Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவை விரைவில் சந்திக்கின்றது கூட்டமைப்பு

Featured Replies

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச என்னை சந்திக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 கோத்தாபய ராஜபக்சவுடன் மகிந்த ராஜபக்ச பசில் ராஜபக்சவும்  இந்த சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய முன்னணியின்  சஜித்பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கட்சியின் நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தாபய  ராஜபக்சவிடம் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் நாங்கள் புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தவிர படையினர் வசமுள்ள நிலங்களை விடுவிப்பது, அரசியல் கைதிகள் விடுதலை போன்ற விடயங்களும் உள்ளன என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்த்த பின்னர் முடிவெடுப்போம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/66604

 

 

  • தொடங்கியவர்

சிங்கப்பூர் பயணமானார் கோத்தா

கோத்தாபய ராஜபக்ஷ வைத்திய பரிசோதனைக்காக இன்று சிங்கப்பூர் சென்றுள்ளார்.

கோத்தாபய உட்பட அவரின் குழுவினர் இன்று காலை 12.50 மணியளவில் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளனர். 

குறித்த குழுவினர்  எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/66597

  • தொடங்கியவர்

'தமிழ் கட்சிகளின் மௌனம் கவலையளிக்கிறது’

image_44e64ee658.jpg

“ஜனாதிபதியான மறுநாளே சிறையிலுள்ள இராணுவ வீரர்களை விடுதலை செய்வேனென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை தொடர்பில் அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சிகள் மௌனம் காக்கின்றமை கவலையளிக்கின்றது” என, மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தான் ஜனாதிபதியானதும் நவம்பர் 17 ஆம் திகதி சிறையிலுள்ள இராணுவ வீரர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார். 

“அவரது பேச்சில் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

"அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதன்போது வாக்குறுதிகள் வழங்கி உண்ணாவிரதங்கள் முடித்து வைக்கப்பட்டன. ஆனால் அவர்களின் விடுதலை என்பது முடிவின்றி தொடர்ந்து செல்கின்றது.

“இவ்வாறான சூழ்நிலையில் சிறையிலுள்ள இராணுவ வீரர்கள் விடுவிக்கப்படுவர் என்ற கோட்டாபயவின் கருத்து இனவாதத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

"மேலும், நல்லாட்சியில் 4 1/2 வருடமாக மறைந்திருந்த கடந்த கால இருண்ட யுகத்தை மீண்டும் நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. இக்கருத்து தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள தமிழ் கட்சிகள் மௌனம் காக்கின்றன.

“இது கவலையளிக்கின்றது. எனவே, கோட்டாபயவின் கருத்து தொடர்பில் அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சிகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தமிழ்-கட்சிகளின்-மௌனம்-கவலையளிக்கிறது/175-239795

12 hours ago, ampanai said:

தமிழ்க் கட்சிகள் மௌனம் காக்கின்றமை கவலையளிக்கின்றது

இவ்வாறான பேரினவாத கருத்துக்களை எதிர்ப்பவர்களை கோமாளிகள் என்னுமளவுக்கு பிரச்சினைகளை பாத்து தப்பியோடும் அடிமைப்புத்தியுள்ள பலரும், பின்கதவால் கோடிகளை பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர்கள் பலரும் இருக்கும் போது எதிர்ப்புக் குரல்கள் உரத்துக் கேட்காது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Rajesh said:

இவ்வாறான பேரினவாத கருத்துக்களை எதிர்ப்பவர்களை கோமாளிகள் என்னுமளவுக்கு பிரச்சினைகளை பாத்து தப்பியோடும் அடிமைப்புத்தியுள்ள பலரும், பின்கதவால் கோடிகளை பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர்கள் பலரும் இருக்கும் போது எதிர்ப்புக் குரல்கள் உரத்துக் கேட்காது.

அவர்களை எல்லாம் என்ன செய்ய போகிறீர்கள்?

  • காணாமல் போக செய்யப் போகிறீர்களா?
  • அல்லது மின்கம்ப தண்டனை கொடுக்க போகிறீர்களா?
  • வெள்ளை வேன் அனுப்பும் நோக்கம்?

 

18 ஆம் திகதிக்கு பின்னர் தான் சந்திப்பார்கள் என ஒரு கதை அடிபடுது.

உறுதியாக தெரியவில்லை.

17 hours ago, Jude said:

அவர்களை எல்லாம் என்ன செய்ய போகிறீர்கள்?

  • காணாமல் போக செய்யப் போகிறீர்களா?
  • அல்லது மின்கம்ப தண்டனை கொடுக்க போகிறீர்களா?
  • வெள்ளை வேன் அனுப்பும் நோக்கம்?

இப்பிடி நீங்க செய்ற வேலைகளை மற்றவங்க தலையில கட்டிவிட்டு நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்டு நினைக்கிறீங்களோ?
இப்பிடி எழுதி தமிழின கொலைகாராக் கும்பலிட்டை எவ்வளவு கோடிகள் வாங்க போறீக?
உங்களைப்போல மற்றவங்களையும் நினைத்து யாரை ஏமாத்த நினைக்கிறீங்க?

 

இப்பிடி எழுதி தமிழின பற்றாளர்களை அழித்துவிடலாம் என்டு நினைகிறீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Lara said:

18 ஆம் திகதிக்கு பின்னர் தான் சந்திப்பார்கள் என ஒரு கதை அடிபடுது.

உறுதியாக தெரியவில்லை.

18´ம் திகதிக்கு பிறகு....  தேர்தல் முடிந்து விடுமே.... :grin:
அப்ப...   நாலாம் மாடியில் தான்.... சந்திப்பு நடக்கும் என நினைக்கின்றேன். 🤣

On 10/10/2019 at 1:56 PM, ampanai said:

கோத்தாவை விரைவில் சந்திக்கின்றது கூட்டமைப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தா இந்தியா கிளம்பிறம் இந்தா இந்தியா கிளம்பிறம் இந்தா இந்தியா கிளம்பிறம் என்டு ஜூன் மாதம் முதல் கத்தின சம்சும் கும்பல் இன்னும் கிளம்பினபாட்டை காணேல!

அதுக்குள்ள இதுவேறை!

அதுசரி போனவருசம் சுமந்திரன் முக்கி முனகி ரணிலுக்கு முண்டு கொடுத்துபோட்டு ஜனவரிக்குள்ளை தீர்வுப்பொதி பாராளுமன்றத்துல சமர்ப்பிக்கப்படும், மார்ச்க்குள்ளை அரசியல் தீர்வு வந்திடும், இல்லாட்டி நான் உடன ரிசைன் பண்ணுவன் என்டு பீலா விட்டார். இப்ப என்ன ஆச்சு? சுமந்திரன்டை வாலுகளும் இப்ப சைலன்ட். அவை ஜனாதிபதி தேர்தல்ல தமிழ் மக்களை மிரட்டி சிங்களவனுக்கு முண்டு கொடுக்க பிசி ஆக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Rajesh said:

இந்தா இந்தியா கிளம்பிறம் இந்தா இந்தியா கிளம்பிறம் இந்தா இந்தியா கிளம்பிறம் என்டு ஜூன் மாதம் முதல் கத்தின சம்சும் கும்பல் இன்னும் கிளம்பினபாட்டை காணேல!

அதுக்குள்ள இதுவேறை!

அதுசரி போனவருசம் சுமந்திரன் முக்கி முனகி ரணிலுக்கு முண்டு கொடுத்துபோட்டு ஜனவரிக்குள்ளை தீர்வுப்பொதி பாராளுமன்றத்துல சமர்ப்பிக்கப்படும், மார்ச்க்குள்ளை அரசியல் தீர்வு வந்திடும், இல்லாட்டி நான் உடன ரிசைன் பண்ணுவன் என்டு பீலா விட்டார். இப்ப என்ன ஆச்சு? சுமந்திரன்டை வாலுகளும் இப்ப சைலன்ட். அவை ஜனாதிபதி தேர்தல்ல தமிழ் மக்களை மிரட்டி சிங்களவனுக்கு முண்டு கொடுக்க பிசி ஆக்கும்!

கூத்தமைப்பு  சரியான...  "**** கூட்டங்கள்" என்று, எல்லாருக்கும்   தெரியும்.
அதனால் தான்... இவர்களை, ஒருவரும்... கணக்கில் எடுப்பதில்லை. 
ஆனால்... அவர்களின் நினைப்பு....  
இன்னும்...  சொறிலங்காவின்  எதிர் கட் சி  தலைவர் என்ற மாதிரி,  ஒரு... இறுமாப்பு.

Edited by நியானி

4 hours ago, தமிழ் சிறி said:

18´ம் திகதிக்கு பிறகு....  தேர்தல் முடிந்து விடுமே.... :grin:
அப்ப...   நாலாம் மாடியில் தான்.... சந்திப்பு நடக்கும் என நினைக்கின்றேன். 🤣

இம்மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர்.

தேர்தல் அடுத்த மாதம் 16 ஆம் திகதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.