இரண்டுமே செல்வாக்கு செலுத்துகின்றன. உண்மையை சொல்லப்போனால், கொழும்பு நகரின் பல பிரபல தேசிய பாடசாலைகளில், பெண் ஆசிரியர்கள் சேலை அணிந்து மட்டுமே பாடசாலைகளுக்குள் நுழைய முடியும். இது அந்த பாடசாலைகளின் சம்பிரதாயம் ஆகும்.

பாடசாலை ஆசிரியர்களுக்கான பொதுவான உடை பற்றி இப்போது அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதுபற்றி செவ்வாய்கிழமை அமைச்சரவையில் உரையாட உள்ளேன். இந்நிலையில் அபாயா அணிந்து வரவேண்டாம் என கூற சட்டத்தில் இடமில்லை.

எனினும் அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்களும், தமது பாடசாலை வளாகத்துக்குள் நுழைவதற்கு முன் தம்மை உடற்பரிசோதனை செய்ய உரிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளோருக்கு இடமளிக்க வேண்டும்.

இது இந்நாட்டில் இன்றைய பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை கட்டாயமாகும். இதில் எவருக்கும் எந்த ஒரு காரணம் கொண்டும் விலக்களிக்க முடியாது.

நடந்து முடிந்த கோர படுகொலைகளின் பின்னர், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பது மிகவும் நியாயமானது.

இன்று தமது பிள்ளைகளின் கல்வியை விட, தமது பிள்ளைகளின் பாதுகாப்பிற்கே பெற்றோர் முதலிடம் வழங்குகின்றனர். இது சரியானது. மேலும் ஒரு பாடசாலை தொடர்பில் அங்கே கல்வி பயிலும் அந்த பிரதேச மக்களுக்கே அதிக உரிமை இருக்கின்றது.

கடமை நிமித்தம் குறிப்பிட்ட காலத்துக்கு பணியாற்ற வரும் ஆசிரியர்கள், இதை புரிந்து நடந்துக்கொள்ள வேண்டும்.

 

 

http://athavannews.com/அபாயா-அணிந்த-ஆசிரியைகள்/

 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அவலத்திலும் தங்கட காரியத்தில் கண்ணாயிருந்து இருக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

எனவே, ‘உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிசாருக்கு இடம் கொடுக்கப்படவில்லை’ என்ற உண்மையை மறைத்து, புனைகதைகளை பரப்பி, அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் பாடசாலை விடயத்தை திரிக்க வேண்டாம் எனவும், சமூக ஊடகங்களை பயன்படுத்தி இனவாதத்தை கிளப்ப வேண்டாம் எனவும் அனைவரையும் கோருகிறேன்.

 

6 hours ago, கிருபன் said:

“அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன் தம்மை பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை.

 

6 hours ago, கிருபன் said:

நடந்து முடிந்த கோர படுகொலைகளின் பின்னர், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பது மிகவும் நியாயமானது.

அமைச்சர் இப்படிச் சொல்லுறார்.. ஆனால்.. இங்கு சிலர்..  அந்த மக்களை காடைகள் என்கிறார்களே. 

அடிப்படையில் நாட்டின் சூழலைப் பயன்படுத்தி.. வேண்டும் என்றே... இடமாற்றம் வேண்டி ஆடப்பட்ட ஆட்டமே இது.

அதற்கு இஸ்லாமிய மத அடிப்படைவாத வெறி பாவிக்கப்பட்டுள்ளது. 

6 hours ago, கிருபன் said:

இந்த விடயம் இது தொடர்பான பொலிஸ் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கும் எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரம் இருக்கின்றதாகவும்

தங்கள் பிள்ளைகளின் பாதுக்காப்பில் கருசணை கொண்டு நடந்து கொண்ட..  பெற்றோர் மீது சட்ட நடவடிக்கைக்கு கோரியவர்களுக்கு அமைச்சர் முகத்தில் அறைந்துள்ளார். 🤣🤣

7 hours ago, கிருபன் said:

இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையின் அபாயா அணிந்த ஆசிரியர்கள், கடந்த வருடம் பின்தங்கிய தோட்டப்புற தமிழ் பாடசாலைகளுக்கு என விசேடமாக வழங்கப்பட்ட நியமனங்களை பெற்று பணிக்கு வந்தவர்கள் ஆவர்.

இதுதான் சங்கதி. நாட்டின் தற்போதைய சூழலையும்.. இஸ்லாமிய மதவெறி புகட்டியதையும்.. கலந்தடித்து.. தங்கள் திருவிளையாடலை அரங்கேற்றி உள்ளனர்.. உந்த முஸ்லீம் ஆசிரியைகள். 

ஆக்கள்.. எப்படி இந்த நாட்டை ஏமாற்றப் பழகி இருக்கிறார்கள்.. பாருங்கள். பொல்லாத கூட்டம். 🙄

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தை மதிக்காத ஆசிரியைகள் ...பதவி பறிக்கப்பட்டிருக்க வேண்டும்...அதைவிட குற்றம் சாட்டப்பட்ட அசாத் அலி எப்படி மாற்றம் கொடுக்க முடியும்....அரசாங்கம் தமது பதவிக்கு ஆபத்து என்று பயப்படுகுது...இங்கை என்னவென்றால் முசுலிமால் பிரச்சினை யாழ்ப்பாணத்தில் வீடு  வீடாகச் சோதினை பதிவு...கம்பஸ்  பொடியள்  கைது...நம்ம அய்யாவும் அடியார்களும் ஆனந்த சயனம் செய்யினம்.....அணில் தாவின  கொப்பிலையே இருக்குது..

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

கடந்த வருடம் பின்தங்கிய தோட்டப்புற தமிழ் பாடசாலைகளுக்கு என விசேடமாக வழங்கப்பட்ட நியமனங்களை பெற்று பணிக்கு வந்தவர்கள் ஆவர்.

பெரிய புத்திசாலிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

1. மனோ கணேசன் ஒன்றும் கூ முட்டை அரசியல்வாதி இல்லை. மிகத் தெளிவாக, ஹிஜாப் அணிந்து போனது சட்டவிரோதம் இல்லை என்றும், அப்படித் செல்வோரை தடுப்பதே சட்டவிரோதம் என்றும் கூறியுள்ளார்.

2. மனோ சொல்லும்வரை, ஆசிரியர்கள் உடற்சோதனைக்கு உட்பட மறுத்தது நமக்கு யாருக்குமே தெரியாது. ஆகவே இப்போ அதைப் பிடித்து தொங்கியபடி, நான் அப்பவே சொன்னேன் என்பது அரிவரிப் பிள்ளையள் சொல்லுமாப் போல இருக்கு. ஆசிரியர்கள் உடற் சோதனைக்கு மறுத்தது பிழை, ஆனால் பெற்றார்கள் அதைதான் வலியுறுத்தி கேட்டிருக்க வேண்டும், இல்லாமல் ஹிஜாபோடு வராதே என்று, கத்தி கூப்பாடு போட்டு அவர்கள் செய்தது காடைத்தனமே.

3. இதில் சம்பந்த பட்ட எந்த தரப்புமே ஆசிரியர்கள் முகத்தை, மூடும் நிகாப், புர்கா அணிந்து வந்தாதாக இன்னும் கூட சொல்லவில்லை. ஆகவே “தடை செய்யப்பட்ட” ஆடையில் ஆசிரியர்கள் வந்தார்கள் என்பது, ஒருவரின் விளக்கமின்மையால் விழைந்தது என்பதும், அதையே இன்னும் சில கருதாளர்கள் பிடித்து தொங்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

4. இலங்கையில் 48 க்கு பின் அரசியல் செய்த, ஆயுத போரட்டம் நடத்திய எந்த தலைவரையும் விட மேல்வீட்டில் சரக்குக் கூடிய ஆள் மனோ. இந்த விசயத்தை, சுமூகமாக தீர்ப்பார் என்பதில் ஐயமில்லை.

அதாவது, ஆசிரியர்கள் முன்னர் போல ஹிஜாப் அணிந்து பணிக்கு திரும்புவர். பிள்ளைகளின் படிப்பும் பாழாகாது. 

 

On 5/11/2019 at 6:52 PM, கிருபன் said:

அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன் தம்மை பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை.

இந்த விடயம் இது தொடர்பான பொலிஸ் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கும் எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரம் இருக்கின்றதாகவும், எனினும் பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பாததால், ஆளுனர் ஆசாத் சாலியை சந்திக்க செல்ல அவர்களுக்கு தாம் இடம் கொடுத்ததாகவும் அவிசாவளை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி விகும் வீரசேகர தெரிவித்துள்ளார்.

உண்மையை மறைத்து ஏமாத்தோ ஏமாத்து என்று ஏமாத்திய முசுலீம் ஆசிரியக் குழுவின் கபடத்தனம் வெளிச்சுப்போச்சு. அதோட இந்தக் கபடதாரிகளை இரவு பகலா பரிந்து பேசியவர்களின் வேஷமும் கலைந்து போச்சே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.