Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகோதரர்களுக்கிடையில் முரண்பாடு – ஆலயம் இடித்தழிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
July 25, 2019

4876-2.jpg?zoom=0.9024999886751175&resiz

 

யாழில். சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வைரவர் ஆலயம் ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு வந்த அயலவரான முதியவர் ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள மாவிளந்தையடி ஞான வைரவர் கோவில் நேற்று புதன்கிழமை இரவு இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்தில் இருந்த வைரவர் சிலை உள்ளிட்ட விக்கிரங்களையும் அக்கும்பல் களவாடி சென்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் அயலவரான முதியவர் ஒருவர் தெரிவிக்கையில் ,

குறித்த ஆலயம் பல வருடங்கள் தொன்மையானது. அவ்வாலயத்தை பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பம் ஆதரித்து வந்தது. அக்குடும்பத்தில் இறுதியாக ஆதரித்து வந்தவர் 1983 ஆம் கால பகுதியில் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டுக்கு செல்லும் போது , ஆலயத்தில் அனைத்து தரப்பினரும் வழிபாடுகளை மேற்கொள்ள வழியமைத்து கொடுத்தார்.

அதனை தொடர்ந்து அயலவர்கள் பலரும் வைரவரை வழிபட்டு வந்தனர். அந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு கால பகுதியில் , ஆலயத்திற்கு அருகில் வசிப்போர் , புலம்பெயர் தேசத்தில் வசிப்போர் என பலரின் நிதி பங்களிப்புடன் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பான முறையில் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் குறித்த ஆலயத்தினை ஆரம்ப காலங்களில் ஆதரித்து வந்த குடும்பத்தின் சகோதரர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் உருவாகி முரண்பாடுகள் தேற்றம் பெற்றன. குறித்த ஆலயமே கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற காரணமாக அமைந்திருந்தன.

இந்நிலையிலையே ஆலயத்தினுள் புகுந்த கும்பல் ஒன்று ஆலயத்தினை முற்றாக இடித்தழித்து , ஆலய விக்கிரகங்களை களவாடி சென்றுள்ளனர்.

குறித்த கும்பலை புலம்பெயர் நாட்டில் வாழும் ஆலயத்தினை முன்னைய காலத்தில் ஆதரித்து வந்தவரின் மகளே காசு கொடுத்து கூலிக்கு அமர்த்தி இந்த நாசகார செயலை செய்வித்துள்ளார் என நாம் சந்தேகிக்கின்றோம்.

ஆலயம் இடித்தழிக்கப்பட்டு, விக்கிரகங்கள் களவாடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம். காவல்துறையினர்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை ஆலயம் இடிக்கப்பட்டமை தொடர்பில் இந்து சமய பெரியவர்கள் , அமைப்புக்கள் உள்ளிட்டவற்றுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் இடிக்கப்பட்ட ஆலயத்திற்கு நேரில் வந்து பார்த்து எமக்கு ஆறுதல் கூறி சென்றுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் ஆலயத்திற்கு நிதியுதவி கோரி இருந்தோம். அவரும் நிதி ஒதுக்கி இருந்தார். அந்நிதியில் ஆலயத்தினை மேலும் சில புனரமைப்பு வேலைகளை செய்ய முயன்ற போதிலேயே ஆலயம் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளது என கவலையுடன் முதியவர் தெரிவித்தார். #யாழில்  #ஆலயம்  #இடித்தழிப்பு  #சகோதரர்களுக்கு

4876-1.jpg?zoom=0.9024999886751175&resiz  4876-3.jpg?zoom=0.9024999886751175&resiz4876-4.jpg?zoom=0.9024999886751175&resiz4876-5.jpg?zoom=0.9024999886751175&resiz

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:
1 hour ago, பிழம்பு said:

இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

அருகே நிறையக் குடிமனைகள் இருப்பது தெரிகிறது. எப்படி அங்குள்ளவர்களுக்குச் சிறு சத்தமும் செவிசாய விடாது இடித்தழித்தார்கள்..? பலே கில்லாடிகள்தான்.! 

4876-2.jpg?zoom=0.9024999886751175&resiz

4876-3.jpg?zoom=0.9024999886751175&resiz4876-4.jpg?zoom=0.9024999886751175&resiz4876-5.jpg?zoom=0.9024999886751175&resiz

எங்கள் காலத்தில் ஒரு நாயை அடிக்கவோ, விரட்டவோகூட வயிரவர் வாகனம் என்று பயப்படுவோம். 

 

12 hours ago, Paanch said:

அருகே நிறையக் குடிமனைகள் இருப்பது தெரிகிறது. எப்படி அங்குள்ளவர்களுக்குச் சிறு சத்தமும் செவிசாய விடாது இடித்தழித்தார்கள்..? பலே கில்லாடிகள்தான்.! 

அருகில் வசிப்பவர்களுக்கு சத்தம் கேட்டாலும் பயத்தில் வெளியே வராமல் இருந்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் வைரவர் தனியார் வளவுக்குள் இருந்திருக்கக்கூடும் பின்னர் உரிமையாளர் கோவில் பகுதியை தனியாக பிரித்து பொதுப்பாவனைக்கு விட்டபின் உரிய சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ளாமல் வெளிநாடு சென்றிருப்பார். காலப்போக்கில் உரிமையாளர் இறந்துவிட அல்லது அவர் வயோதிபரானதும் காணி மகளுக்கு சீதனமாக வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நாட்டில் உள்ள நடைமுறை புரியாதவரான புதிய உரிமையாளர்  இதுபோன்ற காரியத்தில் இறங்கி அடாவடி செய்திருக்கக்கூடும்.  முதலில் உரிமையாளரை வழிப்பண்ணி காணி உரிமத்தையும் பொதுப்பாவனைக்கு உரிய சட்ட ஒழுங்குகளையும் கவனித்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

ஆரம்பத்தில் வைரவர் தனியார் வளவுக்குள் இருந்திருக்கக்கூடும் பின்னர் உரிமையாளர் கோவில் பகுதியை தனியாக பிரித்து பொதுப்பாவனைக்கு விட்டபின் உரிய சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ளாமல் வெளிநாடு சென்றிருப்பார். காலப்போக்கில் உரிமையாளர் இறந்துவிட அல்லது அவர் வயோதிபரானதும் காணி மகளுக்கு சீதனமாக வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நாட்டில் உள்ள நடைமுறை புரியாதவரான புதிய உரிமையாளர்  இதுபோன்ற காரியத்தில் இறங்கி அடாவடி செய்திருக்கக்கூடும்.  முதலில் உரிமையாளரை வழிப்பண்ணி காணி உரிமத்தையும் பொதுப்பாவனைக்கு உரிய சட்ட ஒழுங்குகளையும் கவனித்தால் நல்லது.

சட்டம் ஒழுங்குகள் பற்றிய உங்கள் பார்வை வரவேற்புக்குரியது. ஆனால் சிங்கள அரசில் அவை மட்டமாக உள்ளது. இத்தனை விரைவாக உடைத்து எறியக்கூடிய யந்திரங்கள் தற்போது யாரிடம் இருக்கமுடியும்....??  

20 hours ago, பிழம்பு said:

யாழில். சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வைரவர் ஆலயம் ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு வந்த அயலவரான முதியவர் ஒருவர் தெரிவித்தார்.

இவங்கள் இரண்டுபேரும் கோவத்துல ஒரு புத்தர்சிலையையாவது உடைச்சிருக்கலாம்.

20 hours ago, பிழம்பு said:

குறித்த கும்பலை புலம்பெயர் நாட்டில் வாழும் ஆலயத்தினை முன்னைய காலத்தில் ஆதரித்து வந்தவரின் மகளே காசு கொடுத்து கூலிக்கு அமர்த்தி இந்த நாசகார செயலை செய்வித்துள்ளார் என நாம் சந்தேகிக்கின்றோம்.

இந்தப் பொம்பிளைகள் சீரியல்கள் பாத்து நல்லா கெட்டுபோச்சுதுகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.