Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: நிறுத்தாவிட்டால் போராட்டம்; சிவாஜிலிங்கம் எச்சரிக்கை!

Featured Replies

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிவாஜிலிங்கம், வரலாற்றுச் சிறப்பு மிக்க கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் புத்த பிக்கு ஒருவரின் தலைமையில் கடந்த ஒருவார காலமாக உடைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த இடத்தை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியிருந்த நிலையில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்படுகின்றது. அத்துடன் கன்னியா வெந்நீரூற்று கிணறுகளுக்கு அருகிலுள்ள சிவன் ஆலயத்தின் தீர்த்தக் கேணியும் உடைக்கப்படுவதாக சிவாஜிலிங்கம் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கன்னியா வென்நீர் ஊற்று பகுதியிலுள்ள பிள்ளையார் கோயில் இடிக்கப்படுவதை நிறுத்தாத பட்சத்தில் எதிர்வரும் வாரம் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/120563?ref=rightsidebar

தமிழரின் பழம்பெரும் பூமிக்கு வந்த பேராபத்து; தமிழ் சட்டவாளர்களிடம் அவசர கோரிக்கை!

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்நிர்மானப்பணிகளின் போது அங்கு காணப்பட்ட இந்துக்கோவிலின் அஸ்திவாரமாந்து உடைக்கப்பட்டு அதற்கு அருகே உள்ள சிவன் ஆலயத்தின் அருகே இடிந்து வீழ்ந்துள்ள கிணற்றினை நிரப்பியதன் காரணமாக குறித்த பகுதியில் நேற்று முதல் பதற்ற நிலை ஏற்பட்டது.

அதனை அடுத்து இன்று மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார வருகைதந்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கலந்தாலோசித்தார்.

கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டு குறித்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் கடந்த ஒருவார காலமாக புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு கையகப்படுத்தியிருந்த நிலையில் இவ் விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியதனூடாக குறித்த பணிகளை நேற்றுடன் உடனடியாக நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருந்த நிலையில் நேற்றையதினம் மீண்டும் அவ் அத்திவார உடைப்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதியில் இன முரண்பாடுகள் ஏற்படக்கூடும் எனும் காரணத்தால் அப்பகுதியின் புனரமைப்புப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்ததோடு இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக தொல் பொருள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.டபிள்யூ. சுமணதாச கரு த்துத் தெரிவிக்கையில்,

“கன்னியா பகுதியில் 5.7 ஏக்கர் காணிப்பகுதியானது அரசினால் தொல்பொருள் திணைக்களத்திற்கு அரச சுற்றுநிருபத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அப்பகுதியில் நாம் கடந்த 2016ம் ஆண்டு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டபின்னர், புனர் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள இருந்த வேளை, போதிய நிதிப்பற்றாக்குறை காரணமாக குறித்த பணிகள் பிற்போடப்பட்டு அவை மீண்டும் இப்போது ஆரம்பிக்கப்படுள்ளன. இதன்போதே குறித்த பகுதியில் எமது பணிகளை முன்னெடுப்பதற்கு தமிழ் சமூகத்தினரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க தனது பேரனின் காலத்திலிருந்து 8ஏக்கரும் 22பேர்ச் அளவுடைய குறித்த காணியானது தம்மால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அதற்காண காணி உறுதிப்பத்திரமும் தம்வசம் இருப்பதாகவும் குறித்த காணியின் உரிமையாளர் கணேஸ் கோகிலறமணி தெரிவித்தார்.

1985 களில் குறித்த பிள்ளையார் கோவிலானது பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் 2002ம் ஆண்டு புனர்நிர்மாணப் பணிக ளுக்காக குறித்த கோவிலானது இடிக்கப்பட்டபோது வில்கம் விகாரையின் பிக்குவால் இடையூறுகள் ஏற்படுத் தப்பட்டு சுமார் நான்கு வருடங்களாக அது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்றத்தில் நடைபெற்றதா கவும் தெரிவித்தார்.

குறித்த வழக்கின் பிரதான சாட்சியாளரான தேரர், குறித்த வழக்கிற்கு வருகை தராததன் காரணமாக வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு நான்கு வருடத்தின் பின்னர் குறித்த காணி தொல்பொருள் திணைக்களத்தினரால் சுவீகரிக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டார்.

அரசினால் எந்தவொரு காணியும் கைப்பற்றப்பட முன்னர் குறித்த காணியின் உரிமையாளாருக்கு அது தொடர் பிலான அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டுமெனினும் இது தொடர்பிலான எந்தவொரு அறிவித்தலும் தமக்கு வழங்கப்படாது அடாத்தாக குறித்த காணி தம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்டார்.

இதற்கு எதிராக வழகு தொடர்வதற்கு தமக்கு நீதித் துறையில் சிரேஷ்ட நிபுணர்களது உதவி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

https://www.ibctamil.com/srilanka/80/120616?ref=rightsidebar

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

மொடிக்கு தந்தியடியுங்கோ .........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை தமிழ் அரசியல்வாதிகள் பார்லிமெண்டுக்கு போய் என்னத்தை புடுங்குதுகள் எண்டு எனக்கு தெரியேல்லை? 😡
அது......அது நான் சொன்னனே........அந்தக்காலம் எல்லாம் போயிட்டுது.....அவங்கள் சும்மா கொக்கரிச்சுப்போட்டு சம்பளம் எடுத்து சொகுசாய் வாழ்வாங்கள்.🤬
எங்கடையள் அரைப்பரப்பு காணிக்கு கோட்டு கச்சேரி  எண்டு ஏறி இறங்க வேண்டியதுதான்..:(

  • தொடங்கியவர்

 

சம்மந்தப்பட்ட பிரதேசத்தை பிரதிநிதிதத்துவப்படுத்தும் சம்மந்தன் இன்னும் வீரகேசரியில் இந்த செய்தியைப் படிக்கவில்லையாம்! அதனால் மோடிக்கு வாழ்த்திவிட்டு இன்னும் அரச சொகுசுகளை அனுபவித்தபடி நித்திரையில் இருக்கிறார்!

பௌத்தமயமாகும் கன்னியா வெந்நீர் ஊற்று

 

தமிழர் தலைநகரில் புராதன பிள்ளையார் ஆலயம் பௌத்த பிக்குவின் மேற்பார்வையில் உடைப்பு!

திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரத்தை பௌத்த பிக்குவின் மேற்பார்வையில் உடைக்க தொல்பொருள் திணைக்களம் துணை போகின்றது.

சட்டம் பௌத்தத்திற்கும் இந்துவிற்கும் இடையே பாகுபாடு காட்டுவதினால் இலங்கையில் எப்படி நல்லுறவு ஏற்படும் என கன்னியா தென் கையிலை ஆதினத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்துள்ளார்.

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய அத்திவாரத்தை உடைத்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு 25ஆம் திகதி கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த 22ஆம் திகதி ஆலயத்தின் அன்றாட பூசைக்கு நாம் சென்ற பொழுது எமது புராதன பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த நாம் “அதனை ஏன் உடைக்கின்றீர்கள்” என கேட்டோம்.

அதற்கு பதிளித்த சிலர் “இவ்விடத்தில் பௌத்த விகாரை அமைக்கவுள்ளோம்” என தெரிவித்தனர்.

உடனடியாக அங்கிருந்து சென்று பலருக்கும் இதை தெரிவித்தேன். அத்துடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அதை நிறுத்தினோம்.

எனினும் வரலாற்று பொக்கிசங்களையும் ஆலயங்களையும் தொல்பொருள் திணைக்களம் பௌத்த பிக்குமாரின் தலையீட்டின் காரணமாக அபகரித்து வைத்து அவற்றை உடைத்து அழிப்பதுடன், இந்த நிலை நீடித்துக்கொண்டே போகின்றமை இன நல்லுறவுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்.

கன்னியா இந்துக்களுக்கும், தமிழர்களுக்கும் சொந்தமான பாரம்பரிய இடம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இதை அனைவரும் ஏற்கும் நிலையில் சில பௌத்த குருக்களின் அடாத்தான செயற்பாடுகள்லேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இவை நிறுத்தப்பட வேண்டும் என கன்னியா தென் கையிலை ஆதினத்தின்குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/120854

  • தொடங்கியவர்

சம்பந்தனின் கோட்டையும் பறிபோகும் அபாயத்தில்! உடனடி தடுப்பு நடவடிக்கை அவசியமென எச்சரிக்கை!

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோட்டையான திருகோணமலை மாவட்டத்தில் முக்கிய பகுதிகள் எல்லாம் சிங்கள பௌத்தமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. அதில் சைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க கிண்ணியா பகுதியும் பறிபோகும் அபாயத்தில் இருக்கின்றது

தமிழர் ஒருவருக்கு சொந்தமான பூர்வீக பகுதியை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மன்னன் இராவணனால், கிண்ணியா வெந்நீர் ஊற்று அமைக்கப்பட்டது என்ற வரலாற்றுப் பதிவுகளின்படி அப்பகுதி தமிழர்களின் பாரம்பரியத்துடன் இரண்டறக் கலந்த மிக முக்கியமான பிரதேசமாக கொள்ளப்பட்டு வருகின்றது.

வராலாற்று சிறப்பு மிக்க இப்பகுதியை திட்டமிட்டு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடையாளமாக மாற்றுவதற்கான முயற்சிகள் அரசாங்கத்தின் ஆசியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஒருபோதும் நாட்டின் நல்லிணக்கத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் வழிவகுக்காது என்பதை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனையோரும் உணர்ந்து கொள்வது அவசியம். எந்தெவொரு மதத்துக்கும் எந்தவொரு மதவாதிக்கும் ஏனைய மதங்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கும் அந்த மத சின்னங்களை அழிப்பதற்கும் அதிகாரம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். குறிப்பாக, இந்த வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள வில்கம் விகாரையைச் சேர்ந்த தேரர்களால் இப்பகுதியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இவைகளை தடுத்து நிறுத்துவதற்கு அவ்வப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதிலும் அதற்கு நிரந்தர தீர்வுகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என்பது கண்டனத்துக்குரியதாகும். இதுவரையில் ஆட்சியில் இருந்தவர்களும் இன்று ஆட்சியில் இருப்பவர்களும் தமிழ் மக்களின் மீது சிங்கள பேரினவாதம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த முற்பட்டதே இந்த நாடு கடந்த முப்பது ஆண்டுகளாக மிகப்பெரிய அவலங்களுக்கும் சீர்கேடுகளுக்கும் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதை உளமார உணர்ந்தவர்களாக ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் தென்படவில்லை. இந் நிலை மாற்றப்படவேண்டும்.

இந்நிலையில் தற்போது, குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு அப்பகுதியை கையகப்படுத்தும் செயற்பாடொன்று முழு மூச்சில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. வில்கம் விகாரையைச் சேர்ந்த தேரர்களும் தொல்பொருள் திணைக்களமும் காணியின் உரிமையாளரும் பிள்ளையார் ஆலய அறங்காவலருமான திருமதி.க.கோகிலறமணியிடம் இருந்து அக்காணியை பறிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.22பேர்ச் அளவுடைய இக்காணியை கோகிலறமணியின் பேரனுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆரம்பத்தில் இக்காணியை கொள்வனவு செய்வதற்கான பேச்சுக்களையே தேரர்கள் முன்னெடுத்திருந்தனர். எனினும் உரிமையாளரான கோகிலறமணி அதற்கு சம்மதித்திருக்கவில்லை.

இந்நிலையில், அக் காணியைக் கையகப்படுத்துவதற்கு முனையும் தேரர்களின் செயற்பாட்டுக்கு இசைவாக, அரசாங்கமும் வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருக்கின்றது. இதன்மூலம் வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்தமயமாக்கலை அரசாங்கம் ஊக்குவிப்பதற்கு துணைபோகின்றது என்பது உறுதியாகின்றது.

வடக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்கள, பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்துவதற்கு எவ்விதமான முறையான செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அதேநேரம் அதனை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கும் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என அடையாளம் காட்டி வரும் கூட்டமைப்பில் உள்ள தற்போதைய பிரதிநிதிகளும் தயாராக இல்லை.

ஆரம்பத்தில் தமிழர்களுக்கு தீர்வினைத்தரும் புதிய அரசியலமைப்பு வருகின்றது ஆகவே அரசாங்கத்தினை எதிர்க்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பு இருந்து வந்தது. தற்போது அரசாங்கம் தமிழ் மக்கள் சார்ந்து எதனையும் செய்வதாக இல்லை என்று நன்கறிந்த பின்னரும் அதே நிலைமையில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

தற்போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோட்டையான திருகோணமலை மாவட்டத்தில் முக்கிய பகுதிகள் எல்லாம் சிங்கள பௌத்தமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. அதில் சைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க கிண்ணியா பகுதியும் பறிபோகும் அபாயத்தில் இருக்கின்றது.இதேபான்று முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி புத்த சிலையும் கண்காணிப்பு கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமும் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு, இன நல்லிணக்கம் இவற்றை தற்போதைய ஆட்சியாளர்களிடத்திலிருந்தும் எதிர்பார்க்க முடியாதுள்ளது என்பது வெளிப்படையாகிவிட்ட நிலையில், ஆகக்குறைந்தது தமிழர்களின் இருப்பினையாவது பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. அந்த வகையில் தனியாருக்குச் சொந்தமான கிண்ணியா பாரம்பரியப்பகுதியை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக விரைந்து செயற்பட வேண்டியுள்ளது. இல்லாது விட்டால் தமிழர்களின் வரலாறு செறிந்த திருமலை மாவட்டம் பறிபோய் தமிழர்கள் அநாதைகளாகும் நிலைமையே ஏற்படும் ஆபத்துள்ளது.

இனியும் அமைதியாக இருப்பதன் ஊடாக அரசை பாதுகாக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதைச் சாதிக்க விளைகின்றார்கள் என்ற கேள்வியே இங்கு எழுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/120910

  • தொடங்கியவர்

இந்துக்களின் பூர்வீகத் தலங்களுக்கு எதிரான மதப்போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது

 

MP-Velukumar-720x450.jpg

தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் இந்து மக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் மதப்போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

அத்துடன், மதம் என்பது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயம் எனத் தெரிவித்துள்ள அவர், அதை விளையாட்டுப் பொருளாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கருதக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டிக் கிளை அலுவலகத்தில், இந்து மத செயற்பாட்டாளர்கள் சிலருடன் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, “போர்முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கிலுள்ள இந்து மக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களும், அடையாளச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் எச்சங்களும் திட்டமிட்ட அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்துவருகின்றனர்.

மன்னார், திருகோணமலை உட்பட நாட்டின் ஏனைய சில பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் இவ்வாறான அட்டூழியங்களை அரங்கேற்றுவது வேதனைக்குரிய விடயமாகும். சில அதிகாரிகளும் இதற்கு பக்கச்சார்பாகவே நடந்துகொள்கின்றனர்.

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுடன் தொடர்புடைய இறைத்தலங்களிலும், ஏனைய இடங்களிலும் ஆய்வுகளை நடத்தவேண்டுமெனில், அதற்கான நடைமுறைகள் உரியவகையில் பின்பற்றப்படவேண்டும். மாறாக மக்களின் மனங்களை நோகடிக்கும் வகையில் எவரும் செயற்படக்கூடாது.

அண்மையில் கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியிலுள்ள விநாயகர் ஆலயத்துக்கும் சோதனை வந்தது. குறித்த ஆலயம் உரிய வகையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கும் தொல்லியல் திணைக்களத்தினர் நுழைந்துள்ளனர். இதற்கு பிக்குமார் சிலரே பின்னணியில் இருந்து செயற்பட்டுள்ளனர்.

எனவே, மதத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் எவரும் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படக்கூடாது. அனுமதிக்கவும் முடியாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்’’ என்று தெரிவித்தார்.

http://athavannews.com/இந்துக்களின்-பூர்வீகத்-த/

  • கருத்துக்கள உறவுகள்
On 5/24/2019 at 9:39 PM, putthan said:

மொடிக்கு தந்தியடியுங்கோ .........

ரியூட்டரில கொழுவி விடுறது தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.