Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்க தலைவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம் – மஹிந்த சூளுரை

Featured Replies

Mahinda.jpg

இந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தெரிந்தே எதுவித நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசாங்கத்தில் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்காலத்தில் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு முக்கிய உரையாற்றினார். இந்த உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 21 ஆம் திகதி அமைதியாக இருந்த இலங்கை மக்களை இலக்கு வைத்து, தீவிரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனால், நாட்டில் அசாதாரண சூழ்நிலைமை ஏற்பட்டது. தேசிய பாதுகாப்பு விடயத்தில் காண்பித்த அசமந்த போக்கே இந்த நிலைமைக்குக் காரணமாக அமைந்தது.

இந்தச் செயற்பாட்டினால், எமது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.விடுதலைப்புலி பயங்கரவாதம் இருந்த காலத்தில் கூட எமது நாட்டில் இவ்வாறான நிலைமை இருந்ததில்லை. இந்த சவாலுக்கு முகம் கொடுத்து வெற்றி பெற வேண்டும்.

உலகிலேயே பயங்கரமான அமைப்பான விடுதலைப் புலிகளுடன் போரிட்டு, வெற்றிபெற்ற எமக்கு இந்த சவாலை வெல்வது ஒன்றும் ஒரு பாரிய விடயமல்ல. இந்த அடிப்படைவாதத்தை ஒழிக்க வேண்டும். அப்பாவி முஸ்லிம்களை பாதிக்கச் செய்துள்ள தீவிரவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக அழிக்க வேண்டும்.

1983 ஆம் ஆண்டு காலத்தில் இருந்த அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்ற கலவரமே எமது நாட்டில் 30 வருடகால யுத்தத்துக்கு வழிவகுத்தது. இதனை நாம் மறக்கவில்லை. எனவே, யாரும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம். பொறுமையாக இருங்கள். நாம் நிச்சயமாக இந்தத் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தெரிந்தே எதுவித நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசாங்கத்தில் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்காலத்தில் நடவடிக்கை எடுப்போம்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்த காலத்தில், அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும். இது மக்களை குழப்பும் ஒரு செயற்பாடாகவே கருதப்படுகிறது.

அனைவரும் அமைதியாகவும், ஐக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். மீண்டும் 83 கலவரம் போன்ற ஒன்றுக்கு நாம் இடமளித்து விடக்கூடாது.எமது எதிர்கால சந்ததியினருக்காக நாம் அவசரப்படாமல் செயற்பட வேண்டும்.” என கூறினார்.

http://athavannews.com/அரசாங்க-தலைவர்களுக்கு-எத/

  • தொடங்கியவர்

இளைஞர்களே உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள்! பொறுமையாகவும் விவேகமாகவும் செயற்படுங்கள்

நாட்டை மீண்டும் மற்றொரு 83 கறுப்பு ஜூலைக்குள் தள்ள சில சக்திகள் முயற்சிப்பதாகவும், அதனைத் தடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

தொடரும் வன்முறைகள் குறத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“1983ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் துணையுடன் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜூலை இனக் கலவரங்கள் தான், நாட்டை 30 ஆண்டு காலப் போருக்குள் தள்ளியது.

அரசாங்கம் தமது பொறுப்பை நிறைவேற்றாவிடினும், மக்கள், குறிப்பாக, இளைஞர்கள் சட்டத்தை தமது கையில் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

பொறுமையாகவும் விவேகமாகவும் செயற்பட வேண்டும். உங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். தீவிரவாதத்தையும், இனவாதத்தையும் தோற்கடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/119894

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ச  நல்லவராய் மாறி விட்டாரா...?
அல்லது... அடுத்த தேர்தலுக்கு,  முஸ்லீம் வாக்குகளை குறி வைக்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

அவருடைய தற்போதைய பிரச்சனை தமிழனுமல்ல முஸ்லீமும் அல்ல,அவருக்கு தேவை தன்னோட ஆட்சியை கவுத்த மைத்திரி குரூப்பை பழி வாங்க ஒரு சந்தர்ப்பம். அது கிடைச்சிட்டுது எண்டு மறைமுகமா சொல்லுறார்.

ஆக  எரியுற வீட்டில அவனவன் எனக்கு என்ன ஆதாயம் கிடைக்குமென்றே குறியாய் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

18 பில்லியன் டொலர் சொத்தும் , இரத்தத்தில் இன்னும் சூடும்,  சிறைக்குச் செல்லவேண்டிய சூழ்நிலையும் இருக்கும் ஒரு சந்தர்ப்பவாதியால் இதை விட வேறு எப்படிக் கதைக்க முடியும் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.