Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க கூறும் காணாமல் போன உறவுகள்

Featured Replies

எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் ஜனாதிபதி  வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் தொடர்ச்சியாக 984 ஆவது நாளாகவும் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

DSC_0095_2.JPG

தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு இங்கே சிங்கள வேட்பாளர்கள் எந்த முகத்துடன்  ஓட்டு கேட்டு வருகிறார்கள் அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க கூடாது எனவும் மீன் சின்னத்திலே போட்டி போடுகின்ற தமிழ் வேட்பாளர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் காணாமல் போன உறவுகள் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்திற்கு முன்பாக  போராட்டம் மேற்கொள்ளும் கொட்டகைக்கு முன்பாக தமிழகத்தில் கடந்த 26 ஆம் திகதி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்து மரணமான சிறுவன் சுர்ஜித்திற்காகவும் நேற்றைய தினம் நெடுங்கேணியில் இடம்பெற்ற இரண்டு குழந்தைகளின் இறப்பிற்காகவும் அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.

DSC_0100.JPG

ஜனநாயக தேர்தல் தொடர்பாக  தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்கள் ஒருங்கிணைந்த கொள்கையுடன் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உலகுக்கு காண்பிக்க இது ஒரு அரிய வாய்ப்பு என குறிப்பிட்டு மீன் சின்னம் பொறிக்கப்பட்டு அதற்கு புள்ளடியிடப்பட்ட பதாதைகளை  போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் போன உறவுகள் தாங்கியிருந்தமை காண கூடியதாக இருந்தது.

DSC_0105.JPG

போராட்டக்காரர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடையதும் பிரித்தானியாவின் உடையதும் கொடிகளையும் ஏந்தி இன்றுடன் 984நாளாக போராட்டம் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/67870

தமிழ் அரசியல் கட்சிகள் எந்த நொண்டிச்சாட்டை சொல்லிக்கொண்டு தமிழினத்தை அழித்த சிங்கள கட்சிகளுக்கு பின்னால போவம் என்டு யோசிச்சு கலங்குற நேரத்தில, தாயகத்தில் வாழும் கடுமையா பாதிக்கப்பட்ட மக்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்கச் சொல்லி நேரடியாகவே கேட்டிருக்கீனம்.

13 hours ago, ampanai said:

தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு இங்கே சிங்கள வேட்பாளர்கள் எந்த முகத்துடன்  ஓட்டு கேட்டு வருகிறார்கள் அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க கூடாது எனவும் மீன் சின்னத்திலே போட்டி போடுகின்ற தமிழ் வேட்பாளர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் காணாமல் போன உறவுகள் குறிப்பிட்டுள்ளனர்.

நியாயமான கோரிக்கை!

காலத்துக்கு காலம் சூழ்நிலைகள்,தேவைகள் வேறுபடுவதுண்டு!

தமிழ் கட்சிகள் 5 ஒன்றிணைந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. சிங்கள-பௌத்த கொலைகாரக் கட்சிகள் இன்றுவரை நியாயமான அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே 5 கட்சிகள் பகிஷ்கரிப்பு / புறக்கணிப்பு பயனற்றது என ஒருமித்து கருதுகின்றன.  

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிலையில் சில பிற்போக்கு / மோட்டு / அடிமை மனோநிலையில் உள்ள சிலரால் மட்டுமே  திட்டமிட்ட தமிழினவழிப்பை கடந்த 70 வருடங்களாக செய்துவரும் பேரினவாதிகளில் ஒருவற்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்  அல்லது பகிஷ்கரிக்க வேண்டும் என்று புலம்பி வருகின்றனர்.

அதிலும் கையாலாகாத சம்மந்தன், சுமந்திரன், மாவை வகையறாக்களும் இவர்களின் விசிறிகளும் சிங்கள-பௌத்த கொலைகாரக் கட்சிகளில் ஒன்றான ஐ.தே. கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நப்பாசையில் காலத்தைக் கடத்துகின்றனர்.

16 hours ago, ampanai said:

எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் ஜனாதிபதி  வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் தொடர்ச்சியாக 984 ஆவது நாளாகவும் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு இங்கே சிங்கள வேட்பாளர்கள் எந்த முகத்துடன்  ஓட்டு கேட்டு வருகிறார்கள் அவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க கூடாது எனவும் மீன் சின்னத்திலே போட்டி போடுகின்ற தமிழ் வேட்பாளர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் காணாமல் போன உறவுகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனநாயக தேர்தல் தொடர்பாக  தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்கள் ஒருங்கிணைந்த கொள்கையுடன் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உலகுக்கு காண்பிக்க இது ஒரு அரிய வாய்ப்பு என குறிப்பிட்டு மீன் சின்னம் பொறிக்கப்பட்டு அதற்கு புள்ளடியிடப்பட்ட பதாதைகளை  போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் போன உறவுகள் தாங்கியிருந்தமை காண கூடியதாக இருந்தது.

இதை இவர்கள் தாமாகவே கூறவில்லை. இவர்களுக்கு ஆலோசனை வழங்குவோர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்தால் உலகுக்கு எதையோ காட்டலாம், அதன் மூலம் எதையோ சாதிக்கலாம் என கூறியதை நம்பி கூறுகிறார்கள்.

யதார்த்தம் தெரிந்தவர்களுக்கு புரியும் அப்படி எதுவும் நடக்காது, மாறாக சிவாஜிலிங்கத்துக்கு செல்லும் வாக்குகள் சஜித்திற்கான வாக்குகளை பிரித்து கோத்தாவின் வெற்றிக்கு உதவும் என்பதால் எதிர்காலத்தில் இன்னும் பலர் காணாமலாக்கப்படுவதற்கே வழிகோலும்.

எனவே மக்கள் சிவாஜிலிங்கத்தை புறக்கணித்து சஜித்துக்கு வாக்களியுங்கள்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
On 10/30/2019 at 2:28 PM, ampanai said:

போராட்டக்காரர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடையதும் பிரித்தானியாவின் உடையதும் கொடிகளையும் ஏந்தி இன்றுடன் 984நாளாக போராட்டம் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  

Quote

 

போராட்டக்காரர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியுடன், அமெரிக்க கொடியையும் ஏந்தி நிற்கின்றனர். அங்கே பிரித்தானியா கொடி இல்லை.

Quote
On 10/30/2019 at 2:28 PM, ampanai said:

ஜனநாயக தேர்தல் தொடர்பாக  தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்கள் ஒருங்கிணைந்த கொள்கையுடன் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உலகுக்கு காண்பிக்க இது ஒரு அரிய வாய்ப்பு என குறிப்பிட்டு மீன் சின்னம் பொறிக்கப்பட்டு அதற்கு புள்ளடியிடப்பட்ட பதாதைகளை  போராட்டத்தில் கலந்து கொண்ட காணாமல் போன உறவுகள் தாங்கியிருந்தமை காண கூடியதாக இருந்தது.

போராட்டக்காரர்கள் தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தித்தினதும் அமெரிக்காவினதும் உயர் கவுரவ பிரசைகள் என்பதை உலகிற்கு காட்டி உள்ளார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.