Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் சோதனைசாவடிகளின் எண்ணிக்கை குறைப்பு! யாழ். கட்டளை தளபதி உறுதி?

Featured Replies

வடக்கில் உள்ள இராணுவ சோதனை சாவடிகளின் எண்ணிக்கைகளை குறைக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“யாழிலிருந்து, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, செல்லும்போதும், வரும்போது தெற்கில் இல்லாத அளவுக்கு, பெரும் எண்ணிக்கையில் அடிக்கடி, ஏற்றி இறக்கும் சோதனை கெடுபிடிகள் இருப்பதாக எனக்கு தகவல்கள் கிடைத்தது".

இதனையடுத்து, யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சியுடன் நேற்று தொலைபேசியில் கதைத்திருந்தேன். வடக்கில் இருந்து வந்த புகார்களை சொன்னேன்.

தமிழ் மக்களை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கெடுபிடிக்கு உள்ளாக்குவதாக கருத்து நிலவுவதாக சொன்னேன். இதற்கு பதிலளித்து பேசிய யாழ்.மாவட்ட கட்டளை தளபதி,

“ஐ.எஸ் பயங்கரவாதம் மூலம் வடக்குக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதே எம் கரிசனை. இப்போ நிலைமை சுமூகமாகி வருகிறது. சோதனை சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கிறேன்” என உறுதியளித்துள்ளார்

https://www.tamilwin.com/security/01/216719?ref=imp-news

  • தொடங்கியவர்
24 minutes ago, போல் said:

“ஐ.எஸ் பயங்கரவாதம் மூலம் வடக்குக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதே எம் கரிசனை. இப்போ நிலைமை சுமூகமாகி வருகிறது. சோதனை சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கிறேன்” என உறுதியளித்துள்ளார்

இந்த மிலேச்ச சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகள் தெற்கு மக்களை பாதுகாக்க செய்யாதவற்றை வடக்கு மண்ணில் வடக்கு மக்களை பாதுகாக்க செய்கிறார்களாம். இதை நம்புமளவுக்கு மூடர்களாக இன்னமும் வாய்மூடி மௌனியாக இருக்கும் சம்மந்தன், சுமந்திரன், சிறீதரன், சரவணபவன்,  சித்தார்த்தன், அடைக்கலநாதன் போன்ற கையேந்தி அரசியல்வாதிகள் இருக்கலாம். ஆனால் எந்தவொரு தமிழனும் இல்லை!

மே 23ம் திகதி இடப்பட்ட பதிவு!

குண்டு வெடித்தது கொழும்பில், மட்டக்களப்பில். குண்டுகளை வெடித்த மற்றும் உதவிய முஸ்லீம் மற்றும் அரச பயங்கரவாதிகள் வாழ்ந்தது தெற்கில், கொழும்பில், கிழக்கில். சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டது குருநாகல், குளியாபிட்டிய போன்ற பகுதிகளில்.

இந்தப் பகுதிகளில் முழுமையான வீதித்தடைச் சோதனைகள் இல்லை 1000க்கு ஓரிரு வாகனங்கள் மட்டுமே சோதிக்கப்படுகின்றன.

ஆனால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தமிழர்கள் அனைவரும் கடந்த 3 கிழமைகளாக 3 முதல் 5 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அதுவும் வடமாகாணத்தில் மட்டும் 2 - 4 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

அதுபோலவே கொழும்பிலிருந்து தலைமன்னார் செல்லும் தமிழர்கள் கடந்த 3 கிழமைகளாக 4 முதல் 6 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அதுவும் வடமாகாணத்தில் மட்டும் 3 - 5 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

இதில் வடக்குக்கு சுற்றுலா செல்லும் சிங்கள-பௌத்தர்கள் எந்தவொரு இடத்திலும் இறக்கப்படுவதும் இல்லை, சோதிக்கப்படுவதும் இல்லை.

தமிழர் மீதான சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை எந்தவொரு தமிழ்  அரசியல்வாதிகளும், பிரதிநிதிகளும் கண்டிக்கவில்லை, நிறுத்தவில்லை. வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் மீதான இந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை கண்டும் காணாமல்  உள்ளனர்.  இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அனுபவித்தபடி உள்ளனர்! சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் எவ்வளவு கீழ்த்தரமான, மிகமிக மோசமான அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் நலனில் கொஞ்சமும் உண்மையான அக்கறை இல்லாத அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

அத்துடன் இந்த சம்பவங்களும் தமிழர்களுக்கு சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை எந்தவொரு நீதி நியாயத்தையும் வழங்காது என்பதற்கு மேலும் ஆதாரமாகும்!

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை சிங்கள-பௌத்த இனமதவெறியர்களுக்கும் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளுக்கும் சார்பாகவே எப்போதும் செயற்படுமே தவிர பாதிக்கப்பட்ட சிங்கள-பௌத்தர் அல்லாதவர்களுக்கு எந்தவொரு நீதியையும் பெற்றுக்கொடுக்காது!

இவை அனைத்துமே தமிழர்களுக்கு தமிழீழ தனிநாடே ஒரேயொரு குறைந்தபட்ச தீர்வாக அமையும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன!

 

 

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, போல் said:

இந்த மிலேச்ச சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகள் தெற்கு மக்களை பாதுகாக்க செய்யாதவற்றை வடக்கு மண்ணில் வடக்கு மக்களை பாதுகாக்க செய்கிறார்களாம். இதை நம்புமளவுக்கு மூடர்களாக இன்னமும் வாய்மூடி மௌனியாக இருக்கும் சம்மந்தன், சுமந்திரன், சிறீதரன், சரவணபவன்,  சித்தார்த்தன், அடைக்கலநாதன் போன்ற கையேந்தி அரசியல்வாதிகள் இருக்கலாம். ஆனால் எந்தவொரு தமிழனும் இல்லை!

 

குண்டு வெடித்தது கொழும்பில், மட்டக்களப்பில். குண்டுகளை வெடித்த மற்றும் உதவிய முஸ்லீம் மற்றும் அரச பயங்கரவாதிகள் வாழ்ந்தது தெற்கில், கொழும்பில், கிழக்கில். சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டது குருநாகல், குளியாபிட்டிய போன்ற பகுதிகளில்.

இந்தப் பகுதிகளில் முழுமையான வீதித்தடைச் சோதனைகள் இல்லை 1000க்கு ஓரிரு வாகனங்கள் மட்டுமே சோதிக்கப்படுகின்றன.

ஆனால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தமிழர்கள் அனைவரும் கடந்த 3 கிழமைகளாக 3 முதல் 5 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அதுவும் வடமாகாணத்தில் மட்டும் 2 - 4 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

அதுபோலவே கொழும்பிலிருந்து தலைமன்னார் செல்லும் தமிழர்கள் கடந்த 3 கிழமைகளாக 4 முதல் 6 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர். அதுவும் வடமாகாணத்தில் மட்டும் 3 - 5 இடங்களில் இறங்கி நடக்கவைக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

இதில் வடக்குக்கு சுற்றுலா செல்லும் சிங்கள-பௌத்தர்கள் எந்தவொரு இடத்திலும் இறக்கப்படுவதும் இல்லை, சோதிக்கப்படுவதும் இல்லை.

தமிழர் மீதான சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை எந்தவொரு தமிழ்  அரசியல்வாதிகளும், பிரதிநிதிகளும் கண்டிக்கவில்லை, நிறுத்தவில்லை. வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் மீதான இந்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் மிக அப்பட்டமான சித்திரவதையை இதுவரை கண்டும் காணாமல்  உள்ளனர்.  இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அனுபவித்தபடி உள்ளனர்! சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் எவ்வளவு கீழ்த்தரமான, மிகமிக மோசமான அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

சுமந்திரன், மாவை, செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், சிறீதரன், சித்தார்த்தன் உட்பட அனைவரும் தமிழர் நலனில் கொஞ்சமும் உண்மையான அக்கறை இல்லாத அரசியல்வாதிகள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள்  தேவையில்லை.

அத்துடன் இந்த சம்பவங்களும் தமிழர்களுக்கு சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை எந்தவொரு நீதி நியாயத்தையும் வழங்காது என்பதற்கு மேலும் ஆதாரமாகும்!

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் நீதித்துறை சிங்கள-பௌத்த இனமதவெறியர்களுக்கும் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளுக்கும் சார்பாகவே எப்போதும் செயற்படுமே தவிர பாதிக்கப்பட்ட சிங்கள-பௌத்தர் அல்லாதவர்களுக்கு எந்தவொரு நீதியையும் பெற்றுக்கொடுக்காது!

இவை அனைத்துமே தமிழர்களுக்கு தமிழீழ தனிநாடே ஒரேயொரு குறைந்தபட்ச தீர்வாக அமையும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன!

போல்..... அருமையான கருத்து.
இதனை கூட்டமைப்பில் உள்ள பச்சோந்தி  பாராளுமன்ற உறுப்பினர்கள் வாசித்து,
இனியாவது திருந்த வேண்டும்.

இன்னும் இறக்கி ஏத்தி சோதனைகள் நடக்குதாம்!
குறைஞ்சபாடில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இளைஞர் பேரூந்தில காலுக்கு மேல கால் போட்டிருக்க இராணுவபெண் தனது சகாக்களுக்கு சொல்றாவாம் உவங்கள் எங்களுக்கு மரியாதை தாறாங்கள் இல்லை என்று!
பொதிகளை சோதனை செய்த இராணுவத்தினர் கண்டோஸை எடுத்திட்டாங்கள்.
ரயில் பயணம் சோதனை குறைவு.
 

15 hours ago, ஏராளன் said:

ஒரு இளைஞர் பேரூந்தில காலுக்கு மேல கால் போட்டிருக்க இராணுவபெண் தனது சகாக்களுக்கு சொல்றாவாம் உவங்கள் எங்களுக்கு மரியாதை தாறாங்கள் இல்லை என்று

எல்லாரையும் இறக்கி ஏத்த வெளிக்கிட்டு இப்ப  உவை தங்களுக்கிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் (பயத்தையும்) இப்ப தொலைச்சிட்டினமாம்!
சனம் நேருக்கு நேர உவைட காதுல விழுற மாதிரி வசைபாடினமாம்!

கேட்டும் கேக்காத மாதிரி இருக்கவேண்டிய நிர்பந்தம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.