Jump to content

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம்!

In கிாிக்கட்     August 2, 2019 5:02 am GMT     0 Comments     1166     by : Anojkiyan

2019-06-05T093250Z_1639580507_RC1E7B3FA4D0_RTRMADP_3_CRICKET-WORLDCUP-ZAF-IND_1559824907775_1559824961501-720x450.jpg

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 30ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட, அவருடன் 6 பேர் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

ஐ.பி.எல்.லில் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கும் டொம் மூடி, நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன், தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன், இலங்கை முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ரொபின் சிங், லால்சந்த் ராஜ்பூட் ஆகியோர் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்து உள்ளனர்.

கபில்தேவ், கெய்க்வாட் உள்ளிட்டோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு பயிற்சியாளரை தேர்வு செய்து வருகிறது. 13 அல்லது 14ஆம் திகதி நேர்காணலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல பந்து வீச்சாளர் பயிற்சிக்கு வெங்கடேஷ் பிரசாத்தும், களத்தடுப்பு பயிற்சிக்கு தென்னாபிரிக்காவின் ஜோன்டி ரோட்சும் விண்ணப்பித்து உள்ளனர்.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரோடு இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்தரி, பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், துடுப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், களத்தடுப்பு பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் முடிந்தது.

எனினும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடர் வரை அவர்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ணத்தை இந்தியக் கிரிக்கெட் அணி வென்றிருந்தால், ரவி சாஸ்தரி மற்றும் அவரின் உதவியாளர்களின் பதவிக்காலம் தொடர்ந்து நீடிக்கப்படிருக்கும்.

ஆனால் இந்தியா அணி, அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததால் அணி நிர்வாகம் மீது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பயிற்சியாளர்கள் பதவிக்கான விண்ணப்பங்களை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.

இதனால் ரவி சாஸ்திரியும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடன் துணைப் பயிற்சியாளர்களும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். வரவேற்கப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ரவி சாஸ்திரி, பரத் ஸ்ரீதர், சஞ்சங் பாங்கர் ஆகியோர் மீண்டும் விண்ணப்பம் செய்தால் போதுமானது. அவர்களுக்கு தொடக்க நிலை தேர்வு நடத்தப்படாமல் நேரடியாக தேர்வுக்கான பட்டியலில் இடம் பிடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் பாசு, பிசியோ பாட்டிரிக் பர்கட் ஆகியோருக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்கவும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.

ரவி சாஸ்திரி கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றார். இவரின் பதவிக்காலத்தில்தான் இந்தியா அணி, அவுஸ்ரேலியா மண்ணில் முதன்முதலாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது.

இதேவேளை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் ஒருவர் குறைந்தது மூன்று வருடங்கள் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் அணியொன்றை பயிற்றுவித்திருக்க வேண்டும் என்பது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தமது அணியின் பயிற்சியாளராக வரக்கூடிய நபருக்கு இருக்க வேண்டிய கட்டாய தகைமைகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் இரண்டு வருடங்கள் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியொன்றை பயிற்றுவித்திருக்க வேண்டும் அல்லது மூன்று வருடங்கள் அங்கத்துவ நாடு ஒன்றினையோ அல்லது ஏ அணி ஒன்றினையோ பயிற்றுவித்திருக்க வேண்டும் என்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தமது தலைமை பயிற்சியாளராக வர விண்ணப்பிப்பவருக்கு இருக்க வேண்டிய வேறு தகுதிகளாக குறிப்பிட்டிருக்கின்றது.

அதேவேளை, குறித்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் குறைந்தது 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒருநாள் போட்டிகள் என்பவற்றிலும் விளையாடியிருக்க வேண்டும் என்பதும் முக்கியமான விடயமாகும்.

இதில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, ஐ.பி.எல். தொடரின் மூலம் தான் சிறந்த பயிற்சியாளர் என உலகிற்கு அறிய தந்தவர்.

இவரின் வழிநடத்தலின் மூலம் இரண்டு முறைகள் மும்பை இந்தியன்ஸ் அணி, சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.

மேலும், கேரி கிஸ்டன் இந்திய அணி, 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்லும் போது அதன் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். கேரி கிஸ்டன் தற்போது ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான றோயல் செலஞ்சர்ஸின் பயிற்சியாளராகவும் உள்ளார்.

http://athavannews.com/இந்திய-கிரிக்கெட்-அணியி-5/

Link to comment
Share on other sites

இந்திய கிரக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வுக்கு 2,000 விண்ணப்பங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து உள்ளதாக தெரிவித்த இந்திய கிரிக்கெட் நிறுவனம், அதில் யாருக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது என்பது விரைவில் தெரிய வரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, துப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சுப் பயிற்சியாளர் பாரத் அருண், களத்தடுப்பு பயிற்சியாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 7 பேரின் பதவிக்காலம் நாளை ஆரம்பமாகவுள்ள மேற்கிந்தியத் தொடருடன் முடிகிறது. 

புதிய பயிற்சியாளர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதியுடன் அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து  உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதுள்ள பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்கவில்லை என்ற போதிலும், தேர்வில் பங்கேற்கலாம். இதனிடையே 2007 இல் இந்தியாவுக்கு இருபதுக்கு - 20 உலக கிண்ணத்தை வெற்றி கொள்ள முக்கிய பங்கு வகித்த லால்சந்த் ராஜ்புட், ராபின் சிங், பிரவீண் ஆம்ரே உள்ளிட்டோர் போட்டியில் குதித்துள்ளனர். 

சர்வதேச அளவில் ஜெயவர்தனா, டொம் மூடி (ஆஸ்திரேலியா), மைக் ஹசன் (நியூசிலாந்து) உள்ளிட்டோர் பயிற்சியாளருக்கு விண்ணப்பித்துள்ளனர். அத்துடன் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், களத்தடுப்பு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

INDIA.jpg

இவர்களில் சரியான பயிற்சியாளரை, இந்திய உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் படி நியமிக்கப்பட்ட கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை குழு தேர்வு செய்யவுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இந்திய கிரிக்கெட் நிறுவன (பி.சி.சி.ஐ.,) தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் பயிற்சியாளர் யார் என்பது முடிவு செய்யப்படலாம். தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தெரிவாக அதிகம் வாய்ப்புள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/61824

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவை பற்றி இவ்வளவு விபரமாக எப்படி கதைக்கிறீர்கள் என்பது விளங்கிவிட்டது😄   ஆனால் மகிந்தா தோற்க்க வேண்டும் என்பதற்காக இன்னொருவருக்கு வாக்களிப்பதானால்  தங்கள் வாக்கை சிவாசிலிங்கத்திற்கே அளித்திருக்கலாமே.நான் இலங்கை பிரசையாக இலங்கையில் இருந்தால் அப்படி தான் செய்திருப்பேன்    நான் நம்புகின்றேன் அவர்கள் விரும்பி தான் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர் அல்லது தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.  
    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
    • நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி. தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும் யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.
    • கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது?   2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்?   Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST   NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket. "I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#
    • முந்தி உந்த‌ மைதான‌த்தில் ர‌ன் அடிப்ப‌து மிக‌ மிக‌ சிர‌ம‌ம் சுவி அண்ணா இப்ப‌ நில‌மை வேறு மாதிரி ஒரு நாள் தொட‌ரில் சில‌ அணிக‌ள் 250 ர‌ன்ஸ் அடிக்க‌வே சிர‌ம‌ ப‌டுவின‌ம் 20ஓவ‌ரில் இந்த‌ ஸ்கோர் பெரிய‌ இஸ்கோர்😮......................... 2004 ஆசியா கோப்பை பின‌லில் இல‌ங்கை முத‌ல் துடுப்பெடுத்தாடி 228 ர‌ன்ஸ் தான் அடிச்ச‌வை ,இந்தியாவை 203 ர‌ன்னுகை ம‌ட‌க்கிட்டின‌ம் இல‌ங்கை 25 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெற்றி......................இது 50 ஓவ‌ர் விளையாட்டில் ஹா ஹா😁.............................................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.