Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் நான் தமிழில் பேசியதால் ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள் அதிகம்.. பிரதமர் மோடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொன்மையான தமிழ் மொழி

அமெரிக்காவில் நான் தமிழில் பேசியதால் ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள் அதிகம்.. பிரதமர் மோடி.

அமெரிக்காவில் நான் தமிழில் பேசியதால் ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள் அதிகமாக வருகின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னை வந்தார். அப்போது அவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பாஜக சார்பிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கூடியிருந்த பாஜக மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசுகையில் சென்னைக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள என்னை வரவேற்க இவ்வளவு பேர் வந்துள்ளீர்கள். அமெரிக்காவில் தமிழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழ் மொழி பழமையான மொழி என அமெரிக்காவில் கூறினேன்.

அமெரிக்க ஊடகங்களில் தமிழ் குறித்து அதிக செய்திகள் வருகின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டையே நிறுத்துங்கள் என கூறவில்லை. ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். இந்தியா பற்றி அமெரிக்காவில் எதிர்பார்ப்புள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் மோடி.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/pm-narendra-modi-says-about-his-speech-about-tamil-in-unga-364362.html

 

##################     ###################     ##################      ###############

 

Anand Mahindra praises Tamil language in tweets

ஆஹா தமிழ்.. மோடி பேசிய பிறகுதான் உண்மை தெரிந்தது.. வெட்கப்படுகிறேன்.. ஆனந்த் மஹிந்திரா அதிரடி

பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு பேசிய பிறகுதான் உலகின் பழமையான மொழி தமிழ், என்பதை அறிந்து கொண்டேன். இதுவரை இது தெரியாமல் இருந்ததற்கு வெட்கப்படுகிறேன், என்று மகேந்திரா நிறுவன சேர்மன், ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி, மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியின் புலவர் இவ்வாறு பாடியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.

இன்றைய தினம் சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக விமான நிலையத்தில் பேசியபோது, உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்று நான் அமெரிக்காவில் பேசியது அந்த நாட்டு ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில்தான் ஆனந்த் மஹிந்திரா ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ்தான் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று என்று தெரிவிக்கும் வரை, நான் அது பற்றி அறியாமல் இருந்து விட்டேன். இதற்காக வெட்கப்படுகிறேன். இப்படியான ஒரு சிறந்த மொழியையும் அதன் பெருமையையும் மொத்த இந்தியாவுக்கும் பரப்பிட வேண்டும்.
 

நான் ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் தான் பயின்றேன். அப்போதே, தமிழ் கற்றிருக்க வேண்டும். ஆனால் திட்டுவதற்காக, உடன் படிக்கும் மாணவர்களிடம் இருந்து சில வார்த்தைகளை மட்டுமே, கற்றுக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறினர். இதை, தமிழ் நெட்டிசன்கள் வைரலாகி ஷேர் செய்து வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/mumbai/anand-mahindra-praises-tamil-language-in-tweets-364438.html

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர பாரதத்தில் இதுகாள் வரைக்கும் கண்டுகொள்ளப்படாத தமிழ்.. இப்போது கண்டுகொள்ளப்படுவதற்கு.. நாம் தமிழர் என்ற தமிழ் தேசியக் குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிப்பதும் ஒரு காரணம்.

வாழ்க.. வளர்க நாம் தமிழர். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு பேசிய பிறகுதான் உலகின் பழமையான மொழி தமிழ், என்பதை அறிந்து கொண்டேன். இதுவரை இது தெரியாமல் இருந்ததற்கு வெட்கப்படுகிறேன், என்று மகேந்திரா நிறுவன சேர்மன், ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி, மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியின் புலவர் இவ்வாறு பாடியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.

இன்றைய தினம் சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக விமான நிலையத்தில் பேசியபோது, உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்று நான் அமெரிக்காவில் பேசியது அந்த நாட்டு ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி சிறந்த அரசியல்வாதியென அறிஞர்களும் கணித்திருப்பதை அறியமுடிகிறது. தனது கட்சியைத் தமிழ்நாட்டில் நிறுவமுடியாத சங்கடம் அவருக்கு உள்ளது. அதனைப் பூரணமாக நிறுவுவதற்கு தமிழர்களை உச்சாணிக் கொம்பில் ஏற்றவேண்டும். பிறமொழிக்காரர் தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டாலே ஆ. ஊ என ஆர்ப்பரிக்கும் தமிழர்கள்..... தமிழ் மொழியையே, அதுவும் இந்தியப் பிரதமரே உயர்வாகப் பேசும்போது தங்களைத் தாங்களே தாரைவார்த்துக் கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். ஒரு பலூனை உடைக்கவேண்டும் என்றால் அதனை ஊதிப் பெருப்பிக்கவேண்டும் அதுதான் நடப்பதுபோல் ஐயம் ஏற்படுகிறது. ஆயினும் கிந்தியை இந்திய மொழியாக்கி, சமசுகிறிதத்தை உயர்ந்த மொழியாக்க முனையும் மோடியவர்கள், அரசியலில் விண்ணனாக இருந்தாலும்... ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல், அவர் அறியாமலே இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலும் தமிழருக்கு ஒரு மரியாதை ஏற்பட வழிசெய்துள்ளார் என்பதை மறுக்க முடியாது.     

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

பிரதமர் நரேந்திர மோடி சிறந்த அரசியல்வாதியென அறிஞர்களும் கணித்திருப்பதை அறியமுடிகிறது. தனது கட்சியைத் தமிழ்நாட்டில் நிறுவமுடியாத சங்கடம் அவருக்கு உள்ளது. அதனைப் பூரணமாக நிறுவுவதற்கு தமிழர்களை உச்சாணிக் கொம்பில் ஏற்றவேண்டும். பிறமொழிக்காரர் தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டாலே ஆ. ஊ என ஆர்ப்பரிக்கும் தமிழர்கள்..... தமிழ் மொழியையே, அதுவும் இந்தியப் பிரதமரே உயர்வாகப் பேசும்போது தங்களைத் தாங்களே தாரைவார்த்துக் கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். ஒரு பலூனை உடைக்கவேண்டும் என்றால் அதனை ஊதிப் பெருப்பிக்கவேண்டும் அதுதான் நடப்பதுபோல் ஐயம் ஏற்படுகிறது. ஆயினும் கிந்தியை இந்திய மொழியாக்கி, சமசுகிறிதத்தை உயர்ந்த மொழியாக்க முனையும் மோடியவர்கள், அரசியலில் விண்ணனாக இருந்தாலும்... ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல், அவர் அறியாமலே இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலும் தமிழருக்கு ஒரு மரியாதை ஏற்பட வழிசெய்துள்ளார் என்பதை மறுக்க முடியாது.     

தமிழனுக்கு அல்வா குடுக்க வெளிக்கிட்ட மோடிக்கு தமிழ்நாட்டு கீச்சுக்கள் gobackmodi உலக அளவில் முன்னுக்கு வந்தது இனி தமிழனுக்கு அல்வா குடுத்து காரியம் சாதிக்க முடியாது என்பதையே .

18 hours ago, தமிழ் சிறி said:

ஆஹா தமிழ்.. மோடி பேசிய பிறகுதான் உண்மை தெரிந்தது.. வெட்கப்படுகிறேன்.. ஆனந்த் மஹிந்திரா அதிரடி

இவரின் திட்டம்கள் முதலீடுகள் எதிர்காலத்தில்  தமிழ்நாட்டை சுடுகாடாக்குவது ஆக்குவதுக்கு இணையானது  ஆடு நனையுது என்று ஓநாய் அழுகை போல் இவரின் புகழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

 

மோடியின் தமிழ் பாசம் உண்மையானது | ரவீந்திரன் துரைசாமி பார்வையில் 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு பிடிக்கும்- மோடி .!

modi22323-1569823535.jpg

சென்னை: தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு பிடிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.சென்னையில் ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார்.

அவர் ஐஐடியில் இந்தியா- சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றோர் வைத்திருந்த கண்காட்சியை பார்வையிட்டார். அதற்கு முன்னதாக ஹேக்கத்தான் வெற்றியாளர்கள் முன் மோடி பேசுகையில் தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது.

தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு பிடிக்கும். இந்த உணவுகள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். சிறந்த கலாசாரம் மற்றும் பாரம்பரியம் கொண்டது சென்னை.

ஹேக்கத்தான் வெற்றிக்கும் உதவிய சிங்கப்பூர் கல்வித் துறை அமைச்சருக்கு எனது நன்றி. ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத் திறனை வளர்க்க உதவும்.உலக பாரம்பரிய சின்னம் மாமல்லபுரம். கற்சிற்பங்கள், பழமையான கோயிலுக்கு பெயர் போன மாமல்லபுரத்தை இங்கு வந்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் சென்று பார்வையிட வேண்டும் என்றார் மோடி.

https://tamil.oneindia.com/news/chennai/pm-narendra-modi-says-in-iit-that-he-likes-south-indian-dishes-idly-dosa-vada-very-much-364373.html

டிஸ்கி:

vada.png

ஜி .. ஏற்கனவே சுட்ட வடையே இன்னும் செரிக்கல..! அதுகுள்ள பஜ்ஜி , முட்ட போண்டா என்டு இறங்காதிங்கோ..!  😄

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.