Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் விடுதலைப்புலிகள் புகழ்ந்து பேசிய அமைச்சர்!

Featured Replies

விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/120644

 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மக்களின் மிதவாத தலைவர், இவர் பிரபாகரனை சந்தித்தவர். சம்பந்தருடன் நல்ல தொடர்பில் உள்ளவர்.

ஹிஸ்புல்லா, ரிஷாட், அதாவுல்லாவின் அடாவடி அரசியலினால் ஓரம் கட்டப்பட்டார். ஜனாதிபதி தேர்தல் வரை இவர்கள் அரசியலில் இருப்பார்கள். அதன் பின்னர் சட்டம் அவர்களை கண்டு கொள்ளும்.

இப்போது அவர்கள் ஓரம்கட்டப்படுவதால், இவர் மீண்டும் முன்னணிக்கு வருகிறார்.

தமிழ் பேசும் மக்களாக இணைவது தான் வழி என்பது அவரது நிலைப்பாடு. அதற்க்கான அடித்தளமே இந்த சொல்லாடல். 

8 hours ago, Nathamuni said:

தமிழ் பேசும் மக்களாக இணைவது தான் வழி என்பது அவரது நிலைப்பாடு. அதற்க்கான அடித்தளமே இந்த சொல்லாடல். 

நல்லது நடந்தால் மகிழ்ச்சி. ஆனால் நார்வே நாட்டின் அனுசரணையுடன் நடந்த முக்கிய பேச்சுவார்த்தைகளின் போதும் அதட்கு சில நாட்களுக்கு முன்னரும் இவருடைய செயல்பாடுகள் அவற்றை குழப்பும் நோக்கில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. முக்கியமாக திருகோணமலையில் நடந்த கடத்தல் நாடகம் ஒன்று இந்த பேச்சுகளில் பின்னடைவை தமிழர் தரப்புக்கு தந்திருந்தது. ஆனால் பேச்சு முடிந்த சில நாளில் இவரின் அமைச்சின் பின்னணியில் உள்ளவர்களால் அரங்கேற்றப்பட்ட நாடகம் என தெரியவந்தது. 

அரசின் ஒரு தரப்பாக பங்குபெற்றிய இவர் முஸ்லீம் சமாதான செயலகம் ஒன்று உருவாக்கியதன் பின்னர் தமக்குள் கடிபட்டு கொண்டனர். அந்த கடிபாடுகளை பேர்ச்சுவார்தை மேசையில் கொண்டுவந்து போட்டு தமிழர் தரப்பின் எரிச்சலை கூடியவர் இவர். ICG தனது அறிக்கையில் சுட்டிக்காடியது போல் பின்னர் தனி அலகு என்ற விடயம் பேச்சு மேசையில் வந்து நின்றது. இப்ப வகாபி மார்க்கத்தை பிடித்து அழகு பார்த்து விட்டுவிட்டு புலிகள் மேல் புகழ் படுகிறார். ஆனால் ICGன் 2006 ஆண்டு அறிக்கை காத்தான்குடியில் வகாபி போதனை நடைபெறுவதாகவும் அதனால் மோதல்கள் அங்கு வழமையாக நடக்கிறதென்றும் குறிப்பிட்டுளார்கள். 13 ஆண்டு  கழித்து இப்ப அவர்கள் முஸ்லீம் அரசியலுக்கு பாதகமாக வந்தவுடன் வேறுகதை. அன்று இவர் இந்த குளறுபடி சக்திகளை மீறி தனித்துவத்தை பேணியிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திராது. அதுமட்டுமில்லாமல் அரசை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக இவர்கள் இருந்த நாட்களில் அதை இவர்கள் எப்படியாக பயன்படுத்தி இருந்தார்கள் என்ற ஒரு விமர்சனமும் உள்ளது. 

CGன் 2006 ஆண்டு அறிக்கை: https://www.refworld.org/pdfid/45a4af7f2.pdf

 

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, puthalvan said:

நல்லது நடந்தால் மகிழ்ச்சி. ஆனால் நார்வே நாட்டின் அனுசரணையுடன் நடந்த முக்கிய பேச்சுவார்த்தைகளின் போதும் அதட்கு சில நாட்களுக்கு முன்னரும் இவருடைய செயல்பாடுகள் அவற்றை குழப்பும் நோக்கில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. முக்கியமாக திருகோணமலையில் நடந்த கடத்தல் நாடகம் ஒன்று இந்த பேச்சுகளில் பின்னடைவை தமிழர் தரப்புக்கு பின்னடைவை தந்திருந்தது. ஆனால் பேச்சு முடிந்த சில நாளில் இவரின் அமைச்சின் பின்னணியில் உள்ளவர்களால் அரங்கேற்றப்பட்ட நாடகம் என தெரியவந்தது. 

அரசின் ஒரு தரப்பாக பங்குபெற்றிய இவர் முஸ்லீம் சமாதான செயலகம் ஒன்று உருவாக்கியதன் பின்னர் தமக்குள் கடிபட்டு கொண்டனர். அந்த கடிபாடுகளை பேர்ச்சுவார்தை மேசையில் கொண்டுவந்து போட்டு தமிழர் தரப்பின் எரிச்சலை கூடியவர் இவர். ICG தனது அறிக்கையில் சுட்டிக்காடியது போல் பின்னர் தனி அலகு என்ற விடயம் பேச்சு மேசையில் வந்து நின்றது. இப்ப வகாபி மார்க்கத்தை பிடித்து அழகு பார்த்து விட்டுவிட்டு புலிகள் மேல் புகழ் படுகிறார். ஆனால் ICGன் 2006 ஆண்டு அறிக்கை காத்தான்குடியில் வகாபி போதனை நடைபெறுவதாகவும் அதனால் மோதல்கள் அங்கு வழமையாக நடக்கிறதென்றும் குறிப்பிட்டுளார்கள். 13 ஆனது கழித்து இப்ப அவர்கள் முஸ்லீம் அரசியலுக்கு பாதகமாக வந்தவுடன் வேறுகதை. அன்று இவர் இந்த குளறுபடி சக்திகளை மீறி தனித்துவத்தை பேணியிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திராது. அதுமட்டுமில்லாமல் அரசை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக இவர்கள் இருந்த நாட்களில் அதை இவர்கள் எப்படியாக பயன்படுத்தி இருந்தார்கள் என்ற ஒரு விமர்சனமும் உள்ளது. 

CGன் 2006 ஆண்டு அறிக்கை: https://www.refworld.org/pdfid/45a4af7f2.pdf

 

இவர்கள் என்னதான் பேசினாலும், ஞானசேர தேரர் போன்ற அதி தீவிர வாதிகள் வெளியே விடப்பட்டதன் நோக்கம் இவர்களுக்கு புரியும்.

பிரித்தாளும் சூழ்ச்சியுடன், இஸ்லாமியர்கள் வியாபார ஆளுமை அடக்கி ஒடுக்கும்வரை, தமிழர்களை தமது பக்கத்தில் வைத்துக்கொள்ள, சிங்களவர்கள் முனைவர்.

இந்த தருணத்தில், தமிழ் பேசும் மக்களாக இணைந்து போரிடாமல் இருந்தால், அவர்களுக்கு தான் அழிவு கூட.

காரணம் உள்நாட்டு, வெளிநாட்டு அனுதாபங்கள் எதுவும் இன்றய நிலையில் முஸ்லிம்களுக்கு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் எந்த அளவிலும் ஒற்றுமையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், “விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காகத் தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள்.

எனினும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவரின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது ஒரு பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். #ISIS #eastersundayattacklk #LTTE #SLMC #ரவூப்ஹக்கீம் #தமிழீழவிடுதலைப்புலிகள்

http://globaltamilnews.net/2019/122675/

ஹக்கீம் ஒரு சந்தர்ப்பவாதி!
சிங்களவனை உசுப்பிவிட ஒரு உண்மையை அவிட்டுவிட்டு பார்க்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, போல் said:

விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தலைவரால் அழைத்துப்பேசப்பட்டு

ஒற்றுமையாக

வலுவானதொரு  அமைப்புக்குள் பேச்சுவார்த்தை  தொடர

எடுக்கப்பட்ட முயற்சியை

தலைவரை  சந்தித்து  வந்து  சில  நாட்களிலேயே

தனி  அலகு  கேட்டு கெடுத்ததோடில்லாமல்

அதிலிருந்து  விலகி பலவீனப்படுத்தி

தொப்பி  பிரட்டிய சுயநலவாதி இவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.