Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் யாழில் மீண்டும் மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த கிராமமக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

எல்லாமதமும் நல்லதையே சொல்கின்றது. மனிதர்கள் தான் அதை தவறாக பயன் படுத்துகின்றனர்.

நல்லதுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கணணியை இன்று தவறான வழிக்கு பயன்படுத்துவது போல....😄

நல்லது போல சொல்கிறதே தவிர 
எந்த மதமும் நல்லதை உள்ளதை சொல்ல முடியாது 
இல்லாத கடவுளை இல்லை என்று ஒரு மதமும் சொல்வதில்லை 

எல்லாவற்றையும் துறந்து ...
நிம்மதிக்கு முதல் படி ஆசைகளை துறப்பது 
என்று காடுக்குபோன 

புத்தனுக்கு கோவில் கட்டி 
தமது ஆசைகள் நிறைவேற
புத்தன் அருள் வேண்டி  பூஜை நடக்கிறது.

இந்த வில்லங்கத்தில்தான் புத்த மதம் தொங்குகிறது. 

  • Replies 114
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழீழ‌ போராட்ட‌த்தில் 25000ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ளை இழ‌ந்து இருக்குறோம் / 
பெரும் பாலான‌ போராளிக‌ள் சிறு வ‌ய‌தில் இருந்தே க‌ட‌வுள் ந‌ம்பிக்கையோடு வ‌ள‌ந்த‌வ‌ர்க‌ள் 🙏/

 தை பொங்க‌ல்  கிறிஸ்ம‌ஸ் இது எல்லாம் போராளிக‌ள் கொண்டாடின‌ நிக‌ழ்வுக‌ள் /

த‌மிழீழ‌ வான் ப‌டை 2001ம் ஆண்டு வ‌ன்னியில் ஒரு கோயிலுக்கு அவ‌ர்க‌ளின் விமான‌த்தால் வ‌ந்து  கோயிலுக்கு பூ போட்ட‌தை கோயில் ம‌க்க‌ள் நேரா க‌ண்ட‌வை / இத‌ என்ன‌ சொல்லி ம‌றைக்க‌ போறீங்க‌ள் 😁😁😁😁😁
வ‌ர‌லாறுக‌ளை முத‌ல் ப‌டியுங்கோ பின் விவாதிப்போம் 😉 /

8 minutes ago, Maruthankerny said:

இரண்டும் ஒன்றுதானே 

இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. ஒன்றைக்கொடுத்து இன்னொன்றை வாங்குவதற்கும் ஒன்று கிடைத்ததற்காக மகிழ்வுடன் இன்னொன்றை செய்வதற்கும் உள்ள வேறுபாடு போன்றது. 😀

  • கருத்துக்கள உறவுகள்

பெண் போராளிக‌ள் தை பொங்க‌ல்   கொண்டாடின‌ போது எடுத்த‌ புகை ப‌ட‌ம்  🙏🙏🙏🙏🙏

FB-IMG-1484395214365.jpg
625-500-560-350-160-300-053-800-900-160-

த‌லைவ‌ர் போராளிக‌ளுட‌ன் சேர்ந்து கிறிஸ்ம‌ஸ் கொண்டாடின‌ ப‌ட‌ம் ஊட‌க‌ங்க‌ளில் வ‌ந்த‌து , அந்த‌ ப‌ட‌த்தை தேடியும் கிடைக்க‌ வில்லை 😉😁

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Lara said:

இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. ஒன்றைக்கொடுத்து இன்னொன்றை வாங்குவதற்கும் ஒன்று கிடைத்ததற்காக மகிழ்வுடன் இன்னொன்றை செய்வதற்கும் உள்ள வேறுபாடு போன்றது. 😀

எனது சகோதரருக்கு கான்சர் ....
நான் சாமிக்கு சொல்கிறேன் சகோதரர் சுகம் அடைந்தால் 
எனது உடல்களில் குத்து ஊசிகளை குத்தி கயித்தில் பறவை காவடி என்று 
தொங்குவேன் என்று 

சகோதரர் குணமடைகிறார் ....
நான் கயித்தில் தொங்க வேண்டும் 

சகோதரர் இறந்துவிட்டார் ....
கயித்தில் தொங்க மாட்டேன் 
சுகமாக நான் இருப்பேன் 

இரண்டிலும் கடவுள் வியாபரிதானே? 
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்றில் வியாபாரிக்கு லாபம் மற்றதில் நஷ்ட்டம் (கடவுள் என்று ஒருவர் இருந்தால்) கடவுள் இல்லாத இந்த உலகில் இரண்டிலுமே எனக்குதானே நஷ்ட்டம்? 

2 minutes ago, Maruthankerny said:

எனது சகோதரருக்கு கான்சர் ....
நான் சாமிக்கு சொல்கிறேன் சகோதரர் சுகம் அடைந்தால் 
எனது உடல்களில் குத்து ஊசிகளை குத்தி கயித்தில் பறவை காவடி என்று 
தொங்குவேன் என்று 

சகோதரர் குணமடைகிறார் ....
நான் கயித்தில் தொங்க வேண்டும் 

சகோதரர் இறந்துவிட்டார் ....
கயித்தில் தொங்க மாட்டேன் 
சுகமாக நான் இருப்பேன் 

இரண்டிலும் கடவுள் வியாபரிதானே? 
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்றில் வியாபாரிக்கு லாபம் மற்றதில் நஷ்ட்டம் (கடவுள் என்று ஒருவர் இருந்தால்) கடவுள் இல்லாத இந்த உலகில் இரண்டிலுமே எனக்குதானே நஷ்ட்டம்? 

கடவுள் எனக்கு இதை தா நான் உனக்கு இதை செய்கிறேன் என கூறினால் தான் வியாபாரி. கடவுள் இங்கு எதையும் கேட்கவில்லையே. 😀

ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்காமல் பதிலை சரியாக புரிந்து கொள்ளுங்கள். 😎 

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ருத‌ங்கேனி அண்ணா / 
நீங்க‌ள் பெரியாரின் தீவிர‌ தொண்ட‌னாய் இருக்க‌ முய‌ற்ச்சி செய்யுங்கோ /
இதை தான் என்னால் சொல்ல‌ முடியும் 😁😁😁😁😁/

உல‌கில் ந‌ட‌க்கும் அநீதிக‌ளுக்கு தெய்வ‌ங்க‌ளை குறை சொல்ல‌ முடியாது / 4ங்கு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஸ்பேனிய‌ன் நாட்டு விமான‌ம் விப‌த்துக்கு உள்ளான‌து , விப‌த்து எப்ப‌டி ந‌ட‌ந்து என்று ஆர‌ச்சி செய்து பார்க்கையில் ( விமான‌ ஓட்டி ப‌டு போதையில் இருந்து இருக்கிறார்  அது தான் அந்த‌ பெரிய‌ விப‌த்து ந‌ட‌க்க‌ கார‌ன‌ம் 😠

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Lara said:

கடவுள் எனக்கு இதை தா நான் உனக்கு இதை செய்கிறேன் என கூறினால் தான் வியாபாரி. கடவுள் இங்கு எதையும் கேட்கவில்லையே. 😀

ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்காமல் பதிலை சரியாக புரிந்து கொள்ளுங்கள். 😎 

தயவு செய்து டென்ஷன் ஆகதையுங்கோ 
எதையும் பேசி தீர்க்கலாம்.

கடவுள் எப்படி கேட்ப்பார்?
கடவுளை உருவாக்கியதே நாம்தானே 
இருந்தாதான் அதை இதை கேட்க 

நாம் செய்வது பற்றித்தான் எனது கேள்வி 
இதை தா    அதை தருகிறேன் என்பது வியாபார முறைமைதானே?
இதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? 

சிறுவயதில் நானும் செய்ததுதான் 

6 minutes ago, Maruthankerny said:

தயவு செய்து டென்ஷன் ஆகதையுங்கோ 
எதையும் பேசி தீர்க்கலாம்.

கடவுள் எப்படி கேட்ப்பார்?
கடவுளை உருவாக்கியதே நாம்தானே 
இருந்தாதான் அதை இதை கேட்க 

நாம் செய்வது பற்றித்தான் எனது கேள்வி 
இதை தா    அதை தருகிறேன் என்பது வியாபார முறைமைதானே?
இதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? 

சிறுவயதில் நானும் செய்ததுதான் 

எனக்கு ரென்சன் இல்லை. 

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என இத்திரியிலேயே எழுதியுள்ளேன். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பற்றியே என் கருத்து.

இதை தருகிறேன் அதை தா என்பதற்கும் இதை தந்தால்/இது நடந்தால் மகிழ்வுடன் இதை செய்கிறேன் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. அதை புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள். உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தான் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்காதீர்கள் என கூறினேன்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Lara said:

எனக்கு ரென்சன் இல்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என இத்திரியிலேயே எழுதியுள்ளேன். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பற்றியே என் கருத்து.

இதை தருகிறேன் அதை தா என்பதற்கும் இதை தந்தால்/இது நடந்தால் மகிழ்வுடன் இதை செய்கிறேன் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. அதை புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள். உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தான் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்காதீர்கள் என கூறினேன்.

நீங்கள்தான் ஒரே விடயத்தை 
வேறு வேறாக திரும்ப திரும்ப எழுதுகிறீர்கள்.

தைப்பொங்கல் 
இது வருட வருடம் நாம் சூரியனுக்கு நன்றி சொல்லி செய்கிறோம் 
சூரியனால் நாம் பெறும் பயனாக ... ஒரு நன்றியுடன் சூரியனை வணங்குகிறோம் 
இதை நான் பாராட்டுகிறேன்.

நேர்த்திக்கடன் என்பதே டீல் பேசுவதுதானே?
இதில் முன் பின் என்ன இருக்கு 

நீங்கள் சுகயீனமாக இருந்து சுகம் அடைந்தால் 
நீங்களாகவே கோவிலுக்கு சென்று ஒரு நன்றியாக ஒன்றை செய்வது நன்று.

சுகயீனமாக இருக்குபோது நேர்த்திக்கடன் எனும் பெயரில் டீல் பேசுவதை 
எப்படி வியாபாரம் இல்லை என்று சொல்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

( உண்மை ச‌ம்ப‌வ‌ம் 🙏🙏🙏)

என்ர‌ அம்ம‌ம்மா கோயிலுக்கு போய்யிட்டு  வ‌ந்து ஜ‌யாவுக்கு கோயில் பூவை குடுத்த‌வா காதில் வைக்க‌ சொல்லி /
அம்ம‌ம்மா கோயிலுக்கு போயிட்டு நேர‌ம் செல்ல‌ வீடு வ‌ந்திட்டா என்ர‌ கோவ‌த்தில் அம்ம‌ம்மா காதுக்கு வைக்க‌ குடுத்த‌ பூவை ஜ‌யா கோவ‌த்தில் காலால் மிதிச்சார் 😉🤔 /

கொஞ்ச‌ கால‌ம் க‌ழித்து ஜ‌யா எந்த‌ காலால் பூவை மிதிச்சாரோ அந்த‌ காலுக்காள் புழு வ‌ந்த‌து 😓
ஜ‌யாவுக்கு கிட்ட‌ போக‌ ஏலாது கால் அழுகி புழு வெளிய‌ வ‌ர‌ நாத்த‌மும் அதிக‌ம் 😓, நான் சின்ன‌ பெடிய‌னாய்  இருந்த‌ போது ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இது  1993ம் ஆண்டு , ஜயா காலால் பூவை மிதிக்கும் போது நான் பிற‌க்க‌ வில்லை , பிற‌க்கு அம்ம‌ம்மா சொல்லி உண்மையை தெரிந்து கொண்டேன் , ஜ‌யா எப்ப‌வோ செய்த‌ கொடுமைக்கு ஆண்ட‌வ‌ர் ப‌ல‌ வ‌ருட‌ம் க‌ழித்து தான் ஜ‌யாவுக்கு த‌ண்ட‌னை குடுத்த‌வ‌ர் 👏👏👏👏👏🙏🙏/

தெய்வ‌ங்க‌ளோட‌ ஒரு போதும் விளையாட‌க் கூடாது , பின்னாளில் அது பெருத்த‌ ஆவ‌த்தில் போய் முடியும் 😉😁

13 minutes ago, Maruthankerny said:

நீங்கள்தான் ஒரே விடயத்தை 
வேறு வேறாக திரும்ப திரும்ப எழுதுகிறீர்கள்.

தைப்பொங்கல் 
இது வருட வருடம் நாம் சூரியனுக்கு நன்றி சொல்லி செய்கிறோம் 
சூரியனால் நாம் பெறும் பயனாக ... ஒரு நன்றியுடன் சூரியனை வணங்குகிறோம் 
இதை நான் பாராட்டுகிறேன்.

நேர்த்திக்கடன் என்பதே டீல் பேசுவதுதானே?
இதில் முன் பின் என்ன இருக்கு 

நீங்கள் சுகயீனமாக இருந்து சுகம் அடைந்தால் 
நீங்களாகவே கோவிலுக்கு சென்று ஒரு நன்றியாக ஒன்றை செய்வது நன்று.

சுகயீனமாக இருக்குபோது நேர்த்திக்கடன் எனும் பெயரில் டீல் பேசுவதை 
எப்படி வியாபாரம் இல்லை என்று சொல்கிறீர்கள்? 

நான் ஒரே விடயத்தை வேறு வேறாக எழுதவில்லை. உங்களுக்கு தான் விளங்கவில்லை.

சூரியனிடம் நாங்கள் எதையும் கேட்டு சூரியன் அதை தருவதில்லை.

கடவுளிடம் கேட்பதால் கேட்கும் போதே சிலர் அது நடந்தால் மகிழ்வுடன் இன்னொன்றை செய்வதாக கூறுவர். அது டீல் கிடையாது. வியாபாரமும் கிடையாது.

மருத்துவர்கள் மருந்தை உணவுக்கு முன் போடு உணவுக்கு பின் போடு என்கிறார்கள். எல்லாம் ஒன்று தானே, எப்படிப்போட்டால் என்ன என்று கேட்பது போல் உள்ளது உங்கள் கேள்வி. ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பையன்26... சைவ சமய ஆர்வக்கோளாறில் அடித்து விடுறீங்களோ... 😀

இங்கே எழுதப்படும் கருத்துக்கள் எவையும் கிறிஸ்தவ மதத்தையோ, அதனை பின் பற்றுபவர்கள் நோக்கி வைக்கப்பட்ட விமர்சனமாக இதை நான் பார்க்கவில்லை.

அவர்களின் சுய லாபங்களுக்காக அல்லது தவறாக சொல்லிக்கொடுக்கப்பட்ட  கோட்பாடு ஓன்றை 
கடைபிடிக்கும் ஒரு சில கூட்டத்தார் செய்யும் இந்த மத மாற்ற பிரச்சாரங்கள் குறித்தே இந்த விசனங்கள் எழுதப்படுகின்றன.

ஈழ தேசத்தில் இந்த மேற்கத்தைய மதக் கொள்கைகள் எப்படி வந்தன? எப்போது வந்தன?
பூர்வீகமாக அந்த தேசத்தில் இருந்த மக்கள் எந்த மத அனுஷ்டானங்களை பின்பற்றினார்கள்?
அவர்களின் சுயம் மறைக்கப்பட்டு, புதிய பரிணாமம் கொடுக்கப்பட்டு... இதை எல்லாம் சரி என்று நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா? 

கனடாவில் இருந்த பூர்வீக செவ்விந்திய குடிகளின் அனைத்து குழந்தைகளையும் அரசியல் / மத அதிகாரத்தை பிரயோகித்து பெற்றோர்களிடம் இருந்து பலவந்தமாக பிரித்து கொண்டு சென்று கிறிஸ்தவ / கத்தோலிக்க மதத்தை போதித்த வரலாறும், அப்படி கொண்டு  செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான சிறுவர்கள், குழந்தைகள் பெற்றாரை இழந்த சோகத்தில் மாண்டு போன வரலாறும் உள்ளது....
இதை எப்படி எடுக்கலாம்...

சிங்கள பௌத்தர்கள் இதே செயலை செய்தாலும் முடிந்த வரையில் எதிர்ப்பும், விரட்டி நடிப்பும் தாயகத்தில் இன்றும் நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. உதாரணம் அண்மையில் நாவற்குழியில் நடந்த எதிர்ப்பு.

எனக்கு எல்லா மதத்திலும் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் எல்லா மதத்தையும் மதிக்கிறேன். 
என்னுடைய மதத்தை நான் மிகவும் மதிக்கிறேன். 
அதனால், அனாவசியமாக ஆள்சேர்க்கவேண்டாம், இது அந்த அந்த மதங்களை பின்பற்றுவோர்க்கு ஒரு மன உளைச்சலை கொடுக்கிறது. அது தான் உண்மை.
எப்படி என் நிலத்தை இன்னும் ஒருவன் முற்றுகைக்கு உட்படுத்தி தன்னை நிலை நிறுத்த முயற்சிக்கிறானோ அதை போலத்தானே இதுவும். அப்படியாயின் வெறுப்பும் எதிர்ப்பும்  வருவது இயற்கை தானே.
என்ன ஒரு வித்தியாசம் சமயம் ஒரு நம்பிக்கை சார்ந்தது ....நிலம் அப்படியல்ல.

பிறப்பு எனக்கு நான் தமிழன் என்றும் சைவன் என்றும் அடையாளத்தை தந்திருக்கிறது.
ஞானம் எல்லா மதத்தையும்  நேசிக்கும் பக்குவத்தையும், உண்மையை தேடுவதில் ஆர்வத்தையும் தந்திருக்கிறது. இடைத்தரகர்களின் பரிந்துரையால் தான் சிக்கல். 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Sasi_varnam said:

பையன்26... சைவ சமய ஆர்வக்கோளாறில் அடித்து விடுறீங்களோ... 😀

இங்கே எழுதப்படும் கருத்துக்கள் எவையும் கிறிஸ்தவ மதத்தையோ, அதனை பின் பற்றுபவர்கள் நோக்கி வைக்கப்பட்ட விமர்சனமாக இதை நான் பார்க்கவில்லை.

அவர்களின் சுய லாபங்களுக்காக அல்லது தவறாக சொல்லிக்கொடுக்கப்பட்ட  கோட்பாடு ஓன்றை 
கடைபிடிக்கும் ஒரு சில கூட்டத்தார் செய்யும் இந்த மத மாற்ற பிரச்சாரங்கள் குறித்தே இந்த விசனங்கள் எழுதப்படுகின்றன.

ஈழ தேசத்தில் இந்த மேற்கத்தைய மதக் கொள்கைகள் எப்படி வந்தன? எப்போது வந்தன?
பூர்வீகமாக அந்த தேசத்தில் இருந்த மக்கள் எந்த மத அனுஷ்டானங்களை பின்பற்றினார்கள்?
அவர்களின் சுயம் மறைக்கப்பட்டு, புதிய பரிணாமம் கொடுக்கப்பட்டு... இதை எல்லாம் சரி என்று நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா? 

கனடாவில் இருந்த பூர்வீக செவ்விந்திய குடிகளின் அனைத்து குழந்தைகளையும் அரசியல் / மத அதிகாரத்தை பிரயோகித்து பெற்றோர்களிடம் இருந்து பலவந்தமாக பிரித்து கொண்டு சென்று கிறிஸ்தவ / கத்தோலிக்க மதத்தை போதித்த வரலாறும், அப்படி கொண்டு  செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான சிறுவர்கள், குழந்தைகள் பெற்றாரை இழந்த சோகத்தில் மாண்டு போன வரலாறும் உள்ளது....
இதை எப்படி எடுக்கலாம்...

சிங்கள பௌத்தர்கள் இதே செயலை செய்தாலும் முடிந்த வரையில் எதிர்ப்பும், விரட்டி நடிப்பும் தாயகத்தில் இன்றும் நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. உதாரணம் அண்மையில் நாவற்குழியில் நடந்த எதிர்ப்பு.

எனக்கு எல்லா மதத்திலும் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் எல்லா மதத்தையும் மதிக்கிறேன். 
என்னுடைய மதத்தை நான் மிகவும் மதிக்கிறேன். 
அதனால், அனாவசியமாக ஆள்சேர்க்கவேண்டாம், இது அந்த அந்த மதங்களை பின்பற்றுவோர்க்கு ஒரு மன உளைச்சலை கொடுக்கிறது. அது தான் உண்மை.
எப்படி என் நிலத்தை இன்னும் ஒருவன் முற்றுகைக்கு உட்படுத்தி தன்னை நிலை நிறுத்த முயற்சிக்கிறானோ அதை போலத்தானே இதுவும். அப்படியாயின் வெறுப்பும் எதிர்ப்பும்  வருவது இயற்கை தானே.
என்ன ஒரு வித்தியாசம் சமயம் ஒரு நம்பிக்கை சார்ந்தது ....நிலம் அப்படியல்ல.

பிறப்பு எனக்கு நான் தமிழன் என்றும் சைவன் என்றும் அடையாளத்தை தந்திருக்கிறது.
ஞானம் எல்லா மதத்தையும்  நேசிக்கும் பக்குவத்தையும், உண்மையை தேடுவதில் ஆர்வத்தையும் தந்திருக்கிறது. இடைத்தரகர்களின் பரிந்துரையால் தான் சிக்கல். 

உற‌வே நான் முத‌ல் இந்த‌ திரியில் எழுதின‌ ப‌திவை வாசியுங்கோ , அதில் எல்லா தெய்வ‌ங்க‌ளும் ஒன்று என்று தான் எழுதினான் ம‌ற்றும் என‌க்குள் ம‌த‌ வெறி ஒரு போதும் இருந்த‌து இல்லை என்றும் கூட‌ எழுதி இருக்கிறேன் /

நான் என் ஜ‌யாவை ப‌ற்றி எழுதின‌து நூற்றுக்கு நூறு உண்மை , பொய்யை எழுதி நாம் சாதிக்க‌ போர‌து எது ஒன்றும் இல்லை , உண்மையை உள்ள‌ ப‌டியே எழுத‌ தான் என் ம‌ன‌சு என‌க்கு இட‌ம் கொடுக்கும் /

என‌க்கும்
முஸ்லிம் 
கிறிஸ்த‌வ‌
இன்னும் ம‌ற்ற‌ ம‌த‌த்தை சேர்ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் தோழிய‌ல் இருக்கின‌ம் , நாங்க‌ள் பெரிசா ம‌த‌த்தை ப‌ற்றி அல‌ட்டி கொள்வ‌து இல்லை /

என‌க்கு என் ம‌த‌த்தின் மேல் ந‌ம்பிக்கை இருக்கு , என்ர‌ அம்ம‌ம்மா என்னை வ‌ள‌த்த‌ வித‌ம் அப்ப‌டி ,

இந்த‌ திரியில் நான் ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ளை கொச்சை ப‌டுத்த‌ வில்லை /

சில‌ போலிக‌ள் என்ர‌ சொந்த‌த்துக்கை இருக்கின‌ம்  ம‌த‌ம் மாறி அவையின் கேலி கூத்தை தான் வெளிப்ப‌டையாய் எழுதி நான் /

இந்த‌ திரியில் இனி எழுதுவ‌தை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌ம் என்று என‌க்கு தோனுது , 
ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்  😉😁 /

Edited by பையன்26

2 hours ago, பையன்26 said:

பெண் போராளிக‌ள் தை பொங்க‌ல்   கொண்டாடின‌ போது எடுத்த‌ புகை ப‌ட‌ம்  🙏🙏🙏🙏🙏

FB-IMG-1484395214365.jpg
625-500-560-350-160-300-053-800-900-160-

த‌லைவ‌ர் போராளிக‌ளுட‌ன் சேர்ந்து கிறிஸ்ம‌ஸ் கொண்டாடின‌ ப‌ட‌ம் ஊட‌க‌ங்க‌ளில் வ‌ந்த‌து , அந்த‌ ப‌ட‌த்தை தேடியும் கிடைக்க‌ வில்லை 😉😁

மிகவும் தவறான கருத்து இது. கண்டிக்கதக்க கருத்தும் ஆகும்.

விடுதலைப் புலிகள் தைப் பொங்கலை கொண்டாடியது தமிழர் பண்டிகை என்ற காரணத்தினால் ஆகும்.அது சைவ / இந்துப் பண்டிகையாக அல்ல. அதே போல் அவர்கள் ஒரு போதும் எந்த மதப் பண்டிகையையும் கொண்டாடியதும் இல்லை. அதே நேரம் ஒவ்வொரு போராளியும் தான் சார்ந்த மத நம்பிக்கையை கடைப்பிடிப்பதற்கு தடை ஏதும் விதிக்கப்படவும் இல்லை.

விடுதலைப் புலிகளின் வழக்கத்துக்கு ஏற்றால் போலத்தான் யாழ் இணையமும் தமிழர் பண்டிகை என்பதால் தைப் பொங்கலுக்கும் மட்டுமே முகப்பில் banner போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றது. வேறு எந்த மதப் பண்டிகைகளுக்கும் யாழ் இணையம் இவ்வாறு செய்வதில்லை.

 ஊடக அறிவும் வரலாற்று அறிவும் இல்லாதவர்களால் நடாத்தப்படும்  செய்தி தளங்களில் தான் இவ்வாறான தவறான தகவல்கள் பல பரப்பட்டு வருகின்றன. உண்மைகளை தேடி அறியுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.