Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் - அஸ்கிரிய பீடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது. ஆனால் பதவி விலகி பிரிந்து செல்வதால் தீர்வினைக்காண முடியாது என்பதால் முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். 

62527173_2486764891556844_12665273710207

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அஸ்கிரிய , மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று கண்டியில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகியமை குறித்து மகா நாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்ட போதே இவ்விடயம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. 

குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டில் பொது நீதி மற்றும் ஒரே கலாசாரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே இலங்கையில் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் ஒற்றுமை பேணப்பட வேண்டும். இதற்கு முஸ்லிம் தலைவர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் எனவும் இதன்போது தேரர்கள் சுட்டிக்காட்டினர்.

http://www.virakesari.lk/article/58034

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்பது துவாரங்களும் அடைத்தது போன்ற உணர்வுடன்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நந்தன் said:

ஒன்பது துவாரங்களும் அடைத்தது போன்ற உணர்வுடன்.

அது தான்  அவர்கள்

முஸ்லீம் தலைவர்கள், மற்றும் புத்தி சீவிகள் ஒருபக்கம் கூறும் செய்தி: "இந்த நாட்டில் அரசியலையே ஆளுவது, அழிப்பது பௌத்த மத தீவிரவாதம்", என. மறுபக்கம், இவ்வாறான சந்திப்புக்கள் ஊடாக அதே பௌத்த மத தீவிரவாதத்தை அங்கீகரிப்பது.

அத்துடன், "நாங்கள் தான் உலகிலேயே அதிகமான தொகையை கொண்ட இனம்" போன்ற பயத்தை தூண்டும் அறிக்கைகளை விடுவது. ஐ.எஸ். இங்கும் வளர்ந்து வருகின்றது. 21/4 அதன் முடிவல்ல.

 

  • கருத்துக்கள உறவுகள்

62527173_2486764891556844_12665273710207

முன்பு பிக்குகள்.... வெள்ளை சீலை  போட்ட கதிரையில் தானே, இருக்க வேணும் என்று, அடம் பிடிப்பார்கள்.
இப்ப...  சும்மா கதிரையில்,  எல்லாரும் ஒரே மாதிரி.. 
கால் பாதங்களை.... ஒன்றுக்கு மேல் ஒன்று வைத்த படி இருக்கின்றார்கள்.

இதன் மூலம், தங்கள் உடல் மொழியால்... முஸ்லீம் தலைவர்களுக்கு ஏதோ செய்தி சொல்கிறார்கள் போலுள்ளது.

 

 

10 hours ago, பிழம்பு said:

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது. ஆனால் பதவி விலகி பிரிந்து செல்வதால் தீர்வினைக்காண முடியாது என்பதால் முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். 

ஒரு இனமதவெறிக் கும்பலுக்கு இன்னொரு இனமதவெறிக் கும்பலினது தலைமைப் பீடத்தின் அறிவுரை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.