Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

harees.jpg

பாராளுமன்றத்தில் இன்று பெயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்(நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கல்முனை பிரதேசத்தில் 73 வீதமான முஸ்லிம்களும், 23 வீதமான தமிழர்களும் வாழ்கின்றனர். 1989 இல் யுத்தம் நடைபெற்றபோது எல்.ரி.ரி.ஈ. யினால் பலவந்தமாக உப பிரதேச செயலகம் அமைக்கப்பட்டது. தமிழ் மக்களின் நிர்வாகம் இதனூடாக மேற்கொள்ளப்பட்டது. இதில் கல்முனையில் உள்ள முஸ்லிம் மக்களின் கிராமங்கள், வர்த்தக நிலையங்கள், காணிகள், பெறுமதியான சொத்துக்கள் பலவந்தமாக இந்தப் பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டன. இதனால் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. 

முப்பது வருடங்களாக ஆட்சிசெய்த ஜனாதிபதிகள் மற்றும் அரசாங்கங்களிடம் கல்முனை முஸ்லிம்களுக்கான அநீதியை நீக்கி நீதியை வழங்குமாறு கோரினோம்.

இது தொடர்பில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னர் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன, முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி எல்லை நிர்ணய குழுவை நியமித்து அதனூடாக நிரந்த தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். அமைச்சரின் நிலைப்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் இணங்கியிருந்தோம். இந்தக் குழு இது தொடர்பான வேலைகளைச் செய்துவருகிறது. 

அப்படியிருக்கையில் கல்முனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் உண்ணாவிரதப் போராட்டம் நான்கு நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. சுபத்திராராம தேரர் கலந்துகொண்டு இதுவரை உண்ணாவிரதத்தை நடத்தி வருகின்றார். கல்முனை நகரில் அங்குள்ள முஸ்லிம்கள் தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி அவர்களும் ஒரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அதனால் இனரீதியாக நிறுவனங்கள் செயற்பட்டால் நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பாக அமையும். நிலத்தொடர்பற்ற இடங்களை ஒன்றிணைத்து உப காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார். 

இனரீதியாக பிரதேச செயலகம், மாவட்ட செயலகங்களை அமைக்க முடியுமா? நிலத்தொடர்புள்ள இடங்களை அடிப்படையாகக் கொண்டு உப பிரதேச செயலகத்தை அமைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தமிழ்தேசியக்கூட்டமைப்பு, சஹ்ரானின் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை சந்தர்ப்பமாக பயன்படுத்தி எம்மை அழுத்தத்தினுள் தள்ளுகின்றது. கல்முனை முஸ்லிம் மக்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் அனைவரையும் காட்டிக்கொடுத்துள்ளனர் என்றார்.

https://www.virakesari.lk/article/58685

  • கருத்துக்கள உறவுகள்


ஹிஸ்புல்லாவிடம் அவரது வீடியோவுக்கு விளக்கத்தை கேட்டு சொல்லுங்கோவன் முதலில்...


 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பிழம்பு said:

தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை"

 

முழுப்பொய்

தமிழர்களது  கரங்கள் பலமான  போதெல்லாம்

அதை  தட்டிவிட்டவர்கள்  இவர்கள்

வரலாறு  எம்  கண்  முன்னே  தான்  நடந்தது

ஓரமாக  போய் விளையாடுங்க  தம்பியவை...

On 6/21/2019 at 1:05 AM, குமாரசாமி said:

 

 

முஸ்லீம் முஸ்லீம் என்று வழியும் பேர்வழிகள் என்ன சொல்லப் போகிறார்கள்?

இந்தக் காணிகள் அனைத்தும் மீள கைப்பற்றப்பட வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.