Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாய ராஜபக்சவிற்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

Featured Replies

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட ரீதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை போன்றன காணப்பட்டால் அவற்றை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரச நிர்வாக அமைச்சு, அமைச்சின் செயலாளர், குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் தேசிய திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பில் இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

https://www.tamilwin.com/politics/01/227383?ref=imp-news

  • தொடங்கியவர்

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

கடத்தல் கேடியும், கொலைகாரனும், மிலேச்ச பயங்கரவாதியுமான  கோட்டாபயவினால் சில ஆவணங்கள். பகிரங்கப்படுத்தப்பட்டாலும், ஒன்றுக்கு மேற்பட்ட ஆள் அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள் மறைக்கப்பட்டு வருகின்றன.

தேர்தலில் வாக்களிக்கும் உரிமையற்ற நிலையிலும் தேர்தல் பதிவேட்டில் கடத்தல் கேடியும், கொலைகாரனும், மிலேச்ச பயங்கரவாதியுமான  கோட்டாபயவின் பெயர் 2005 முதல் சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ளது.

அத்துடன் அக்காலத்தில் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்தாகவும் கூறப்படுகிறது.

 

 

இதுவும் போலியாம்!

625.0.560.320.160.600.053.800.700.160.90

 

 

கோட்டாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

குறித்த மனு மீதான வழக்கு இன்று (புதன்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோதே மேலதிக சமர்பணங்களை நாளை 1.30 மணிக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.

இந்த விசாரணைகளின்போது கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை தொடர்பான எந்த ஆவணங்களும் குடிவரவு திணைக்களத்திடம் இல்லை என்று குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சனத் ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/gotabhaya-rajapaksas-sri-lankan-citizenship-till-tomorrow/

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவுக்கு..... "ஆப்பு" வைக்கப் போறாங்கள்...  போலை கிடக்கு.
"வெடி"  கொழுத்த,  நான் ரெடி.  
நீங்கள் ரெடியா.... .😎

  • கருத்துக்கள உறவுகள்

"நிறைவேற்று அதிகாரம்" கொண்ட சனாதிபதியால் எல்லாம் சுபம்.....

சொறிலங்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தங்கள் அதிகார வரம்பினுள் இந்த வழக்கு இல்லை எனவும் சொறிலங்காவின் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரலாம் எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளதாம்.

On 9/30/2019 at 6:55 PM, போல் said:

சட்ட ரீதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை போன்றன காணப்பட்டால் அவற்றை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னர் இவ்வாறு உத்தரவிட்ட சொறிலங்காவின் நீதிமன்று பின்னர் அந்தர் பலடியடித்து தங்கள் அதிகார வரம்பினுள் இந்த வழக்கு இல்லை எனவும் சொறிலங்காவின் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரலாம் எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

இது இத் தீர்ப்பின் நம்பகத்தன்மையை, நடுநிலையை கேள்விக்குறி ஆக்கியுள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Rajesh said:

முன்னர் இவ்வாறு உத்தரவிட்ட சொறிலங்காவின் நீதிமன்று பின்னர் அந்தர் பலடியடித்து தங்கள் அதிகார வரம்பினுள் இந்த வழக்கு இல்லை எனவும் சொறிலங்காவின் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரலாம் எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

இது இத் தீர்ப்பின் நம்பகத்தன்மையை, நடுநிலையை கேள்விக்குறி ஆக்கியுள்ளது?

நீதிபதிகளுக்கு வெள்ளைவான் வந்திருக்குமோ?

 

1 minute ago, Jude said:

நீதிபதிகளுக்கு வெள்ளைவான் வந்திருக்குமோ?

ம்ம்! நல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க போல!

அப்பிடியும் நடந்திருக்கலாம் என்டும் மனதில் தோணிச்சுது!
3 பேர் வீட்டுக்கு முன்னால சில நாட்களா 3 வெள்ளை வான்கள் நடமாட்டம், தீர்ப்பு மாறிட்டுது!

நீதிமன்ற சேம்பர்க்கு உள்ளேயே சட்டத்தரணிகள் போட்ட வெற்றிக் கூச்சல்களும் அதை பெரிதும் கண்டுகொள்ளாத சொறிலங்காவின் நீதிபதிகளும் பெரிய திருகுதாளங்களை வெளிப்படுத்தி நிக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.