Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடவுளின் கைபேசி எண்

Featured Replies

கடவுளின்_கைபேசி_எண்..?

ஐந்துவேளை தொழும் முல்லாக்களே 
உங்கள் அல்லாவின் 
கைபேசி எண்ணைத் தாருங்களேன்
என்னிடம் சில கேள்விகளுண்டு..

புனித இஸ்லாத்தின் பெயரில் பூவுலகெங்கும் நடக்கும் பயங்கரவாதங்களில் பொசுங்கிக் 
கருகும் பிஞ்சுக் குழந்தைகள் 
பெண்களின் கதறல்கள்
உங்கள் காதுகளில் ஒருபோதும் விழுவதேயில்லையா..?

அரை நூற்றாண்டு காலமாக 
ஒரு அந்திப் பொழுதுகூட
அமைதியாகக் கண்ணுறங்க முடியாத காஷ்மீரத்து மக்களின் 
கண்ணீரைத் துடைக்க 
கருணையின் வடிவான 
உங்கள் கரங்கள் 
ஏன் ஒருபோதும் நீளவேயில்லை..?

ஆறுகால பூஜை செய்யும் 
அம்பாளின் அர்ச்சகரே 
அம்பாளின் கைபேசி எண்ணைத் தாருங்களேன்
அம்பாளிடம் ஒரு  கேள்வி...

ஆசிஃபா எனும் 
அப்பாவிக் குழந்தையை
ஆறு நாட்கள் உங்கள் 
சன்னிதியில் வைத்து  
காமவெறிகொண்ட ஓநாய்க் கூட்டம்
கடித்துக் குதறிக் கொன்ற நேரத்தில்
ஆண்டவனோடு பள்ளியறையில்  
எப்படி ஆனந்தமாய் 
உறங்கிக் கொண்டிருந்தீர்கள்..?

கலியுக வரதனே 
உன் கைபேசி எண் கிடைத்தால்
எனக்கு ஒரு கேள்வி உண்டு...

தூணிலும் இருப்பேன்
துரும்பிலும் இருப்பேன் 
என்று சொன்ன எம்பெருமாளே
உனது எத்தனையோ சன்னிதிகளில்
எண்ணெய் விளக்குகூட இல்லாமல் 
நீ  இருட்டில் தடவிக் கொண்டிருக்கிறாய்
அப்படியிருக்க அதெப்படி 
திடீரென அத்தி வரதர் என்ற பெயரில் அழகழகாய் பட்டுடுத்தி
அலங்காரங்கள் செய்துகொண்டு 
அல்லும் பகலும் 
அயராது கண்விழித்து காட்சி தந்து
ஐம்பது லட்சம் பக்தர்களை 
அலைக்கழித்து அதில் 
ஐந்து பேரின் உயிரையும் பறித்ததன் காரணம் என்னவோ..?

கர்த்தரின் கைபேசி எண் 
தெரிந்தால் 
யாராவது சொல்லுங்களேன்...

தேவகுமாரனின் திருச்சபையில் பலிபூஜைகள் செய்யும்
பாதிரியார்களே கன்னியாஸ்த்ரீகளின் பெண்மையைக் களவாடியபோது 
நீங்கள் பெத்லகேமுக்கு 
சுற்றுலா சென்றுவிட்டீர்களா..?

நல்லதொரு ஞாயிறில் 
தேவாலயத்தில் தொழுவதற்காக 
கூடியிருந்த மக்களை
காக்கை குருவிகளென 
காதகனொருவன் 
சுட்டுத் தள்ளினபோது
நீங்கள் கைகட்டி வாய்பொத்தி 
கண்மூடி நின்றதன் 
காரணம் என்னவோ..?

அன்புதான் இன்ப ஊற்று..! 
அன்புதான் உயிர் மூச்சு..!
என்று சொன்ன புத்தர் பிரானே 
உங்களது கைபேசிஎண் கிடைத்தால் கட்டாயமாக நான் கேட்பேன்...

உனது ஆட்சி நடக்கும் 
புத்த பூமியில்
யுத்தம் என்று பெயர் சொல்லி
முள்ளி வாய்க்காலில் 
நிராயுதபாணிகளாக  நின்ற 
லட்சக் கணக்கான மக்களை 
கொத்துக் கொத்தாகக் கொன்றுகுவித்து
பிள்ளைக் கறிகளாக 
சமைத்து உனக்குப்
படையல் போட்டபோது
நீர் ஆழ்ந்த‌ தியான‌த்திலா 
மூழ்கி இருந்தீர்..? 

அணைத்துக் கடவுள்களின் 
அடையாள அட்டைகளும்
ஆதார் அட்டைகளும்
அர்ச்சகர்கள் முல்லாக்கள்
பாதிரியார்கள் பிக்குகள் 
கைகளில் அடமானத்திலிருக்கிறது

எல்லாக் கடவுள்களின் 
கைபேசி எண்களின் 
சேவைகளையும்  
இந்த இடைத் தரகர்கள்
தங்கள் தேவைக்கேற்ப 
முடக்கி வைப்பார்கள்

அவர்கள் எல்லோரும் 
தொடர்பு எல்லைக்கு அப்பால்...

இதையறியாத மூடர்கூட்டம் அலையலையாய் 
இவர்கள் பின்னே
விளக்கைத் தேடும் 
விட்டில் பூச்சிகளாய்...! 

நன்றி. நண்பர். திரு. பாலகணேசன் அருணாசலம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பூமிப்பந்தின் நிலவளங்களும் காலநிலைகளும் இனசனங்களும்  மொழிகளும் ஒரே மாதிரியானவையாக இல்லையே? அது ஏன்?
முதலில் ஏழை பணக்காரன் என்ற  பேதத்தை அழியுங்கள்.இனவாதத்தை அழியுங்கள்.நிறவாதத்தை அழியுங்கள். அதன் பின் கடவுளின் ஈமெயில் ரெலிபோன் நம்பரை தேடலாம்.

பாலகணேசன் அருணாசலம் என்ற பெயரிலே ஆயிரம் தெய்வங்கள் குடியிருக்கின்றனவே???? :grin:

  • தொடங்கியவர்
9 minutes ago, குமாரசாமி said:

இந்த பூமிப்பந்தின் நிலவளங்களும் காலநிலைகளும் இனசனங்களும்  மொழிகளும் ஒரே மாதிரியானவையாக இல்லையே? அது ஏன்?
முதலில் ஏழை பணக்காரன் என்ற  பேதத்தை அழியுங்கள்.இனவாதத்தை அழியுங்கள்.நிறவாதத்தை அழியுங்கள். அதன் பின் கடவுளின் ஈமெயில் ரெலிபோன் நம்பரை தேடலாம்.

பாலகணேசன் அருணாசலம் என்ற பெயரிலே ஆயிரம் தெய்வங்கள் குடியிருக்கின்றனவே???? :grin:

நீங்கள் கவிதைக்கு பிற் சேர்ககை சேர்த்து கவிதையை மேலும் மெருகூட்டி உள்ளீர்கள். நன்றி. 

  • 3 weeks later...
On 8/27/2019 at 10:44 PM, tulpen said:

இதையறியாத மூடர்கூட்டம் அலையலையாய் 
இவர்கள் பின்னே
விளக்கைத் தேடும் 
விட்டில் பூச்சிகளாய்...! 

கடவுளின் கைபேசி எண்ணைக் கேப்பதுவும் மூடர்கூட்டம் தானே. இல்லீங்களா?

  • தொடங்கியவர்
18 minutes ago, Gowin said:

கடவுளின் கைபேசி எண்ணைக் கேப்பதுவும் மூடர்கூட்டம் தானே. இல்லீங்களா?

உங்கள் கருத்து சரியானது. இல்லாத ஒருவரின்  கைபேசியை கேட்டது தவறுதான். ஆனால் கவிதையை எழுதிய கவிஞரின் கற்பனை அது. தனது கறபனைத் திறனால்   சொல்லவேண்டிய செய்தியை அழகாக சொல்லியுள்ளார் கவிஞர்.  

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

இது கவிதை அல்ல, சாட்டை.👍🏿

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கடவுளின் கைபேசி இலக்கம்
911.

  • 1 month later...
On 9/27/2019 at 2:07 AM, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவில் கடவுளின் கைபேசி இலக்கம்
911.

இலங்கைல 421

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.