Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை

Featured Replies

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவ மோகன் கூறியுள்ளார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஓர் உண்மையைக் கூறியமைக்கு அவரைப் பாரா ட்ட முடியும்.  முடியாததை முடியாது என்றும் நடை பெறாததை நடக்காதென்றும் கூறுவதுதான் பண்புடமை.

 
அந்த வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு இனிமேல் சாத்தியமாகாது என்ற உண் மையை பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
 
இவ்வாறு அவர் கூறியதன் மூலம் இது காறும் கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக் களை ஏமாற்றி வந்துள்ளது என்ற உண்மையை அவர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள் ளார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்  கூறியதுபோல் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இனிமேல் சாத்தியப்படப் போவதில்லை என்பதே நிதர்சனமானது. இருந்தும் அந்த உண்மையைக் கூறுவதற்குக் கூட நம் பாராளுமன்ற உறுப்பினர்களுக் குத் துணிவு இல்லை.
 
அதே சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசை ஆதரிப்பதற்கான கார ணம் என்ன என்பதற்கு விளக்கம் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன்;
தமிழ் மக்களுக்கு அநியாயமும் அராஜகமும் செய்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காகவே தற்போதைய அரசை கூட்டமைப்பு ஆதரிப்பதாகக் கருத்துரைத்துள்ளார்.
 
உண்மையில் அவரின் இந்தக் கருத்து அடிப்படை நியாயமற்றது. அதாவது தமிழ் மக் களுக்கு அநியாயமும் அராஜகமும் செய்தவர்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது என்றால், இப்போதிருக்கின்ற அரசு முன்பெல்லாம் தமிழ் மக்களைக் காப்பாற்றியது என்ப தாகப் பொருள்படும். தவிர, சிங்கள ஆட்சியாளர்கள் அனைவரும் தமிழ் மக்களின் விடயத்தில் பேரின வாதப் போக்குடனேயே செயற்பட்டுள்ளனர்.
 
இதற்கு இப்போதைய அரசும் விதிவிலக் கல்ல.நிலைமை இதுவாக இருக்கையில், தற் போதைய அரசுக்கான கூட்டமைப்பின் ஆதரவு என்பதற்குப்  பின்னணியில் மிகப் பெரிய சமாச் சாரங்கள் உள்ளன என்பது பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனுக்குத் தெரியாமல் இருக்க நியாயமில்லை.
 
எது எவ்வாறாயினும் தற்போது நாட்டில் நடந்து முடிந்த இஸ்லாமியத் தீவிரவாதத்தின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருக்கக்கூடிய ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கக்கூடிய நிலையில் தற்போதைய அரசு இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.
 
இவ்வாறாக நிலைமை இருக்கின்றபோது, அரசுக்கான கூட்டமைப்பின் ஆதரவை நியா யப்படுத்தும் வேலையை பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் செய்யாமல், யதார்த்தத்தை தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதுதான் நம் தயவான கோரிக்கை.
 
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ampanai said:

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவ மோகன் கூறியுள்ளார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஓர் உண்மையைக் கூறியமைக்கு அவரைப் பாரா ட்ட முடியும்.  முடியாததை முடியாது என்றும் நடை பெறாததை நடக்காதென்றும் கூறுவதுதான் பண்புடமை.

 
அந்த வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு இனிமேல் சாத்தியமாகாது என்ற உண் மையை பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
 
இவ்வாறு அவர் கூறியதன் மூலம் இது காறும் கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக் களை ஏமாற்றி வந்துள்ளது என்ற உண்மையை அவர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள் ளார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்  கூறியதுபோல் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இனிமேல் சாத்தியப்படப் போவதில்லை என்பதே நிதர்சனமானது. இருந்தும் அந்த உண்மையைக் கூறுவதற்குக் கூட நம் பாராளுமன்ற உறுப்பினர்களுக் குத் துணிவு இல்லை.
 
அதே சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசை ஆதரிப்பதற்கான கார ணம் என்ன என்பதற்கு விளக்கம் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன்;
தமிழ் மக்களுக்கு அநியாயமும் அராஜகமும் செய்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காகவே தற்போதைய அரசை கூட்டமைப்பு ஆதரிப்பதாகக் கருத்துரைத்துள்ளார்.
 
உண்மையில் அவரின் இந்தக் கருத்து அடிப்படை நியாயமற்றது. அதாவது தமிழ் மக் களுக்கு அநியாயமும் அராஜகமும் செய்தவர்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது என்றால், இப்போதிருக்கின்ற அரசு முன்பெல்லாம் தமிழ் மக்களைக் காப்பாற்றியது என்ப தாகப் பொருள்படும். தவிர, சிங்கள ஆட்சியாளர்கள் அனைவரும் தமிழ் மக்களின் விடயத்தில் பேரின வாதப் போக்குடனேயே செயற்பட்டுள்ளனர்.
 
இதற்கு இப்போதைய அரசும் விதிவிலக் கல்ல.நிலைமை இதுவாக இருக்கையில், தற் போதைய அரசுக்கான கூட்டமைப்பின் ஆதரவு என்பதற்குப்  பின்னணியில் மிகப் பெரிய சமாச் சாரங்கள் உள்ளன என்பது பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனுக்குத் தெரியாமல் இருக்க நியாயமில்லை.
 
எது எவ்வாறாயினும் தற்போது நாட்டில் நடந்து முடிந்த இஸ்லாமியத் தீவிரவாதத்தின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருக்கக்கூடிய ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கக்கூடிய நிலையில் தற்போதைய அரசு இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.
 
இவ்வாறாக நிலைமை இருக்கின்றபோது, அரசுக்கான கூட்டமைப்பின் ஆதரவை நியா யப்படுத்தும் வேலையை பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் செய்யாமல், யதார்த்தத்தை தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதுதான் நம் தயவான கோரிக்கை.
 

சும்மா, சிங்களவன் தீர்வு தருவான் எண்டு 71 வருசம் வெள்ளி பார்த்தாச்சு. போதும்.

இப்ப நல்லா பார்த்தியல், எண்டால், அமெரிக்காகாரன் முழுத்தீவையும் மடக்க நிக்கிறான். சீனாக்காரன் விடான்.

சீனாக்காரன் தெற்கை மடக்கினால், அமெரிக்காக்காரன் வடக்கை (கிழக்கோட) மடக்குவான். 

இந்தியக்காரன், அங்கினையும், இங்கினையும், நாய்க்குட்டி மாதிரி ஓடி, ஓடி கத்தி ஓய்ந்து போவார்.

ஐஸ் பிரச்சனையினால, முஸ்லீம் தனி அலகு, தனி மாகாணம் கதை இனி எடுபடாது. தமிழ் பேசும் மக்களாக சேர்ந்தால், வடக்கே வாழலாம் என்கிற நிலை வரும்.

அதோட உந்த இனப்பிரச்சனைக்கு தீர்வு வரும்.

10 hours ago, Nathamuni said:

இப்ப நல்லா பார்த்தியல், எண்டால், அமெரிக்காகாரன் முழுத்தீவையும் மடக்க நிக்கிறான். சீனாக்காரன் விடான்.

சீனாக்காரன் தெற்கை மடக்கினால், அமெரிக்காக்காரன் வடக்கை (கிழக்கோட) மடக்குவான். 

அமெரிக்க போர்க்கப்பல்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருவதும் தரித்து நிற்பதும் செல்வதுமாக உள்ளன. SOFA ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டு விட்டால் அமெரிக்காவுக்கு இன்னும் வசதி.

Edited by Lara

9 hours ago, Nathamuni said:

ந்தியக்காரன், அங்கினையும், இங்கினையும், நாய்க்குட்டி மாதிரி ஓடி, ஓடி கத்தி ஓய்ந்து போவார்.

இந்தியாக்காரனுக்கு என்ன குறை? இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் கடற்படையினர் ஒன்றாக பயிற்சி மேற்கொண்டார்களே. 😎

இவ்வருட இறுதியில் இந்திய அமெரிக்க முப்படையும் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவிருப்பதாகவும் கதை.

ஓ... நீங்கள் இன்னும் இந்தியாவும் அமெரிக்காவும் எதிரெதிர் நாடு என்று நினைக்கிறீர்களோ? 😀

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Lara said:

ஓ... நீங்கள் இன்னும் இந்தியாவும் அமெரிக்காவும் எதிரெதிர் நாடு என்று நினைக்கிறீர்களோ? 😀

இல்லை, இந்தியா, ஓரமாக உக்கார வேண்டியவாறு, அமேரிக்க, சீன போட்டியிருக்கும்.

Just now, Nathamuni said:

இல்லை, இந்தியா, ஓரமாக உக்கார வேண்டியவாறு, அமேரிக்க, சீன போட்டியிருக்கும்.

இந்தியா அமெரிக்கா பக்கம் என்று நான் சொல்ல வந்தன். 😊

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Lara said:

இந்தியா அமெரிக்கா பக்கம் என்று நான் சொல்ல வந்தன். 😊

இந்தியாவிடம் உருப்படியாக ....எதுவுமே இல்லை...!

அமெரிக்கனின் முதுகில்....இலவசமாகச் சவாரி செய்யப் பார்க்கிறது....!

சீனாக்காரன்.....சும்மா தும்மின்னாலே.....செங்கோட்டை அதிரும்...!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

இந்தியாவிடம் உருப்படியாக ....எதுவுமே இல்லை...!

அமெரிக்கனின் முதுகில்....இலவசமாகச் சவாரி செய்யப் பார்க்கிறது....!

சீனாக்காரன்.....சும்மா தும்மின்னாலே.....செங்கோட்டை அதிரும்...!

இந்தியாவையும் நாம் குறைத்து எடை போட முடியாது.....சகுனி வேலை பார்த்து கால்பதிப்பார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

இந்தியாவையும் நாம் குறைத்து எடை போட முடியாது.....சகுனி வேலை பார்த்து கால்பதிப்பார்கள்...

சகுனி  வேலை  சீனர்களிடம்  எடுபடாது

அவர்கள்உழைப்பில்  செயலில்  நம்பிக்கை  வைக்கும் அரசைக்கொண்டவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

சகுனி  வேலை  சீனர்களிடம்  எடுபடாது

அவர்கள்உழைப்பில்  செயலில்  நம்பிக்கை  வைக்கும் அரசைக்கொண்டவர்கள்

சிங்கள அரசாங்கத்திடம் சகுனி வேலை சாத்தியப்படும் ......சாத்தியப்பட்டுமுள்ளது....

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, putthan said:

சிங்கள அரசாங்கத்திடம் சகுனி வேலை சாத்தியப்படும் ......சாத்தியப்பட்டுமுள்ளது....

இந்தியாவை  பொறுத்தவரை

நாலு  சறம்   கட்டிய பொடியள்

நடந்தது  வரலாறு

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வெகு தூரத்தில்...

உலகின் இரண்டாவது பொருளாதார பலம் மிக்க, அணு வல்லரசு சீனா, இந்தியாவின் அயல் நாடு. வாய்க்கால், வரப்புச் சண்டை. அருணாசலப்பிரதேசத்தினூடு, உள்ளே வர முடியும்.

பாகிஸ்தான் ஊடாக, காஸ்மீரினுள்ளும் வர முடியும்.

சீனாவும், அமெரிக்காவும், விளையாடும் மைதானமாக இலங்கை, இந்தியா வெறும் பார்வையாளராக இருக்கும் நிலைக்கு காரணம்,  இத்தாலிய சோனியா குடும்பம், தனது பழிவாங்கும் நடவடிக்கையாக, புலிகளை அழிக்கப் போய், சீனாவும், அமெரிக்காவும், சிங்களத்துக்கு தோல் கொடுக்க, கிழே இருந்த பாதுகாப்பும் போய், இப்போது முஸ்லீம் பயங்கரவாதம் வேறு.

இந்தியாவின் தெளிவில்லாத வெளியுறவு கொள்கை. பெரும் ஊழல் மிக்க டெல்லி ஆட்சி பீடம்.....  

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.