Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில், இன்றுவரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் ஆவர்.

ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பேராசிரியர் கே. நிரஞ்சன, ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் சாம். தியாகலிங்கம் ஆகியோரே வெளிநாடுகளில் இருந்தவாறு யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருக்கின்றனர்.

78965.jpg

இவர்களோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சேவையாற்றும் பேராசிரியர்கள் கலாநிதி எஸ். சிறி சற்குணராஜா, வேல்நம்பி ஆகியோர் இன்று தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருக்கின்றனர் எனத் தெரியவருகிறது.

மேலும், இவர்களைவிட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து வைத்திய கலாநிதி எஸ். ரவிராஜ், பேராசிரியர்கள் பி.ரவிராஜன், கே.மிகுந்தன் ஆகியோர் தமது விண்ணப்பங்களை விரைவில் சமர்ப்பிக்கவிருப்பதாக விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

இதேவேளை, கடந்த 23 நாட்களாக நாடுமுழுவதும் பல்கலைக்கழகங்களின் போதனை சாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்று வருவதனால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்படுமா என்பது குறித்த சர்ச்சை ஒன்று நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/66098

 

21 hours ago, கிருபன் said:

இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் ஆவர்.

புலம்பெயர் பேராசியர்களிடம் ஆளுமை, திறமை, வலைப்பின்னல்  மற்றும் சர்வதேச கல்வி பற்றிய அறிவு அதிகமாக இருக்கும். ஆனால், உள்ளூர் அரசியல் பற்றிய அறிவும் தந்திரோபாயங்களும் தேவை. இல்லாவிட்டால் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில், இன்றுவரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் ஆவர். என்கிற செய்தி மகிழ்ச்சி தருகிறது.

.

சர்வதேச பல்களைக் கழகங்களின் அங்கீகாரம்பெற்ற ஆங்கில பேராசிரியராக அமரிக்காவில் பணியாற்றும் சுரேஸ் கனகராஜா  Dr.Suresh Canagarajah, Professor, Applied Linguistics, English, Asian Studies, Pennsylvania,USA.  (suresh canagarajah) அவர்களும்  விண்ணப்பிப்பது நன்று. சிறந்த மொழிபெயர்ப்பாளரும் கல்விமானுமான சுரேஸ்  அவர் ஏற்கனவே உலக நாடுகளிலும் இலங்கை தமிழ் பகுதிகளிலும் தொலைத் தொடர்புகளுடன் நேரில் சென்றும் பணியாற்றி வருகிறார்.  செ சுரேஸ் கனகராஜாவையும் விண்ணப்பிக்க கோரும்படி என் நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.

On 10/4/2019 at 10:50 AM, poet said:

சர்வதேச பல்களைக் கழகங்களின் அங்கீகாரம்பெற்ற ஆங்கில பேராசிரியராக அமரிக்காவில் பணியாற்றும் சுரேஸ் கனகராஜா  Dr.Suresh Canagarajah, Professor, Applied Linguistics, English, Asian Studies, Pennsylvania,USA.  (suresh canagarajah) அவர்களும்  விண்ணப்பிப்பது நன்று. சிறந்த மொழிபெயர்ப்பாளரும் கல்விமானுமான சுரேஸ்  அவர் ஏற்கனவே உலக நாடுகளிலும் இலங்கை தமிழ் பகுதிகளிலும் தொலைத் தொடர்புகளுடன் நேரில் சென்றும் பணியாற்றி வருகிறார்.  செ சுரேஸ் கனகராஜாவையும் விண்ணப்பிக்க கோரும்படி என் நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.

பல கஷ்டங்களுக்கு மத்தியில ஊர்லயே இருந்து சேவையாற்றுபவர்களுக்கு முதலிடம் கொடுக்கிறது நல்லது!

அங்கையே இருப்பவர்கள் சிலர் விண்ணப்பித்துள்ளனர்!

  • கருத்துக்கள உறவுகள்

போன தடவை துணைவேந்தர் தெரிவு நடந்த பொழுதும்  பொஸ்ரன் பேராசிரியரான சாம் தியாகலிங்கம் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது. "விண்ணப்பதாரியின்  தற்போதைய திணைக்களத்தின் தலைவரால் அத்தாட்சிப் படுத்தப் படவில்லை" என்று முதலில் காரணம் கூறினார்களாம். அமெரிக்காவில் அப்படியான அத்தாட்சிப் படுத்தல் இல்லை என்று தெரிவுக்குழுவில் இருந்த சிலர் சுட்டிக் காட்டிய பிறகு, அவரது "விண்ணப்பம் முடிவு திகதிக்கு ஒரு நாள் பிந்தி வந்தது" என்று காரணம் கூறி நிராகரித்தார்களாம். பின்னர் நடந்த முன்மொழிவில் இரண்டாவதாக வந்த விக்னேஸ்வரனை ஜனாதிபதி நியமித்தார், பின்னர் ஜனாதிபதியே அவரைப் பதவியில் இருந்து தூக்கியும் விட்டார்! 

யாழ் பல்கலை இலங்கையின் ஏனைய பல்கலைக் கழகங்களை விட பின் தங்கி இருக்கக் காரணம் அங்கே இருக்கும் முதுகு சொறியும் உள்ளக அரசியல்! அது தான் பதவியை தீர்மானிக்குமேயொழிய விண்ணப்பதாரியின் தகுதிகள் அல்ல!    

7 minutes ago, Justin said:

இரண்டாவதாக வந்த விக்னேஸ்வரனை ஜனாதிபதி நியமித்தார், பின்னர் ஜனாதிபதியே அவரைப் பதவியில் இருந்து தூக்கியும் விட்டார்! 

யாழ் பல்கலைக்கழகத்தின் உள்குத்து வேலைகளை கடவுளாலும் நிறுத்த முடியா.

தனது ஆய்வு மாணவியை தெரிவு செய்யாமையால் விஞ்ஞான பேராசிரியர் ஒருவர் அந்த துறைக்கு தெரிவு செய்யப்பட்ட கூடிய தகுதியுள்ள 4 தமிழர்கள் பதவியை பெறமுடியாமல் முட்டுக்கட்டை போட்டுவாறாராம். காரணம் அவர் முதல் துறைத் தலைவரா இருந்த போது அந்த மாணவியை எடுப்பன் என்டு உறுதிமொழி வழங்கி இருக்கிறாராம். அந்த மாணவிக்காக தாண்டவமாடுளவுக்கு சிலர் இல்லாமலில்லை. அந்த பேராசிரியரும் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க ஓடுப்பட்டு திரிகிறாராம்.

துணை வேந்தர் விக்கினேஸ்வரனை தூக்கியத்துக்கு வலுவான காரணம் எதுவுமில்லை! சொறிலங்கா அநீதிமன்றில் அவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நடக்குது.

பல்கலைக்கழக வளாகத்தில மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைப்பதை தடுக்காது இருந்ததும், சொறிலங்காவின் பாதுகாப்பு தரப்பு கயவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதுவுமே அவர் பதவியிலிருந்து தூக்கப்பட காரணமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Rajesh said:

யாழ் பல்கலைக்கழகத்தின் உள்குத்து வேலைகளை கடவுளாலும் நிறுத்த முடியா.

தனது ஆய்வு மாணவியை தெரிவு செய்யாமையால் விஞ்ஞான பேராசிரியர் ஒருவர் அந்த துறைக்கு தெரிவு செய்யப்பட்ட கூடிய தகுதியுள்ள 4 தமிழர்கள் பதவியை பெறமுடியாமல் முட்டுக்கட்டை போட்டுவாறாராம். காரணம் அவர் முதல் துறைத் தலைவரா இருந்த போது அந்த மாணவியை எடுப்பன் என்டு உறுதிமொழி வழங்கி இருக்கிறாராம். அந்த மாணவிக்காக தாண்டவமாடுளவுக்கு சிலர் இல்லாமலில்லை. அந்த பேராசிரியரும் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க ஓடுப்பட்டு திரிகிறாராம்.

துணை வேந்தர் விக்கினேஸ்வரனை தூக்கியத்துக்கு வலுவான காரணம் எதுவுமில்லை! சொறிலங்கா அநீதிமன்றில் அவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நடக்குது.

பல்கலைக்கழக வளாகத்தில மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைப்பதை தடுக்காது இருந்ததும், சொறிலங்காவின் பாதுகாப்பு தரப்பு கயவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதுவுமே அவர் பதவியிலிருந்து தூக்கப்பட காரணமாம்.

உண்மை. ஆனால் கவனிக்க வேண்டியது என்னவெனில், பல்கலை மூதவையின் முன்மொழிவில் இரண்டாம் நிலை வாக்குப் பெற்றவரே ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டார்! தூக்கப்பட்டதற்கு வலுவான காரணங்கள் இல்லாதது போல, பதவி வழங்கப் பட்டதற்கும் வலுவான காரணங்கள் இருக்கவில்லை!

அதனால் தான் சொன்னேன், தகுதி ஒரு பொருட்டே அல்ல! உள் அரசியல் தான் முதன்மைக் காரணி! 

  • கருத்துக்கள உறவுகள்

www3333-720x450.jpg

யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவிக்கு 09 பேர் விண்ணப்பம்!

யாழ்.பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக ஒன்பது பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்காவின் பொஸ்ரன் பல்கலைக் கழகத்தின் மருத்துவ உயிரியல் மற்றும் மரபணுத்துறையின் இணைப் பேராசிரியரான சாம். தியாகலிங்கம், ஐக்கிய இராச்சியத்தின் சவுத்ஹம்டன் பல்கலைக்கழக இலத்திரனியல், கணினி விஞ்ஞானத்துறைப் பேராசிரியரான மகேசன் நிரஞ்சன் ஆகியோரே வெளிநாடுகளில் இருந்தவாறு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பதவியிலிருந்த சமயம் 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் பால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கமைய பதவி நீக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக கணித புள்ளி விபரவியல் துறைப் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன்,

கடந்த முறை இடம்பெற்ற துணைவேந்தர் தெரிவின் போது, பேரவையினால் முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்ட போதிலும், ஜனாதிபதியின் தெரிவில் இடம்பிடிக்கத் தவறிய யாழ். பல்கலைக்கழக கணித புள்ளி விபரவியல் துறைப் பேராசிரியர் சி. சிறி சற்குணராஜா,

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதியும், வைத்திய நிபுணருமாகிய எஸ். ரவிராஜ்,

யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்பிகள் பீட பீடாதிபதியும், விவசாயப் பேராசிரியருமான கே. மிகுந்தன்,

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் ரி. வேல்நம்பி,

யாழ். பல்கலைக் கழக கலைப் பீடத்தின் ஆங்கில மொழிக் கற்கைகள் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க முன்னாள் தலைவருமான கலாநிதி இ. இராசகுமாரன் மற்றும் யாழ். பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஊழியரும், யாழ். பல்கலைக் கழக ஊழியர் சங்கத் தலைவருமான எஸ். கே. தனேந்திரன் ஆகியோரும் துணைவேந்தர் பதவிக்காகத் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

http://athavannews.com/யாழ்-பல்கலை-துணைவேந்தர்/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.