Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
June 17, 2019

Budda-at-Trinco-bus-stand.jpg?zoom=1.102

கிழக்கு மாகாணம் திருகோணமலையில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.  திடீரென வைக்கப்பட்டுள்ள இந்த புத்தர் சிலை சிறுபான்மை மத மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத இன ஆக்கிரமிப்புகளால் திருகோணமலை நகரமும் மாவட்டமும் தனது அடையாளங்களை இழந்து வருகின்றது.

2005ஆம் ஆண்டு சமாதான காலத்தில் திருகோணமலையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை தொடர்ந்து அங்கு பல முரண்பாடுகள் ஏற்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. திருகோணமலை நகர சபையின் அனுமதியின்றி, அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள குறித்த புத்தர் சிலையை பிரித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் கடந்த சில நாட்களின் முன்னர் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியை ஆக்கிரமிக்க முயன்றமைக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். இதனாலும் மாவட்டத்தில் மதநல்லிணக்கம் மீதான நம்பிக்கை பாதிக்கப்பட்டது.

இதேவேளை நேற்றைய தினம் முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அனுராதபுரத்தில் இருந்து வருவிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வடக்கு கிழக்கில் இந்து ஆலய பகுதிகளில் தமிழ் மக்களுக்கு விருப்பமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை அகற்றுவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நேற்று முந்தினம் யாழ்ப்பாணத்தில் கூறியுள்ளமையும் இங்கே நினைவுகூரத்தக்கது

.

http://globaltamilnews.net/2019/124475/

 

 

சிங்கள இனவாதிகள் இலங்கை முழுவதும், குறிப்பாக சந்திகளிலும் சைவ வழிபட்டு தலங்களிலும் புத்தர் சிலைகளை வைப்பதால் மற்ற மதங்களை வழிபடுவர்களை பௌத்தர்களாக மாற்றிவிடலாம் என எண்ணுகிறார்கள். கிட்டத்தட்ட 440 வருடங்களாக ஐரோப்பியர்களால் ஆளப்பட்ட இரண்டு நாடுகளில், சிறிலங்கா + தமிழீழம் , கிறிஸ்தவ மதம் முழுமையாக பரப்பப்படவில்லை.

இப்பொழுது நாம் வாழுவது 21ஆம் நூற்றாண்டு. வருங்கால இளைய சமுதாயம், எவ்வளவு தூரம் மதங்கள் வழிபாடுகளில் ஈடுபடும் என்பது கேள்வியே. மேலைநாடுகளில் நாத்திகர்களே அதிகரித்து வருகின்றனர்.  மேலைத்தேய நாடுகளில் மதவழிபாட்டு தளங்கள் மக்களை 'கவருவதற்கு' பல நவீன யுக்திகளை புகுத்துகின்றன. கீழைத்தேய நாடுகளையும் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்பொழுது, இந்த நிலைமைக்குள்ளாக்கும். புத்தர் சிலைகள் இருக்கும் அவரை வழிபட பக்தர்கள் இருக்கமாட்டார்கள்.   யாரையும் வலிந்து வழிபடவும் நீண்ட நாட்களுக்கு வழிபட வைக்கவும் முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில்  தமிழினத்தை தக்கவைக்க சைவம் உறுதுணையாக இருந்து வந்தது. அதையும் இன்று பகுத்தறிவு எனும்  கோட்பாட்டிற்கு அமைய  சைவ கடவுள்   எல்லாம் வேஸ்ற் என்று கூறி இதர மதங்களை உள்ளே வரவழைத்துக்கொண்டிருக்கின்றர்கள். 
முள்ளிவாய்க்கால் அழிவிற்கு சிவபெருமானும் நல்லூர் கந்தனும் வற்றாப்பளை அம்மனும் எங்கே போனார்கள் என கேள்வி கேட்பவர்கள்..........
புத்தர் சிலை அமைப்பு மூலம் அதிகார பரவலாக்களுக்கும்......அடாவடித்தன முஸ்லீம்  காணி அபகரிப்புகளுக்கும் வாயே திறப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிங்கள இனத்துக்கு ஏதாவது வெறி கொண்டு அலையணும் ஒன்றில் தமிழரை கொல்லனும் என்று ஆடுவாங்கள் இல்லை புத்தரை வைச்சு மதவாதம் வளர்ப்பார்கள்  .

சிங்களவர்கள் பௌத்தத்தை தம்முடன் இணைத்தே பயணிப்பவர்கள். அதிலும் அநகாரிக தர்மபால “சிங்கள பௌத்தாய” என்று தொடக்கி வைக்க S.W.R.D பண்டாரநாயக்க பௌத்தர்கள் உதவியுடன் 1956 இல் தேர்தலில் வெற்றி பெற்றதுடன் அரசியலிலும் பௌத்தம் பெரும் இடத்தை பிடித்து விட்டது.

இப்பொழுது புத்தர் சிலை அமைப்பு மூலம் அதிகாரப்பரவலாக்கம் நடைபெறுவதும் இதன் அடிப்படையிலேயே. தமிழின அழிப்பிற்கும் பௌத்தம் பெரும் துணை சென்றது, செல்கிறது.

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, ஏனையோர் வந்தேறு குடிகள் என்ற பொய்க்கருத்தை பரப்பிய பெருமையும் அநகாரிக தர்மபாலவை சேரும். அதே கருத்தை பின்னர் பல சிங்களவர்கள் பயன்படுத்தியும் வந்தார்கள்.

On 6/17/2019 at 8:40 PM, ampanai said:

 

சிங்கள இனவாதிகள் இலங்கை முழுவதும், குறிப்பாக சந்திகளிலும் சைவ வழிபட்டு தலங்களிலும் புத்தர் சிலைகளை வைப்பதால் மற்ற மதங்களை வழிபடுவர்களை பௌத்தர்களாக மாற்றிவிடலாம் என எண்ணுகிறார்கள். கிட்டத்தட்ட 440 வருடங்களாக ஐரோப்பியர்களால் ஆளப்பட்ட இரண்டு நாடுகளில், சிறிலங்கா + தமிழீழம் , கிறிஸ்தவ மதம் முழுமையாக பரப்பப்படவில்லை.

இப்பொழுது நாம் வாழுவது 21ஆம் நூற்றாண்டு. வருங்கால இளைய சமுதாயம், எவ்வளவு தூரம் மதங்கள் வழிபாடுகளில் ஈடுபடும் என்பது கேள்வியே. மேலைநாடுகளில் நாத்திகர்களே அதிகரித்து வருகின்றனர்.  மேலைத்தேய நாடுகளில் மதவழிபாட்டு தளங்கள் மக்களை 'கவருவதற்கு' பல நவீன யுக்திகளை புகுத்துகின்றன. கீழைத்தேய நாடுகளையும் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்பொழுது, இந்த நிலைமைக்குள்ளாக்கும். புத்தர் சிலைகள் இருக்கும் அவரை வழிபட பக்தர்கள் இருக்கமாட்டார்கள்.   யாரையும் வலிந்து வழிபடவும் நீண்ட நாட்களுக்கு வழிபட வைக்கவும் முடியாது.

இலங்கையில் கிறிஸ்தவ மதம் அதிகம் பரப்பப்படாமைக்கு இந்தியாவுடன் இருந்த தொடர்புகள் ஒரு காரணம்.

மேலைநாடுகளில் நாத்திகர்கள் அதிகரித்ததன் காரணம் மதங்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இயங்கியவர்களால். அதேவேளை தாமாக நாத்திகர்களாக மாறியவர்களும் உள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.