Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்.9-ல் ஜெனிவா கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேச ஐநா மனித உரிமைகள் ஆணையம் அனுமதி

Featured Replies

பன்னாட்டு சட்டங்கள் அமைய கடந்த 1948-ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓரு ஐக்கிய நாடுகள் நிறுவனமாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் உள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக  உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் கூட்டம் தான் வரும் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்று பேச திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ஐநா மனித உரிமைகள்  ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த ஆணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை என்பவர் உள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு தமிழர்  ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருக்கும் நிலையில் இன்னொரு தமிழர் இந்த கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521333

  • கருத்துக்கள உறவுகள்

நவி பிள்ளை 2014லோட இந்த பதவியில் இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ராலின் என்ன பேசுகிறார் என்று கட்டாயம்  கேட்க வேண்டும்.
இந்த முறை... காஷ் மீர் பிரச்சினையை  பேசிவிட்டு..
ஆக.... இதற்கு காரணமான எடப்பாடி பழனிச் சாமி பதவி விலக வேண்டும்,
என்று சொன்னாலும் சொல்வார்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஸà¯à®à®¾à®²à®¿à®©à¯

ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் பேசும் மு.க ஸ்டாலின்.. அழைப்பு விடுத்த ஐநா.. பெரும் எதிர்பார்ப்பு!

ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச இருக்கிறார்.

ஜெனிவாவில் இருக்கும் ஐநா சபையில் எல்லாம் மாதமும் முக்கியமான நிகழ்வுகளும் கூட்டங்களும் நடப்பது வழக்கம். குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் நலன், அகதிகள் முன்னேற்றம் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடக்கும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த கூட்டத்தில் பலமுறை கலந்து இருக்கிறார். பலமுறை வைகோ இதில் இலங்கை பிரச்சனை குறித்தும் போர் குறித்தும் பேசியுள்ளார்.

இந்த நிலையில் ஜெனிவாவில் நடக்கும் ஐநா மனித உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடக்கிறது. இது ஐநாவின் 42வது மனித உரிமைகள் மாநாடு ஆகும்.

உலகம் முழுக்க மனித உரிமைக்காக போராடும் முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். பல்வேறு போராளிகள், அரசியல் தலைவர்கள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அதன் ஒரு பகுதியாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலினும் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த லோக்சபா தேர்தலில் வென்றதில் இருந்தே நாடு முழுக்க அறியப்படுகிறார். காஷ்மீர் பிரச்சனையில் ஸ்டாலின் எடுத்த நிலைப்பாடு நாடு முழுக்க பெரிய அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில்தான் அவருக்கு தற்போது ஐநா மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச இருக்கிறார். பெரும்பாலும் திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய பாஜக அரசு குறித்தும், அரசின் நடவடிக்கை குறித்தும் பேசுவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் இவர் காஷ்மீர் பிரச்சனை குறித்தும், ஈழத்தை சேர்ந்த தமிழ் அகதிகள் குறித்து, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்தும் அவர் பேசுவார் என்கிறார்கள்.

Read more at: https://tamil.oneindia.com/news/international/m-k-stalin-to-speak-at-uno-human-rights-council-meeting-in-geneva-361241.html

  • தொடங்கியவர்

அண்மையில் இலங்கையின் ஹக்கீம் இவரை சந்தித்துள்ளார்.

இலங்கை முஸ்லீம் மக்களுக்காக இல்லை காஸ்மீர் மக்களுக்காக ஐ.நா. வில்  ஸ்டாலின் குரல் கொடுக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

நவி பிள்ளை 2014லோட இந்த பதவியில் இல்லையே?

 

நவநீதம்பிள்ளை அவர்களின் பின்னர் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளராக பதவி வகித்த Zeid Raad Al Hussein கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வுபெற்றதையடுத்து  அவரது இடத்துக்கு Michelle Bachelet(சிலி )  நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.