Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இராணுவத்தினர் குவிப்பு ; பாதுகாப்பு தீவிரம்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன் சில இடங்களில் அடையாள அட்டையும் பதிவு செய்யப்படுகின்றன.

IMG_0688.jpg

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் திருவிழா  நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு நல்லூர் ஆலய சூழலில் பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

IMG_0690.jpg

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் கொழும்புத்துறை பிரதான வீதி, ஸ்ரான்லி வீதி உள்ளிட்ட பல இடங்களில் வீதித் தடை போடப்பட்டு சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றன.

சோதனையிடப்படுவோரின் அடையாள அட்டையும் பதிவு செய்யப்படுகின்றது.

IMG_0694.jpg

இலங்கையில் வணக்கஸ்தலங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/62013

அச்சம் தேவையில்லை

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில், பக்தர்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும் என, யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார். 

nalloor_tample.jpg

நாளை ஆரம்பமாகவுள்ள, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில், பக்த அடியார்கள், சோதனை நடவடிக்கையின் பின்னர் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இதற்காக சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதனால், பக்த அடியார்கள், அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும் எனவும், யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்;ட் அறிவித்துள்ளார். 

இன்று மாலை, யாழ்ப்பாணம் மாநகர சபையில் நடந்தய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

25 நாள் திருவிழாவும், சிறப்பாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், யாழ். மாநகர சபை முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/62011

  • கருத்துக்கள உறவுகள்

அலங்காரக் கந்தனுக்கு வந்த சோதனையை?!

  • கருத்துக்கள உறவுகள்

கந்தா கடம்பா காப்பாற்று என்று பக்தர்கள் வேண்டுவார்கள். கந்தனும் வரமளித்துக் காப்பாற்றுவார். இம்முறை கந்தனே சிங்களப்படையின் பிடியில், காப்பாற்றுவார் யாரோ. ?? 

  • கருத்துக்கள உறவுகள்

2-2-720x450.jpg

நல்லூர் திருவிழாவினை காண வரும் அடியவர்களிடம் பொலிஸார் தீவிர சோதனை

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,  அடியவர்கள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுகிறார்கள்.

பெண் பக்தர்கள் சோதனைக் கூடங்களுக்குள்ளேயும் ஆண்கள் வெளியிலும் உடல் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அத்துடன் சில நுழை வாயில்களில் பொலிஸார் ஸ்கேனர் ஊடாக உடல் சோதனைகளை முன்னெடுக்கின்றனர்.

மேலும் அடியவர்களால் எடுத்துச் செல்லப்படும் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் அடியவர்கள் அதிகாலை தொடக்கம் ஆலயத்துக்கு வருகை தந்து நேர்த்திகளை நிறைவேற்றி வருகின்றனர்.

1-3.jpg

3-1.jpg

4-1.jpg

http://athavannews.com/நல்லூர்-திருவிழாவினை-காண/

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலத்தில் இது அவசிமாகி விட்டது......என்ன செய்வது சிலரின் அசிங்கமான செயற்பாடுகளால் பலருக்கும் வீண் சிரமம்.....!   🤨 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, suvy said:

இன்றைய காலத்தில் இது அவசிமாகி விட்டது......என்ன செய்வது சிலரின் அசிங்கமான செயற்பாடுகளால் பலருக்கும் வீண் சிரமம்.....!   🤨 

இடையில் யாரோ... நல்லூர் திருவிழாவின் போது, குண்டு வெடிக்கும் என்றும்...
அனாமதேய தகவல் அனுப்பியதாக... அறிந்தேன். 

  • தொடங்கியவர்

நல்லூர்க் கோவில் வளாகத்தில் சங்கிலி கொள்ளையர் நடமாட்டம்

நல்லூர்க் கோவில் வளாகத்தில் சங்கிலி கொள்ளையர்கள் நடமாட்டம் காணப்படுவதால், மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், இன்று (06) தெரிவித்தார்.

நல்லூர்க் கோவிலின் வருடாந்த பெருவிழா, இன்றுக் காலை முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதன்போது, உற்சவத்துக்கு வருகை தந்த இரண்டு பக்தர்களின் 2 தங்கச் சங்கிலிகள் கொள்ளையர்களால் அறுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கொள்ளையர்கள், புத்தளம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென, பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/நல்லூர்க்-கோவில்-வளாகத்தில்-சங்கிலி-கொள்ளையர்-நடமாட்டம்/71-236379

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.