Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொரிஸ் ஜோன்சன் புதிய பிரதமராக எவ்வாறு தெரிவானார்: யார் இவர்? 10 முக்கியத் தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

boris-johnson-1-720x430.jpg

பொரிஸ் ஜோன்சன் புதிய பிரதமராக எவ்வாறு தெரிவானார்: யார் இவர்? 10 முக்கியத் தகவல்கள்

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கொன்சர்வேற்றிவ் கட்சியை சேர்ந்த பொரிஸ் ஜோன்சன் குறித்த பத்து சுவாரஸ்ய தகவல்கள் வௌியாகியுள்ளன. அவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

பொரிஸ் ஜொன்சன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பிறந்தவர். பின்னர் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.

அரசியலில் நுழைந்தபின், நாடாளுமன்ற உறுப்பினர், லண்டன் மேயர் மற்றும் வெளியுறவு அமைச்சர் என பயணத்தை தொடர்ந்த அவர் தற்போது பிரதமராகி இருக்கிறார். ஆனால், இவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் சர்ச்சைகளும் கூடவே பயணித்துள்ளன.

தி ஸ்பெக்ரேற்றர் (The Spectator) என்ற பிரித்தானியாவின் வார இதழின் ஆசிரியராக பொரிஸ் ஜோன்சன் பணியாற்றியுள்ளார். அதேவேளை கலகக்காரராகவும் அல்லது ஒழுங்கற்றவராகவும் பொரிஸ் ஜொன்சன் அறியப்படுகிறார்.

இவர் பத்திரிகைத்துறையில் இருந்தபோது, ஓரினச்சேர்க்கை ஆதரவுப் பிரசாரங்களை ஊக்குவிக்கும் சட்டத்துக்கு எதிரான கருத்துகளை கேள்விக்குள்ளாக்கி இருந்தார்.

பின்னர், அரசியலில் நுழைந்தவுடன், பொதுமக்களின் அந்தரங்க விஷயங்களில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்று தன் நிலைப்பாட்டை மாற்றினார். வார இதழில் உண்மைக்கு புறம்பான சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டதால் பொரிஸ் ஜொன்சன் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

2001 ஆம் ஆண்டில் ஹென்லி-ஒன்-தேம்ஸ் என்ற நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் பொரிஸ் ஜொன்சன் . 2001லிருந்து 2008 வரை 7 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வந்தார்.

2008 ல் லண்டன் மேயர் தேர்தலில் பொரிஸ் ஜொன்சன் வெற்றி பெற்றார். 2008 லிருந்து 2016 வரை 8 ஆண்டுகள் லண்டன் மேயராகப் பதவி வகித்தார். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் அக்ஸ்பிரிட்ஜ் மற்றும் சவுத் ரைஸ்லிப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

பிரதமராவதற்கு முன், இரண்டாண்டுகள் (2016 லிருந்து 2018 வரை) வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக அறியப்படும் பொரிஸ், 2017 ஆம் ஆண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற போது, முன்னறிவிப்பற்ற நியூயோர்க் பயணத்தில், ட்ரம்பின் முக்கிய ஆலோசகர்களை சந்தித்துள்ளார். இந்த விடயம் அப்போது, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா என்பது குறித்து நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் போது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்றும் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்திப் பிரசாரம் செய்திருந்தார்.

http://athavannews.com/பொரிஸ்-ஜொன்சன்-புதிய-பிர/

போரிஸ் ஜான்சனும் திருவட்டாறு கோயில் யானையும்!

கேரள மாநில பி.ஜே.பி தலைவர்களில் ஒருவர் கிருஷ்ணகுமார். இவர் மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இவரின் மகள் ஐஸ்வர்யா அமெரிக்காவில் படிக்கும்போது கபீர் சிங் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர், அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

 

அவர்களது திருமணம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 2003-ம் ஆண்டு நடந்தது. ஐஸ்வர்யாவை திருமணம் செய்த கபீர்சிங், இப்போது இங்கிலாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பேரிஸ் ஜான்சனின் முதல் மனைவியின் உறவினர் ஆவார். எனவே, திருமணத்துக்கு பேரிஸ் ஜான்சன் மனைவியுடன் கலந்துகொண்டார். அப்போது இங்கிலாந்து எம்.பி-யாக இருந்தார் பேரிஸ் ஜான்சன்.

திருமணவிழா நடந்துகொண்டிருந்தபோது திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் யானை திடீரென மதம்பிடித்து ஓடியது. இதில் பலர் காயம் அடைந்தனர். பேரிஸ் ஜான்சன் யானையின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். `யானையின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவருக்கு வாழ்வில் அதிஷ்டம் அடிக்கும்' எனப் பேரிஸ் ஜான்சனிடம் பி.ஜே.பி தலைவர் கிருஷ்ணகுமார் அப்போதே கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து சென்ற பேரிஸ் ஜான்சன் இந்தச் சம்பவம் குறித்து நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். இந்தநிலையில் பேரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கேரள பி.ஜே.பி நிர்வாகி கிருஷ்ணகுமார், யானையிடம் இருந்து பேரிஸ் ஜான்சன் தப்பிப்பிழைத்த சம்பவங்களையும், அதனால்தான் அவருக்கு அதிஷ்டம் அடித்தது என்றும் மீடியாக்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

https://www.vikatan.com/government-and-politics/policies/kerala-former-minister-speaks-about-boris-johnsons-india-visit

போரிஸ் ஜான்சனின் `இந்தியப் பாசம்' - இங்கிலாந்து அமைச்சரவையில் கோலோச்சும் இந்திய வம்சாவளியினர்!

போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இடம்பெறும் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேர் அவரது அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்.

அந்நாட்டின் பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்க்கொள்வது என அனைத்து முக்கிய விவகாரங்களிலும் முக்கிய முடிவெடுக்கக்கூடிய பொறுப்பு உள்துறை அமைச்சருக்கு உண்டு. அப்படிப்பட்ட பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத்தி படேல் தேர்வாகியுள்ளார். குஜராத்தை பூர்விகமாகக் கொண்டவர் ப்ரீத்தி. இவரின் பெற்றோர்கள், பணி நிமித்தமாக இங்கிலாந்தில் குடியேறி, பிற்காலத்தில் அங்கேயே செட்டில் ஆகினர். 47 வயதான ப்ரீத்தி, கடந்த 2010-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார். இதற்கு முன் கேமரூன் அமைச்சரவையிலும், தெரசா மே அமைச்சரவையிலும் ப்ரீத்தி அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் உண்டு. தெரசா மே அமைச்சரவையில் பிரிட்டனின் சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சராகப் பணியாற்றிய பிரீத்தி, ஒருசில அரசியல் அழுத்தங்கள் காரணமாக அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். இருந்தும் மீண்டும் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

பà¯à®°à¯à®¤à¯à®¤à®¿ பà®à¯à®²à¯

 

இவருக்கு அடுத்தபடியாக கேமரூன், தெரசா மே அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பதவி வகித்த அலோக் சர்மா தற்போது கேபினட் அந்தஸ்துடன்கூடிய சர்வதேச (வெளிவிவகார) மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி ஆக்ரா பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர். இங்கிலாந்து அரசியலில் கோலோச்சிவரும் இந்திய வம்சாவளியினரில், பழுத்த அரசியல் அனுபவம் கொண்டவர். சி.ஏ முடித்து வங்கிப்பணிகளில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர். பிற்காலத்தில் அரசியலில் நுழைந்து வெற்றிகண்டார். இவரும் ப்ரீத்தி படேலைப் போல 2010 -ம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார்.

à®à®²à¯à®à¯ à®à®°à¯à®®à®¾

 

மூன்றாவது நபர், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தபோது, நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவை சந்தித்து 2009-ல் திருமணம் செய்துகொண்டவர்தான் இந்த ரிஷி சுனக். தன் மாமனாரைப் போல் பிசினஸ்மேனாக அறியப்பட்டாலும் இங்கிலாந்தின் முக்கிய கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றிவந்தார். அதன்பயனாக, வடக்கு யார்க்‌ஷையர் ரிச்மாண்ட் பகுதி மிகப்பெரிய கிராமங்கள் நிறைந்த நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து 2015-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 3 ஆண்டுகளாக அக்கட்சியின் எம்.பி-யாகச் செயல்பட்டவர், இதற்கு முன்  வீட்டு வசதி, உள்ளாட்சித்துறை இணை அமைச்சக இருந்தார். தற்போது நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், நிதித்துறை அமைச்சர் பொறுப்பிற்கு நிகரான கருவூல தலைமைச் செயலராகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செயலாளர் பதவி என்றாலும் அமைச்சரவைக் கூட்டங்களிலும் பங்கேற்கும் அதிகாரம் அவருக்கு உண்டு. எந்த முறையும் இல்லாத வகையில் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில்தான் இந்திய வம்சாவளியினர் மூவர் கேபினெட் அந்தஸ்துடன் இடம்பெற்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

ரிஷி à®à¯à®©à®à¯

 

போரிஸ் ஜான்சன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மரினா வீலர் என்பவரை மணந்து, கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இருந்தாலும் அப்போதிருந்து இப்போது வரை தன்னை இந்திய மருமகன் எனக் கூறிக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த `இந்தியப் பாச'த்தின் அடிப்படையிலேயே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் கூறி வருகின்றன.

https://www.vikatan.com/government-and-politics/international/the-indian-origin-ministers-in-the-new-uk-cabinet-priti-patel-rishi-sunak-and-alok-sharma

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அதிகாரவர்க்கம் சும்மாவே குதிப்பார்கள் இந்த கபினெட் அந்தஸ்த்துக்கு  சலங்கை கட்டி ஆடுவார்கள் இனி இங்கிலாந்தை இந்தியான்ந்து என்று பெயர் மாத்தாமல் விட்டால் அதிசயம் .

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

பொரிஸ் ஜோன்சன் புதிய பிரதமராக எவ்வாறு தெரிவானார்: யார் இவர்?

பிறகென்ன டொனால்ட் ரம்பின் தம்பி தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.