Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ப.சிதம்பரம் : செப்.19-ம் தேதி வரை தியார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ம் தேதி வரை சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் அடைக்கப்படுவதற்கு எதிரான ப.சிதம்பரத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்ற உத்தரவை அடுத்து ப.சிதம்பரம் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வதாக ப.சிதம்பரம் கூறிய நிலையில் சிறைக்கு அனுப்ப சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி ஷைனி இன்றுவரை ப.சிதம்பரம் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டார். இன்று சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் ப.சிதம்பரம் 6-ஆவது முறையாக சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
அப்போது சிபிஐ தரப்பில், சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது. அவருக்கு ஜாமீன் கொடுத்தால் வழக்கின் போக்கை சிதைத்துவிடுவார். வழக்கு குறித்து ஏற்கனவே ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பொருளாதார குற்றங்கள் நடைபெற்றுள்ளன, சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரிக்காத வரை, போலீஸ் காவல் அல்லது நீதிமன்ற காவல் மட்டுமே ஒரே வழி என்று சிபிஐ ஆதரவு வழக்கறிஞ்ர் துஷார் மேத்தா தனது வாதத்தை தெரிவித்துள்ளார். சிதம்பரம் சாட்சிகளை கலைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள், ஆதாரங்களை திரட்ட சிபிஐ அதிகாரிகள் இங்கிலாந்து, பெர்முடா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளனர் என்று தனது வாதத்தை தெரிவித்தது.

ஆனால் ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், ப.சிதம்பரம் ஏற்கெனவே 15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்து வழக்கு தொடர்பாக தனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துவிட்டார். வேண்டுமென்றால், சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்து கொள்ளட்டும். நீதிமன்ற காவலுக்கான காரணங்களை சிபிஐ முன் வைக்க வேண்டும். சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினால் அது அவரை தொல்லைக்கு உட்படுத்துவதாகும். அமலாக்கத்துறை அலுவலகத்தில் சரணடைய தயார். சிதம்பரத்திடம் விசாரணை தொடர்கிறது, சாட்சிகளை கலைக்கவில்லை எனவே நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் ஜாமீன் கோரி வாதிடவில்லை, ப.சிதம்பரத்தை விடுவிக்கக் கோரி வாதிடுகிறேன் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் ப.சிதம்பரத்தை நீதிமன்றத்துக்கு அனுப்ப கோரும் சிபிஐ மனு மீது இன்னும் அரை மணிநேரத்தில் உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி ஷைனி தெரிவித்தார். பின்னர் விசாரணையை ஆரம்பித்த நீதிபதிகள் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். நீதிமன்ற காவலில் சிதம்பரத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை தனி அறையில் வைக்க வேண்டும் என்றும் டெல்லி சிபிஐ நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=523800

 

ப.சிதம்பரத்தை சிறையில் அடைக்க எதிர்ப்பு தெரிவித்து குமரியில் காங்கிரஸ் கட்சினர் சாலை மறியல்

குமரி: ப.சிதம்பரத்தை சிறையில் அடைக்க எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் கட்சினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சினர் போராட்டத்தால் திருவனந்தபுரம் - நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=523807

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி, அம்பனை.
ப. சிதம்பரம் ஒரு நாளாவது... திகார் ஜெயிலில் இருக்க வேண்டும் என விரும்பினேன்.
ஏன்.. அவர் மீது, இவ்வளவு கோவம், என நீங்கள் கேட்பதில், நியாயம் உள்ளது. 😎

எம். ஜீ . ஆர். காலத்தில், ஈழத்து முன்னணி  தலைவர்களான...  
அன்ரன் பாலசிங்கம் அண்ணா போன்றோர் கலந்து கொண்ட கூட்டத்தில், ப. சிதம்பரமும் இருந்தார்.
அதில்... எந்த முடிவுக்கும் வர விட முடியாமல், சிதம்பரம் "சகுனி" வேலை செய்து கொண்டே இருந்தார் என்று,
அன்ரன் பாலசிங்கமே...  உயிருடன் இருக்கும் போது,   எழுதிய ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அப்படிப் பட்ட, சகுனி சிதம்பரம்.... இன்று, திகார் ஜெயிலில் இருப்பது, மகிழ்ச்சியான  விடயம். 

எந்தக்  கொம்பனாக.... இருந்தாலும்,
ஒரு இனத்துக்கு... கேடு விளைவித்தால், அதன் பலன்...  திகார் ஜெயில் தான். 🐽

ஈழப் போரின்  முடிவில்.... மகிந்த    ராஜ பக்ஸவுக்குக்கு... "பூ பொக்கே" கொடுத்த,
கருணாநிதியின்  மகளான கனி மொழியும்... திகார் ஜெயிலில் இருந்து,
எலி கடிக்குது, நுளம்பு கடிக்குது என்று..  கண்ணீர்  விட்டவர்கள்.      
அந்த வரிசையில்... சிதம்பரமும்.. சேர்ந்து கொண்டது.. மிக்க மகிழ்ச்சி. 🤩

"எளியோரை... வலியோர், மிதித்தால்...
ஆண்டவன், சாபம் கொடுப்பான்."  

ஹலோ.. சிதம்பரம்,  இது உமக்கு... எமது  ஈழத்து அழுகைக்கான தண்டனை,  
என ஆறுதல் அடைகின்றேன். 💓

  • கருத்துக்கள உறவுகள்

உடம்பெல்லாம் ரணமாகிடும்... அலறித்துடிக்கும் ப.சிதம்பரம்... திஹார் ஜெயில் கொடுமைகள் பற்றி தெரியுமா..?

rnnftxxi-jpg.jpg

டெல்லி மேற்குப் பகுதியில் 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திகார் கிராமத்தில் 53 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த ஜெயில் ஆசிய அளவில் பெரியது. இந்தச் சிறை வளாகத்தில் ஒன்பது மத்திய சிறைச் சாலைகள் உள்ளன. சிறைச்சாலை எண் 1-ல் உள்ள வார்டுகள் மிகவும் பிரமாதமாக பராமரிக்கப்படுவதைப் பாராட்டி, மாடல் வார்டுக்கான ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த ஆவது வார்டில் தான் 2 ஜி வழக்கில் ஆ.ராசா அடைக்கப்பட்டிருந்தார். இங்குள்ள ஜெயில் காம்பளெக்ஸ் நான்கில்தான் வி.ஐ.பி,க்களை அடைத்து வைப்பார்கள்.

ஜீன்ஸ் பேன்ட் தவிர வேறு எந்த ஆடைகளையும் கைதிகள் அணியலாம். கைதிகள் அவரவர் உடைகளை அவரவர்களே துவைத்துக் கொள்ள வேண்டும். இங்கு ஒரு ஸ்பெஷல் கேன்டீன் இருக்கிறது. இங்கே கொரிக்கும் அய்ட்டங்கள் அனைத்தும் கிடைக்கும். மாதம் நாலாயிரம் ரூபாய் வரை செலவு செய்யலாம். இந்த தொகையைக் கொடுத்து டோக்கன் வாங்கி செல்லில் வைத்துக் கொள்ளலாம். ஹை ரிஸ்க் வார்டில் இருப்பவர்கள் இந்த கேன்டீனுக்குச் செல்ல அனுமதியில்லை.

மொத்தமாக அடைத்து வைத்து இருக்கும் செல்லின் ஒரு மூலையில் இண்டியன் வகை டாய்லெட் இருக்கும். அதைத்தான் தினப்படி கைதி பயன்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இங்கு கைதிகளுக்கு டால் ரொட்டி, ராஜ்மா சாவல், கடி சாவல் சப்ஜி போன்ற உணவுகள்தான் தருவார்கள். தினமும் இரண்டு வேலைதான் சாப்பாடு. நான்வெஜ் கிடையாது. கைதியின் இன்ஷியலை வைத்து வாரத்தில் இரண்டு நாட்கள் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கிறார்கள். சந்திப்பு நேரம் அரை மணி நேரம் மட்டுமே. பார்வையாளர்கள் அறையில் ஐம்பது மைக்குகள் இருக்கும். சந்திக்க வருபவருக்கும் கைதிக்கும் இடையில் இடைவெளி இருக்கும். ஒரே நேரத்தில் இங்கிருந்து ஐம்பது பேர்கள் மைக்கில் எதிர்புறம் உள்ள கைதிகளிடம் பேசுவார்கள் கூச்சல், குழப்பமாகத்தான் இருக்கும்.

எப்போதும் மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையங்களில்தான் இந்த திகார் சிறைச்சாலை இருக்கும். உள்வட்டப் பாதுகாப்புகளை டெல்லி யூனியன் பிரதேச சிறைத்துறை போலீசாரும், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெளிவட்ட பாதுகாப்புப் பணியிலும் இருக்கிறார்கள். கொசுக்கடியும், வெயில் காலத்தில் அனல் கக்கும் வெயிலாலும் பலருக்கும் உடலில் கொப்புளங்கள் ஏற்படும். அனைத்துக் கைதிகளும் ஒரே மாதிரி தான் நடத்தப்படுவார்கள். கனிமொழி இங்கு 2ஜி வழக்கில் சிறைச்சாலை எண்- 6 வார்டில் இருந்துள்ளார். அதே போல டி.டி.வி.தினகரனும் இதே சிறைச்சாலையில் இருந்துள்ளார்.

விஐபி- சாதாரண கைதி என வசதிகளுக்கு எந்த பாரபட்சமும் கிடையாது. விஐபிகள் தனியாக அடைத்து வைக்கப்படுவார்கள். அவ்வளவே. அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்குத் தொடரப்படுவர்களுக்கு இந்த சிறைச்சாலையே ஒதுக்கப்படும். காரணம் மனதளவிலும், உடலளவிலும் அவர்களை சோர்வடையச் செய்வதே இதன் நோக்கம். இந்தக் கொடுமைகளுக்கு பயந்து கொண்டு தான் தன்னை திஹார் சிறைச்சாலைக்கு அனுப்ப வேண்டாம் என்றும், சி.பி.ஐ, அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதிக்குமாறும்  நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து வருகிறார் மத்திய முன்னாள் அமைச்சரான ப.சிதம்பரம். 

இந்த சிறையில் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் 11 நாள் அடைக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்.

https://tamil.asianetnews.com/politics/tihar-jail-aware-of-atrocities--pxcvr3

 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உடம்பெல்லாம் ரணமாகிடும்... அலறித்துடிக்கும் ப.சிதம்பரம்... திஹார் ஜெயில் கொடுமைகள் பற்றி தெரியுமா..?

rnnftxxi-jpg.jpg

ஆகா.... புரட்சி,  திகார் ஜெயில் இவ்வளவு கொடுமையானதா?
எலி கடிக்கும், புலி கடிக்கும், நுளம்பு கடிக்கும்.....என்ற பயத்திலேயே....  
சிதம்பரத்துக்கு,  "லூஸ்  மோஷன்"   அதாங்க வயித்தாலை...  அடிக்க   வேணும். 

 
"குட் நைற்  மிஸ்டர் சிதம்பரம்"  இன்  திஹார் ஜெயில். ஹாவ் எ நைஸ் ஸ்லீப்.
எலி வந்தால்... புலியை  நினையுங்கள்...
அவ்வளவும் நீங்கள் செய்த துரோகாத்தின்... விலை, இது... என்பதை, 
வாழ்க்கையில்... மறவாதீர்கள். :grin:

  • தொடங்கியவர்

Dkn_Tamil_News_2019_Sep_03__564724147319794.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வந்து அவங்க தங்களுக்கை நடத்துற பழிக்குப்பழி  விளையாட்டு
இதிலை நாங்களும் பத்தோடை பதினொண்டாய் நிண்டு சந்தோசப்பட வேண்டியதுதான் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

sithmbaram-720x447.jpg

சிதம்பரத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படாது : அதிகாரிகள் தெரிவிப்பு!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரத்துக்கு  எவ்வித சிறப்பு வசதியும் அளிக்கப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவத்துள்ள அதிகாரிகள், “பா.சிதம்பரத்திற்கு மேற்கத்திய கழிவறையுடன் கூடிய தனி அறை தவிர வேறு எவ்வித சிறப்பு வசதியும் அளிக்கப்படமாட்டாது என கூறியுள்ளனர்.

பிற கைதிகளைப் போன்று சிறை நூலகத்தையும், அங்குள்ள தொலைக்காட்சியையும் பார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்  அனுமதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பா.சிதம்பரம் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கும், அவருக்கு z பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் பா.சிதம்பரத்தை செப்டம்பர் 19ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில், அவர் ஆசியாவிலேயே மிகப்பெரிய திஹார் சிறையில், பொருளாதார குற்றவாளிக்கான பகுதியில் உள்ள ஏழாம் எண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதே சிறையில்தான் கடந்த ஆண்டு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சிதம்பரத்திற்கு-சிறப்பு/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதே சிறையில்தான் கடந்த ஆண்டு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகனை முதலில் அனுப்பி சிறைபற்றிய தராதரம் அறிந்தபின்புதான் தந்தை சென்றிருக்கிறார். 

1 hour ago, தமிழ் சிறி said:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரத்துக்கு  எவ்வித சிறப்பு வசதியும் அளிக்கப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'எவ்வித சிறப்பு வசதியும் அளிக்கப்படமாட்டாது.' ஆனால் மாட்டும். எப்படி? இப்படித்தான்!! 

இந்தியாவில் இதெல்லாம்  சகயமப்பா.🤣

fraud_india.JPG

  • கருத்துக்கள உறவுகள்

உடனே  சாகக்கூடாது

வேற என்ன  வேண்டுமானாலும் செய்யுங்கள்

அதிகாரம்

ஆட்சி

இந்தி

என்னவெல்லாம் செய்யும்

செய்தது என்பதை  உணரும்வரை  அனுபவிக்கட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.