Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செனூரன் முத்துசாமி: இந்தியாவுக்கு எதிராக களம் இறங்கிய தமிழர்

Featured Replies

SA v IND: செனூரன் முத்துசாமி: இந்தியாவுக்கு எதிராக களம் இறங்கிய தமிழர

படத்தின் காப்புரிமை Twitter/DolphinsCricket

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் துவங்கியது. இதில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். தென்னாபிரிக்க அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்நாட்டுக்காக களமிறங்கும் 101-வது வீரர் இவர். 

அவரது பெயர் செனூரன் முத்துசாமி.

என்ன தமிழ் பெயர் போல இருக்கிறதா?

ஆம். தமிழ் பெயர்தான். தமிழர்தான்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தென்னாப்பிரிக்கா வீரர். பேட்டிங், பந்துவீச்சு என ஆல்ரெளண்டராக வலம் வரும் முத்துசாமி டர்பனில் பிறந்தவர்.

 

தமிழ் தெரியாது

25 வயதாகும் செனூரனின் குடும்பம் தமிழகத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே குடியேறிவிட்டது. 

தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த செனூரன் முத்துசாமி, தனது  பூர்வீகம் சென்னை என்றும்,  நாகப்பட்டினத்தில் உறவினர்கள் உள்ளனர் என்றும் கூறுகிறார். 

செனூரன் முத்துசாமி: இந்தியாவுக்கு எதிராக களம் இறங்கிய தமிழர்

படத்தின் காப்புரிமை Twitter/DolphinsCricket

"தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வாழும் டர்பனில்  வசிக்கிறோம். அங்கே எங்களது குடும்பத்தினருடன் கோயிலுக்குச் செல்வது வழக்கம். என்னுடைய குடும்பத்தில் இன்னமும் சிலர் தமிழ் பேசுகிறார்கள். துரதிருஷ்டவசமாக எனக்கு தமிழ் பேசத்தெரியாது. ஆனால் மெல்ல மெல்ல தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் செனூரன் முத்துசாமி. 

 

'சங்கக்காரா எனது ஆதர்சம்'

முத்துசாமி பிரதானமாக ஒரு சுழற்பந்து வீச்சாளர். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங்கிலும் அசத்தியிருக்கிறார். 

தமக்கு இலங்கையைச் சேர்ந்த ரங்கனா ஹெராத், சங்கக்காரா ஆதர்சம் என்கிறார் செனூரன். 

உள்ளூர் போட்டிகளில் ஒரு பக்கம் விக்கெட் வீழ்த்திக்கொண்டே எதிரணியின் ரன் ரேட்டையும் கட்டுப்படுத்தி இருக்கிறார்.

முதல் தர கிரிக்கெட்டில் 69 போட்டிகளில் 3403 ரன்கள் குவித்திருக்கிறார். பந்துவீச்சில் 129 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு சிறந்த வீரர் விருதையும் வென்றிருக்கிறார்.

இந்தியாவின் சுழற்பந்துக்கு சாதகமான மைதானங்களில் இந்திய வீரர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் செனூரன் பந்துவீசுவாரா என்பதை பார்க்க இந்திய ரசிகர்களும் ஆர்வமாக இருக்கக்கூடும்.  

https://www.bbc.com/tamil/sport-49908800

  • தொடங்கியவர்

`355 ரன் பார்ட்னர்ஷிப், திருப்பம் தந்த முதல்தர கிரிக்கெட்!' - இந்திய அணி Vs தமிழர் முத்துசாமி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா சதம் அடித்து சாதனை படைத்தார். இவருடன் ஓப்பனிங் இறங்கிய மாயங் அகர்வாலும் 84 ரன்கள் எடுக்க இந்திய அணி சிறப்பான நிலையில் உள்ளது. இதற்கிடையியே இந்த டெஸ்டில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக இன்று அறிமுக வீரராக தென்னாப்பிரிக்க அணியில் ஒருவர் இடம்பிடித்திருந்தார். அவர் பெயர் செனுரான் முத்துசாமி. பெயரை பார்த்த உடனே புரிந்திருக்கும்.

ஆம்... அவர் ஒரு தமிழர். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முத்துசாமி சென்னையில் இருந்து 300 கி.மீ தள்ளி இருக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளது இவர்களின் குடும்பம். 25 வயதாகும் முத்துசாமி தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டாலும் பிறந்தது டர்பன் நகரின் அருகே உள்ள வெஸ்ட்வில்லே பகுதியில். சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம்காட்டி வந்த முத்துசாமி ஒரு ஆல் ரவுண்டர்.

 

திருப்பம் தந்த முதல்தர கிரிக்கெட்!
இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ஸ்பின் பௌலரான இவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல்தர போட்டிகளில் பங்கேற்றுவந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் லிஸ்ட் ஏ அணியான டால்பின்ஸ் அணிக்காக விளையாடியபோது இவருக்குத் திருப்புமுனை ஏற்பட்டது. டெஸ்ட் போட்டியான அதில் இரண்டாவது களமிறங்கிய முத்துசாமி, மற்றொரு வீரருடன் பார்ட்னர்ஷிப் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 355 ரன்கள் குவித்தனர். தென்னாப்பிரிக்கா லிஸ்ட் ஏ கேரியரில் இந்த ரன்கள் இதுவரை தகர்க்க முடியாத சாதனையாக இருக்கிறது. இந்தப் போட்டியில் முத்துசாமி 181 ரன்கள் குவிக்க தேர்வுக் குழுவின் பார்வை விழத் தொடங்கியது.

121 போட்டிகளில் விளையாடி 3,000 ரன்னுக்கு மேல் குவித்தும், 129 விக்கெட்களையும் வீழ்த்தி தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடவே, தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். இன்று தொடங்கியுள்ள டெஸ்ட் போட்டிக்குமுன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் முத்துசாமிக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் ஒரே ஒரு ஓவர் பௌலிங் செய்தார். அதிலும் ஒரே ஒரு விக்கெட் எடுக்க தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார்.

``எங்களது வேர் சென்னையில் இருந்து வந்தது. நாகப்பட்டினத்தில் இன்னும் உறவினர்கள் இருக்கிறார்கள். பல தலைமுறைகள் கடந்துவிட்டாலும் எனது குடும்பத்துக்கு இந்தியாவுடனான தொடர்பு இன்னும் இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் நமது கலாசாரம்தான். நான் தென்னாப்பிரிக்க அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளேன் எனத் தெரிந்ததும் என் பெற்றோர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

அதுவும்இந்திய அணிக்கு எதிராக அறிமுகம் என்றதும் அவர்களுக்கு வார்த்தைகள் வரவில்லை. டர்பனில் இன்னும் அதிகமான இந்திய மக்கள் இருக்கிறார்கள். என் குடும்பத்தில் சிலர் தமிழ் பேசுகிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நான் கற்றுக்கொள்ளவில்லை. இப்போதுதான் தமிழ் மொழியை மெது மெதுவாகக் கற்றுவருகிறேன். அதேநேரம் கோயிலுக்குச் செல்வது யோகா செய்வது என இந்திய கலாசாரத்தில்தான் வாழ்ந்து வருகிறோம்" எனத் தனது பூர்வீகம் குறித்து முத்துசாமி பிடிஐ தளத்துக்குப் பேசியுள்ளார்.

https://sports.vikatan.com/cricket/senuran-muthusamy-was-chosen-as-the-third-specialist-spinner-by-sa-against-india-for-first-test

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ampanai said:

SA v IND: செனூரன் முத்துசாமி: இந்தியாவுக்கு எதிராக களம் இறங்கிய தமிழர

படத்தின் காப்புரிமை Twitter/DolphinsCricket

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் துவங்கியது. இதில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். தென்னாபிரிக்க அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்நாட்டுக்காக களமிறங்கும் 101-வது வீரர் இவர். 

அவரது பெயர் செனூரன் முத்துசாமி.

என்ன தமிழ் பெயர் போல இருக்கிறதா?

ஆம். தமிழ் பெயர்தான். தமிழர்தான்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தென்னாப்பிரிக்கா வீரர். பேட்டிங், பந்துவீச்சு என ஆல்ரெளண்டராக வலம் வரும் முத்துசாமி டர்பனில் பிறந்தவர்.

பெயரை கேட்கவே... எவ்வளவு சந்தோசமாக உள்ளது.
முகத்தில்... தமிழ் களை  தெரிகின்றது.
கிரிக்கெட்டில்... ஒரு கலக்கு கலக்க வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன். 💓

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரை இங்க தான் நிப்பேன்.. கெத்து காட்டிய தென்னாப்பிரிக்க தமிழன்.. யாராலையும் அசைக்க முடியலையே.!

senuranmuthusamy2-1570020208-1570517931.

விசாகப்பட்டினம் : இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் செனூரன் முத்துசாமி இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் நாட் - அவுட் ஆக நின்றார்.தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்று இருக்கும் பூர்வீக தமிழரான செனூரன் முத்துசாமி, இந்திய அணிக்கு எதிராக தன் அறிமுகப் போட்டியில் ஆடினார்.

விக்கெட்டை வீழ்த்த..

தன் முதல் போட்டியிலேயே பேட்டிங்கில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார் முத்துசாமி. இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் இந்திய பந்துவீச்சாளர்களால் அவர் விக்கெட்டை வீழ்த்தவே முடியவில்லை.

ஆல் - ரவுண்டர் முத்துசாமி

தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்ற செனூரன் முத்துசாமி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக வலம் வந்தவர். இந்தியமண்ணில் கூடுதல் சுழற் பந்துவீச்சாளர் தேவை என்பதால் தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டார் அவர்.

பேட்டிங், பந்துவீச்சு எப்படி?

தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடிய அவர், சுழற் பந்துவீச்சில் பயன்படுவார் என்று அணியில் சேர்க்கப்பட்டாலும், அவரால் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனினும், பேட்டிங்கில் தன்னை நிரூபித்தார்.

முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்

முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 502 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க ஓரளவு போராடியது. எட்டாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய செனூரன் முத்துசாமி நிதான ஆட்டம் ஆடினார்.

களத்தில் நின்றார்

தென்னாப்பிரிக்கா 376 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்தாலும், அந்த அணி 431 ரன்கள் வரை எட்ட முக்கிய காரணமாக இருந்தார். 106 பந்துகள் சந்தித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங்

இரண்டாம் இன்னிங்க்ஸில் தென்னாப்பிரிக்க அணியின் அனைத்து முக்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். 70 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது தென்னாப்பிரிக்கா அணி. முத்துசாமி ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.

இறுதியில் போராடினார்

அவரும், பீடிட்டும் சேர்ந்து 91 ரன்களுக்கு கூட்டணி அமைத்து போராடினர். முத்துசாமி, முதல் இன்னிங்க்ஸ் போல இந்த முறையும் நூறு பந்துகளுக்கும் மேல் சந்தித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

அரைசதம் அடிக்கும் வாய்ப்பு

108 பந்துகள் சந்தித்து 49 ரன்கள் எடுத்தார் முத்துசாமி. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தும், ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் அரிய வாய்ப்பை நழுவவிட்டார். எனினும், நல்ல டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார்.

முக்கிய பேட்ஸ்மேன்

அஸ்வின், ஷமி, ஜடேஜா ஆகிய மூவரும் விக்கெட் வேட்டை நடத்தினாலும் முத்துசாமி விக்கெட்டை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் அவரை முக்கிய பேட்ஸ்மேனாக தென்னாப்பிரிக்கா பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் அவர் விக்கெட்டை வீழ்த்த இப்போதே திட்டமிட வேண்டும்.

விராட் கோலி விக்கெட்

பந்துவீச்சில் சுமாராகவே செயல்பட்ட முத்துசாமி, ஒரே ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதுதான் அவரது முதல் டெஸ்ட் விக்கெட். அவரிடம் வீழ்ந்தது வேறு யாருமல்ல. உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தற்போது வலம் வரும் விராட் கோலி தான்.

https://tamil.mykhel.com/cricket/ind-vs-sa-senuran-muthusamy-goes-unbeaten-in-both-the-innings/articlecontent-pf49949-017294.html

டிஸ்கி

சகல துறை ஆட்டக்காரர் ஆக ஜொலிக்க வாழ்த்துக்கள்..💐

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் செனுரன் முத்துசாமி ......!  👍

  • தொடங்கியவர்
On ‎10‎/‎8‎/‎2019 at 1:10 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விக்கெட்டை வீழ்த்த..

தன் முதல் போட்டியிலேயே பேட்டிங்கில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார் முத்துசாமி. இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் இந்திய பந்துவீச்சாளர்களால் அவர் விக்கெட்டை வீழ்த்தவே முடியவில்லை.

வாவ்! சாதனைகள் படைப்பீர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.